tag:blogger.com,1999:blog-310553742024-03-13T04:35:11.382+05:30சென்னைக் கச்சேரிஸ்டார்ட் மீஜிக்.....!!!!Devnathhttp://www.blogger.com/profile/04091783267279263300noreply@blogger.comBlogger205125tag:blogger.com,1999:blog-31055374.post-86101482053654083522013-09-17T21:24:00.000+05:302013-09-17T21:24:05.026+05:30சங்கம் 2 - We are back<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அரைச்ச மாவையே திரும்ப அரைச்சு அதையும் நாடே ரசிக்கல்ல...அட சிங்கம் எடுத்து அதையே திருப்பி போட்டு சிங்கம் 2 எடுத்தா ஓடுச்சுல்ல அதை மாதிரி தான் கேப் விட்டு சங்கம் போட்ட மாதிரி சங்கம் 2 போடலாம்ன்னு சங்கத்து நலன் விரும்பிகள் சமீபத்தில் ஆப்பிரிக்காவில்ல நடந்த சங்கத்தின் 5345வது உருப்படாத மாநாட்டில் கலந்து கொண்ட ஒர்ர்ரே தல முடிவு பண்ணி எங்களுக்கு மெசெஜ் அனுப்பி வச்சிருக்கார்...<div>
<br /></div>
<div>
தற்சமயம் தலைவா என்ற சிந்தனைக்கே செம பெண்டு காத்திருப்பதாக உளவு துறையின் உளறலான உண்மை உள்விவரங்களை அறிந்த தல அப்படியே அயல்நாட்டில் இருந்து தொடர்ந்து சங்கப் ஆற்றுவதாக ராஜதந்திர அறிக்கை விட்டுள்ளார்...</div>
<div>
<br /></div>
<div>
2014 இந்திய நாட்டுக்கு திரும்ப திட்டம் வைத்துள்ள தல..அது வரை பல அயல் தேசங்களுக்கும்...ஏன் அயல் கிரகங்களுக்கும் கூட சென்று நம் தாயகமாம் பாரத மணி திருநாடு முன்னேற பல வியக்கத் தகு செயல்பாடுகளில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்...</div>
<div>
<br /></div>
<div>
தற்சமயம் இந்த செய்தியை சங்கப் பலகையில் போடுமாறு ஒரு தாறுமாறான உத்தரவை தல பிறப்பித்துள்ளார்</div>
<div>
<br /></div>
<div>
இது முதற்கொண்டு சங்கம் பேஸ்புக்...ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இயங்கும் எனவும் தெரிவித்து கொள்கிறோம்</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31055374.post-25576919655465478532013-01-06T14:25:00.000+05:302013-01-06T14:26:00.671+05:30நான் பாத்த சினிமா 2012<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சினிமா எடுக்குறதும் கூட பாக்குற மாதிரியே ரொம்பவே சுளுவா ஆகிருச்சு...முன்ன எல்லாம் 10 வருசம் உதவி உதவிக்கு உதவின்னு உபத்திரவப் பட்டு உழைச்சு உயர் பதவியான இயக்குனர் ஆவாங்க..இப்போ எல்லாம் சோ சிம்பிள் “அப்பாடக்கர்” “ஜக்குபாய்” அப்படின்னு சின்னதா படம் ( குறும் படம்) எடுத்து யு ட்யுப்ல்ல போட்டு ஹிட் காட்டி அப்படியே கோடம்பாக்கம் பஸ் ஐ சட்டுன்னு பிடிச்சுராங்க...<br />
<div>
<br /></div>
<div>
2012ல்ல நான் பாக்க கிடைச்சதுல்ல எனக்கு பிடிச்ச படங்களைப் பத்திய என்னோடப் பதிவு இது</div>
<div>
<br /></div>
<div>
என்னாச்சு...ப்ப்ப்ப்ப்பாஆஆஆ....இந்த 2 வார்த்தையை வச்சு எவ்வளவு காமெடிப்பா..தியேட்டரே சிரிச்சி சிரிச்சி கண்ணீரை சிதற விட்ட படம்ன்னா அது நடுவுல்ல கொஞ்சம் பக்கத்தைக் காணும் தான்...பாலாஜி தரணிதரன் கலக்கிட்டாப்புல்ல</div>
<div>
<br /></div>
<div>
அட்டக்கத்தி..அட்டகாசம்..ஒவ்வொரு விடலப் பசங்க கூட்டத்துல்லயும் இப்படி ஒரு கேரக்டர் கண்டிப்பா இருந்தே ஆகணும்ங்கறது தமிழ் கலாச்சார விதி..அதை அப்படியே கண்ணு முன்னாடி போட்டு காட்டுன</div>
<div>
இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆகணும்</div>
<div>
<br /></div>
<div>
பாக்கலாமா!!! வேணாமா!!! அப்படின்னு பட்டி மன்றமே வச்சு பாத்துரலாம்ன்னு பாத்த படம் வழக்கு எண் 18/9...பாலாஜி சக்திவேல்...வசந்த பாலன் இவங்க படம் எல்லாம் என்னமோ சோகத்தை வலிஞ்சு தெளிக்குற உணர்வு எப்போதுமே எனக்குண்டு...அப்படி ஒரு மனநிலையில் பாத்தும் படம் பிடிச்சு இருந்துச்சு...யதார்த்தம் எளிமை சுவாரஸ்யம்...படம் லைக் போடலாம்</div>
<div>
<br /></div>
<div>
பேய் படம்ன்னா பீதியக் கிளப்பியே தீரணும்ங்கறது விதி...அப்படி விவரம் தெரிஞ்சும் போய் பாத்து படத்தோட ஒன்றி போய் ஆங்காங்கே பயந்து பாக்க வச்ச படம் பீட்சா..கார்த்திக் சுப்புராஜ் முதல் படம் பாஸ்</div>
<div>
<br /></div>
<div>
சுந்தரபாண்டியன்...மாஸ்...கொடுத்த காசுக்கு செம ரவுசு...சசி-சூரி ரகளை காமெடியிலே லட்சுமி மேனன் ரொமான்ஸ்...பக்கா பேமிலி செண்டிமெண்ட்..</div>
<div>
நட்பு...சண்டை...அப்படின்னு மசாலாவை பக்காவக் கலந்து போட்ட மதுரை மீல்ஸ் முழு திருப்தி</div>
<div>
<br /></div>
<div>
நண்பன் இந்தியிலே முழுசா 3 வாட்டி பாத்தும் எனோ தமிழ்ல்ல பாக்கணும்ன்னு ஓர் ஆர்வம்..சத்தியமா ஆர்வத்துக்கு விஜய் காரணமில்ல..</div>
<div>
படம் தமிழ்ல்லயும் நல்லா இருந்துச்சு... மொத்த யுனிட்க்கும் ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்...படம் பாத்து ரசிக்கும் படி இருந்ததுக்கு எல்லோருடைய பங்களிப்பும் இருந்தது ஒத்துக்க வேண்டிய உண்மை</div>
<div>
<br /></div>
<div>
கும்கி ...படத்துல்ல புதுசா எதுவுமில்ல...கிட்டத் தட்ட மைனா பாணி காதல் கதை தான்..படம் தலைவலி கொடுக்காமல் விட்டதுக்கு முக்கிய காரணம் கண்ணுக்கு குளிர்ச்சியான காடுகளின் காட்சிகள் அப்புறம் பாட்டு...அதுல்லயும் சொய்ங் சொய்ங்...அதகளம்...பிரபு சாலமன் கிட்ட இருந்து இன்னும் எதிர்பாக்குறேன்...</div>
<div>
<br /></div>
<div>
விஜய் யோட பெரிய ரசிகன் இல்லன்னாலும் முருகதாஸின் 7ஆம் அறிவு பெரிய அளவில் கவரவில்லைன்னாலும் துப்பாக்கியின் ஆரம்ப விமர்சனங்களால் கவரப்பட்டு பாக்கறதுன்னு முடிவு பண்ணி பாத்தேன்..ஏமாத்தம் இல்ல...நல்லதொரு பொழுதுபோக்கு படம்...வெல்டன் விஜய் அண்ட் முருகதாஸ்..</div>
<div>
<br /></div>
<div>
மொத்தத்துல்ல 2012ல்ல அதிக அளவில்ல மொக்கப் படங்கள் பாத்து மொக்க வாங்காமல் தப்பியது பெரிய ஆறுதல்....</div>
<div>
<br /></div>
<div>
2013 எப்படி இருக்குன்னு பாப்போம்....</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31055374.post-85207901953621255782011-09-02T21:44:00.003+05:302011-12-14T06:21:53.224+05:30மங்காத்தா வாரம்வார இறுதியிலே வரும் விடுமுறை வார நடுவில்ல கேட்க வேணுமா கொண்டாட்டத்துக்கு...கொலம்பஸ் விட்டாச்சு லீவுன்னு பாடாத குறை தான்.. வெள்ளியும் முடிஞ்சது இன்னும் இரண்டு நாள் போனஸா லீவு கிடைச்சுருச்சு அமெரிக்காவுல்ல லாங்க் வீக் என்டாம்..
<br />
<br />மொத்தத்துல்ல இந்த வாரம் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தலயோட மங்காத்தா வாரம் ரொம்ப நாளுக்கு அப்புறம் தல படம் அதுவும் 50வது படம் எக்கச்சக்கத்துக்கு எதிர்பார்ப்பு தொடர்ந்து பெரிசா சொல்லிக்குற மாதிரி படங்கள் எதுவும் இல்ல...போன படம் அசல் கூட அம்பேல் தான்..கொஞ்ச நாளுக்கு முன்னாடி ரசிகர் மன்றமே வேணாம்ன்னு அறிவிப்பு
<br />
<br />50வது படத்துல்ல ஆரவாரம் இல்லாம நரைச்ச தலை இயற்கையான தொப்பைன்னு அவதாரம் துணைக்கு எக்கச்சக்க நட்சத்திர பட்டாளம் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இன்னொரு முக்கிய நட்சத்திரம் வேற... ஆபிஸ் ஸ்கூல் டிவி ரேடியோவீடு பிளாகர் பேஸ் புக டுவிட்டர்ன்னு எந்த பக்கம் பாத்தாலும் விளையாடு மங்கத்தா தான்..தல ஜெயிக்கணும்ன்னு தமிழ் நாடே விரும்புர மாதிரி ஒரு சூழ்நிலை தான் கிட்டத்தட்ட
<br />
<br />சோறு தண்ணி கூட இல்லாத பூமியிலே தமிழன் வாழ்ந்தாலும் வாழ்ந்திருவான்..சினிமா தியேட்டர் இல்லாத ஊரோ திருட்டு டிவிடி கிடைக்காத இடத்துல்லயோ இருந்தா அவ்வோள தான் செத்தே போயிருவான்...அபிமான நடிகர்கள் நடிக்கும் படங்கள் வரும் போதெல்லாம் அவனுக்கு திருவிழா...சில திருவிழாக்கள் சிலருக்கு மட்டுமே ரஜினி போன்றவர்களின் படங்கள் விதிவிலக்கு அதெல்லாம் ஒட்டு மொத்த தமிழகத்துக்கே பெருவிழா
<br />
<br />ரஜினிக்கு கிடைக்கக் கூடிய அந்த ஒரு வரவேற்பு இப்போ இந்த மங்காத்தாவுல்ல தலக்கு கிடைச்சிருக்குன்னு சொல்லலாம் ஏன் இப்படி...சூர்யா விஜய் ஜீவா சிம்பு தனுஷ் போன்ற மற்ற நடிகர்களை விட தற்கால நடிகர்களில் தல என பாசத்தோடு அஜீத் கொண்டாடப் பட காரணம் என்ன... கூப்பிடாவிட்டாலும் சொந்த செலவில் டிக்கெட் போட்டு நடிகன் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி அடுத்து அரசியல் அவதாரம் எடுக்க அப்பன் தயவில் இன்றும் வாழும் தளபதிகள்...சின்ன சூப்பர் ஸ்டார்கள்...இவர்களின் போலித்தனம் என்றுமே மக்களை கவர்ந்ததில்லை..
<br />
<br />இவர்களின் சித்து விளையாட்டுக்கள் மக்களை மயக்கியிருக்கலாம் ஆனால் மயக்கம்ங்கறது தெளியக் கூடியது தானே....
<br />
<br />தானா நிற்பவனை என்றுமே உலகம் ரசிக்க தவறியதில்லை நேரம் கூடும் போது மாலையிட்டு மரியாதை செய்யாமல் விட்டதில்லை
<br />
<br />அந்த வகையிலே அஜித் போன்றவர்கள் எல்லாம் ஒரு சுயம்பு மாதிரி
<br />
<br />அதுன்னாலத் தான் அவர் போன்றவர்கள் ஜெயிக்கணும்ன்னு சாமான்யர்களின் உலகம் விரும்புகிறது
<br />
<br />அவர்களின் வெற்றி மிகவும் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படுகிறது,...
<br />
<br />தல மங்காத்தா வெற்றிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்கு தல
<br />Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-31055374.post-74679442084994412992011-08-28T10:09:00.005+05:302011-12-14T06:22:03.320+05:30திராவிட முகமூடி கழகம்பதிவு எல்லாம் எழுதி பல காலம் ஆச்சு !!! 2011ல்ல மொத்தமே 1 பதிவு தான் போட்டிருக்கேன்..எழுத ஒண்ணுமில்லயா இல்ல எழுதுனா படிக்க ஆள் இல்லயா இரண்டுமே ஒரளவுக்கு சரியான காரணங்களே
<br />
<br />அப்புறம் எதுக்கு இந்த பதிவு..இருக்கு காரணம் இருக்கு... பொதுவா பலத் தரப்பட்ட புத்தகங்கள் படிக்குறது நம்ம பழக்கம் லேண்ட்மார்க்லல வேடிக்கை பாத்து பேரை மட்டும் குறிச்சுகிட்டு பிளாட்பாரக் கடைகளிலே அதே புத்தகங்களைத் தேடி அலைஞ்சு பேரம் பேசி வாங்கி வீட்டுல்ல அடுக்கி வச்சு அப்புறம் எப்போவது நேரம் உண்டாக்கி படிக்குற அந்த அனுபவம் இருக்கே அது அலாதியானது...
<br />
<br />இப்போ சமீபக் காலமா கண்ணதாசன் புத்தகங்கள் நிறைய வாசிக்க முடிஞ்சது.. கவிஞரின் சினிமா பாடல்களுக்கு தமிழறிந்த அனைவரும் எதோ ஒரு விதத்துல்ல ரசிகர்களா இருக்கும் போது நான் மட்டும் என்ன விதிவிலக்கா
<br />
<br />கவிஞரின் பாடல்கள் வாழ்க்கையின் மொத்த பரிமாணங்களையும் தமிழுக்குள் அடக்கி ஆள்வதைக் கண்டு வியக்காமல் இருக்க முடிவதில்லை கவிஞரின் புத்தகமெல்லாம் படிக்கும் போது திராவிடத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையே கிடந்து ஊசலாடிய தருணங்களையும் உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடியுது
<br />
<br />பகுத்தறிவு என்றால் என்ன? பல காலமாய் புலப்படவில்லை... இப்போவும் சரியா புரியல்ல ஈரோட்டு வயல்களில் நடப்பட்டு காஞ்சிபுரம் சந்தையில் கொள்முதல் ஆகி கோபாலபுரத்தில் அசத்தலா பாக்கெட் போட்டு தமிழகம் மொத்தத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட ஒரு விற்பனை பொருள் தான் பகுத்தறிவோன்னு 2011ல்ல மல்லாக்க படுத்து சிந்திக்கும் போது எனக்கு தோன்றுது
<br />
<br />அதுக்கு கண்ணதாசனும் ஒரு காரணமான்னு எனக்குத் தெரியல்ல. உழுதவன் நடுவுல்ல வாங்குனவன் எல்லாம் பெருசா லாபம் பாக்கல்ல ஆனா ஏஜென்சி எடுத்து வித்த குரூப் மட்டும் செமயா கல்லாக் கட்டுனது கண்ணெதிரே கண்ட உண்மை
<br />
<br />நம்பிக்கை தான் வாழ்க்கை என்பது உலக மொத்தமும் ஒப்புக் கொண்ட தத்துவம் ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறான் அந்த நம்பிக்கை அவன் வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோலா இருந்து வழிகாட்டுகிறது. சில பல நம்பிக்கைகளால் மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு ஆறுதல் கிடைக்கிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த நம்பிக்கை இறைவன் சார்ந்தாகவே அமைந்து போகிறது
<br />
<br />நேரு வால்டேரின் மேற்கோளிட்டு சொன்னதாய் நினைவு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல ஆனால் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க கடவுள் அவசியமாய்படுகிறது
<br />
<br />தலைமையோ தலைவனோ மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் நம்பிக்கையை குலைக்க கூடாது எப்படி பார்த்தாலும் திராவிடமும் அதைச் சார்ந்த தலைவர்களும் மக்களின் நம்பிக்கையை நையாண்டி செய்தும் அதைக் குலைத்துமே தம் இயக்கத்தை வளர்த்து உள்ளார்கள்...உடைத்தெறிந்த நம்பிக்கைகளுக்கு பதிலாக புதிய நம்பிக்கைகளையும் கொடுக்கவும் இல்லை வளர்க்கவும் இல்லை...
<br />
<br />நம்பிக்கை கொடுக்காத இயக்கமும் கொள்கையும் சமுதாயத்துக்கு எந்த விதத்தில் பயனளிக்கும்...வெறும் வாயிலே வடை சுட்டு அதில் ப்குத்தறிவு முத்திரை குத்தி பேச்சாலே அதை ஊருக்கு எல்லாம் வித்து வயிறு வளக்கும் ( வளத்த) திராவிடமும் திராவிடத் தலைவர்களையும் என்னன்னு சொல்ல...
<br />
<br />சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்... தோணும் போதெல்லாம் இன்னும் சொல்லுவேன்
<br />
<br />ஆங் அப்புறம் 8வது பதிவுல ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு நண்பர் இளாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்குறேன்.
