Tuesday, February 27, 2007

பின்னூட்டத் தமிழுக்குக் கட்டாய ஓய்வு தேவையா?

மன்றத்துக் கண்மணிகளே...

கழகத்து ஆற்றலரசுகளே...

சங்கத்துச் சிங்கங்களே..

ஓ தமிழ் பதிவுலகமே...


தமிழுக்குச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் பாண்டிய மன்னன்.. பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் அளித்து தமிழ் வளர்த்தான் இணையத்தில் இலவசமாய் நம் அண்ணன்..

வேடிக்கைப் பார்க்க வந்தவரை எல்லாம் வாடிக்கையாளராக்கி பின்னூட்ட எண்ணிக்கையில் சாதனைகளைக் குவித்து அந்தச் சாதனைகளைத் தமிழ்த் தாயின் பாதங்களுக்குக் காணிக்கையாக்கியவன் நம் தலைவன்..

ஒன்றா.. ரெண்டா...சாதனைகளைப் பட்டியலிட பதிவுலக வரலாற்றுப் பக்கங்களில் காட்டாறாய் ஓடியவன்... கயித்தாறு மாவட்டத்தின் தமிழ் மைந்தன் நம் பின்னூட்ட நாயகன்..

சாதனை.. சாதனை..சாதனை.. என்று ஒன்றே லட்சியமாய் வாழ்ந்து வரும் நம் பாசப் புயலுக்கு இன்று சோதனை..

ஆம் தமிழ் குலக் கொழுந்துகளே... அலுவலக வாழ்க்கை என்ற நெருப்பாற்றில் நீந்தி.. வேலை என்ற பளுமிக்க பாறையைச் சுமந்து... உறக்கம் என்னும் அரக்கனை வென்று... இணையத்தில் பின்னூட்டம் என்ற பூந்தோட்டத்தை நேரம் பாராது.. காலம் பாராது.. கண் எனவும்... உயிர் எனவும்.. உடைமை எனவும்.. பாராட்டி சீராட்டி வளர்த்த எம் பின்னூட்டப் பேரரசுக்கு இன்று பேராபத்து...

பதிவுகள் போட்டு தேயந்த விரல்களுக்குச் சொந்தமான என் இனிய இணைய தமிழ் மக்களே..

பதிவுப் போட்டு பல மணி நேரமாகியும் பின்னூட்டப் பசியில் நீங்கள் தவித்த அந்த நேரங்களை நினைத்துப் பாருங்கள்.. பிளாகர் வந்தானா அன்று உங்களை வாழ வைக்க.. அவன் பதிவு போட இடம் மட்டுமே கொடுத்தான்.. உங்கள் பதிவுகளின் வறுமை நீக்கி அவை வாழ உதவியது என்ன???

பின்னூட்டங்களே..அந்த பின்னூட்டஙகளின் மறு அவதாரமாய் நம்மிடையே வாழ்ந்து வரும பின்னூட்டச் செம்மல் இன்று வேதனையில் வாட நாம் அமைதி காப்பது நியாமா?

அலுவலத்தில் தன் மேலதிகாரி கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்ல நம் அண்ணன் தாமித்தத் தருணங்கள் வரலாற்றில் நிகழ்ந்திருக்காலாம்.. ஆனால் ஓ தமிழ் பதிவுலகினமே நீ உள்குத்து.. வெளிகுத்து.. வெவகாரக் குத்து என்று விதவிதமாய் வில்லங்கமாய் கேட்டு வைத்த எந்தக் கேள்விக்குமே அண்ணன் டெட் லைன் தாண்டி பதில் அளித்தது உண்டா? சிந்தித்துப் பார்...

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் ரன்களை விட எங்கள் அண்ணன் ஒவ்வொரு பதிவிலும் அடித்து ஆடி குவித்ததிருக்குக் கிடைத்தப் பரிசா இது.... இது தகுமா? பொறுக்கலாமா இந்த சோதனையை...

பின்னூட்டச் சாதனைகளைப் பதிவுலக காவல்துறை பின்னூட்டக் கயமை என்ற புதியப் பெயரிட்டு அதைக் கடும் குற்றமென அறிவித்து ஓடுக்க நினைத்த அந்தக் காலக்கட்டத்தைச் சற்றே திரும்பிப் பார் தமிழனிமே.. அண்ணனைக் காவல் துறை அடக்க முடிந்ததா.. ஒடுக்க முடிந்ததா..

ஓ தமிழினமே..

ஒன்று படு..

பின்னூட்டத் தமிழ் காப்போம்...

வாழ்க பின்னூட்டம்..
வளர்க பின்னூட்டம்...

வாழ்க பின்னூட்டப் பேரரசு தலைவர் இலவசக் கொத்தனார்

இவண்
அகில இந்திய பின்னூட்டச் சூப்பர் ஸ்டார் இலவசக் கொத்தனார் ரசிகர்கள் நற்பணி மன்றம்
தலைமை நிலையம்
கொட்டிவாக்கம்
சென்னை.


பிகு.எதுக்கு இவ்வள்வு சவுண்ட்ன்னுப் பாக்குறீங்களா...

பின்னே நம்ம தமிழ்மணத்துல்ல இனி 30க்கு மேலே பின்னூட்டம் வாங்குனா அந்தப் பதிவுகளுக்கு வாலியண்டிரி ரிடையர்மண்ட்டாம் ( கட்டாய ஓய்வுத் திட்டமாம்) அதாவது 30க்கு மேல பின்னூட்டம் வாங்குனா அந்தப் பதிவு தமிழ்மணத்துல்ல தெரியாதாம்..

நம் பின்னூட்டத் தமிழனின் பல இமாலயச் சாதனைகளுக்கு உதவ வேண்டியவரே அண்ணனின் சாதனைகளுக்கு அணைப் போடுவது போல் ஆகாதா.. என்ன சோதனை இது.. தாங்க முடியா வேதனை இது.... கண்ணீர் கொட்டுதடா... இதயம் வலிக்குதுடா தோழா....

இதுப் பற்றி தலைவர் என்னச் சொல்லுறார்ன்னா..

Monday, February 26, 2007

ஏ இந்தா பருத்தி வீரன் பார்த்தோம்ல்ல



வணக்கம் மக்கா.

என்னத்தாச் சொல்ல நேத்து நாலு ஊரு சுத்தி படாதப் பட்டு சென்னைக்கு வர்றதுக்குள்ளே டப்பா டான் ஸ் ஆடிருச்சே.. இந்தப் பாடுப் பட்டக் கேப்ல்ல கும்பகோணம் விஜயா தியேட்டர்ல்ல உக்காந்துப் பாத்தப் படம் பருத்திவீரன்

ஏத்திக் கட்டுன கைலியும்.. மொரைப்புப் பார்வையும்.. வெட்டித் தனமா ஊரை ரவுண்ட் வர்றதுன்னு சண்டியர் வேடம் கட்டிகிட்டு நம்ம சிவக்குமார மைந்தன் சூர்யா தமையன் சோதிகாக் கொழுந்தனார் புது முகம் கார்த்தி முதல் கச்சேரி வச்சுருக்காப்பல்ல






ஏ கார்த்தி இதே கெட்டப்புல்ல வெட்டி ஆபிசரா உங்க அண்ணாச்சி சூர்யா பிதாமகன்ல்ல வெளுத்தது இன