<br />Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-31055374.post-61122799429952334652011-01-26T15:08:00.003+05:302011-01-26T21:18:29.312+05:30கச்சேரி டெக்னாலஜிஸ் - கேப்டன் விருதகிரி<div><br /></div><div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKWhVYaSpCfX_NMqlB1NvRWeYZAQvLjXPzg5m29ja86QyZJUzJuOYeewr0TRy5QuIp6CIYk3BiA_ICTT5iJ0jC5iTMA4WdvEYItFafNe9g89OyNl5p9kwTC1Fs4pcuCcAEfgw/s1600/vadivelu9.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKWhVYaSpCfX_NMqlB1NvRWeYZAQvLjXPzg5m29ja86QyZJUzJuOYeewr0TRy5QuIp6CIYk3BiA_ICTT5iJ0jC5iTMA4WdvEYItFafNe9g89OyNl5p9kwTC1Fs4pcuCcAEfgw/s320/vadivelu9.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566499495800602386" /></a><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvEwf4QqpcQvjqySlLnZNvlCgO7xcKmjePWY565R0fLbngCU3CeIVhN-XY4p6H0JyKCoYCtOY9ObYQapIsiS3zepSzeQxypvNozVB1RLTGduXX_3x3NdQCvAyPPi_JI0q9HYA/s400/vijayakanth.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 238px; height: 250px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566499821010182034" /><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSKjQQceZ3lS8KgOyKZoZo_f6Yvr31GiAyoneIYszZhxgiSmfG9xZw7uO5XjTh-HzRMSPvHexP2M-TOua83L-XkrOb8KCzxjOs9L0JbaNufKSh8PGFrO4ZvG0SeAQJndFFiRI/s320/112987.gif" style="cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566499505798774626" /></div><div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKWhVYaSpCfX_NMqlB1NvRWeYZAQvLjXPzg5m29ja86QyZJUzJuOYeewr0TRy5QuIp6CIYk3BiA_ICTT5iJ0jC5iTMA4WdvEYItFafNe9g89OyNl5p9kwTC1Fs4pcuCcAEfgw/s1600/vadivelu9.jpg"></a>கண்ணு படப் போகுதய்யா சின்னக் கவுண்டரே சுத்திப் போட வேனும்ய்யா சின்னக் கவுண்டரே பாட்டு போட்டு ஒரு குரூப்பே திரண்டு நிக்க அவங்களே எல்லாம் வெளியே நிறுத்திட்டு உள்ளே வருகிறார் கேப்டன்<br /><br />வருவேன் வந்துகிட்டே இருக்கேன் ஆன் த வேயில்ல இருக்கேன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்க மாட்டேன் வந்து சேந்துட்டேன் இன்டர்வியூக்கு...<br /><br />புயல் அடிச்சி இவஙக போட்ட ரோடு டேமேஜ் ஆகும்<br />ஆனா கேப்டன் சொல்லி அடிச்ச கோடு ஒரு நாளும் டிபெக்ட் லீக்கேஜ் ஆகாது<br /><br /><br />ஏய் மூக்குக்கு கீழே முக்கா இஞ்ச்க்கு புதர வைச்சிருக்கியே தலையிலே வெளுத்து பல வருசமான தொப்பியை தொங்கப் போட்டிருக்கியே நீ தான் இந்த கம்பெனிக்கு ஓனரா...நான் தான் உங்க கிட்ட போன்ல்ல பேசுன கேப்டன்..உங்க பேர் என்ன?<br /><br />ஏம்ப்பா மூச்சை பிடிச்சு தமிலை இப்படி வலைச்சு வலைச்சு பேசுறீயே என் பேர் என்னாண்டு முன்னாடி போர்ட் எல்லாம் போட்டு வச்சிருக்கேனே பாத்து படிக்கக் கூடாதா வண்டு முருகன் பதில் கேள்வி கேக்க<br /><br />இது தமில் நாடு இங்கே செம்மொழி மாநாட்டுக்கு ஊருக்கு ஊர் கட் அவுட்ல்ல வெளம்பரம் வைப்பாயங்க வெளம்பரத்துல்ல வெள்ளைக்கார தொரைக் கணக்கா பாட்டெல்லாம் போடுவாயங்க..ஆனா ஒரு முணு அங்குல போர்ட்ல்ல உம் பேரை தமில்ல எழுதணும்ன்னு உனக்கு சொல்ல அரசாங்கத்துக்கு அருகதை இல்லை...இது என்ன மொலி..<br /><br />போர்ட்டை கையிலே எடுத்து கேப்டன் கொந்தளிக்க<br /><br />அப்பு இது ஆங்கிலம் அப்பு....வெள்ளக்கார கிளையண்ட் எல்லாம் வந்தா அவனும் படிக்கணும் இல்ல அதான் அப்பு அப்படி<br /><br />தமில்ல எனக்கு புடிக்காத ரெண்டாவது வார்த்தை ஆங்கிலம்.... கண்களை பெரிதாக்கி பல்லை நறநறவென கடித்த கேப்டன் கோலம் கண்டு கதறும் வண்டு கோஸ்ட்டி எல்லா போர்ட்களையும் எடுத்து ஒளித்து வைக்கின்றனர்<br /><br />ஏய் ஆட்டுத் தாடி வச்சுருக்கியே...போன்ல்ல என்னக் கப்பலுக்கு கேப்டனா இல்ல எந்த ஐபிஎல் டீமுக்கு கேப்டன்னு கேட்டவன் நீ தானடா...கேப்டன் விரல் சொடுக்கி கேட்க<br /><br />அய்யோயோ கேப்டன் உங்களை யாரோ கலாய்க்கறாங்களாம அதுவும் என் வாய்சை மிமிக்கிரி பண்ணி...நான் எல்லாம் புள்ள பூச்சி...வாங்குற அமவுண்ட்க்கு மேல வாய்ஸை வேஸ்ட் பண்ணுரதில்ல<br /><br />இங்கே பாரு நான் மதுரக்காரன்டா மேக்கப் போடமா நான் மேடை ஏறுனா கருப்பு எம்.ஜி.ஆர்...<br /><br />மீதியை நான் சொல்லுறேன் கேப்டன்...அப்படியே லைட் மேக்கப் போட்டு சவுண்ட் விட்டீங்கன்னா பிரவுன் எம்.ஜி.ஆர், இன்னும் கொஞ்சம் ஹெவி மேக்கப் போட்டு கிளம்புனீங்கன்னா சிவப்பு எம்.ஜீ.ஆர், பம்பு செட்ல்ல போய் பச்சத் தண்ணியிலே குளிச்சி எழும்பினீங்கன்னா பச்சை எம்.ஜீ.ஆர், லைட்டா கோகுலம் பூசு மஞ்சத் தூள் போட்டா நீங்க மஞ்ச எம்.ஜீ.ஆர், வெள்ளாவியிலே வச்சு உங்க எதிரிகளை வெளுத்து அனுப்பும் போது நீங்க ஓயிட் எம்.ஜி.ஆர். அப்புறம் சவுக்கார் பேட்டையிலே சேட் வீட்டுல்ல ஹோலி கொண்டாடும் போது அந்தப் பக்கம் போனீங்கண்ணா ஆல் கலர் எம்.ஜி.ஆர் நீங்க தான். கரெக்ட்டா கேப்டன்<br /><br />தம்பி ஓவராப் பேசுற....இன்டர்வியூ முடியட்டும் அப்புறம் உன்னப் பாத்துக்குறேன் ஆங்.. ஹலோ நீங்க எங்க ஊர்ல்ல பெட்ரோ மாக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருந்தவர் தானே...<br /><br />ஆமாண்ணே ... செந்தில் தானாக வந்து ஆஜராக<br /><br />ஹலோ சேப்டி பின்<br /><br />அண்ணே ..சேப்டிபின் இல்ல கேப்டன்...<br /><br />ஆங் கேப்டன்..யூ பார் மிஸ்டேக்...அது நான் இல்ல ஊருக்குள்ளே பல பேர் இப்படி தான் ஏமாந்துப் போயிடறாங்க அவன் வேற நான் வேற..அவன் அவன் தான் நான் நான் தான் நீங்க நீங்க தான்...அவன் நானாக முடியாது நான் அவன் ஆக முடியாது நீங்க வேறு யாராவுமே ஆக முடியாது ஓகேவா டோக்கன்<br /><br />அண்ணே டோக்கன் இல்லண்ணே கேப்டன் கேப்டன்<br /><br />ஆங் சாரி கேப்டன் கேப்டன்<br /><br />ம்ம்ம் இங்கே எதுவுமே சரி இல்ல எல்லாத்தையும் மாத்தணும் மாத்துவேன் முதல் மாத்தம் இப்போவே இன்டர்வியூ நீங்க எடுக்கக் கூடாது நான் தான் எடுப்பேன்...உங்க கையிலே கம்பெனி இருக்குதுங்கறதுக்காக யாரை வேணும்னாலும் இன்டர்வியூ பண்ணுவீங்களா...அதெல்லாம் என் கிட்ட நடக்காது சொல்லிட்டேன்..<br /><br />அலோ பேட்மின்டன்<br /><br />அண்ணே கேப்டன் கேப்டன்<br /><br />ஆங் ஓகே கேப்டன் காலம் காலமா அப்படித் தானே நடக்குது கம்பெனி வச்சுருக்கவங்க தானே இன்டர்வியூ எடுப்பாங்க வர்றவங்க தான் பதில் சொல்லணும் நீங்க சொல்லுரது விவரம் புரியாதவன் பேசுற டூபாக்கூர் டயலாக் மாதிரி இல்ல இருக்கு<br /><br />யாருக்கு விவரமில்ல உங்க கம்பெனி பேரி க்ச்சேரி டெக்னாலஜிஸ் அதுல்ல இருக்கது 10 எழுத்து..அதுல்ல டாப்ல்ல இருக்க பேர் மொத்தம் மூணு இந்த கம்பெனி பில்டிங்க்ல்ல மொட்டை மாடியோட சேத்து மொத்தம் 8 மாடி.. அதுல்ல இருக்க மொத்த படிக்கட்டு மாடிக்கு 16ன்னு மொத்தம் 128... இங்கே இருக்க கக்கூஸ் மொத்தம் மாடிக்கு மூணுன்னு 24 அதுல்ல ஆண்கள் 12 பெண்கள் 12 உங்க ஆபிஸ்ல்ல இருக்க மொத்த காபி மெசின் 20 அதுல்ல 19 வேலை செய்யாது வேலை செய்யுற ஒண்ணும் உங்க ரூம்புல்ல இருக்கு வேலைக்குன்னு வர்றவன் மொத்தம் 400 பேர் அதுல்ல வேலை செய்யுறவன் உங்களையும் சேத்து யாருமில்ல மொத்த வேலை நாள் வருசத்துக்கு 200 அதுல்ல லீவுன்னு போறது இன்னொரு 100 சம்பளம்ன்னு நீங்க சொன்னது மாசத்துக்கு 42 கோடி இது வரைக்கும் வச்சிருக்க சம்பள பாக்கி 87 கோடி....<br /><br />சூப்பரப்பு டாப்டென் ஆல் இன் ஆல் விசிலடிக்க<br /><br />அண்ணே கேப்டன் கேப்டன்<br /><br />அட டீகெட்டில் வாயா அண்ணன் கண்டுக்க மாட்டார்டா அவர் நம்மாளு....எப்புடி அவுத்து விடுறார் பாரு கம்பெனி ரகசியத்தை....அட்ரா சக்க அட்ரா சக்க<br /><br />பாஸ் நம்ம கம்பெனி ரகசியம் தெரிஞ்ச இவரை வெளியே விட்டா நமக்கு நல்லதுல்ல ஓடனே யு ஆர் அப்பாயிண்டெட் சொல்லி கட்டிப் புடிச்சு ஒப்ரு போட்டோ எடுத்து பத்திரிக்கைக்கு கொடுத்துருவோம் அது தான் நமக்கு சேப்டி<br /><br />ஆங்...தலதளபதி நீ கருத்தாப் பேசுற புள்ள நீ சொன்னா ஒரு கருத்து இருக்கும்...ம் கரெக்ட் பண்ண்டுறேன்<br /><br />கேப்டன் இவ்ளோ வெவரமானவரு நீங்கன்னு புரியாம போயிருச்சி வாங்க இனிமே நாம எல்லாம் கூட்டா வேலை செய்வோம் வாங்க வண்டு பாசம் காட்டி எழுந்து நிக்க<br /><br />ம்ம்ம் நிறுத்துங்க....என் கூட்டணி ஆண்டவனோடயும் மக்களோடும் தான்.... உங்க கூட எல்லாம் கூட்டணி வைப்பேன்னு நினைச்சீங்களா.....<br /><br />கேப்டன் சாப்ட்வேர் புராஜக்ட் எல்லாம் டீம் ஓர்க் இல்லாம பண்ண முடியாது கேப்டன்<br /><br />ஆமா கேப்டன் தலதளபதி கருத்தாப் பேசுவாப்பல்ல சொன்னாக் கேளுங்க<br /><br />நீங்க எல்லாம் தப்பானவங்க...மக்களுக்காக உழைக்க கிளம்புன என்ன அவமதிச்சு இருக்கீங்க...இடிப் பட்டு இருக்கேன்...அடிப் பட்டு இருக்கேன்...<br /><br />கேப்டன் எதோ தி நகர் ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் போன பிகர் மாதிரி இடி பட்டேன் அங்கே சரவணா ஸ்டோர்ஸ் ஷாப்பிங் பண்ணி அடிப்பட்டேன்ங்கற மாதிரி பேசுறார்<br /><br />தலதளபதி வண்டு காதில் கிசுகிசுக்க கேப்டன் மிகவும் கொதிக்கிறார்<br /><br /><br />நீங்க என்னை இந்த இன்டர்வியூல்ல தேர்ந்து எடுக்கல்லன்னாலும் மக்கள் என்னத் தான் தேர்ந்து எடுப்பாங்க நான் அவங்க கிட்டெ பேசிக்கிறேன் அப்புறம் உங்க கிட்டப் பேசிக்கிறேன்.... <div><br /><span style="font-weight:bold;">அப்போ<span class="Apple-style-span">.... வீ வில் மீட்....<br /><br /></span></span></div><div><span style="font-weight:bold;">...வில் மீட்....<br /><br /></span></div><div><span class="Apple-style-span"><span style="font-weight:bold;">...மீட்...</span>.</span><br /><br />எக்கோ எபெக்ட் அதிர கன்னச் சதைகள் காரண்மின்றி துடிக்க கேப்டன் கிளம்புகிறார்<br /><br />பயபுள்ள கடைசி வரைக்கும் நம்மளை ஒத்தக் கேள்விக் கூட கேட்க விடல்லய....ஏன்டா இப்படி வண்டு முருகன் உருகி நிற்க</div><div><div><br /></div><div>பாஸ் இதுக்கே இப்படி நின்னுட்டா எப்படி அடுத்து ஒரு சூப்பர் சுறா வருது பாத்துங்க சுறா சிங்கிளா வராது அவங்க் டேடி சுறாவையும் கூட்டிட்டு தான் வருவேன்ங்குது.... பாத்துங்கண்ணா தலதளபதி டெரர்படுத்த இந்த எபிசோட் முடிகிறது</div></div><div><br /></div></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31055374.post-64556596788716079042011-01-25T12:55:00.013+05:302011-01-26T21:18:29.313+05:30கச்சேரி டெக்னாலஜிஸ் ஆரம்பம்ஸ்ப்பப்ப்பா டேய் வக்கீல் வண்டு முருகனா வாய்தா வாங்கி வாழ்க்கை நடத்திகிட்டு இருந்த என்னை வட்டச்செயலாளர் வண்டு முருகனா மாத்தி வாழ்க்கையிலே உசுத்தோரும்ன்னு உசுப்பி உசுருக்கு உத்தரவாதம் இல்லாம ஆக்கி நடுத்தெருவுல்ல நிக்க வுட்டாங்க..ஆரு பெத்தப் புள்ளயோ நீ நண்பேன்டா கைக்கொடுத்து அன்டர்வேர் கிழிஞ்சாப் போவுது உங்களுக்கு ஆப்டா ஒரு சாப்ட்வேர் கம்பெனி வைங்கன்னு ஒரு ஐடியாவும் கொடுத்து எனக்கு ஒரு வழிகாட்டுனா நீ தான்டா உண்மையானத் தலதளபதி<br /><br />தலதளபதி புகைப்படம் முன் நின்னு பயபக்தியா மைன்ட் வாய்ஸில் பேசி முடித்து டக்குன்னு திரும்புனார் நம்ம வண்டு முருகன்<br /><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitaNb5glecL_X68hQClinLFMZ0fXOw-8ZpIfMhXjrchjwnfr5StjG7-wOatktganyzjrgNvMjJqyV6efvfvbS_-NIknfxCiBpsnclLZYngBXA8C54yLXZex0BzZVo2fYNc5kc/s400/vadivel_0019.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566043373283641890" /><div><b><span class="Apple-style-span">வண்டு முருகன் - நிறுவனர் கச்சேரி டெக்னாலஜிஸ்</span></b></div><div><br />பாஸு தீயா வேலைப் பாக்கணும் அப்புரேசல் டைம்.. அப்படின்னு பிளோர்ல்ல எதிர்பட்டவங்களுக்கு எல்லாம் அட்வைஸ் பண்ணிகிட்டே கேபினுக்குள் நுழைந்தார் நம்ம தலதளபதி</div><div><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUvEcsezTTKXe09HTGdhlSLYnX2rWX8q24g3HR1wDIxpf59w58brEuBm9Tijk_vFfxipPiggrd88bVfoxlHpJTEd2QA3gusLF-np0_mxl-1YfbT78jTuY6bskxoVteTWBIrJ0/s320/chutti_chathan_10_122201095155123.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566043526371717874" /><br /><b><span class="Apple-style-span">தலதளபதி - நிர்வாக இயக்குனர் - கச்சேரி டெக்னாலஜிஸ்</span></b></div><div><br /><b>ஏய் மார்க்</b> உன் பக்கெட்ல்ல பிக்ஸ் பண்ண எவ்வளவு டிபெக்ட் இருக்குன்னு பாருடான்னா அந்த புதுசா வந்த கேரளா ரெக்ரூட் ஜாக்கெட்ல்ல ஜன்னல் வச்ச எபெக்ட்டை பாத்துட்டு இருக்கே பிச்சுபுடுவேன் பிச்சி</div><div><br /></div><div>டேய் <b>லச்சு</b> உன் ரெஸ்யும் வச்சு நீ டெவலப்பரா டெஸ்ட்ரா டிபிஏவான்னு எதுவும் கண்டுபிடிக்க முடியாமத் தான் உனக்கு வேலைக் கொடுத்தோம்..அட்லீஸ்ட் வேலைக்குச் சேந்தப் பின்னாடியாவது கண்டுபிடிக்கலாம்ன்னு ஒரு நப்பாசை ஆனா மூணு வருசமா இன்னும் கண்டுபிடிக்கமுடியல்லயேடா போய் வாங்குற சம்பளத்துக்கு அந்த கம்ப்யூட்டரையாவது துடைச்சு வை போ</div><div><br /></div><div><b>டேய் காதர்</b> பெஞ்ச் கண்டுபிடிக்குற காலத்துக்கு முன்னாடியா குத்த வைக்க கல் கண்டுபிடிச்சு அதுல்ல சீட் தேய்ச்ச பரம்பரையிலே வந்தவனே இந்த வ்ருசமாவது எதாவது புராஜ்க்ட்ல்ல எதாவது வேலை செய்டா</div><div><br /><b>ஏய் ஆன்டிரியா</b> ஆபிஸ் போனை ஆன் சைட் காலுக்கு யூஸ் பண்ண சொன்னா நீ சைட் அடிக்குற ஆணுக்கு எல்லாம் போட்டு பில்லை ஏத்துறதை நிறுத்திட்டு கோடு அடிம்மா</div><div><br />ஹல்லோ ஹாப் பாயில் அர்னால்ட் அந்த அவிஞ்ச மண்டைல்யிலே வச்சுருக்க விக்கை பிக்ஸ் பண்றதை கொஞ்சம் ஒதுக்கிட்டு குயு ஏ டீம் போட்ட பக்கை பிக்ஸ் பண்ணு இல்லன்னா இந்த மாசம் சம்பளம் கட் கறாராச் சொல்லிட்டேன்.<br /><br />ஆகா இப்ப்டி ஒருத்தன் மட்டும் என் கம்பெனியில்ல இல்லன்னா என் கம்பெனி எப்படி வெளங்கும் ஆண்டவா நீ இருக்கப்பா நீ எங்கே எப்படி இருக்கியோ தெரியல்ல ஆனா எனக்கு நீ இந்த தலதளபதி ரூபத்துல்ல தான் அவதாரம் எடுத்துருக்கே அம்புட்டு தான் சொல்லிட்டேன் கண்ணீர் மல்க தலதளபதியை பாத்து வண்டு கையெடுத்து நிக்க</div><div><br />பாஸ் நோ சில்லி பிலீங்க்ஸ் நீங்க என் நண்பேன்டா பாஸ் பாத்த உடனே பிக்ஸ் ஆயிடுச்சு மனசுல்ல அதுனால உங்களுக்காக என்ன வேணும்ன்னா செய்வேன் பாஸ்<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ் வண்டு நீட்ட<br /><br />ஏய் பிளாக் பீ மவுத்தை க்ளோஸ் பண்ணு அது ஓப்பன் ஆனா லெவல் பாத்தா ரோட்ட்ல்ல போற எருமை எதாவது புதுசா வெட்டுன குட்டைன்னு குதிச்சுரப் போவுது<br /><br />வாங்க ஆல் இன் ஆல் அழகு..என்ன லேட் தலதளபதி பக்குவமாய் வணக்கம் வைக்க<br /><br /><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK2LLhvIQy5NZQxyH71jLrGsqi_QWRe8Pf4kgyKxZUjJ9fUbnhEIPv5R3tgEp8bIe2vVXVRD5MObWQ_SPyDzUshWR4sAFbxak7v7A5qN7DG75ibhXHGjaKw6oa_zFdALL3Nik/s320/Goundamani+-+01.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 198px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566043602563537986" /></div><div><b><span class="Apple-style-span">ஆல் இன் ஆல் அழகுராஜ் - HUMAN RESOURCES MANAGER</span></b></div><div><br />அது என்னடா பேர் தலதளபதின்னு....மங்கத்தா ச்பதம் எதாவது நிறைவேத்த போருக்கு போனீயா...<br /><br />அது இல்லங்க ஆல் இன் ஆல் தல தான் ஒரு மனிதனுக்கு முக்கியமான உறுப்பு...<br /><br />ஏய் நான்சென் ஸ் ஆப் இன்டியா... இந்த தோள் முக்கியமில்லையா...இந்த கை முக்கியம் இல்லையா...இந்த முதுகு முக்கியம் இல்லையா....கால் முக்கியம் இல்லையா..அதை விட இந்த...<br /><br />நோஓஓஓஓஓஓ நீ அடுத்து சொல்லப் போறதை நான் அனுமதிக்க மாட்டேன்..இது கவுரமானவங்க வந்து போற இடம் நெவர் ...என்று எரிமலையாகி வண்டு கொந்தளிக்க</div><div><br />ஏன் நான் அடுத்து சொல்ல வர்ற விசயம் உங்க கிட்ட இல்லையா அது கொந்தங்களிக்குறீயா ட்ரங்கன் மாங்க</div><div><br />ஆஆஆஆ ஆல் இன் இல் லாஸ்ட் வார்னிங்க் ஸ்டாப் த் ட்ர்டி டாக்கிங் இன் மை ஆபிஸ் ஆப் த சாப்ட்வேர் அன்ட் ஹார்ட்வேர் அ த ஆங்கிரி இன் த இங்கில்லிஸ் டெல்லிங் யூ<br /><br />அட என்னப்பா அவன் கிட்ட இல்லாத மூளையைப் பத்தி பேசுனா இவ்வளவு டென்சன் ஆவுறான்...<br /><br />என்னது மூளையா....நான் கூட வேற எதோன்னு நினைச்சுட்டேன்..சரி சரி நாம யார் நம்ம லெவல் என்ன நம்ம ஹிஸ்டிரி ஜாக்கிரபி எல்லாம் இவங்களுக்கு தெரியும்...இப்போ வந்த வேலையைப் பாப்போமா<br /><br />ஓகே...அயாம் ஆல் இன் ஆல் அழகுராஜ் இந்த இவ்வளவு பெரிய கம்பெனியிலே ஒரே எச்.ஆர் மேனேஜர் தலதளபதி நீ அந்த பார்க்கிங் டாக்குக்கு அப்போ அப்போ பிஸ்கட் போடுற அள்ளகை அந்த டாக் இந்த கம்பெனியோட ஓனர்... அவன் இந்த கம்பெனியை எப்படி வாங்குனான் எனக்கும் தெரியும் ஊருக்கும் தெரியும்<br /><br />ஊருக்கே தெரியுமா அது பேக்கரி வாங்குன கதை தானே....இந்தக் கதையை நான் யாருக்குமே சொல்ல்ல்லயே இது எப்படி வெளியே வந்துச்சு... வண்டு மோவாக்கட்டையைத் தடவி யோசனையில் ஆழ்கிறார்<br /><br />இங்கே பாருங்க ஆல் இன் ஆல் ஒரு பிசினெஸுன்னு இருந்தா நாலு டீலின் ந்டக்கும் அதுல்ல இந்த டீலிங் அவருக்கு பிடிச்சுருந்துச்சு கம்பெனியை அவர் வச்சுகிட்டார்...<br /><br />போதும் நிப்பாட்டு வேலையைப் பாருங்க....மே மாசம் புராஜ்க்ட் வருது தமிழ் நாட்டுக்கே முக்கியமான புராஜ்க்ட்... கெஞ்சி கதறி கால்ல விழுந்து கான்டிராக்ட் வாங்கியிருக்கேன்.. ஒழுங்கா முடிச்சா கம்பெனி எங்கேயோ போயிரும்...<br /><br />அதுக்கு வழி பாப்பீங்களா அதை விட்டுட்டு கணபதி ஐயர் கிட்டே எங்க குடும்பம் பண்ண டீலிங் பத்தி பேசிகிட்டு இருக்கீங்க வெக்கம் கேட்ட வெளங்காத பயல்களா<br /><br />என்னது கணபதி ஐயர் அக்கா டீலிங் மட்டும் தானே ஊருக்கு தெரியும் மொத்தக் குடும்பமே டீலிங்க்கா பாஸ் அதைச் சொல்லவே இல்லையே...தலதளபதி கேக்க<br /><br />ஆகா அதிகம் பேசி அசிங்கப்படாதேடா வண்டுன்னு சொன்னா உள் நாக்கு கேக்குதா...தன்னைத் தானே நொந்துக் கொள்கிறார் வண்டு<br /><br />சரி..இந்த புராஜக்ட்டுக்கு மேனேஜர் வேணும்ன்னு கேட்டு இருந்தீங்க இல்ல...ரெஸ்யூம் குவிஞ்சு கிடக்கு...ஒண்ணு ஒண்ணு கூப்பிட்டு இன்டர்வீயூ எடுப்போம்...<br />முதல்ல டாப்டென் வறுத்தகிரி...<br /><br />ஆல் இன் இல் டாப்டென் அப்படினனா சன் டிவியிலே வருமா அதுவா...அதுல்ல சினிமா படமில்ல காட்டுவாங்க<br /><br />அது சாரிப்பா ஒவ்வொருத்தன் பேர் பட்டப் பேரு மட்டும் ஒரு மூணு நாலு பக்கத்துக்கு போவுதா அதான் குழம்பிட்டேன்.... கேப்டன் விருதகிரி...<br /><br />ஓ அவரா நல்லாத் தெரியுமே....நெக்ஸ்ட் யாரு<br /><br />முதல்ல இவரைக் கவனிப்போம் அப்புறம் மத்தவங்களைக் கவனிப்போம்<br /><br />ஓகே டேய் கோமுட்டித் தலையா போய் விருதகிரியைக் கூட்டிட்டு வாடா...<br /><br />அண்ணே இன்னிக்கு ஓட்டல் லீவு ..லீவு நாள்ல்ல இன்ட்ர்வியூ வைக்காதீங்கன்னு சொன்னாக் கேக்குறீங்களா...எங்கே போய் நான் வறுத்தகறி வாங்குறதாம்...<br /><br />அடேய் டகால்டி வாயா...என்ன நக்கல் பண்றீயா..விருதகிரின்னு நான் வெளக்கமாச் சொன்னது உன் காதுல்ல வ்றுத்த கறின்னு கேட்டுச்சு...தம்பி இருடீ நாளைக்கு இவரு நம்ம தமிழ் நாடு புராஜ்க்ட்க்கு மேனேஜர் மட்டும் ஆவட்டும் அப்புரம் பாருடீ தமாசை...</div><div><br />அண்ணே அப்போ நமக்கு எல்லாம் பொழப்பு போயிருமாண்ணே...எல்லாம் தமாசையும் இவரே பண்ணிட்டா நாம என்னண்ணே பண்றது...<br /><br />டேய் ட்ரீடாப் மண்டையா நீ சிரியசா பேசுறீயா இல்ல சில்மிசமாப் பேசுறீயான்னு தெரியல்ல இப்போதைக்கு குசுமபை கம்மி பண்ணிட்டு போய் கேப்டனைக் கூப்பிடு<br /><br />கேப்டன் வரவுக்காக அனைவரும் கதவைப் பாத்து காத்திருக்கிறார்கள்..அப்போது மேசை மீது இருக்கும் தண்ணீர் குவளைகள் அதிர்கின்றன...மேசையே நகர்கிறது...திரைச் சீலைகள் காற்றில் பலமாக அலைகின்றன..சீலிங்க்கில் விரிசல் சத்தம் கேட்கிறது</div><div><br /></div><div><div>தரையில் கார்பட் கதறுகிறது...</div><div><br />அய்யோ எதோ பயங்கரமான அசம்பாவிதம் நடக்கப் போவுது போல ஒரு ஆபத்து நம்மை நோக்கி வந்துகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் எல்லாரும் தாழ்வான பகுதிகளை நோக்கிச் செல்லுங்க தலதளபதி எச்சரிக்கை விடுத்தப் படி ஓடுகிறார் </div><br />கதவுக்கு பின்னால் இருந்து முரசு சத்தம் கேட்க சில் அவுட்டில் ஒரு தீப்பந்தம் பிடித்த கை தெரிகிறது...<br /><br />அய்யோ நெருப்பு டோய் நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜ் சவுண்ட் விட </div><div><br /></div><div>ஒரு சின்ன பிரேக் விடுறோம்!!!<br /><br /></div><div><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3FbaLJAN2auDgdxANEi-2RFBVZGESton6uhM3SM05c99FVzr9povbHb8VAPgdplNGLVVW9JIk0RvGN2465GCsQLH5X8O_DqGSyBKTT6-CtT4EL0zgfzrP2fmXyY2pX9txrdM/s400/vijaykanth.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5566043807357120754" style="cursor: pointer; width: 300px; height: 233px; " /></div>கேப்டன் விருதகிரி - MANAGER CANDIDATE 1 PROJECT TAMILNADU<br /><br />கச்சேரி தொடரும்...இந்த வாட்டிக் கண்டிப்பா தொடரும்ங்கம் சுவத்து சுண்ணாம்பு எல்லாம் விழுகிறது....Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-31055374.post-58791041001881798032010-11-27T10:37:00.006+05:302010-11-28T17:31:57.164+05:30நந்தலாலாமழை மெல்லியதாக தூவும் வெள்ளிகிழமை மாலையிலே கடற்கரையோர பிராத்தனா திரையரங்கில் நேற்று நந்தலாலா திரைப்படம் பார்த்தேன்...அஞ்சாதே...சித்திரம் பேசுதடி திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த மிஷ்கின் இயக்கம்...அதற்கு அப்பால் படத்துக்கு விலாசம் சொல்லும் முக்கிய அம்சம் இசைஞானியின் இன்னிசை...<br /><br />ஒரு வரி கதை...தாயைத் தேடிச் செல்லுன் இரு உயிர்களின் பயணம்...<br /><br />ஒருவன் பள்ளி சிறுவன்...இன்னொருவன் மன நலம் குன்றியவன்...இரு வேறு காரணங்களுக்காக தாயைத் தேடி இருக்கும் சூழல் பெயர்ந்து இருவரும் பயணப்படுகிறார்கள்...பயணம் இருவரையும் இணைக்கிறது...போதுமான பணமின்றி அவர்கள் பயணம் எப்படி தொட்ர்கிறது...வழியில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்...சம்பவ்ங்கள்....என் நீள்கிறது படம்...<div><br /><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3EsWrV12Wu21pS2XjBA-F1NNxvDYKLhp8S3OvBl79GaqwPyJI2vgGQpqHKAs4QZXfrmCrBsCr_Wjjk2QuWzJHGJGUg4z6KwMhZxHS2ZLWavOzJCXIMjEg8qZ7EOYRSluO-sE/s400/200px-Nandalala.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 284px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5544101924987091682" /><br /><br /></div><div>பயணம் தொட்ர்கதை என்றால்...வழி நெடுக அவர்கள் சந்திக்கும் மனிதர்களும் சம்பவங்களும் குறுங்கதைகள்....அழகான திரைக்கதை...<br /><br />சின்ன சின்ன பாத்திரங்களைக் கொண்டு கோர்வையாக கதையை சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார் மிஷ்கின்....போலீஸ்காரர்...லாரி டிரைவர்....பள்ளி மாணவி....இளநீர் கடை வியாபாரி....பைக் பயணிகள்...என ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதம்...நடிகர்களும் அழகாக நடித்துள்ளனர்...பலரும் புதுமுகங்கள் என நினைக்கிறேன்..<br /><br />மிஷ்கின் காட்சிகளின் வழியே கதை சொல்வதில் மகாக் கெட்டிக்காரர்...கேமராவை ஒரு தேர்ந்த கதைச் சொல்லியாகப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளார் ..படத்தின் எழுத்துக்கள் போடும் போதே கேமரா அழகான ஒளிபதிவில் மிரட்டுகிறது...நீரில் வளைந்தாடும் நாணலில் அழகு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.... பயணப் பாதைகளின் தன்மைக்கு ஏற்ப கேமராவும் உடன் பயணிக்கிறது...கேமரா நிறைவு<br /><br />சிறுவனின் நடிப்பு அளவான நிலையில் திருப்தி தருகிறது....மிஷ்கின் தான் கதையின் நாயகன்....மனநலம் குன்றியவராக அவர் போதுமான அளவு செய்துள்ளார் எனவே சொல்லலாம்....மிஷ்கினின் நடிப்பில் அஞ்சாதே படத்தில் வ்ரும் மாற்று திறனாளியின் (அவர் பெயர் ஞாபகம் இல்லை)உடல் மொழியும் குரல் மொழியும் அப்படியே பிரதிபலிக்கிறது...அதை அவர் சற்று தவிர்த்து இருக்கலாமோ...<br /><br />அஞ்சாதே கத்தால கண்ணழகி ஸ்னிக்கிதாவும் படத்தில் இருக்கிறார்...படம் முடியும் நேரத்தில் வருகிறார்...அவர் பங்குக்கு நடிக்கிறார்....கவர்ச்சி தவிர்த்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரம் ஏற்று நடித்திருப்பதற்கு அவரை மனதாரப் பாராட்டலாம்....<br /><br /><br />படத்தின் முடிவு என்ன...இருவரும் தங்கள் தாய்களைச் சந்திக்கிறார்கள்...சந்திக்கும் முன் தாய் மீதிருந்த எண்ணங்கள் இருவருக்குமே மாறுகிறது....அழுத்தமாய் ஆனால் மெல்லியதாக ஒரு புன்னகையை வரவழைத்துப் படத்தை முடித்திருக்கிறார் மிஷ்கின்....<br /><br />எல்லாரைப் பத்தியும் சொல்லியாச்சு....படம் பாக்கப் போன முக்கிய காரணகர்த்தாவைப் பத்தி சொல்லணுமே....ராசா எப்பவும் ராசா தான்....பின்னணி இசையில் விருந்து பரிமாறியிருக்கிறார்...சில இடங்களில் இசை மிரட்டுகிறது...சில இடங்களில் தாலாட்டுகிறது...சில இடங்களில் நெகிழச் செய்கிறது...ராஜாவின் இசை ராஜ்ஜியம் நந்தலாலாவில் பரந்து விரிகிறது... ராஜா ரசிகர்களுக்கு இன்னிசை மழை<br /><br />படத்தில் வழக்கமான தமிழ் சினிமாவின் கிளிஷேக்களும் இல்லாமல் இல்லை...முதல் பாதி கொஞ்சம் வேகம் கம்மி..நீளம் அதிகம்...அடுத்த பாதி சட்டெனப் போய் முடிகிறது...<br /><br />மிஷ்கின் சொல்ல வந்திருப்பது...உலகத்தில் யாரும் அனாதை இல்லை...ஒண்ணுக்கு ஒண்ணு துணையாக யாரோ இருக்காங்க என்பதை தான்...அதை ராஜாவின் ராகத்தில் யேசுதாசின் குரலில் கேட்பது சுகமோ சுகம்...<br /><br />மொத்ததில் நந்தலாலா ம்சாலா நெடி தவிர்த்த தமிழ் சினிமா எதிர்பார்க்கும் ரசிகர்கள் போய் பார்க்கலாம்...ராஜா ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள்...எப்பவும் ராஜா ராஜா தான்ன்னு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்...<br /></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31055374.post-39927486214934472572010-10-01T13:49:00.003+05:302011-01-26T21:17:17.536+05:30எந்திரன் எப்படி?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoGsQCzWCroaExE6-4RBN2zqAhuBd0SbxkCm0PKGOve_y8RMBta49sxg9coags0t3ZjVrfOONt-z8UZRvKzh2zJC865yq1TvmDh78MHrZMBBltOcffz3Q95HjlWRekS6Xx0zE/s1600/r1.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 296px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoGsQCzWCroaExE6-4RBN2zqAhuBd0SbxkCm0PKGOve_y8RMBta49sxg9coags0t3ZjVrfOONt-z8UZRvKzh2zJC865yq1TvmDh78MHrZMBBltOcffz3Q95HjlWRekS6Xx0zE/s400/r1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5522992645342835042" /></a><br /><span style="font-weight:bold;"><span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: x-large;"><span class="Apple-style-span" >Rajini You Have done it Again!!!!</span></span></span></span><div><span style="font-weight:bold;"><span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: x-large;"><span class="Apple-style-span" ><br /></span></span></span></span></div><div><span><span class="Apple-style-span"><span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: x-large;"><b>எந்திரன் இமாலய வெற்றி !!!!</b></span></span></span></span></div><div><span><span class="Apple-style-span"><span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: x-large;"><b><br /></b></span></span></span></span></div><div><b><span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: medium;">நன்றி ஷங்கர் - சன் பிக்சர்ஸ்</span></span></b></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31055374.post-26757243118805757212010-08-01T21:14:00.002+05:302011-01-26T21:17:25.869+05:30நண்பர்கள் தினம்ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம்...இந்த வழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது என எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை..கல்லூரி படிக்கும் காலத்தில் சில வாழ்த்து அட்டை வியாபாரிகளால் இப்படி பல தினங்கள் பிரபலமாக்கப்பட்டன...அதில் இதுவும் ஒன்று...முக்கியமாச் சொல்லணும்ன்னா பிரண்ட்ஷிப் பேண்ட்....கிட்டத்தட்ட ராக்கி கயிறு மாதிரி ஒரு ஐட்டம் தான் இந்த பேண்ட் விவகாரமும்...ராக்கி அன்று ஒரு பொண்ணு உங்க கையிலே இந்த கயித்தைக் கட்டுனா...அந்தப் பொண்ணுக்கு நீங்க அண்ணன் முறை ஆயிடுறீங்க...அதே பொண்ணு இந்த கயித்தை நண்பர்கள் தினத்தன்னிக்கு கட்டுனா அந்தப் பொண்ணுக்கு பிரண்ட்ஷிப் ஆயிடுறீங்கறதுங்கறது ஐதீகம்..<br /><br />ஒரு கயித்துல்ல எவ்வளவு லாஜிக்...அதுக்கு பின்னாடி எத்தனை மேஜிக்...படிக்கற காலத்துல்ல ராக்கி அன்னிக்கு கட்டுன கயித்தை கட்டுன தடம் கூடத் தெரியாம பயபுள்ளக அவுத்து தலையைச் சுத்தி கூவம் ஆத்துல்ல விட்டு எறிஞ்சுட்டு வீசுன கையை வெறும் கையுமா காலேஜ்க்கு வருவாங்க..ஆனா அதே மாதிரி ஒரு பொண்ணு பிரண்ட்ஷிப் டே அன்னிக்கு கட்டின கயித்தைக் கையே கூவம் ரேஞ்சுக்கு நாறுனாலும் சரி அடுத்த பிரண்ட்ஷிப் டே வரைக்கும் கழட்டாத குரூப்பும் இருந்துச்சு...<br /><br />இப்போவும் அந்தப் பழக்கம் இருக்குதா இல்லையான்னு தெரியல்ல...ஆனா இப்போவும் மெயில்ல பழைய நண்பர்கள் கிட்ட இருந்து எதாவது ஒரு நண்பர்கள் தின பார்வேர்ட் மெயில் வந்தா மனசோரம் அப்படியே லேசா சின்னத் தூறலடிக்கத் தான் செய்யுது...இன்னிக்கு மெயில்ல் ஒரு வாசகம் வந்துச்சு....ரொம்பவே யோசிக்க வச்சுருச்சு....<br />ஒரு எதிரியை நண்பனாக்க ஆயிரம் வாய்ப்புக்கள் கொடுக்கலாம்...ஆனா ஒரு நண்பன் உன்னோட எதிரியாக ஒரு சின்ன வாய்ப்பு கூட கொடுக்கக் கூடாது...<br /><br />விஜய் படத்து மொக்க பஞ்ச் டயலாக் மாதிரி இருந்தாலும் ஆழமா யோசிச்சு பாத்தா அர்த்தம் இருக்கு...சரித்திரத்துல்ல பல சாம்ராஜ்யங்கள்..இயக்கங்கள்...நண்பனா இருந்து எதிரியா மாறுனவங்களால்ல தான் அழிஞ்சு இருக்கு... நண்பர்கள் தினத்தன்னிக்கு தனியா உக்காந்து அலையைப் பாக்கும் போது பழைய நண்பர்கள் ஞாபகம் நெஞ்சோரமா வந்துப் போகுது...<br /><br />ஒரு காலத்துல்ல என்னோட உலகமா இருந்த எத்தனையோ நண்பர்கள் இருக்கும் திசைக் கூட எனக்கு தெரியாது....ஒண்ணும் மண்ணுமா திரிந்த அந்த கவலையற்ற பொழுதுகளோட மிச்சங்கள் நட்பை ஞாபகப்படுத்திகிட்டு இருக்க... அவங்களைத் தேடவோ தொடர்பு கொள்ளவோ எனக்கும் நேரமில்ல...<br /> <br />என்னால் முடிஞ்சது....அவங்களுக்கு எல்லாம் இந்த நண்பர்கள் தினத்துல்ல அன்பான் வாழ்த்துக்களை இந்த பதிவு மூலமாச் சொல்லிக்குறேன்...Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-31055374.post-47143708321167659352010-07-12T12:54:00.002+05:302010-08-01T21:09:11.273+05:30வெள்ளிகிழமைக்குள்ளே வெற்றி வேண்டுமா?அண்ணாமலை...படையப்பா....மாதிரி வாழ்க்கையிலேயும் மூணு மணி நேரத்துல்ல அப்படியே சொய்ங்ன்னு உயரத்துக்குப் போனா எப்படி இருக்கும்..நல்லாத் தான் இருக்கும்..ஆனா அதெல்லாம் சினிமா.... நிழல்..நிஜம் என்னவோ வேற மாதிரி இல்ல இருக்கு.... திங்கட் கிழமையும் அதுவுமா உங்களுக்கு எல்லாம் ஒரு அருமையான யோசனை...வர்ற வெள்ளிகிழமைக்குள்ளே நீங்க எல்லாரும் உங்க வாழ்க்கையிலே உயர...உங்க லட்சியங்களை அடைய....என்னப் பண்ணனும்ன்னு கேக்குறீங்களா....சிம்பிள் மேட்டர் தான்...கீழே இருக்கப் படத்தைப் பாருங்க..... அப்புறம் உங்க கருத்தைச் சொல்லுங்க....<br /><br /><a href="http://www.youtube.com/watch?v=P6G9VWp0pQk&feature=related">ஜக்கு பாய்ஸ் 1</a><br /><br /><a href="http://www.youtube.com/watch?v=wCNrGdq0KkY&feature=related">ஜக்கு பாய்ஸ் 2</a><br /><br /><a href="http://www.youtube.com/watch?v=5Zm-GsD4N1s&feature=related">ஜக்கு பாய்ஸ் 3</a><br /><br /><br />வெள்ளி கிழமை சந்திக்கலாம்...எல்லாரும் இதை அப்படியே பிளான் பண்ணி பண்ணுங்க....வெற்றி நிச்சயம் பாஸ்....பிரமோஷன் டிரீட் ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க ரைட்டா...Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31055374.post-72023387172841437372010-07-11T22:00:00.008+05:302010-08-01T21:08:54.654+05:30மனத்தை வருடிய மெளன ராகம்தமிழ் படங்களில் எனக்கு இப்போவும் ரொம்ப பிடிச்ச படங்களின் பட்டியல் போடச் சொன்னா முதல் இடம் பிடிக்கும் படமிது...எண்பதுகளின் இறுதியில் வந்த படம்...மணிரத்னம் என்ற இயக்குனரை பெரிய அளவில் உலகத்துக்கு அறிமுகம் செய்த படமும் இது தான்..<div><br /><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVn9Vp-nmUqqccMEw6rPJO96p4KbKW-PZnThSu76PRHykxFzNxVH9dPgnA288dfeiRSWIrpvoglPPDab0UT5yFtMxN-8uJMZmUS5pcupEA2TaxlzB9Rg0XAThveDwhnAD1ujc/s320/m1.jpg" style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5492698641764768818" /><div><br />ஒரு ஞாயித்துகிழ்மை மதியம் பிராந்திய மொழிகளில் விருது வாங்கிய படங்கள் வரிசையில் இந்தப் படத்தை தூர்தர்ஷன்ல்ல போட்டாங்க...அப்போத் தான் முதல் முறையா இந்தப் படத்தைப் பாத்தேன்...முதல் தடவைப் பாக்கும் போது நான் ரொம்ப ரசிச்சது...என்னன்னா வி.கே.ராமசாமிகிட்டே அந்த சர்தார் மெக்கானிக் பண்ணுவாரே அந்த காமெடியைத் தான்...ரேவதி அந்த ஆளுக்கு சொல்லித் தர்ற தமிழ் வசவு மொழிகளையும் அதை அப்ப்டியே அச்சரம் பிசகாமல் சர்தாரும் நம்ம வி.கே.ஆர் கிட்டே அன்பான பணிவோட சொல்லுற அந்த அழகு இருக்கே..செம சிரிப்பு அது...<br /><br />அதுக்கு அப்புறம் அந்தப் படத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் போது பாத்தப்போ மனசுல்ல பச்சக்குன்னு ஒட்டுனது நவரச நாயகன் கார்த்திக்கோட அந்த மிஸ்டர் சந்திர மெளலி டயலாக் தான்...இன்னிக்கும் அது ரொம்ப பிரபலம்...படத்துல்ல சும்மா பத்து பதினைஞ்சு நிமிசம் வந்தாலும் கார்த்திக்கோட நடிப்பு காலத்துக்கும் நிலைச்சு நின்னுருச்சுன்னு தான் சொல்லணும்...அதுக்கு அப்புறம் தமிழ்ல்ல வந்த சிட்டி ரொமான்டிக் ஹீரோ பாத்திரங்களுக்கு அது தான் ஒரு மைல் கல்...வழிகாட்டின்னு கூடச் சொல்லலாம்....அதுல்ல கார்த்திக்கோட நடை உடை பாவனை துள்ளலான நடிப்பு அந்த காலத்து காலேஜ் பெண்களின் தூக்கத்தைக் கெடுத்ததாகப் பின்னாளில் கேள்வி பட்டேன்<br /><br />காலேஜ் நாட்களில் தூங்காமல் நண்பர்களோடு கழித்த பல இரவுகளின் இன்னிசைத் தோழன் யார்ன்னா இளையராஜா தான்...ராஜா பாடல்கள் மீது ஒரு தணியாத பைத்தியமே பிடித்தக் காலகட்டம் அது...முக்கியமா மன்றம் வந்த தென்றலுக்கு...அப்புறமா நிலாவே வா..பாடல்கள்...அந்த பாடல்களுக்காகவே மெளன ராகம் படம் இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது....பாக்க பாக்க படத்தின் முதல் மழை பாடலும் மனத்தை ஈரப்படுத்தியது...வான்மேகம் பூ பூவாய் தூவும்...மழை வரும் போதெல்லாம் அந்தப் பாடலை நான் முணுமுணுக்க தவறியதில்லை...பாடல்கள் மொத்தமும் அவ்வளவு ஹிட்...இன்னும் ஹாட் ஹிட் தான்...<br /><br />கல்லூரி காலத்தில் தான் திவ்யா மீது ஒரு தனி கவனம் வந்தது...அட திவ்யா தான் அந்த படத்தில்ல நம்ம ரேவதியோட கேரக்டர் பேர்....எனக்கு தெரிஞ்சு ரேவதிங்கற நடிகையை விட அந்தப் படத்துல்ல திவ்யாங்கற அவங்க பாத்திரம் தான் எனக்கு அதிகம் தெரிஞ்சது<br /><br />திவ்யா நகரத்து நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி பெண்களின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு...துடிப்பு...துடுக்கு..இடக்கு..எனக் கலவையாக ரேவதி கலக்கியிருந்தார்...ரேவதி - கார்த்திக் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவின் எவ்ர் கிரீன் ரொமான் ஸ் பக்கங்களில் நீங்கா இடம் பிடித்தன என்று சொன்னால் அது மிகையாகாது....<br /><br />முக்கியமாக அந்த கல்லூரிக்கு சென்று கார்த்திக் ரேவதியிடம் செயினைத் திருப்பிக் கொடுக்கும் காட்சி...அந்த மைக் போட்டு காதல் சொல்லும் காட்சி....காபி கடை சந்திப்பு என மொத்தமும் ரகளையான ரொமான் ஸ் ...இன்னிக்கும் பாக்கலாம்...ரசிக்கலாம்..<br /><br />இருபது வயதுகளின் இறுதியில் படத்தைப் பாக்கும் போது தான் மோகன் பாத்திரத்தின் வடிவமைப்பு குறித்தான மதிப்பிட்டீல் இறங்க முடிந்தது...மோகனுக்கு அமைதியான அருமையான கனமான வேடம்...மனிதர் கொஞ்சம் கூட அலட்டிக்காமல் அருமையாக பண்ணியிருப்பார்...மோகனோட கேரியரில் மைக் இல்லாமல் மோகன் நடிப்பில் அசத்திய படமென்றால் அது இது தான்....<br /><br />ப்டத்துல்ல என்னைக் கவர்ந்த இன்னொரு முக்கிய அம்சம் அந்த டெல்லி வீடு...என்ன ரசனையோடக் கட்டியிருக்காங்க...அப்படி ஒரு வீடு கட்டணும்ன்னு ரொம்ப நாள் ஆசை...எத்தனையோ மாடல் வீடு பாத்தாலும் இன்னிக்கும் அந்த வீட்டு மேல ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு குறையல்ல...<br /><br />இவ்வளவு சொல்லிட்டு படத்தோட மகுடம் யாருக்குன்னு சொல்லாம விட்டா எப்படி..? மணிரத்னம் நகர மாந்தர்களை மையப்படுத்தி ஒரு அட்டகாசமான நகர காதல் கதையை சினிமாவா வடிச்சு திரையிலே ஓட விட்டார்ன்னா...ரேவதி, கார்த்திக், மோகன்...எல்லோரும் தங்களோட நடிப்பால் படத்தை இன்னும் ஒரு உயரம் கொண்டு போனாங்கன்னா...படததைச் சிகரம் தாண்டி கொண்டு போனது யார்ன்னா சந்தேகம் இல்லாமல் அது இசை ஞானி இளையராஜாவே தான்...செல் போன் வாங்குன புதுசுல்ல அந்த கார்த்திக் வரும் போது ராஜா போட்டிருப்பாரே ஒரு பின்னணி இசை ....அதை ரிங் டோனாத் தேடி பிடிச்சு வச்சுகிட்டவங்கள்ல்ல நானும் ஒருத்தன்...<br /><br />நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி ஒரு நல்ல திரைப்படமான மெளன ராகம் இப்போது பாத்தாலும் என் மனத்தை வருட தவறுவது இல்லை....<br /><br />ராவணன் பத்தி ஊரே பேசி அடங்கி விட்ட இந்த நேரத்தில் மணியோட மணியான இந்தப் படத்தை பத்தி பதிவு போடணும்ன்னு தோணுச்சு...போட்டாச்சு..v</div></div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31055374.post-48830089613660096432010-03-20T20:39:00.003+05:302010-03-21T00:16:20.321+05:30சன் பிக்சர்ஸ் படங்களும் தமிழின ரசனையும்காதலில் விழுந்தேன் என்னும் காலத்தால் அழியாத திரைக்காவியத்தை வெளியிடும் உரிமையை வாங்கி முதன் முறையாக வரவேற்பறைகளில் மட்டுமே தமிழ் இனத்திற்கு சேவை ஆற்றி கொண்டிருந்த சன் குழுமம் திரையரங்குகளுக்கும் தன் சேவையை விரிவுபடுத்திய வரலாறு தமிழ் நாட்டு பச்சிளம் குழந்தைக்கும் தெரியும்<br /><br />பெயிண்ட் அடிச்சு போஸ்டர் ஓட்டி கொடுத்தா பாலிடாலை பச்சப் புள்ளக்கு தமிழன் பால்ன்னு காசு கொடுத்து வாங்கி ஊட்டுவான் அப்படிங்கற உண்மையை ஊருக்கு சன் பிக்சர்ஸ் படங்களின் தொடர் வியாபார வெற்றி எடுத்து சொன்னது...திண்டுக்கல் சாரதி, தெனாவட்டு,மாசிலாமணி போன்ற யாரும் திரும்பி கூடப் பார்க்கும் படங்களை சேனல்கள் மாற்றி விளம்பர படுத்தியே பட்டயைக் கிளப்ப வைத்தார்கள்<br /><br />அடுத்தக் கட்டமாக திரையுலகத் தளபதிகளின் படங்களுக்கு டிங்கரிங் பார்த்து பட்டிபாத்து பெயிண்ட் அடிச்சு தோரணமாத் தொங்க விட்டு....டீலா நோ டீலா அப்ப்டி எல்லாம் சவுண்ட் விட்டு....அப்புறம் ஆட்டுக்கார அலமேலு படம் வந்த்ப்போ அந்த படத்து அலமேலுவை ஊர் ஊரா சீவி சிங்காரிச்சு தியேட்டர்ல்ல ரசிகர்களைத் தரிசிக்க வச்சு படத்தை ஓட வச்சாங்களே அது மாதிரி எளைய தளபதியை ஊர் ஊரா கூட்டிட்டு போய் நிக்க வச்சு பாட வச்சு நடனம் எல்லாம் ஆட வச்சு...எப்படியோ போட்ட காசை எடுக்கற வழியைப் பாத்தாங்க<br /><br />அப்புறம் புச்சி தளபதி நடிச்ச விளையாட்டு பிள்ளை படத்துக்கும் அதே வெளம்பரம் அப்படி இப்படின்னு கொடுத்து ஓட வச்சும் ஓடாத நேரத்துல்ல பாசமுள்ள மீசைக் கார நண்பர் நக்கீரர் வினியோகத்துல்ல நித்தி சாமி ரஞ்சிதா மேடம் ( பெண்களை மதிக்கணும் என்பதால் தான் இந்த மேடம் வார்த்தை போட்டுக்குறேன்) நடிச்ச தியானபீட விளையாட்டுப் பிள்ளை பலான படத்தை ச்ட்டுன்னு ரிலீஸ் பண்ணி மார்க்கெட்டில் தாங்கள் தான் நம்பர் ஒண் அப்படின்னு நிலை நாட்டியதோடு மட்டுமில்லாமல் தமிழின ரசனையை அடுத்ததுக்கும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போற முயற்சியிலே பட்டி முதல் சிட்டி வரை செம பாராட்டுக்களை அள்ளி குவித்தனர்...<br /><br />இப்படியாக தமிழ் திரையுலகத்திற்கும் தமிழ் சினிமாவுக்கு இவர்கள் செய்யும் சேவையும் என்னை புல்லரிக்க வைத்திருப்பதால் இந்த பதிவை எழுதும் கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன் என்பதைப் பதிவைப் படிக்கும் அனைவரும் தெரிந்துக் கொள்ளுங்கள்...<br /><br />இப்படியாகப் பட்ட நிலையில் இந்த வார குமுதம் இதழில் தமிழ் இனம் படித்து அப்படியே மெய் சிலிர்க்க வேண்டிய ஒரு நியுஸ் வந்துருக்கு...அதை நிறைய எப்.எம் சேனல்களில் எல்லாம் கூட கூவுனாங்க....<br /><br />டெர்மினேட்டர் அப்படின்னு ஒரு செம இங்கிலீஸ் படம் ...நான் எல்லாம் பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அலங்கார் தியேட்டர்ல்ல வந்துச்சு..25 வாரம் ஓடுச்சு...அதுல்ல அர்னால்ட் சொஜ்ஜினேகர் அப்ப்டின்னு ஒருத்தர் நடிச்சார்...இப்போ அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா...அந்தப் படத்துல்ல அவர் வித் அவுட்டா தான் அறிமுகம் ஆவார்....மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் வாங்குன அவர் பாடி காட்டுவார்...அந்த படத்துல்ல அவர் ஒரு எந்திரம்....இப்போ லைட்டா மேட்டர் விளங்குதா...<br /><br />இப்போ சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு பெரிய படம் அதே எந்திரமா நாயகர் வர்ற கதை தான்..அதுல்ல நாயகர் தமிழ் இந்திய உலக சினிமாவின் உச்ச நடிகர்...அவரை வித் அவுட்ல்ல காட்டப் போறதா தான் நியுஸ்...நாயகரும் ஒ.கே .சொல்லிட்டார்ன்னு போட்டிருந்தாங்க.... இது மட்டும் உண்மைன்னா..... என்னத்த சொல்ல...தமிழ் சினிமா அடுத்த அடுத்த அடூத்த கட்டத்துக்கேப் போயிரும்ன்னு வைங்க....<br /><br />ஒரு சின்னக் கொசுறு நியுஸ் அந்த ஆங்கிலப் படத்துல்ல வித் அவுட்ல்ல நடிச்ச நடிகர் தற்சமயம் கலிபோர்னியா அப்படின்னு ஒரு அமெரிக்க மாநில கவர்னராயிட்டார்...அந்த ஊர்ல்ல முதலமைச்சர் பதவி மாதிரி....அதுன்னால்ல உச்ச நடிகரோட ரசிகர்கள் இந்த ஒரே ஒத்துமையை வச்சு தமிழ் நாட்டுக்கு அடுத்த மொதல்வர் தங்கள் தலைவர் தான் என்று தாங்கள் என்றோ தொலைத்த நம்பிக்கையை மீண்டும் மீட்டு எடுக்கலாம்...<br /><br />இப்படியே இதே ரேஞ்சுல்ல சன் பிக்சர்ஸ் தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்து தமிழனின் ரசனை தரம் தாழ்ந்து போய் விடாமல் பார்த்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...<br /><br />டிஸ்கி: மத்தவங்க எல்லாம் ஒழுங்கா படம் எடுக்குறாங்களான்னு கேக்கறவங்களுக்கு நான் சொல்லுற ஒரே பதில்.....இந்த கேள்வி ஓவர் டு கலையுலகின் பிதாமகர் பாசத் தலைவர் கலைஞர் அய்யா...அவர் தான்ய்யா படத்துக்கு எல்லாம் அவார்ட் ரிவார்ட் எல்லாம் கொடுக்குறாரு.... இப்போதைக்கு இவ்வளவு தான் கச்சேரி ரைட்டு ஜூட்டுUnknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-31055374.post-23248199767344746362010-02-21T20:12:00.003+05:302010-03-21T00:16:20.322+05:30கொலை முயற்சி வழக்குநகல் படத்தில் நடித்த மண்ட நடிகர் மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது சினிமாப் பட்டி மக்கள் மத்தியில் கடும் பீதியைக் கிளப்பி உள்ளது...<br /><br />காலம் காலமாக சினிமாப் பட்டியின் பல உலகத் தரம் வாய்ந்த படைப்புகளை ஆரவாரமாக வரவேற்று...உயிரைக் கொடுத்து...கையில் இருக்கும் கடைசி காசு வரைக்கும் செலவழித்து ஆராதித்து ஒப்பற்ற கலை சேவை செய்து வந்த தமிழ் ரசிக ஜனம் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கருத்து கேட்க முயற்சித்தோம்...<br /><br />மண்ட நடிகர் பல காலமாக வயெலட், வெட்டிசன், மூனா, கெட்ட வாசம், ரீகன், முல்லா..போன்ற படங்களில் நடித்து அந்தப் படங்கள் திரைக்கு வந்து பலத் தரப்பட்ட மக்கள் மீது ஈவு இரக்கமின்றி அராஜகத்தைக் கட்டவிழ்த்தப் போதெல்லாம் கைக் கட்டி வேடிக்கை பார்த்த அரசு..இப்போது நகல் படம் வந்த நேரத்தில் விழித்துக் கொண்டது ஓரளவு மன ஆறுதல் தரும் விஷயமாகவே பார்க்கிறோம்....<br /><br />இன்னும் சிலர் மண்ட நடிகராவது பரவாயில்லங்க...கொஞ்சம் ஓ.கே தான்..... இன்னும் நிறைய பேர் இருக்காங்க பாஸ் அவங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனையே தரலாம் பாஸ் அப்படின்னு அனியாயத்துக்கு பொங்கிட்டாங்க...அதுவும் குளவி, அழுகிய தக்காளி மகான், பல்லு, சேட்டைக்காரன் இப்படியெல்லாம் சின்னப்புள்ளங்க மேல எல்லாம் கூட டிவி மூலமா எல்லாம் கடுமையான கொலை வெறி தாக்குதல் நடத்துற சின்ன சேனாதிபதி நடிகரை எல்லாம் கூட உள்ளே தள்ளுனாப் புண்ணியமாப் போவுமுங்க..<br /><br />சினிமாப்பட்டி ரசிகனின் கொந்தளிப்பால் சினிமாப்பட்டி சேனாதி பதி நடிகர்களும்...பழைய புதிய ஸ்டார் நடிகர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர்...தங்கள் மீதும் இப்படியான கொலை முயற்சி வழக்குகள் பாயலாம் எனக் கருதி முன் ஜாமீன் மனு மட்டுமின்றி இனி நடிக்கும் படங்களில் கதை மற்றும் நல்ல திரைக்கதையும் வேண்டுமெனத் தேடத் துவங்கி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...<br /><br />பாஸ் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அதை அரசாங்கம் தான் கவனிக்கனும்...அரசியல் வாதிங்க தான் கவனிக்கணும்....ஒய் சினிமாப்பட்டி சிட்டிசன்களை டிஸ்டர்ப் பண்ணுறீங்க....பொதுவா ஒரு ரசிகரிடம் நாம் எக்குத் தப்பாக் கேக்குறீங்க...<br /><br />பாஸ் எம்ப்பேர் சின்ன மலை....பசு மாடு வச்சு மில்க் வியாபாரம் பண்ணுறேன்...தமிழ்நாட்டுல்ல தான் பண்ணுறேன்...ஆனா நானே இதுவரைக்கும் என்னை வாழ வச்சது தமிழ் பால்...அழ வச்சது ஆந்திரா பால்ன்னு பாலை ஸ்டேட் வாரியா பிரிச்சதே இல்லை..ஆனா இந்த சினிமாப்பட்டிகாரங்க அப்படி எல்லாம் பாடும் போது மட்டும் நாங்க கைத்தட்டுணும்...எங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அவங்க வெறும் நடிகன் அப்படின்னு நாங்க அவங்களை விட்டுரணும்....படா சோக்கா கீதுப்பா மேட்டர்<br /><br />அப்புறம் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் டமிலுக்கு டமிலர்க்கும் தர்றதா பாடுனா மட்டும் நாங்க காசு கொடுத்து கேக்கணும்...உண்ணாவிரதத்துக்கு வா நைனா அப்படின்னு கூப்பிட்டா மட்டும் அப்பீட்டூன்னு அவங்க சொல்லுவாங்க அதுக்கும் நாங்க ரிப்பீட்டேன்னு சொல்லணும்ன்னா என்ன நைனா...படா காமெடியா கீதுப்பா...<br /><br />அப்புறம் இந்த ஹாலிவுட்ல்ல எந்த ஸ்டாருமே...மை டிரிங்க் இஸ் அமெரிக்கன் இங்கிலீஸ் மில்க்...மை பாடி லக்கேஜ் கேஸ் ஆல் பிளாங்க் டு அமெரிக்கா அப்படின்னு சொல்ல மாட்டேங்குறாங்க...சோ அவங்களை அந்த ஊர் மக்களும் பொதுவா எந்தப் பிரச்சனைக்கும் கூப்பிடுறது இல்ல....நடிகன் நடிகனா இருந்தா அவனை யார்ப்பா இதுக்கெல்லாம் கூப்பிடப் போறா...அவன் அதையும் தாண்டி ட்ரை பண்ணும் போது தான் இப்படி கொலை முயற்சியிலே போய் முடியுது...<br /><br />அய்யா பயானிதி அய்யா..தொடர்ந்து நீங்க தான் டமில் படம்...அதுவும் நெல்லை டமில் படம்...கோவை டமில் படம்...சென்னை டமில் படம்ன்னு எடுத்து சினிமாப்பட்டியையும் சினிமாப் பட்டி ரசிகனையும் காப்பாத்தணும்...ப்ளீஸ்....<br /><br />சினிமாப் பட்டி ரசிகர்களின் ஏகோபித்த உணர்வுகளை பதிவு செய்த படி கச்சேரி செய்திகளுக்காக சினிமாப்பட்டியிலிருந்து ஷிவா.........:)Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-31055374.post-20929344251407760442010-02-15T21:41:00.005+05:302010-02-16T23:14:54.164+05:30சினிமாப் பட்டியில் இருந்து கச்சேரி செய்திகளுக்காக சுகுமாரன்டொட்டடொய்ங் டொட்டடொய்ங்...இதனால் சினிமா பட்டி மக்களுக்கு அறிவிக்கப்படும் செய்தி என்னவென்றால் நம்ம பாசக்கார சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பெரியவருக்கு சினிமாப் பட்டி வாழ் மக்கள் சார்பா நடத்தப்படும் நாலாயிரத்து நானூத்து எட்டாவது பாராட்டு விழாவுக்கு அனைவரும் கண்டிப்பாக கட்டாயமாக பாசத்தோடும் அன்போடும் பாராட்டு மேகங்களோடும் ( மேகம் விழாவில் மழையாக பொழிய) வந்து சேர வேண்டுமாறு அழைக்கப்படுகிறார்கள்.....மிக முக்கியமாக விழாவுக்கு தலைமையேற்க வரும் அகில உலக சூப்பர் ஸ்டார்கள்....கேலக்சி நாயகன்கள்...பெரிய தளபதிகள்..குட்டி தளபதிகள்...வாய்ஸ் கேப்டன் ஸ்...மற்றும் மேடையேற போகும் அனைத்து வருங்கால சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் ஒரு நீளமான உரையை....அதாவது இது வரை கலந்து கொண்ட பாராட்டு விழாக்களில் தெரிவிக்காத பாராட்டுக்களை கொண்ட ஒரு உரையை தயார் செய்து முன் ஒப்புதலுக்காக அறிவான பஞ்சாயத்து ஆலய..ஆபிசில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்<br /><br />சினிமாப் பட்டியின் உயர்வான மக்களே...தமிழை தன் உயிராய் மதிக்கும் நம் பஞ்சாயத்து தலைவரை மகிழ்விக்கும் படி நம் தற்கால சினிமாவில் வரும் இலக்கிய கருத்து செறிவான..ஓமகசீயா...நாக்கமுக்க..ரண்டக்க..பல்லேலக்கா..டையலாமா..போன்ற இனிய கருத்து ஆழம் நீளம் அகலம் உள்ள பாடல்களை பாடி...சீரான தமிழ் உடைகளை உடுத்தி உடுக்கை அடித்து...உலக்கை இடித்து....மானாடா மயிலாட....காண்பவருக்கு எல்லாம்....ஆனந்த கூத்தாட....நிகழ்ச்சிகள் அமைக்க வேண்டும்<br /><br />விழா மேடையின் இரு பக்கமும் பஞ்சாயத்து தலைவரின் பிஞ்சு மனம் விம்மும் போது உடன் விம்ம அப்படியே தும்ம....குரல் கம்ம...கண் கலங்க....அகில உலக நாயகன் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....<br /><br />கடைசியாக....விழாவுக்கு வரும் சினிமாப் பட்டி மக்களுக்கு அழைப்பு சீட்டோடு ஒரு துண்டு சீட்டும் வழங்கப்படும் அந்த சீட்டில் தங்கள் பெயரை எழுதி கருப்பும் சிவப்புமாய் முத்திரை குத்தி அங்கிருக்கும் பஞ்சாய்த்து அதிகாரிகளின் கையில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.<br /><br />விழா முடிவில் துணை பஞ்சாயத்து தலைவரும்...மத்திய முனிசிபாலிட்டி கமிட்டி சேர்மனும் சேர்ந்து மூன்று அதிர்ஷ்ட்டசாலிகளைத் தேர்ந்து எடுப்பார்கள்...அந்த மூன்று பேருக்கும்<br /><br />பீலாகதி வாரனின் டின் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படம்...மற்றும் அதோகதி வயலின் ரெட் பெயிண்ட் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம்... வைகை ஏரியா லவுட் வைன் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம் ஆகியவற்றில் நடிக்காமல் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க சிறப்பு அனுமதி இனாமாக அளிக்கப்ப்டும்...ஆகவே பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுங்கள் அனுமதியை வெல்லுங்கள்..டீலா நோ டீலா....சினிமா பட்டி மக்களே<br /><br />இந்த அறிக்கை சினிமாப்பட்டி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...இந்த அறிக்கை கேட்க பலரை நாம் தொடர்பு கொண்ட போது பலரும் இலங்கை தமிழர்களின் நலன் வேண்டி பஞ்சாயத்து தலைவர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க காலவரையற்ற மவுன விரதம் இருப்பதாய் சைகை மொழியில் தெரிவித்தனர்...<br /><br />அலட்டி நாட் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த மண்ட நடிகர் மட்டும் வீரமா வாயைத் திறந்து...ஐய் ஆ....இவ்ங்க ஏன்னை மெரட்டுராங்க..ஆனாலும் நான் பேஸ் மாட்டேன்...நீங்க சொல்லுற வர்க்கும் ஏதுவ்வும் பேஸ் மாட்டேன்...ஆனா சொல்லிடுங்க ஐய் ஆ...ப்ளீஸ்...நான் பேஸ்ணும்..நறைய்ய பேஸ்ணும்...அப்படின்னு தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்...<br /><br /><br />இப்போ தலைப்பை படிச்சு பதிவை முடிங்க....<br /><br />டிஸ்கி: இந்த அறிக்கையும் அதில் இருக்கும் கருத்துக்களும் சும்மா லுடுலுடுவாயி மட்டுமே...அது யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடுவன அல்ல....இது மெய் மெய் மெய்...மெய் மட்டுமே....Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-31055374.post-22158542014879419532009-10-30T06:09:00.004+05:302009-10-30T06:43:00.733+05:30அமெரிக்காவில் ஆபிசர்ஸ்ப்ப்ப்ப்பா.... நாங்க எல்லாம் ஒரே பிசி....<br /><br />நம்ம ஆபிசர் பொட்டி தட்ட ஆரம்பிச்சு பலக் காலம் ஆச்சு...எம்புட்டு வருசமாவோ பொட்டி தட்டுறார்...இந்தப் பொட்டி தட்டுறவங்க எல்லாம் அடிக்கடி ஒரு பிளைட்டை புடிச்சு அங்கிட்டும் இங்கிட்டுமா போயிட்டு வரும் போது ஆபிசர் ஆளுக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துட்டு அடுத்து சொல்லுற டயலாக் தான் மேலே நீங்கப் படிக்குற டயலாக்...<br /><br />நம்ம ஆபிசரும் பல நாள் மொட்டை மாடியிலே நின்னு பறக்குற பிளைட்டுக்கும் பருந்துக்கும் வித்தியாசம் தெரியாம சில சமயம் பருந்தைக் காட்டி பொண்டாட்டி என்னிக்காவது ஒரு நாள் நான் அதுல்ல ஏறி பறக்கத் தான் போறேன் பாரேன்ன்னு சவுடால் விட்டுட்டு தான் இருக்கார்...<br /><br />ம்ம்க்கும் பருந்துல்ல ஏறி பறந்த முதல் மனுச ஜென்மம்ன்னு கின்னஸ்ல்ல பேரு கட்டாயம் வாங்கிருவிங்கன்னு சொல்லுங்கன்னு ஆபிசரம்மா சொன்ன பொறவு தான்...அடக்கொக்க மக்கா பருந்துக்கு இவ்வளவு பந்தி வச்சு பஞ்ச் விட்டோம்ன்னு ஆபிசர் பீல் ஆன சம்பவம் ஏராளம்..<br /><br />இந்த மளிகை கணக்கு எல்லாம் சின்ன பொஸ்தகத்துல்ல எழுதுவாங்களே...அப்படி ஒரு பொஸ்தகம் தீந்துப் போன நேரம்...ஆபிசரம்மா கையிலே சிக்குன பொஸ்தகம்...ஆபிசரோட...ம்ம்க்கும் நீங்க நினைச்சதே தான்...பாஸ்போர்ட் புக் தான்... பொங்குன ஆபிசரை அப்படி ஒரு நக்கல் பார்வை பாத்துட்டு ஆபிசரம்மா சொன்னது...பாஸ்போர்ட் எல்லாம் பிளைட்ல்ல பறக்கறவங்களுக்கு தான் வேணும்...அதுவும் நாடு எல்லாம் தாண்டி போகத் தான் வேணும்...உள்ளூர் பருந்து பார்ட்டிக்கு எல்லாம் எதுக்கு....கண்க்கு பொஸ்தகம் வாங்குற காசுல்ல ஒரு இரண்டு ரூவா மிச்சமாகுமில்ல...."<br /><br />இரண்டு ரூவாயா...எம்புட்டு செலவு பண்ணி விடிகாலமே போய் லைன்ல்ல நின்னு எடுத்த பாஸ்போர்ட் மதிப்பு இரண்டு ரூவாயா...இந்த பாஸ்போர்ட்ல்ல ஸ்டாம்ப் விழல்லன்னா பாரு.... ஆபிசர் முடிக்கல்ல<br /><br />இப்படியே தபால் ஆபிஸ் பக்கம் போய் நில்லுங்க.....யாராவது ஸ்டாம்ப் வாங்கி கீழே விடுறாங்களான்னு பாருங்க...பாஸ்போர்ட்ல்ல டக்குன்னு பிடிச்சுக்குங்க.....<br /><br />ஆபிசருக்கு வெறியே வந்தும் பயன் இல்லை...<br /><br />ஒரு தரம் பாக்கிஸ்தான் பார்டர் போனப்போ...அப்படியே லைட்டாக் காலை உள்ளே வச்சுட்டு பாஸ்போர்ட்டை நீட்டி ஒரு ஸ்டாம்ப் வாங்கிரலமான்னு யோசிச்ச போது...அங்கே நின்ன பாக்கிஸ்தான் அதிக சினேகிதமா துப்பாக்கியை தூக்கி பிடிச்ச ஸ்டைல்ல பாத்து...இங்கிட்டு ஸ்டாம்பிங் வேற இடத்துல்ல தான் கிடைக்கும் போலிருக்குன்னு முடிவை மாத்திகிட்டு மனசைத் தேத்திகிட்டு ஆபிசர் திரும்பிட்டார்...அடுத்தாப்பல்ல ராமேஸ்வரம் போனப்போ அங்கிருந்து இலங்கை பக்கம் தானே படகுல்ல போய் ஒரு ஸ்டாம்பிங்க் போட்டுராலமான்னு ஒரு யோசனை உதிச்சது.... விசாரிச்சதுல்ல போட்டுருவாய்ங்களாம்...ஸ்டாம்பிங் இல்ல...ஆளையேன்னு சொல்லி ஆசைக்கு அழகா ஆப்பு வச்சுட்டாங்க....<br /><br />இப்படி எல்லாம் இருந்த ஆபிசர் வாழ்க்கையிலே தீடிர் திருப்பம்....பாஸ்போர்ட் ஆபிஸ் வீணாக் கொடுத்த பாஸ்போர்ட் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டு அதுல்ல நம்ம ஆபிசர் பாஸ்போர்ட்டை சேக்கப் போன அந்த வினாடி விண்ணகத்துல்ல இருந்து ஒரு வெளிச்சம்...ஆபிசரோட பிராஜக்ட் மேனஜர் மண்டைக்குள்ளே விழுந்து....யாருமே இல்ல போறதுக்கு இருக்கத்து ஆபிசர் மட்டுமே அப்படின்னு ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு வந்து.... போறீயான்னு கேக்க.....<br /><br />அந்த நிமிசத்துல்ல இருந்து ஆபிசர் விசா ஸ்டாம்ப் ஆன அன்னிக்கு ஆபிஸ்ல்ல ஒரு மரம் வேரோடு பேந்து விழுந்த வரைக்கும் நடந்த அனைத்தும் தனி பெரும் வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்வுகள்....<br /><br />அப்படியே பிளைட் ஏறுனப்போ...அந்த படிக்கட்டுல்ல ஆபிசர் சொல்ல நினைச்சது....<br /><br />அலோ ஜென்டில்மேன் ஸ் லேடீஸ் கிட்ஸ்....நல்லாப் பாருங்க...ஒழுங்காப் பாருங்க...நானும் அமெரிக்காப் போறேன்...நானும் அமெரிக்காப் போறேன்....நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்......நானும் பொட்டி தட்டுற ஆபிசர் தான் தான்..<br /><br />யப்பா டிரைவர் வண்டியை நல்லா உசரமாத் தூக்கி எங்க வீட்டு மாடிப் பக்கமா ஒரு ரவுண்ட் விட்டு அமெரிக்காவுக்கு கிளப்பு....சும்மா டாப் கியர்ல்ல எடுக்கணும் புரியுதா....<br /><br />நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...நான் அமெரிக்காப் போறேன்...<br /><br />இது தான் ஆபிசர் அமெரிக்கா வந்த கதை....<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz9jkBgogLLHZ4UoZL0C9vOH6eW8Kl_612TAZUvzHzpqDjYtgf1orAmHhrHhUTFif0OQ4tZWrSpMItd2ce-QCMQUALHPZemjxZZyaFzS-rnNG5wnRFd97vHzVWon9kPDMO_P4/s1600-h/Picture+115.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5398193702041811490" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz9jkBgogLLHZ4UoZL0C9vOH6eW8Kl_612TAZUvzHzpqDjYtgf1orAmHhrHhUTFif0OQ4tZWrSpMItd2ce-QCMQUALHPZemjxZZyaFzS-rnNG5wnRFd97vHzVWon9kPDMO_P4/s320/Picture+115.jpg" border="0" /></a><br /><br />ஒரு ஒத்துமை பாத்தீங்களா...நான் அமெரிக்கா கிளம்புன அதே சமயம் தான் நம்ம ஆபிசரும் அமெரிக்கா கிளம்பியிருக்கார்....மக்கா இந்த ஆபிசரும் நானும் ஒண்ணுன்னு இன்னும் நினைச்சீங்கன்னா அதுக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை சாமியோவ்...<br /><p><a href="http://micset.devcutchery.com/search/label/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">இதர ஆபிசர் பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்</a></p><p> </p><p> </p>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-31055374.post-51446364048440693582009-08-22T22:28:00.006+05:302009-09-17T06:43:13.009+05:30பதிவோடிகள் - 3சிபிகுமார் வீட்டு மொட்டை மாடியில் உக்காந்து குசும்பனும் சிபிகுமாரும் தீவிரமா எதையோ யோசிச்சுட்டு இருந்தாயங்க....<br /><br />"டேய் மாப்பிள்ளைகளா......" அப்படின்னு சவுண்ட் விட்டுகிட்டே மாடிக்கு ஆயில்ஸ் ஏறி வந்துகிட்டு இருந்தார்..பின்னாடி பொட்டி படுக்கை எல்லாம் ஒரு சுத்து சுத்தி கையோட எடுத்துகிட்டு அல்ட்ரா மாடர்ன்னா ஒரு பைய வந்து நின்னான்...<br /><br />"ஆர்டா இது பழைய தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் மூஞ்சியை மாஸ்க்கா செஞ்சு மாட்டிட்டு வந்த மாதிரி பதிவோடிகள்ல்ல ஒரு புது கேரக்டர்....." குசும்பன் காலை சுழத்தி சிபி தலையைத் தாண்டி எடுத்துப் போட்டுட்டு உக்காந்து ஒரு கேள்வி கேட்டாப்புல்ல...<br /><br />"என்ன குசு...." ஆயில்ஸ் திக்க...<br /><br />"டேய் என் பேரை ஷார்ட்டா கூப்பிடக் கூடாதுன்னு உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லுறது.....அப்புறம் உன் பேரை நான் தமிழ் படுத்தி கூப்பிடுவேன் சொல்லிட்டேன்...." குசும்பர் டென்சன் ஆக...<br /><br />"அட இல்லப்பா புல்லா சொல்லத் தான் வந்தேன்... மூச்சு வாங்க நடந்து வந்தேனா...அதுல்லா கொஞ்சம் கேப் விட்டதுல்ல மாறி போச்சிப்பா" ஆயில்ஸ் விளக்கம் கொடுக்க...<br /><br />"ஆயில்ஸ் மாறி போகல்ல நாறி போயிருச்சு..." சிபிக்குமார் திரும்பி ப்ஞ்ச் டயலாக் சொல்லிட்டு வானத்தைப் பாத்து திரும்பவும் யோசனையாகிடுரார்.<br /><br />"குசும்பா உனக்கு தெரிஞ்சவன் தானாமே...அப்படி தான் ஊர் முக்குல்ல நின்னு வழி கேட்டுட்டு இருந்தான் நான் தான் கூட்டி வந்தேன்...."<br /><br />"டேய் நானெல்லாம் மக்கள் தொண்டன்டா....பல பேருக்கு என்னைத் தெரியும்...ஆனா அந்த பல பேரை எல்லாம் நான் தெரிஞ்சுக்க முடியுமா... முக்கா கிலோ மூளையை வச்சு முக்கா நிமிசம் யோசிச்சாக் கூட இந்த லாஜிக் புரியணுமே ஆயில்ஸ்...சரி சரி இந்த நாகேஸ் மூஞ்சியை எங்க பிக் அப் பண்ணியோ அங்கேயே ட்ராப் பண்ணிட்டு அவ பாக்கெட்ல்ல எதாவது இருந்தா எடுத்துட்டு வந்துரு....."<br /><br />ஆயில்ஸ் சரின்னு தலையாட்டிட்டு திரும்ப...நாகேஷ் மாஸ்க்கை கழட்டிட்டு படு ஸ்டைலா தலையைத் தூக்குறார் அந்த புது கேரக்டர்...<br /><br />"டேய் மாப்பி சென்ஷி நீயா சொல்லவே இல்ல.... என்ன இது மாஸ்க்"<br /><br />"பன்னிக் காச்சல் மேட்டருக்கு மாஸ்க் போட்டா நல்லதுன்னு சொன்னாங்க அது தான் எனக்கு பிடிச்ச நாகேஷ் சார் மாஸ்க் போட்டுட்டு வந்தேன்...எப்பூடி?"<br /><br />"அட பன்னிக் காச்சல் எல்லாம் உனக்கு வரவே வராதுடா மாப்பி....நீ வீணா பயந்துருக்க..."<br /><br />"ம்ம்ம்ம் உண்மையாவா"<br /><br />"பின்னே மனுசனுக்கு வர்ற வியாதி எல்லாம் உனக்கு வருமா சொல்லு....சரி....என்ன விசயம்...சொல்லு"<br /><br />"மாப்பி காதல்டா.... அயாம் லவ் ஒண் கேர்ள்.....டீப்லி மேட்லீ...சின்சியர்லி....சூப்பர்லி....சீரியசஸ்லீ.....யு மை பிரண்ட் ஹெல்பி மீ...."<br /><br />"மை பிரண்ட் ஹெல்ப் வேணும்னா மலேசியாவுக்குல்ல போகணும்... இங்கே எதுக்கு வந்த...?"<br /><br />"நோ குசும்பு ப்ளீஸ்...லவ் அன்ட் லவ் ஒன்லி... நோ மேரேஜ் ஐ வில் டை....சீரியஸ்"<br /><br />இதைக் கேட்டதும் அப்படியே எங்கிருந்தோ பேக் கிரவுண்ட் மீசிக் அதிர ஆரம்பிக்குது...<br /><br />சிபிகுமார் முதுகு கை கால் எல்லாம் துடிக்க பொங்கி எழுந்து திரும்புறார்...<br /><br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...... பாட்டு டெசிபல் ஏறுது...<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6piphK_u7J1BKmVzGGih0v9mE6C-1FnaAZ-wjyX85n-kAeOdQtiJ9MjatocMbs-diSDl882RkjedfEXOQJrlIBaoCq2_-OnDdu5FZCKKhSDsA2rAAxX5WyrLv1oYV-YswM4w/s1600-h/new-nadodigal-movie-stills-11.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5373034491185426482" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 274px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6piphK_u7J1BKmVzGGih0v9mE6C-1FnaAZ-wjyX85n-kAeOdQtiJ9MjatocMbs-diSDl882RkjedfEXOQJrlIBaoCq2_-OnDdu5FZCKKhSDsA2rAAxX5WyrLv1oYV-YswM4w/s320/new-nadodigal-movie-stills-11.jpg" border="0" /></a><br /><br />சிபிகுமார் ஆயில்ஸ் குசும்பன் மூணு பேரும் புது கேரக்டரோட வேகமா நடந்து மாடி எல்லாம் ஜம்ப் பண்ணி வீதி எல்லாம் வேர்வை வழிய நடந்து அங்கிட்டும் இங்கிட்டும் வெறிதனமாய் பாத்துகிட்டு கடைசியா சிபிகுமார் வீட்டு முன்னாடி இருக்க ஒரு டிவிஎஸ் 50 வண்டியை ஸ்டார்ட பண்ணுறாங்க....<br /><br />குசும்பன் ஸ்டார்ட் பண்ண சிபி பின்னாடி உக்கார ஆயில்ஸ் முன்னாடி செட்டில் ஆகுறார்.. சென்ஷி அப்போ நான் எப்படி வருவேன்ன்னு பரிதாபமாக் கேக்க...<br /><br />ம்ம்ம் நீ முன்னாடி ஓடிகிட்டே வழி காட்டுனாத் தானே நாங்க பின்னாடியே வண்டியிலே வந்து பொண்ணைத் தூக்கி உன்னோடச் சேர்த்து வைக்க முடியும்....குசும்பன் லாஜிக்கா பதில் சொல்ல..<br /><br />ஆகா அந்த ஊருக்கு எனக்கு வழி தெரியாதே...எப்படி நான் காட்டுவேன்..அதுவும் ஓடிகிட்டே....ரொம்ப கஸ்ட்டம் மாப்பி...அப்படின்னு சென்ஷி கையை விரிக்க...<br /><br />அப்படி என்னடா ஊர்.......அது.... ஆயில்ஸ் ஆவேசமாகி கேக்க...<br /><br />அது வந்து.....அமெரிக்கா மாப்பி....அது தான் என்னோட காதலி இருக்க ஊர்......பேக் கிரவுண்ட் மீசிக் அறுந்து ஓட....டிவிஎஸ் 50ஐ அப்படியே போட்டுட்டு மூணு பேரும் வந்தவனைத் திரும்பிக் கூட பாக்கமா நடையைக் கட்டுறாங்க...<br /><br />டேய் மாப்பு.... நான் அவளை தீவிரமாய் லவ் பண்ணுறேன்டா....அவ இல்லன்னா மெய்யாலுமே செத்துருவேன்டா....வந்தவன் பீலிங்கா மெரட்ட... மூணு பேர் அப்படி இப்படி யோசிச்சி ஒரு முடிவுக்கு வர்றாங்க....<br /><br />நண்பய்ன் ஆசைப் பட்டுட்டான்.... காதலிச்சிட்டான்... அதைச் சேத்து வைக்குறது தான் நட்பு அப்படின்னு பகலவன் பிரமீளாவே சொல்லியிருக்கார்..." சிபி தீவிரமான போஸ்ல்ல சொல்ல...<br /><br />அது யார் பகலவன் பிரமீளா பலான பட டைரக்டர் பேர் மாதிரி இருக்கு....குசும்பன் சொல்ல....<br /><br />அது நான் தான்...எனக்குள்ள இருக்க பின் நவீனத்துவ இலக்கியவாதியோட பேர் அது..சரி அதைப் பத்தி பொறவு பேசுவோம்..இப்போக் காதல் முக்கியம் கிளம்புங்க...ஸ்டார்ட் மீசிக்..."<br /><br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...... மீண்டும் பாட்டு டெசிபல் ஏறுது...<br /><br />டேய் மாப்பி அமெரிக்கா எப்படி போறது,.... ஆயில்ஸ் சிரீயசா யோசனையிலே கேக்க...<br /><br />எதுக்கும் கவலைப் படாதீங்க அதுக்கெல்லாம் நம்ம பயபுள்ள ஒருத்தன் இருக்கான்....பாசக்கார பய....அம்புட்டு நேசக்காரன்...நட்புன்னா அப்படி ஒரு நண்பய்ன் அவன்...சொல்லிகிட்டே சிபிகுமார் போனைப் போடுறார்...சரியா மூணு வாட்டி ரிங் விட்டுட்டு கட் பண்ணுறார்....வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது காலர் ட்யூன் அடித்து அடித்து ஓய்கிறது...<br /><br />என்ன இது....போனை போட்டப்பல்ல இல்ல..பேச வேண்டியது தானே...அது என்ன கட் பண்ணுறது...<br /><br />அது தான் சொன்னோம்ல்ல பாசக்கார பைய...அவனே போன் போடுவான்....அவன் யார்ன்னு உனக்கு இப்போத் தெரியாது அமெரிக்கா போனாத் தெரிஞ்சுடும்...<br /><br />அடுத்த சில நிமிடங்களில் போன் வருகிறது... புலி...புலி ஸ்பீக்கீங்....புலி ஸ்பீக்கீங் பிரம் யு என் ஓ.....<br /><br />டேய் மாப்பி.....அப்படின்னு ஆரம்பிச்சி பின்னாடி சாங் ஒலிக்க...சிபிகுமார் எல்லா விவரத்தையும் ஆவேசமா சொல்ல போன் பேச்சு முடிகிறது....<br /><br />ஓ.கே. நாம இன்னும் இரண்டு நாள்ல்ல அமெரிக்கா கிளம்புறோம்.....பயபுள்ள இருக்கான் அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்...நாம போறோம்ய்யா.....டண்டணக்க டண்டணக்க.....அப்படியே சீன் கட்டாகி ஏர்போர்ட் போவுது.... அங்கே அப்படியே பெர்மூடா கூலிங் கிளாஸ் கெட்ப்பல்ல ஏர்ஹோஸ்டஸ் இலியானா கூட ஒரு செம ராப் ராக் லோக்கல் குத்து பாட்டு....<br /><br />இந்த டான்ஸ்ல்ல பதிவுலக மூத்த பதிவர்கள் கலந்து குத்து குத்துன்னு குத்தாட்டம் போட வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது...<br /><br />அப்படியே பிளைட் நீயுயார்க் ஏர்போர்ட்ல்ல லேண்ட் ஆவுது...அங்கே ஷாருக்கானை விசாரிச்ச அதே அதிகாரி நம்ம பதிவோடிகளை விசாரிக்குறார்....நம்ம பயபுள்ளக அங்கேயும் நக்கலும் நையாண்டியுமாப் பேச..தனி ரூம்க்கு கூட்டிட்டுப் போய் குத்த வைக்கிறாங்க...அங்கே ஒரு ஓரமா ஆல்ரெடி ஒருத்தர் குத்த வச்சு சுவத்தைப் பாத்தப் படி இருக்கார்....<br /><br />மூணு பேரும் அவரைக் கண்டுக்காம இன்னொறு பக்கமாப் போய் உக்காருராங்க...<br /><br />டாப் ஆங்கிள்...சைட் ஆங்கிள்...லோ ஆங்கிள்ன்னு சுத்தி சுத்தி கேமரா போவுது...அப்புறம் அந்த வெள்ளைக்கார ஆபிசர் வர்றார்...<br /><br />ஒய் ஆர் யு இன் அமெரிக்கா..பர்பஸ் ஆப் விசிட்<br /><br />லவ் ஆபிசர்... திஸ் பாய் சென்ஷி...லவ் ஒன் கேர்ள்...<br /><br />நோ சென்ஷி.... சென் ஹி...ஆபிசர் சொல்ல<br /><br />நோ ஹி... ஹி ஷி ஒன்லி....ஆயில்ஸ் விளக்க முயல...<br /><br />ஆபிசர் சென்ஷியை எழும்பி நிற்க சொல்லுகிறார்...அவரை ஏற இறங்க பாத்துட்டு...<br /><br />நோ ஷி.... ஒன்லி ஹி.... ஐ செக் ஹிம்....<br /><br />"டேய் இது வேற மாதிரி போவுது...சமாளிடா..." குசும்பரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது..<br /><br />"ஆபிசர் யு பார் மிஸ்டேக்கன்....ஹி ...ஹி ஒன்லி.... பட் நேம் ஷி.... சென்ஷி.... ஹி லவ் ஒன் கேர்ள்... ட்ரு லவ்...ஒகே..."<br /><br />ஆபிசர் புரிஞ்ச மாதிரி தலையாட்ட நம்ம மக்களுக்கு தைரியம் வருது...<br /><br />"லவ் ப்ராப்ளம்... நோ ஒர்க் அவுட்...வீ கம் இன் குரூப் டு வின் த லவ்..ஹி மேரேஜ் ஷி....<br /><br />"நோ ஷி மேரேஜ் ஷி....சென்ஷி ரைட்"<br /><br />"எஸ் எஸ் ஷி ( சென்ஷியைக் காட்டி) மேரேஜ் ஷி ( அப்படின்னு வேற பக்கம் பொண்ணைச் சுட்டி காட்டி சொல்லுறார் குசும்பர்<br /><br />"ஓ.கே...கிவ் மீ த கேர்ள்ஸ் அட்ரஸ்... யு ஹேவ் இட்" அந்த ஆபிசர் கேட்க<br /><br />டேய் சென்ஷி மாப்பி உன் லவ்வர் அட்ரஸைக் கேக்குறார் எடுத்து கொடுடா..அதைப் பாத்து புரிஞ்சுட்டு நம்மளை விட்டுருவார்.. அப்புறம் நம்ம புலி இந்நேரம் இங்கே வந்து இருப்பான்...வந்து நம்மைக் கூட்டிட்டுப் போயிருவான்டா....<br /><br />சென்ஷி பாக்கெட்டில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து ஆபிசரிடம் நீட்டுகிறார்..ஆபிசர் அதைப் படிச்சுட்டு செம கலவரமாகப் பார்க்கிறார் அவர் பார்வை இன்னொரு ஓரம் சுவத்தைப் பாத்து குத்த வச்சிருக்கும் அந்த இன்னொரு கேரக்டரையும் இவங்களையும் மாறி மாறி பாக்குறார்.. அப்புறம் போனை எடுத்து அவசரமா யாருக்கோ பேசுறார்...அடுத்த ஒண்ணு ரெண்டு நிமிசத்துல்ல திபு திபுன்னு ஒரு இருபது முப்பது அமெரிக்கா போலீஸ் பாய்ஞ்சு உள்ளே வர்றாங்க....<br /><br />"ஆத்தி என்ன இது.... மொத்தப் போலீசும் இப்படி ரவுண்ட் கட்டுது.." ஆயில்ஸ் டெரர் ஆயிட்டப்பல்ல<br /><br />"இரு இனியும் பொறுக்க முடியாது... நம்ம புலிக்குப் போனைப் போட்டுருவோம்..சைலண்ட்டா ஒரு செல்போனை எடுத்து சிபி மீண்டும் மூணு மிஸ்ட் கால் விடுறார்...மூணாவது கால் அடிக்கும் போது...<br /><br />"ஆபிசர் போன் ரிங்கிங் இன் யுவர் பாக்கெட் ப்ளிஸ் பிக் அப்" அந்த இன்னொறு மூலையிலே இருந்து திரும்பாமலே சவுண்ட் வருது...<br /><br />"இது நம்ம புலி குரல் ஆச்சே.... புலீஈஈஈஈஈஈஈஈ.....நீயா....." மூணு பேரும் பாசத்தோடு அந்த இன்னொரு மூலைக்கு பாய்கிறார்கள்<br /><br />"கிட்ட வராதீங்க வெள்ளைக்கார போலீஸ் கிட்ட துப்பாக்கியைக் கடன் வாங்கி சுட்டுருவேன்...உங்க சகவாசமே வேணாம்ன்னு தானே சூடான்ல்ல சூடா செட்டில் ஆனேன்..அப்பவும் வியாழக்கிழமை நைட் ஆனா குசும்பா நீயும் உங்க டேடியும் போன் போட்டு...நீ வெறும் புலியா....இல்ல....கொட்டை எடுத்த புளியான்னு கேட்டு கலாய்ச்சீங்க..அதை எல்லாம் மறந்து லவ் மேட்டர்ன்னு உதவ வந்தா இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மாதிரி உக்கார வச்சிட்டீங்களே..."<br /><br />"என்னத் தான் ஆச்சு...."<br /><br />"அந்த பேப்பர்ல்ல இருந்த அட்ரஸ் என்னன்னு தெரியுமா? நானும் அவசரத்துல்ல மெயிலை பிரிண்ட் எடுத்துட்டு வந்து நீட்டுனேன்..இப்போ நீங்களும் நீட்டிட்டீங்க"<br /><br />"ஒயிட் ஹவுஸ் ..வாஷிங்டன்.....அன்ட் யு சே யுவர் லவ்வர்ஸ் டேட் இஸ் த பிரசிடேண்ட் ஆப் அமெரிக்கா...." ஆபிசர் ஆக்ரோசமாக் கேக்க, நம்ம பயபுள்ளக நெஞ்சுக்கு நடுவே கையை இறுக்கி கட்டிட்டு பரிதாபமா சென்ஷியைப் பாக்குறாங்க...<br /><br />"ஆமாடா மாப்பி...என் லவ்வர் அப்பா அமெரிக்காவுக்கே பிரசிடெண்ட் டா..ஆனா இப்போ ரிட்டையர்ட் ஆயிட்டதாச் சொன்னா....லவ்ல்ல பிக்ஸ் ஆயிட்டேன்... நீங்க தான் என்னைச் சேர்த்து வைக்கணும்..சென்ஷி சிரியசா பீலிங்க்கா பேச....<br /><br />பகலவன் பிரமீளா என்னச் சொல்லுறார்ன்னா.....<br /><br />மூடுய்யா நொண்ணை....பேக்கிராவுண்ட் மீசிக் கொடுத்த பில்டப்ல்ல எங்கே போறோம்ன்னு கூட தெரியாமா உன் கூட கிளம்பி வந்தேன் பாரு....இப்போ இங்கே ஹஸ்கூல்ல பாய் ஸ்குவட் பசங்கல்ல இருந்து அப்பரசட் போலீஸ் வரைக்கும் வந்து அன்டர் ட்ராயரோட நிக்க வச்சு கேள்வியாக் கேட்டு குடைய போறாங்க....<br /><br />பகலவன் பீரமீளா என்னச் சொல்லுறார்ன்னா...<br /><br />யோவ் டென்சன் ஏத்தாதே.... அன்டர் டராயரோட நிக்க வைப்பாங்களா...சூடான்ல்ல இருந்து சூடா கிளம்புனதுல்ல அதை எல்லாம் போட மறந்து கிளம்பிட்டேன்டா.....புலி பதற...<br /><br />பகலவன் பிரமீளாவும் இவ்வளவு நேரமா அதைத் தான் சொல்ல முயற்சி பண்ணிட்டு இருந்தார்... நீயேச் சொல்லிட்ட... சிபிகுமார் மீண்டு சிந்தனையில் ஆழ்கிறார்..<br /><br />அதே நேரம்...<br /><br />"YES SIR...4 TERROISTS DETAINED...SUSPECTED TO BE AL QAEDA...WHITE HOUSE ADDRESS IN HANDS..THEY WERE PROCEEDING TOWARDS WHITE HOUSE...."Unknownnoreply@blogger.com13tag:blogger.com,1999:blog-31055374.post-3333500518530620572009-08-17T20:20:00.004+05:302009-09-17T06:43:13.010+05:30பதிவோடிகள் - 2<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2E08-XTDMVGaxZnym1Rqczoz7Ri357LTPXpwFdIkmAPmns4Ws4JwIuZrdzYCVgS1ga8V3Ujcne_wrkWfdGxnSQ1m7YFOAic_LU03RAFTaKTND6H3FK2jdgt5owJHB4Z1nHDI/s1600-h/kusumbu.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5370975053808804242" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2E08-XTDMVGaxZnym1Rqczoz7Ri357LTPXpwFdIkmAPmns4Ws4JwIuZrdzYCVgS1ga8V3Ujcne_wrkWfdGxnSQ1m7YFOAic_LU03RAFTaKTND6H3FK2jdgt5owJHB4Z1nHDI/s320/kusumbu.jpg" border="0" /></a><br />கலாய் கலாய் கலக்கலாய் கலாய்..... ஹேய் ஹேய்....<br /><br />சைக்கிளை மிதிச்சுட்டு கையைக் காற்றில் ஆட விட்டுகிட்டே ஸ்டைலா நம்ம குசும்பன் ஒரு பொண்ணு பின்னாடி சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி போயிட்டு இருக்கார்...<br />அப்போ அங்கே குறுக்கே பாய்ந்து கை போடுகிறார் அபி அப்பா....<br /><br /><br />ஹே சன்...டியர் குசும்பன்....ஒரு பொண்ணைப் பாத்தா ஹீரோன்னா காதல் பண்ணனும்....அது தான் லாஜிக்.... இப்படி எப்பவும் எல்லாரையும் எங்கேயும் கலாய்க்கக் கூடாது....அது சரியா வராது..<br /><br />செம சீரியசா அபிஅப்பா அட்வைஸ் பண்ண....சைக்கிளை சைட் ஸ்டாண்ட் போட்டுட்டு இறங்கி வர்றார்...<br /><br />அலோ அலோ....ஓவர் பிலீங் எல்லாம் வேணாம்....காதல் எல்லாம் பண்ண தேவ் வேற கேரக்டர் புக் பண்ணியிருப்பாப்பல்ல... என்னையும் உங்களையும் ஒரு ரோல் கொடுத்து கூப்பிட்டா அதுவும் உங்களை டாடியாவும் என்னை சன்னாவும் கூப்பிட்டா எதுக்குன்னு தெரியாதா.... ஜஸ்ட் பார் கலாய்... பாக்குற எல்லாரையும் நான் கலாய்ப்பேன்.... கலாய்க்கறதுல்ல அப்போ அப்போ நான் கேப் விட்டா உங்க பிளாஷ் பேக் எல்லாம் எடுத்து எனக்குச் சொல்லி மோட்டிவேசன் பண்ணி என்னைக் கலாய்க்கறதுல்ல என்னை நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போய் விடணும் அது தான் உங்க ரோலோட வேலை ஓகே வான்னு கேக்குறார் குசும்பர்<br /><br />அவ்வளவு தான் அப்படியே கையைச் சுழற்றுரார் அபி அப்பா...சூப்பர் ஸ்டார் மாதிரி அவர் கையிலே ஒரு கூலிங் கிளாஸ் வருது....இன்னொரு வாட்டி சுத்துரார் ஒரு கோட் வருது...அதை அப்படியே எடுத்து மாட்டுறார்...கை தட்டுரார்..குசும்பன் சைக்கிள் அபி அப்பா கிட்ட வந்து அதுவா பிரேக் அடிச்சு நிக்குது,,,அதுல்ல தாவி ஏறி உக்காராரு அபி அப்பா...<br /><br />மீசிக் சேஞ்ச்..அப்படின்னு அபி அப்பா சவுண்ட் விட...ஓரம் போ...ஓரம் போ...அபி அப்பா வண்டி வருது...ஓரம் போ...ஓரம் போ..... கலாய் கலாய் கலக்கலாய் கலாய் கலாய்...ரீமிக்ஸும் ஒலிக்க சைக்கிளில் அதே பொண்ணை அபி அப்பா ரூட் விட்ட படி கலாய்க்க போகிறார்..<br /><br />ம்ம்ம் இப்போ உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே நம்ம சிபி குமார், ஆயில்ஸ், அப்புறம் குசும்பன் மூணு நேரம் நெருக்கமான நண்பர்கள்...எப்பவுமே ஒண்ணாவே திரிவாங்க...ஒண்ணாவே இருப்பாய்ங்க....அவங்க தான் பதிவோடிகள்....மத்தவங்க எல்லாம் வெறும் பதிவர்கள்...<br /><br />டேய் மச்சி... என்னடா இது....தப்பு இல்லையா....<br /><br />குசும்பன் சிபிகுமாரோட லேப்டாப்பை நொண்டி நொங்கு எடுத்துகிட்டு இருந்தார்....என்னவெல்லாமோ அடிச்சு தேடிகிட்டு இருக்கார்....<br /><br />டேய் குசும்பா... நண்பய்ன் நம்மளை நம்பி அவன் லேப் டாப்பையே கொடுத்துட்டு போயிருக்கான்...அதை இப்படி நொண்டுற.....வேணாம்டா..<br /><br />மச்சி புதுசா பிரபுதேவாவைக் கலாய்க்க ஒரு மேட்டர் சிக்கியிருக்கு..அதுக்கு தோதாப் போட ஒரு 9தாரா போட்டோ கிடைக்கும்ன்னு தேடுறேன்..கிடைக்க மாட்டேங்குது...கூகிள் அடிச்சு தேடுனா..அது நேரா சிபிகுமார் ஐபி அட்ரஸ் கொடுத்து அங்கே போய் தேடுன்னு தொரத்தி அனுப்புது நான் என்னப் பண்ணுவேன்... 9தாராகிட்ட கூட இல்லாத பல ஸ்டில் இந்தாளு கிட்ட இருக்குதாம்...<br /><br />இருந்தாலும் நண்ய்பன் எவ்வளவு கஸ்ட்டப்பட்டு கண்ட கண்ட சைட் எல்லாம் போய் கண்முழிச்சு...சேத்து வச்ச படம்டா அவனுக்கு தெரியாமா எடுக்குறது தப்புடா தெரிஞ்சா அவன் மனசு என்ன பாடு படும்......<br /><br />எல்லாம் தெரியும்டா நொண்ணைகளா....9தாரா எல்லாம் நமக்கு செட் ஆவாதுன்னு நான் எப்பவோ பிகரை மாத்திட்டேன்டா.....டேய் ஆயில்ஸ் உன் லேப்டாப்ல்ல அஞ்சலி போட்டோ எதாவது மிச்சமிருக்கான்னு பாருடா...<br /><br />குசும்பா... அப்படின்னு அப்பாவியா ஆயில்ஸ் சிபி சொன்னதைக் கேட்டு குசும்பன் பக்கம் திரும்ப...<br /><br />ஆமா மச்சி... இப்போக் கொஞ்ச முன்னாலேத் தான் உன் லேப்டாப்பை நானே ரைட் அடிச்சு எல்லா பிகர் படத்தையும் எடுத்து ஊருக்கெல்லாம் விநியோகம் பண்ணேன்....இதை எல்லாம் நினைச்சு பீல் பண்ணாதே...மாப்பூ.....<br /><br />அடப் பாவிகளா அப்போ நான் தான் அவுட்டா... ஆயில்ஸ் அப்பாவியா முழிக்க...<br /><br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாடல் அலறுகிறது...<br /><br />மாப்ளே.... உங்களுக்கே தெரியும்...ஆன்மீகம் தான் எனக்கு எல்லாம்ன்னு.... எனக்கு தேவை எல்லாம்...நீங்க ஒரு 50 ஆன்மீக பதிவு போடணும்...<br /><br />அப்புறம் அந்த ஹாலிவுட்ல்ல நான் தத்து எடுத்த பொண்ணை உங்க கூட டேட்டிங் அனுப்ப எனக்கு எந்த ஆட்சபேணையும் இல்ல...<br /><br />மாமா ஹாரி பாட்டர்ல்ல வருமே அதே பொண்ணு தானே....<br /><br />ஆமா மாப்பிள்ள...அதே பொண்ணு தான்...<br /><br />அப்போ அங்கே கேட்டுக்கு வெளியே நிக்குற குசும்பன் இதைக் கேட்டு செம கடுப்பு ஆகி..<br /><br />ஆயில்ஸ் மச்சி... இப்போ நான் அவுட்டா.... கே.ஆர்.எஸ் பொண்ணு ...கே.ஆர்.எஸ் பொண்ணுன்னு சொன்னானே சிபி குமார்....அது அவர் ஹாலிவுட் தத்துப் பொண்ணுன்னு சொல்லவே இல்லையேடா...ஏன் நாங்க ஆன்மீக பதிவு போட மாட்டோமா..... 50 என்ன....500 ஆன்மீக பதிவு போடுவோம்....கலாய்....கலாய்....ஓம்....கலாய்.....கலாய்...நமஹ....<br /><br />ஆயில்ஸ் குசும்பனின் இந்த திடீர் அவதாரம் கண்டு ஜெர்க்காகி நிற்க....<br /><br />மீண்டும் மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாடல் அலறுகிறது...Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-31055374.post-77086679265814379742009-08-15T17:59:00.010+05:302009-08-15T21:46:57.956+05:30பதிவோடிகள் - 1<a href="http://micset.devcutchery.com/2009/08/blog-post.html">பதிவோடிகள் அறிமுகம்</a> <br /><br />இவர் தான் சிபி குமார்.... காதலுக்காக நாலஞ்சு வருசமா கோயில் கோயிலா போயிட்டும் வந்துட்டும் இருக்கார் அவர் கையிலே லேப் டாப் வேற..அதுல்ல ஒரு மொபைல் கனெக்ஷ்ன் வேற...என்னன்னு கேக்குறீங்களா....அவர் ஒரு பிரபல பதிவர்...அவர் மாமாவுக்கு ஒரு பொண்ணு...அந்த பொண்ணை இவர் கட்டணும்ன்னா இவர் எப்படியாவது ஒரு அம்பது ஆன்மீக பதிவாது போடணும்ன்னு கண்டிசன் போட்டிருக்கார் அவங்க மாமா....காதலுக்காக ஆன்மீகப் பதிவு போட நம்ம சிபி குமார் போகாத ஊர் இல்ல ஏறாத கோயில் இல்ல...அவர் பதிவுன்னு போட உக்காந்தா பாவம் அவருக்கு வர்றது எல்லாம் கலாய்த்தல்...இல்ல அதை விட கொடுமையா பின் நவீனத்துவம்..அவரும் என்னத் தான் பண்ணுவார்...அவர் மாமா வேற யாருமில்ல... பதிவுலகத்துல்ல ஆன்மீக சிங்கம்ன்னு பேர் எடுத்த நம்ம கே.ஆர்.எஸ் அய்யா தான்...( எப்பூடி)<br /><br />இப்போ நாம பாக்குற இவர் ஆரணி ஆயில்ஸ்...தமிழ் சினிமால்ல புதுசா யாராவது ஒரு கதாநாயகியோ..தமிழ் பதிவுல்ல புதுசா யாராவது பதிவோ போட வந்திட்டா... அந்த நாயகியோட போட்டோ இவர் ஜிடாக்ல்லயும்...அந்த பதிவரோட பதிவுல்ல இவரோட கமெண்ட் குறைந்த பட்சம் ஒரு நாலு இல்ல அஞ்சாவது இருக்கும்....சொந்தமா அத்தைப் பொண்ணு இல்லாத நம்ம ஆயில்ஸ் மத்த எல்லாப் பொண்ணையும் மாமன் பொண்ணா நினைச்சு உருகுற ஒரு பாசக்கார தமிழ் பையபுள்ள இவருக்கு ஒரு ஆசை...எப்படியாவது ஒரு நாலு இங்கிலீஷ் பதிவு போட்டு ஹாலிவுட் பிகர் ஒண்ணையாவது கரெக்ட் பண்ணி மாயவரம் திருவிழாவுக்கு கூட்டிட்டு வந்து கும்மியடிக்கணும்ன்னு..அதுக்காக பல நாளா பல இங்கிலீஷ் பதிவை இவரும் பல மாதிரி படிச்சு உருப் போட்டு ரெடியாகிட்டு இருக்கார்... லேட்டஸ்ட்டா இவர் படிச்ச பதிவுல்ல இருந்த பாட்டை இப்போவும் இவர் ஆபிஸ்ல்ல உக்காந்து உரக்கப் படிச்சு உரு எத்திகிட்டு இருக்காராம்..அந்த பாட்டு...<br /><br />TWINKLE TWINKLE LITTLE STAR HOWAI R PAATY VAAT WHAT U ARE<br />AAP ABOUT THE OLD MONK HIGH<br />LIKE A DIE MOND IN THE KAI<br /><br />இவர் பேர் குசும்பர்....உலக ரேஞ்ச் இவர்...இவரைப் பத்தி இவரை விட உங்களுக்குத் தான் அதிகம் தெரியும்..அப்படின்னு இவரே சொல்லுவார்....கொஞ்சமா கொஞ்சமா கலாய்க்க ஆரம்பிச்ச இவர்...மூணு பதிவு போட்ட புது ஆரம்பிச்சு...அப்படியெ உள்ளூர் முக்கு சந்து பெருசு....வட்டம் ...மாவட்டம்...சதுரம்...ஸ்டேட்...சென்ட்ரல்..ஸ்டேட்ஸ்ன்னு கலாய்த்தலே டெவலப் பண்ணி போயிட்டே இருக்கார்...உலக லெவல்ல கலாய்க்கறதுக்கும் குசும்பலுக்கும் ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிக்கணும்ங்கறது தான் இவரோட லட்சியம்...அந்த லட்சியத்துக்காக வேர்ல்ட் பேங்க்ல்ல லோன் அப்ளை பண்ணிட்டு அப்படியே துபாயல்ல எதாவது ஷேக் கிட்ட கந்து வட்டிக்கு கடனா டாலர் கிடைக்குமான்னு பாக்க துபாய்க்கு வேலைக்கு போயிருக்கார்....எப்படியும் சீக்கிரம் அமவுண்ட் கிடைச்சுரும் யுனிவர்சிட்டி ஆரம்பிச்சு பெரிய லெவல் வர்றவன் போறவனை எல்லாம் கதற கதற கலாய்ச்சு செட்டில் ஆயிரலாம்ன்னு ஒரு முடிவோட இருக்கார் நம்ம ஆள் குசும்பர்...ஆக்சுவலா துபாய்ல்ல இவர் ஒரு ஷேக் புள்ளய டாவ் அடிச்ச கதையும் அதுக்கு இவருக்கு நம்ம படத்துல்ல டாடியா வர்ற கேரக்டர் பண்ண ஹெல்ப்பை எல்லாம் பின்னாடிப் பாக்கப் போறீங்க..ஆங் இவர் டாடி யாரா....அபி கிட்ட கெஞ்சி பர்மிசன் அவ டாடியைத் தான் நம்ம படத்துக்காக குசும்பரோட குசும்பு டாடியாக்கி இருக்கோம்<br /><br />நம்ம கதையில்ல இவங்க மூணு பேர் தான் முக்கியமானவங்க... பதிவோடிகள்.....<br /><br />நம்ம சிபி குமார் அப்பா சிபி பின்நவீனத்துவம் பத்தி பதிவு போடுறது பத்தி படு கேவலமா நம்ம சிபி குமாரை கலாய்க்கறார்...<br /><br />டேய் சிபி....என்னடா பையன் நீ....குழலி மாதிரி சூடா அரசியலோ...கொத்தனார் மாதிரி குறுக்கா.....<br /><br />அப்பா<br /><br />குறுக்கெழுத்துன்னு முழுசா சொல்லுறதுக்குள்ளே தொண்டையில்ல வார்த்தை சிக்கிருச்சு,,,,வெட்டி மாதிரி பல்சுவையாவோ...கவிதா மாதிரி பொது கருத்தோ....லக்கி மாதிரி ஜனரஞ்சகமாவோ...எழுதாம பின்நவீனத்துவம்....என்ன எழவோ.....<br /><br />அப்பா...அப்படியே நில்லுங்க.....உங்களுக்கு பின்னாடி என்ன இருக்கு....<br /><br />சுவர்....<br /><br />அதுக்கும் பின்னாடி.....<br /><br />அது,,,,வந்து,,,,<br /><br />திண்ணை...அப்படின்னு சிபி குமார் பாட்டி வாசல்ல இருந்து சொல்ல<br /><br />அதுக்கும் பின்னாடி.....<br /><br />சைக்கிள் இருக்குடா எடுபட்ட பையலே... பாட்டி உரலை எடுத்து சிபி குமார் மேல எறிய அதை ஸ்டைலா பிடிச்ச சிபி குமார்...தலை முடியை சிலுப்பி விட்டுட்டு...<br /><br />அதுக்கும் பின்னாடி.....அப்படின்னு கெத்தா குரல் விடுரார்..<br /><br />எல்லாரும் மவுனமா நிக்க....<br /><br />பேக் கிரவுண்ட் அதிர... அது தான் அது தான் பின் நவீனத்துவம்.... சிலருக்கு பின் மட்டும் தெரியும்... தங்கச்சிக்கு அவ சைட் அடிக்கிற பையன் நவீனை மட்டும் தெரியும்....எனக்கு பின்நவீனத்துவம் தெரியும்...உங்களுக்கு எதுவும் தெரியாது...நான் கிளம்புறேன்...என்னைப் பதிவுலகம் அழைக்குது....அவர் ஸ்லோ மோஷனில் வெளியேற மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாட்டு ஹய் டெசிபலில் அலறுகிறது....<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUdqSpedwIi6r4J1hPvPMg5Kj_1xKl0tHB6JsbME-pYghNizg-X7mnULDXqFR8TDkvf_FXh8fS3dkdizEI3kXSdGaV3KeqKZLqiVj4sLj7gG-_qqq67TkYNmcFNHEAkk_qfv8/s1600-h/sibi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5370192042127564002" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 206px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUdqSpedwIi6r4J1hPvPMg5Kj_1xKl0tHB6JsbME-pYghNizg-X7mnULDXqFR8TDkvf_FXh8fS3dkdizEI3kXSdGaV3KeqKZLqiVj4sLj7gG-_qqq67TkYNmcFNHEAkk_qfv8/s320/sibi.jpg" border="0" /></a><br /><br />பதிவோடிகள் ஆரம்பிச்சாச்சுப்பா....ஒப்பனிங் எப்பூடி?Unknownnoreply@blogger.com16tag:blogger.com,1999:blog-31055374.post-6851173400491399182009-08-13T22:11:00.004+05:302009-08-15T21:46:57.957+05:30கச்சேரி பிலிம்ஸ் - பதிவோடிகள்<strong>விவாஜி </strong>வெற்றி வரிசையில் தமிழ் பதிவுலகம் அதிர.....<br /><br />நாயகன் பிரபல பதிவர் <strong>சிபிகுமார்</strong>.....<br />நம்ம <strong>ஆயில்ஸ்</strong>....<br /><strong>குசும்பன்</strong>....<br /><strong>அபி அப்பா...</strong><br />இளா....<br />இவர்களுடன் உங்கள் பாசத்துக்குரிய <strong>கே.ஆர்.எஸ்</strong> கலக்கப் போகும்<br /><br /><strong>கச்சேரி பிலிம்ஸ்</strong> பெருமையுடன் வழங்கும்<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJrOVUL-eyKCufJGQ18WV2__kYFKsnPa7cNjVHJXftzTmOvfu6CKnRSJj0JELp6wO9oyi5mYqepVS-_e-d17jAT8fDAfl9QgQL4DE36IULM34_-tuu3U3TBweIt-qpsyrSDxI/s1600-h/sibi2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5369501070306508866" style="WIDTH: 182px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJrOVUL-eyKCufJGQ18WV2__kYFKsnPa7cNjVHJXftzTmOvfu6CKnRSJj0JELp6wO9oyi5mYqepVS-_e-d17jAT8fDAfl9QgQL4DE36IULM34_-tuu3U3TBweIt-qpsyrSDxI/s320/sibi2.jpg" border="0" /></a><br /><strong>இது ஒரு தேவ் படைப்பு</strong><br /><strong></strong><br />உங்களுக்காக பாடல் வரிகள் இன்று முதல் தமிழ் பதிவுலகின் திக்கு எட்டிலும்<br /><br /><strong>மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br /><br />உறங்கும் பதிவு கதறி அழட்டும்<br />போடும் மொக்கையில் பதறி எகிறட்டும்<br />பின்னூட்டக் கயமை மீண்டும் வரட்டும்<br />கும்மி தொடங்கட்டும்<br />மல்டிபிள் ஐடி ஆட்டம் அதிரட்டும்<br />அனானி கமெண்ட் அள்ளி தெளிக்கட்டும்<br />பின்நவீனத்துவம் பின்னாலே புரியட்டும்<br />மொக்கையே ஜெயிக்கடும்<br /><br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br /><br />ரிசசெசன் என்ன ப்ரொபசன் என்ன<br />மொக்கைக்கு முடிவே இல்லை<br />எல்லாமே மொக்கை என்றால்<br />கவலைகள் எதுவும் இல்லை<br />பதிவிடும் நேரம் மட்டும் மொக்கையென்று தேங்கிடாதே<br />அதை படிக்கும் போதும் மொக்கை தான்னு மறந்திடாதே<br />உருப்படின்னு எதுவுமில்லை<br />மொக்கைப் போட்டபின் வேற சூனியமில்லை... மொக்கையே<br /><br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br /><br />கும்மிகள் தீருமட்டும் போடுவதா மொக்கையாகும்<br />அனானி ஆட்டமெல்லாம் பதிவுலக புது நீதியாகும்<br />குரூப்பான கும்மியெல்லாம் கொஞ்ச நாளில் வீழும் வீழும்<br />மொக்கையாலே சேரும் கும்மி எந் நாளும் வாழும் வாழும்<br /><br />ரூல்ஸ்ன்னு மொக்கைக்கு இல்ல<br />புல்மீல்ஸ்ன்னா எப்பவும் கூட்டம் உண்டு மொக்கை போடவே<br /><br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br /><br />கதறும் மொக்கைகள் தொலைந்தது என்ன<br />அதிரும் அனானிகள் ஒழிந்தது என்ன<br />பின்னூட்டக் கயமை முடிந்ததது என்ன<br />பதிவுலகே என்ன<br />நேற்றைய கும்மி திரும்புவது என்ன<br />இன்றைய குசும்பு மயங்குவது என்ன<br />லொள்ளும் ஜொள்ளும் கலப்பது என்ன<br />சொல் சொல் பதிலென்ன<br /><br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br />மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ<br /></strong><br />-சிறப்பு நன்றி நம்ம ஆயில்ஸ்Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-31055374.post-70837978072718795792009-07-06T20:44:00.000+05:302009-08-15T21:45:54.289+05:30நாடோடிகள்-ஜாக்சன் அப்படியே ஆயிரத்தில் ஒருவன்<strong>நாடோடிகள் - சுப்ரமண்யபுரம் பார்ட்- 2</strong><br /><br />விட்டேத்தியான வெட்டி ஆபிசர்கள்..அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பு...அவர்களுக்கு வரும் காதல்..அதனால் விளையும் கச்சேரிகள்..இப்படி தமிழகத்து நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் கதை இன்னொரு முறை ஜெயித்திருக்கிறது... சுப்ரமணியபுரத்தில் பழக்கத்திற்காக கொலை செய்ய துணிகிறார்கள் என்றால்..இதில் பழக்கத்திற்காக ஊர் தாண்டி போய் வீடு புகுந்து பெண்ணைத் தூக்குகிறார்கள்...ரொம்ப நாளைக்கு அப்புறம் திரையரங்குகளில் திருவிழாக் கூட்டம்..இரவுக் காட்சி நிரம்பி இருந்தது... மக்கள் தூங்காமல் படம் பார்த்தார்கள்...முதல் பாதி ஜெட் வேகம் என்றால்...அடுத்த பாதி பெட்ரோல் தீர்ந்த பைக் வேகம்... எப்படியோ தள்ளி தள்ளி கரை சேர்கிறார்கள்...சசி குமார் தமிழகத்துக்கு கிடைத்த இன்னொரு டி.ராஜேந்தர்....அதாவது 80களில் தமிழகம் ரசித்த அந்த டீ.ஆர்.<br /><br /><strong>மைக்கேல் ஜாக்சன் - பிளாக் ஆர் ஒயிட்</strong><br /><br />பொதுவா சிகரம் தொட்டவர்களின் வாழ்க்கையில் எத்தனை சுவாரஸ்யங்கள் உள்ளனவோ அவ்வளவுக்கு அவ்வளவு சிக்கலும் உள்ளது என்பதற்கு உதாரணம் மைக்கேல் ஜாக்சன்...<br />மொத்தம் பாடியது 60 பாடல்கள் தான்..அதன் மூலம் சம்பாதித்த சொத்துக்களுக்கோ....ரசிகர்களுக்கோ...எண்ணிக்கையில் இடமில்லை என்றே சொல்லணும்...கொட்டாம்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆண்டு விழா துவங்கி...நியுயார்க் நகரத்து வீதி ஓரம் வரை இவர் பாட்டி ஒலிக்காத இடமே இல்லை..... வெற்றி படிகட்டுகளில் எந்த அளவுக்கு வேகமாய் மைக்கேல் ஏறினாரோ அதே அளவு வேகமாய் இறங்கவும் செய்தவர் மைக்கேல்...<br />துன்பத்தில் துவங்கி ஊருக்கெல்லாம் இன்பம் கொடுத்து தன் இன்பத்திற்கு மீண்டும் துன்பத்தையேத் தேடிக்கொண்ட மனிதர் ஜாக்சன்...<br /><br />மைக்கேல் ஜாக்சன் நல்லவரா கெட்டவரா....அவர் பாடிய பாட்டு ஒண்ணு தான் ஞாபகம் வருது....பிளாக் ஆர் ஒயிட்..அவர் மனசு அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...<br /><br />கோயம்புத்தூர் மாறி போச்சு..<br /><br />கேரளாவுக்கு ரொம்ப பக்கம் இருப்பதாலோ என்னவோ கோவை வானிலை சேட்டன்மார்களின் ஊரை ஒத்தே இருக்கும்...ஜூன் மாதம் அங்கெல்லாம் பசங்க பள்ளிக்கு குடை பிடிச்சுட்டு போறது தான் வழக்கம்...இந்த வருசம் ஜூன் வர வேண்டிய மழை கொஞ்சம் தாமதமா ஜூலையிலே வந்து இருக்கு....சில்லுன்னு காத்து....குளுகுளுன்னு இருக்கு கோவை....கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகி வருசம் நாலு ஆகிப் போச்சு..நாலு வருசத்துல்ல கோவையிலே நிறைய மாற்றம் வந்துருக்கு...வாகனம் பெருத்துப் போச்சு..ஆங்காங்கே டிராப் ஜாம்...மாசு அதிகமாயிருச்சு...நின்னு நிதானமாப் பொழப்புக்குப் போன மனுசங்க எல்லாம் குறைஞ்சுப் போயிட்டாங்க..பரபரன்னு மக்கள் பறக்கிறாங்க...கோவை தன் அடையாளத்தைத் தொலைச்சுட்டு இன்னொறு சென்னையாகிடுமோன்னு லேசா பயமாயிருக்கு<br /><br /><strong>கேட்கும் பாட்டு...</strong><br /><br />ஆயிரத்தில் ஒருவன் பாட்டெல்லாம் கேட்டீங்களா... கேக்க கேக்க நல்லாயிருக்கு..ஓ ஈசா..என் ஈசா தான் நம்ம சாய்ஸ்...படத்து நாயகி ஆன்டிரியா தான் பாட்டுக்கும் நாயகி..ஏற்கனவே பாடியிருக்காங்களாம்...மாலை நேரத்து மயக்கம் பாட்டு வாலிப தேசத்து ஏக்க வரிகள்... தனுசும் அவங்க வீட்டுகாரம்மாவும் கூட சேர்ந்து பாடி இருக்காங்க...ஆச ஆசன்னு ஒரு பாட்டு...<br />வைரமுத்து செல்வாவுக்கு இது முதல் கூட்டணி.... அகதி வாழ்க்கை பற்றிய வரிகள் மனத்தைப் பிழியுது...அதுவும் விஜய் யேசுதாஸ் குரல்..அப்படியே அவங்க அப்பா குரலை ஒத்துப் போவுது ..<br /><br />ஆயிரத்தில் ஒருவன்...ரசனையான இசை விருந்து...<br /><br /><strong>படித்ததில் பிடித்தது</strong><br /><br />எப்பொழுதும் என் இதயத்தில் இருந்து கொண்டு<br />வேதனை செய்கிறாள் இவள்<br />ரகசியமாகச் செய்த பாவத்தைப் போல<br /><br />நன்றி கவிக்கோ அப்துல் ரகுமான் ( அவளுக்கு நிலா என்று பெயர்)Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-31055374.post-9332672588800911672009-06-22T20:25:00.002+05:302009-08-15T21:45:38.300+05:30விஜய்-கமல்-இலங்கை மற்றும் பல<strong><span style="color:#ff0000;">நேத்து வரைக்கும் டிசம்பர் 12....இப்போல்ல இருந்து ஜூன் 22....</span><br /></strong><br />உங்களை எல்லாம் பாத்தா எங்களுக்குப் பாவமா இருக்கு....எதோ ஒரு பழைய துணியை வச்சு ஆட்டோவைத் தொடைச்சிட்டிருந்த ஆட்டோக்கார அண்ணாச்சி புதுசா ஆட்டோ வாங்குன மதுரைக் கார பயலைப் பாத்து சிரிச்சுட்டேச் சொன்னார்...<br /><br />ஏனுங்கண்ணா....நானும் ஆட்டோ நீங்களும் ஆட்டோ... அப்புறம் என்னங்கண்ணா என்ன பாவம்ங்கறீங்க....மதுரைக்கார தம்பி பேட் பிடிக்கிற சச்சின் மாதிரி சிடுவெனக் கேட்டான்...<br /><br />புது கொடி....ஆட்டோல்ல பொறந்த நாள் போஸ்ட் ஸ்டிக்கர்...மாலை...பாட்டு..சத்தியமா உங்களை எல்லாம் பாத்தாப் பாவமாத் தான் இருக்கு...<br /><br />அருணாச்சலம் அண்ணே... இன்னிக்கு பொறந்த நாள் விழா இருக்கு... செம சுதியில்ல இருக்கோம்....வேணும்ன்னா பாருங்க.....இந்த ஆட்டோ எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.....அப்புறம்...கால்டாக்சி....அப்படி இப்படின்னு கலெக்ஷன் அள்ளிருவோம்ல்ல....அடுத்த ஜூன் 22ல்ல கட்சி...அதுக்கு அடுத்த ஜூன் 22ல்ல ஆட்சி...<br /><br />சேம் டயலாக்.... ஆனா தேதி தான் வேற அந்த தேதி டிசம்பர் 12....இந்த தேதி ஜூன் 22....மறுபடியும் சொல்லுறேன் உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு....<br /><br />அடப் போங்க அண்ணே...உங்க கிட்டப் பேசி நேரம் தான் வீணாவுது....மதுரை தம்பி ஆட்டோவில்ல கொடி பறக்க ( உன்னால் முடியும் அப்படின்னு கொடியில்ல எழுதியிருக்கு..) கில்லியா கிளம்பி....வில்லு கணக்கா சீறி போறான்...<br /><br />நம்ம அருணாச்சலம் அண்ணன்...வண்டியைத் துடைச்சு துணியை புழிஞ்சு...வண்டி மேலே துணியைக் காயப் போடுறார்.... அந்த துணி பாத்த எதோ கொடி மாதிரி இருக்கு.....நீலம்...சிவப்பு... நடுவுல்ல ஸ்டார்.....நம்ம திருமா கொடியா....திருமா கொடியிலே ஸ்டார்குள்ளே உருவம் இருக்காதே...ஆனா இதுல்ல இருக்கே...உருவம் சிதைஞ்சுப் போய் சரியாத் தெரியல்ல...<br /><br />அருணாச்சலம் அண்ணன்...ரேடியோவை போடுகிறார்.... எனக்கு ஒரு கட்சியும் வேணாம்...ஒரு கொடியும் வேணாம்.,.அட டாங்கு டக்கர டக்கர டக்கர டாங்... அப்படின்னு சூப்பர் ஸ்டார் பாட்டு ஓடுது.....அண்ணன் பெருமூச்சு விட்டுகிட்டே...மதுரை தம்பி போன ரூட்டை வெறிக்கிறார்..<br /><br /><strong><span style="color:#ff0000;">அவார்ட் அவதாரம்....</span></strong><br /><br />நடிகர் சங்கம் போய் ரிஜிஸ்டர் பண்ணி சரியா மூணு மாசம் சந்தா கட்டுனா...கலைமாமணி அவார்ட் வீட்டுக்கே வந்துருமாமே அப்படியா..... எனக்குத் தெரிஞ்ச ஒரு நடிகர் சங்க புள்ளி கிட்ட கேட்டு அசிங்கமாத் திட்டு வாங்குனேன் ஒரு வாட்டி..அப்புறம் இந்த அவார்ட் பத்தி எல்லாம் அதிகம் டவுட்டு கேக்கறது இல்ல...ஆனாப் பாருங்க...இந்த வாரம் விஜய் அவார்ட் எல்லாம் பாத்து ஒரே டவுட் தான் போங்க...கிட்டத்தட்ட எல்லா விருதையும் கமலுக்கே கொடுத்தாங்க....அது சரி...அவர் ஒரு நல்ல நடிகர்.... நல்ல கலைஞர்... சகல கலா வல்லவர்....ஒத்துக்குறோம்....நல்லாத் தான் செஞ்சுக்காங்க அந்த மாபெரும் கலைஞனுக்கு மரியாதைன்னு நினைக்கும் போது தான் டவுட் வந்துச்சு... விருதைக் கமலுக்கு கொடுத்தது நம்ம இளைய தளபதி ....ஒரு வேளை விஜய் டிவி கமலை வச்சு காமெடி கீமெடி பண்ணிட்டாங்களோ....<br /><br />கமல் மட்டும் காமெடியில்ல கம்மியா என்ன.... எனக்கும் விஜயை ரொம்ப பிடிக்கும் எவ்வளவு புடிக்கும்ன்னா என் கம்பெனியில்ல நடிக்க வைக்கற அளவுக்கு பிடிக்கும்ன்னு காமெடியில்ல பின்னிட்டார்...ஆமா ராஜ் கமல் பிலிம்ஸ்ல்ல தளபதி நடிச்சா ஹீரோ வேசம் தானே கொடுப்பாங்க... இல்ல அதுல்லயும் எதாவது கோக்கு மாக்கு இருக்குமா... ஒரே டவுட்டாப் போச்சு..<br /><br /><strong><span style="color:#ff0000;">ராஜபக்சே டீமை சர்தாரி டீம் ஜெயிச்சுருச்சு..மன்மோகன் டீம் அடியோடு திரும்புச்சு...</span></strong><br /><br />இந்த வாட்டி உலக கோப்பையை பாத்த பாவத்துக்கு இந்தக் கோப்பையை நிரப்ப வேண்டியதாப் போச்சுன்னு ரெசசன்ல்லயும் கடன் வாங்கி கவலையைத் தொலைத்த நண்பனின் புலம்பல் இது...<br /><br />வழக்கமா நம்ம ஆளுங்க வெளியூர் போய் விளையாடி கேவலப்பட்டு அடிவாங்கிட்டு ஊருக்கு வருவாங்க... இந்த வாட்டி போகும் போதே அவன் அவனுக்கு செம அடியாம்ல்ல..சேவாக் பட்ட அடியை தன்னோடு வச்சிக்கலாம்ன்னு நினைச்சிருக்கார்... படுபாவி கேரி கேர்ஸ்டன் கண்டுபிடிச்சு நாட்டுக்கே சொல்லிட்டார்... ஜாகிர்..தோணி....இன்னும் இரண்டு பேர்... போர்ட் கிட்டச் சொல்லியும்..போர்ட் போய் அடிவாங்கிட்டு வந்தா என்ன... அடிவாங்கிட்டே போனா என்ன...அதாவது நம்ம வினுசக்கரவர்த்தி சொல்லுறாப்புல்ல போத்திகிட்டு படுத்தா என்ன...படுத்துகிட்டுப் போத்துன்னா என்னன்னு நினைச்சு அனுப்பிட்டாங்க போல....<br /><br />ராஜபக்சே டீமுக்கு பைனல்ஸ்ல்ல எந்த சீனாக் காரனோ இந்தியாகாரனோ உதவாமப் போக.... சர்தாரி டீம் சக்கப் போடு போட்டு சவுண்டா கப் அடிச்சுட்டுப் போயிட்டாங்க...<br /><br />யப்பா சர்தாரி மக்கா... கப் குண்டு அடி படாம பாத்துக்கங்கப்பு...அடுத்த வருசமும் அதே கப் தான் வச்சு விளையாடணும்<br /><br /><strong><span style="color:#ff0000;">படிச்சதுல்ல பிடிச்சது</span></strong><br />கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்கட்டுமே...<br /><br />என்ன வேதனை என் இரண்டு இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது<br /><br />தபூசங்கர்...Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-31055374.post-82712371238556097082009-06-18T21:14:00.007+05:302009-08-15T21:45:27.184+05:30டேடிஸ் டே - யார் டேடி நம்பர் 1<div><div>மதர்ஸ் டே கொண்டாட்டம் கொஞ்ச வருசத்துக்கு முந்தி தான் ஆரம்பிச்சதா நினைப்பிலிருக்கு...ஆனா மேலை நாடுகளில் எல்லாம் அதெல்லாம் பல காலமாய் இருக்கும் சமாச்சாரமாம்..இப்போ தந்தைகுலங்களுக்கும் ஒரு நாள் இருக்குன்னு தெரிய வ்ந்துருக்கு... இந்த வருசம் வட இந்திய இணையங்கள் எல்லாவற்றிலும் வாரணம் ஆயிரம் பீலிங்க்ஸா நிறைஞ்சு கிடக்கு....<br /><br />எங்கு பார்த்தாலும் டேடி டேடி தான்.....<br /><br />தமிழ் திரையுலகமும் தவமாய் தவமிருந்து... அபியும் நானும்..அப்படின்னு சமீபக் காலமாய் தந்தையர்களுக்கு தன்னாலே ஆன மரியாதையைக் கொடுத்து விட்டது...<br /><br />தமிழ் பதிவுலகம் மட்டும் சும்மா இருந்தா எப்படி.... தமிழர்களுக்கு மிகவும் பிடித்த டேடிகளைப் போற்றி நாமளும் டேடிஸ் டே கொண்டாடலாம் வாங்க...</div><div> </div><div><strong>2016ல்ல நான் தான் டேடி நம்பர்.. அது வரைக்கும் தாடி நம்பர் 1...</strong></div><div> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkITg6MBGojPX1GkPeZSDkyf28ue_cK6So6qvBI0GxdeqxJeYSq1iicD7xV4ooOYRP3ellhHZAfn8DoZ85nfY3ze6EVvGf635885m_TfGzaAZ86EZPJ5EVRRsZ8xgftnQ-7to/s1600-h/2008092150140401.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5348699842145722306" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkITg6MBGojPX1GkPeZSDkyf28ue_cK6So6qvBI0GxdeqxJeYSq1iicD7xV4ooOYRP3ellhHZAfn8DoZ85nfY3ze6EVvGf635885m_TfGzaAZ86EZPJ5EVRRsZ8xgftnQ-7to/s320/2008092150140401.jpg" border="0" /></a></div><div> </div><div><strong>இவர் டேடி நம்பர் 1 ஆகணும்ன்னு நம்மளை தெரு கோடியிலே நம்பர் 1 போக வெச்சுருவாரு போல இருக்கே...</strong></div><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDcDL6efW8i0LdtPaQMa2kIXjrKMxL9q7baBx-qXiz6wCCvFbby7-JhvP_2ICjgLjNXkrGaw4QKNfafk1y248W3C58eMsr0SUyGft4-9IDGBvhjiBIFEIyJ8tCZ-Afm8ogxj0/s1600-h/6_uni_17thnov.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5348699980029908322" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 210px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDcDL6efW8i0LdtPaQMa2kIXjrKMxL9q7baBx-qXiz6wCCvFbby7-JhvP_2ICjgLjNXkrGaw4QKNfafk1y248W3C58eMsr0SUyGft4-9IDGBvhjiBIFEIyJ8tCZ-Afm8ogxj0/s320/6_uni_17thnov.jpg" border="0" /></a><br /><br /><strong>இந்த டேடியை அடிச்சுக்க யாரும் இல்லங்கோவ்.... இவர் தான் உலகத் தமிழ் டேடிகளில்..... </strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong>டேடி நம்பர் 1 ...... </strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong>.</strong></div><div><strong><br /></strong><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-9q-25GP-m4P_L5rGRjEKn9NEVZwwHe_M55hY3-4VAGLeHaGvsdIx3-qm57BQrxiEXp6oZTld1ucqOJIHV5TBE6v1slUYyd1HUTrueBiou_Px6ISZSiaFMMuz7JQqDzZdAvY/s1600-h/2003062405640101.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5348698082416575570" style="WIDTH: 264px; CURSOR: hand; HEIGHT: 184px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-9q-25GP-m4P_L5rGRjEKn9NEVZwwHe_M55hY3-4VAGLeHaGvsdIx3-qm57BQrxiEXp6oZTld1ucqOJIHV5TBE6v1slUYyd1HUTrueBiou_Px6ISZSiaFMMuz7JQqDzZdAvY/s320/2003062405640101.jpg" border="0" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6i7IrNChyIwFraNjb7KJpNWIA5tXsLUJKFCrIYFafuuHctzq4UXASIr_hLVfEe0QLArUoIKn-UrIl0jE2k6Sh-UGLwRVDqwtOFXirGzL-qdAHDBF7cRE3Sn5T_Cjs4Wijphc/s1600-h/2009011959890801.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5348698185702440146" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 183px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6i7IrNChyIwFraNjb7KJpNWIA5tXsLUJKFCrIYFafuuHctzq4UXASIr_hLVfEe0QLArUoIKn-UrIl0jE2k6Sh-UGLwRVDqwtOFXirGzL-qdAHDBF7cRE3Sn5T_Cjs4Wijphc/s320/2009011959890801.jpg" border="0" /></a></div><br /><div>ஓ.கே.. இப்போ தமிழ் கூறும் நல் பதிவுலகத்து பதிவர்களே வாசகர்களே... எல்லாரும் அவங்க அவங்க டேடிகளை வணங்கி வாழ்த்தி இனிதே டேடிஸ் டே கொண்டாடுங்க....<br /> </div><div><strong><span style="color:#ff0000;">HAPPY DADDY's DAY!!!!!!</span></strong></div></div>Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-31055374.post-54348552668267626062009-06-14T11:54:00.002+05:302009-06-18T21:11:10.600+05:30வீக் என்ட் டைம் பாஸ்<strong>வருங்கால முதல்வர்(கள்) சினிமா</strong><br /><br />தோரணை தமிழ் சினிமா ரசிகனோட சொரணைக்கு இன்னொரு சவாலாம்... படம் பாத்தவங்க எல்லாம் பேசிக்குறாங்க..மாஸ் ஹீரோக்கள்..மன்னிக்கணும் வருங்கால ஜார்ஜ் கோட்டை கோமகன்கள் ( இதுக்கு தானே ஆசைப்படுறீங்க அழகேசர்களா) நடிச்ச படங்கள் எல்லாம் மொத்தமா மாவு கட்டு போட்டுகிட்டு படுத்த நிலையிலே...( அயன் விதி விலக்கு சூர்யா மாஸ் ஹீரோ லிஸ்ட்ல்ல இல்லங்கறது என் கருத்து) யதார்த்த படங்கள் பட்டயைக் கிளப்புது பாக்ஸ் ஆபிஸ்ல்ல...இந்த வருசத்தில்ல பாத்தீங்கன்னா... வெண்ணிலா கபடிக் குழு...யாவரும் நலம்...பசங்க ...இது எல்லாம் கோட்டைக்கு ரூட் போடாத படங்கள்...நல்லாவே இருந்துச்சு.... இந்த வருசம் தேர்தல்ன்னு மெகா படம் சம்மர் முழுக்க மெகா ரிலீஸ் ஆனதல்ல மக்கள் நம்ம கோடம்பாக்கத்து தளபதிகளைக் கவுத்துட்டாங்களோ என்னவோ....எப்படியும் நம்ம தளபதிகள் மனம் தளராமல் திரும்பி வருவாங்கங்கறது என் நம்பிக்கை.... நம்மளும் அவங்களை எல்லாம் கை விட்டுருவோமா என்ன....சோ ஆல் தளபதிஸ் கீப் கன்டினியூங்...<br /><br /><strong>மோசர் பேர் டிவிடி<br /></strong><br />சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல விசயம்... எக்கச்சக்கப் படங்கள் சல்லிசான விலையில்ல..தரமான பிரிண்ட் வேற...பழைய கருப்பு வெள்ளை காலத்துல்ல இருந்து தற்கால சுப்ரமண்யபுரம் வரைக்கும் அப்டேட் ஆகியிருக்கு இவங்க மூவி டேட்டா பேஸ்...தமிழனுக்கு.. சினிமாவும் கிரிக்கெட்டும் இரு பெரும் மதங்கள்..ஒரு சிலருக்கு ரஜினி டெண்டுல்கர் குலசாமின்னா... இன்னும் சிலருக்கு தோணி...அஜித் குலசாமி... இப்படி குல சாமிகள் பல... மோசர் பேருக்கு இந்த வெவரம் நல்லாத் தெரிஞ்சு இருப்பதால் தான்.. நம்ம தெரு முனை அண்ணாச்சி கடையிலே கூட டிவிடி வியாபாரம் ஆரம்பிச்சு இருக்காங்க....ஓடுதாண்ணு பொறுத்து இருந்து தான் பாக்கணும்.. ஆனா இது ஒரு நல்ல முயற்சி... இந்த வாரம் பொட்டிக் கடையிலே நமக்கு சிக்குன இரண்டு படம் கலைஞரின் பராசக்தி...இன்னொன்ணு பாலசந்தரின் பாமா விஜயம்...<br /><br /><strong>இந்த வார டிவிடி வாட்ச்<br /></strong><br />கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம்...நம்ம கமல் பார்த்த முதல் நாளாய்ன்னு வே.விளையாடுல்ல உருகுவாரே அதே பொண்ணு தான்...இதுல்ல நாயகி...கதைன்னு சொல்லணும்ன்னா...வெள்ளைக்காரன் எடுத்த டைட்டானிக்கை கொஞ்சம் நம்ம ஊர் மசாலாப் போட்டு பக்குவமா பரிமாறுன்னா என்னக் கிடைக்குமோ அதான் கதை...கோதாவரி நதியிலே ஒரு படகு பயணத்துல்ல நடக்குற சுவாரஸ்யமான சம்பவங்களை மெல்லிய காதல் சேர்த்து ரசிக்கும் படி சொல்லியிருக்கார் இயக்குனர் சேகர் கம்முலா...இந்த இயக்குனர் ஒரு முன்னாள் சாப்ட்வேர் பார்ட்டி... இப்போ படம் எடுக்கப் போயிட்டதால ரெசசன்ல்ல இருந்து எஸ்கேப் ஆயிட்டார்...வீக் என்ட் மதியத்தை மனசுக்குப் புடிச்சவங்களைப் பக்கத்துல்ல வச்சுகிட்டே பார்த்தா...மாலை பொழுதில் ரொமான் ஸ்க்கு வாய்ப்பு உண்டு என ஜோசியம் தெரியாத மணவாடு நண்பன் ஒருத்தன் சொன்னான்..சேகர் கமுலாவின் ஆனந்த....ஹேப்பி டேஸ் ..போன்ற படங்களும் காதல் மனம் கொண்டவர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்பதைக் கொசுறாச் சொல்லிக்கிறேன்..<br /><br /><strong>மில்லியன் டாலர் கேள்வி...</strong><br /><br />பெரிய பிரதருக்கு தென் தமிழ்நாடு...அப்புறம் தில்லின்னு ஷேர் கொடுத்தாச்சு... அடுத்த பிரதருக்கு தமிழ்நாட்டையே கொடுத்தாச்சு...சிஸ்டருக்கு கூட தில்லியிலே ஒரு ஷேரா ராஜ்யசபையிலே இடம் கொடுத்தாச்சு... பேரனுக்கு கூட அமைச்சர்ன்னு அந்தஸ்து கொடுத்தாச்சு...<br /><br />இதெல்லா இருக்க..இவங்க வீட்டுல்ல இன்னொரு லிட்டில் பிரதர் இருக்காராமே..பல பேருக்கு அவரை அதிகமாத் தெரியாது...ஆனாலும் அவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்வே நல்லவரு போல இருக்கு...<br /><br />டாடி டாடி அவனுக்கு அது கொடுத்த...இவனுக்கு இது கொடுத்த...அவளுக்கு அது கொடுத்த...எனக்கு என்னக் கொடுப்பன்னு கேக்கவே இல்லையா....இல்ல கேட்டது நமக்கு தெரியல்லயா... இதுவே மில்லியன் டாலர் கேள்வி..<br /><br /><strong>படிச்சதுல்ல பிடிச்சது..</strong><br /><br />நண்பன் ஒருத்தன் அனுப்புன எஸ்.எம்.எஸ்<br />வெற்றி என்பது யாதெனின்.. ஒரு கையெழுத்து ஆட்டோகிராபாக மாறுவதே...Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-31055374.post-4447762808370674402009-06-07T21:03:00.009+05:302009-08-15T21:45:13.377+05:30ARCHIE+VERONICA-BETTY<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji85QHH8G0-yLDQF9UpHKvDJ2pYB9Aca4rvEGmmu39BJykTuYeojJELfvkxLs4Gzlhp4m8qU-xBOI2wTY-lAei88P1LgUkAFO2bBR-H1C9FAafmwibgkeuD5K_RwriuF_n-do/s1600-h/archies.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5344617732903268722" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 236px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji85QHH8G0-yLDQF9UpHKvDJ2pYB9Aca4rvEGmmu39BJykTuYeojJELfvkxLs4Gzlhp4m8qU-xBOI2wTY-lAei88P1LgUkAFO2bBR-H1C9FAafmwibgkeuD5K_RwriuF_n-do/s320/archies.gif" border="0" /></a><br />ஒரு பதினைஞ்சு வயசுல்ல.... அமெரிக்கா அப்படிங்கற ஊரை ஹாலிவுட் படங்கள் மூலமாப் பாத்து தெரிஞ்சுகிட்டத விட ஒரு காமிக்ஸ் புத்தகம் மூலமாத் தான் நான் அதிகமா தெரிஞ்சுகிட்டேன்...<br /><br />அந்த பெருமைக்குரிய காமிக்ஸ் புத்தகத்தின் பேர் ஆர்ச்சி... ஆரஞ்ச் மண்டை ஆர்ச்சி...மஞ்சள் நிற கூந்தலாள் பெட்டி கூப்பர்...பணக்கார அழகி வெரோனிக்கா லாட்ஜ்...அமெரிக்க டீன் ஏஜ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக் கிட்டத் தட்ட அறுபது எழுவது வருசமா இருக்காங்க...<br /><br />ரிவர்டேல்ன்னு ஒரு ஊர்... அதுல்ல ஒரு ஹஸ்கூல்..அதுல்ல படிக்கிற பசங்க..அவங்க வாழ்க்கை...அவங்க நட்பு.. விரோதம்..காதல்...மோதல்...கலாட்டா இது தான் அந்த காமிக்ஸின் அடிநாதம்<br /><br />கதையின் நாயகன் ஆர்ச்சி...அசட்டுத் தனமான காதல் பையன் (ப்ளே பாய்)...அவனையே சுத்தி சுத்தி வரும் அடுத்த வீட்டு பொண்ணு மாதிரியான அழகான குண கொண்ட அம்சமான பொண்ணு பெட்டி கூப்பர்...அவளை அவ்வளவாக் கண்டுக்காம ஆர்ச்சி டாவடிக்கும் கோடீஸ்வர வீட்டு குமரி வெரோனிக்கா லாட்ஜ்...அவளுக்கு சைட்ல்ல ரூட் விடும் வில்லன் ரெஜி மேன்டில்.... ஆர்ச்சியின் அந்தரங்க நண்பன் சாப்பாட்டு ராமன் ஜக்ஹெட் ஜோன் ஸ்.... பள்ளியின் பயில்வான் பையன் பிக் மூசா...அவன் சைட் மிட்ஜ்.... படு புத்திசாலி மாணவன் டில்டன் டாய்லி... பள்ளி தலைமையாசிரியர் வெதர்பீ...ஆசிரியை மிஸ் கிரண்டி.... கான்டீன் கடைக்காரர் பாப் டேட்...<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGgHe6Fr7CJ4IBtD_nWk3AlocAiQaAh690ltt_YFNXMWDPgXicmAwr-OFJCQxyAsFJtk6l0B9gPj8q30Z5OT2IaW4YAZLbhxaBznYC5Ra__9Y5UfvM4ro-TODRRlBpETDpFA4/s1600-h/af117picon.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5344617409646317618" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 122px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGgHe6Fr7CJ4IBtD_nWk3AlocAiQaAh690ltt_YFNXMWDPgXicmAwr-OFJCQxyAsFJtk6l0B9gPj8q30Z5OT2IaW4YAZLbhxaBznYC5Ra__9Y5UfvM4ro-TODRRlBpETDpFA4/s320/af117picon.jpg" border="0" /></a><br />இவங்க எல்லாரும் தான் கதையின் பாத்திரங்கள்...இதை எல்லாம் படிச்ச காலத்துல்ல இதை மாதிரி நம்ம பள்ளிக் கூடம் இல்லையேன்னு ஏங்காத நாள் கிடையாது...அமெரிக்கான்னா இப்படித் தான் இருக்குமோன்னு நினைச்சு நினைச்சு பெருமூச்சு விட்டது உண்டு...<br /><br />முக்கியமா அந்த பீச் காட்சிகள்... பில்லா நயந்தாரா எல்லாம் ஒதுங்கி நிக்கணும்...பெட்டியும் வெரோனிக்காவும் பிக்னி போட்டுகிட்டு வந்தா....ஒரே கிளுகிளு மயம் தான்...<br /><br />ஆர்ச்சி அடிக்கடி வெரோனிக்காவிடம் பல்ப் வாங்குவதும்... பின் பெட்டி வந்து ஆறுதலாய் இருப்பது என அந்த முக்கோணக் காதல் அமெரிக்கா டீன் ஏஜ்களிடம் மட்டுமின்றி பல தலை முறை உலக டீன் ஏஜ் காமிக்ஸ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்ட ஒரு விசயம்..<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMtyw6pdCF4sXUg_gbtBlXBSUVAXD7Qjk0MQqFjF9le_8UMzTmOL2NUsAk0lzEsCnXy31p20-500tLx_ICIIifQ5sxLR1YK1ssEgiE335PVsUA-Rk8hTlPEh6yvb-vj0w9keQ/s1600-h/archie_betty_veronica.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5344617613134709554" style="WIDTH: 290px; CURSOR: hand; HEIGHT: 305px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMtyw6pdCF4sXUg_gbtBlXBSUVAXD7Qjk0MQqFjF9le_8UMzTmOL2NUsAk0lzEsCnXy31p20-500tLx_ICIIifQ5sxLR1YK1ssEgiE335PVsUA-Rk8hTlPEh6yvb-vj0w9keQ/s320/archie_betty_veronica.jpg" border="0" /></a><br />அந்தக் காதல் நம்ம ஊர் சிந்துபாத் கன்னித்தீவு கதைக்கு ஈடாப் போயிட்டு இருந்தது...இதுல்ல பசங்க பக்கம் பாத்தீங்கன்னா..பாதி பேர் பெட்டி பக்கம்...இன்னும் கொஞ்சம் பேர் வெரோனிக்கா பக்கம்...<br /><br />எப்படின்னா ஜொள்ளுக்கு வெரோனிக்கா... ஒரு இனிய சொல்லுக்கு பெட்டின்னு ரசிகர் பட்டாளமே உண்டு..<br /><br />சைட் அடிச்சா வெரோனிக்கா மாதிரி ஒரு பிகரைத் தான் சைட் அடிக்கணும்ன்னு கனவு கூட கண்டதுண்டு...ப்ச் பலிக்கல்லங்கறது வேற் மேட்டர்..பட் கல்யாணம் குடும்பம்ன்னா பெட்டி மாதிரி பொண்ணு தான் ரைட்டுன்னு பீல் பண்ணதும் உண்டு...<br /><br />இப்போ எதுக்கு இந்த புராணம்ன்னு கேக்குறீங்களா... ஆண்டாண்டு காலமா இப்படியே தெய்வீக காதலர்களாக போயிட்டு இருந்த கதையிலே ஒரு முடிவு வரப் போகுதாம்... மேல் நாட்டு காமிக்ஸ் உலகமே ஆடி போய் கிடக்கு அதைக் கேட்டு...<br /><br />ஆர்ச்சி கடைசியா லவ் எல்லாம் போதும்... சரி கண்ணாலம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டாப்ப்ல்லயாம்..... அங்கே தான் ட்விஸ்டு... சரி நம்மாளு எப்படி தான் ஜொள்ளு மன்னனா இருந்தாலும் மேரேஜ் மேட்டர்ல்ல கரெக்ட்டான முடிவு எடுத்துடுவான்னு நினைச்சா... கவுத்துட்டாப்பல்ல..டோட்டல்லா கவுந்துட்டாப்பல்ல..<br /><br />ஆர்ச்சி பணக்கார பந்தாக் குட்டி வேரோனிக்காவைக் கட்டிக்கப் போறானாம்.... ம்ம்ம் புத்திசாலித்தனமான முடிவுங்கறாய்ங்க நம்ம கூடக் காமிக்ஸ் படிச்ச பயல்வ பாதி பேர்... சொத்து பத்து கார் பங்களா..மாமனார் புண்ணியத்துல்ல நல்ல வேலைன்னு செட்டில் ஆயிடலாம்ன்னு ஆர்ச்சி சரியான முடிவு எடுத்துருக்கான்னு சொல்லுறாங்க...<br /><br />ம்ம்ம் நான் என்ன சொல்லுறேன்னா...படையப்பாவுல்ல தலைவர் சொல்லுவாரே..பெண்கள்ல்ல சாத்வீகம்..ப்ரோசதகம்..பயனாகம்..இப்படி பல வகைன்னு...அதுல்ல நம்ம புள்ள பெட்டி சாத்வீகம்... அந்த புள்ள வெரோனிக்கா ப்ரோசதகம் வகை...பின்னாடி பயனாகமாவும் மாறலாம்...<br /><br />சாத்வீகத்துக்கே சல்யூட் வச்சிருக்கலாம்....ஆனா என்னப் பண்ணுறது முடிவு வேற ஆயிடுச்சு,...வேற என்ன சொல்ல<br /><br /><br /><strong><span style="color:#ff0000;">HAPPY MARRIED LIFE ARCHIE N VERONICA</span></strong>... BETTY MAY U GET THE RIGHT GUY...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX8agnHvP_22xp5jLQCOzVF5PpTXsPDx4XT_ZlK2xSDfHH2AEYl7cTM6SM8RPkmg5F7LGZM8osY4pR8L-pqFinvgH79Q0_sK5ZyaTLwlYPPg9JCm3sr4yU013LvYeH5qDQEpI/s1600-h/Riverdale_homes_2+copy.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5344618316963846290" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX8agnHvP_22xp5jLQCOzVF5PpTXsPDx4XT_ZlK2xSDfHH2AEYl7cTM6SM8RPkmg5F7LGZM8osY4pR8L-pqFinvgH79Q0_sK5ZyaTLwlYPPg9JCm3sr4yU013LvYeH5qDQEpI/s320/Riverdale_homes_2+copy.jpg" border="0" /></a>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-31055374.post-65946127899186413702009-06-07T10:59:00.002+05:302009-06-07T21:02:36.894+05:30வீக் என்ட் கச்சேரிபோடா போடீ <br /><br />முன்னாடி திருடா திருடின்னு ஒரு படம் வந்துச்சு... மன்மத ராசான்னு தனுசூம் சாயா சிங்கும் மதயானை ஆட்டம் போட்டு தமிழ்நாடே அதிரி புதிரி ஆச்சு...அதுல்ல பஸ்ல்ல ஒரு பாட்டு வரும் நாயகியும் நாயகனும் ஒருத்தரை ஒருத்தர் திட்டி தீக்குற மாதிரி ஒரு டூயட் வரும்....இப்போ அதே மாதிரி ஒரு பாட்டு எப்.எம்ல்ல எல்லாம் அதிருது....எக்ஸ்.க்யூஸ்.மீ மிஸ்டர்.கந்தசாமி....பாட்டு...சுசி கணேசன்...டி.எஸ்.பி (தேவி சிரி பிரசாத்)...சீயான் விக்ரம்..கூட்டணியில் கந்தசாமி பாட்டு எல்லாம் ஹாட் யூத் பீட்... அதுல்லயும் சுச்சி வாய்ஸ் செம குறும்ம்ம்ம்ம்புங்கோ... கொஞ்சம் நாளுக்கு செல்லுக்கு எல்லாம் புது ரிங்டோன்...போடா போடீ தான்<br /><br /><br />அடுத்த தளபதி<br /><br />ஒருத்தர் அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் குறி வச்சிட்டு இருந்தார்...சூப்பர் அடுத்த புரட்சித் தலைவர்ன்னு அவர் மன்ற கண்மணிகள் கணக்கு பண்ணிட்டு இருந்தாங்க...அந்தக் கணக்கு ஆகாயம் பார்த்து விரல் போடும் கணக்காப் போனதுல்ல..கோடம்பாக்கத்து தளபதி சூ.ஸ்.பதவியை பை பாஸ் பண்ணிட்டு நேரா புன்னா தான்னா பதவிக்கு சமீபக் காலப் படங்களில் ரூட் போட்டது நாட்டுக்கே நல்லாத் தெரியும்..இந்தக் கேப்புல்ல புதுசா கிளம்புன மணவாடு தளபதி..பழைய ( ஆனா இளசு தான்) தளபதி சீட்டைத் துண்டு போட்டு பிடிக்க ட்ரை பண்ண ஆரம்பிச்சாட்டார் எல்லா விஷயத்துல்லயும் (!!!!????) எதுல்ல எட்டிப் பிடிச்சாரோ இல்லையோ அவரை மாதிரி தோரணையா வில்லு விடு குருவியைக் கவுக்கறதுல்ல சத்யம் ஆக முன்னேறிட்டார் பாஸ்<br /><br />டிவிடி ரெய்டு...<br /><br />இந்த வாரம் டென்சல் வாஷிங்டன் நடிச்ச மேன் ஆன் பயர் படம் பாத்தேன்...ஒரு பழைய கொலைகாரன்.. தற்காலக் குடிகாரன்..ஒரு சிறுமியைக் காக்கும் மெய்காப்பாளனாய் வேலைக்குச் சேர்கிறான்..எதிலும் ஒட்டு இன்றி உறவுமின்றி இருக்கும் அவன் அந்த சிறுமியின் அன்பால் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு மீண்டும் வாழ்வதற்கான ஒரு காரணம் கண்டுகொள்கிறான்..அந்த நிலையில் சிறுமி கடத்தப் படுகிறாள்...கொல்லப்பட்டதாய் தகவல் வருகிறது...அதற்கு பின் பழிவாங்கும் படலத்தில் டென்சல் ருத்ர தாண்டவம் ஆடுவது தான் மிச்சக் கதை.... சும்மா சொல்லக் கூடாது மனுசன் பிச்சி உதறி இருககார்..அந்த சிறுமியின் நடிப்பும் அசத்தல்...<br /><br />ஆங்கிலம் வேணாம்ன்னு சொல்லுறவங்க இதே படத்தோட அசத்தல் !!!??? இந்தி மற்றும் தமிழ் ரீமேக்களைப் பார்த்து நொந்துக் கொள்ளலாம்....(இந்தியில் அமிதாப் நடித்த அஜ்னபி.....தமிழில் அர்ஜூன் நடித்த ஆணை...)<br /><br />படிச்சது....<br /><br />பொறுமையா பைபிளைப் புரட்டுனப்போ கண்ணுல்ல பட்ட கருத்து...<br />நீங்கள் தீமையினால் வெல்லப்படாமல் நன்மையால் தீமையை வெல்லுங்கள்Unknownnoreply@blogger.com14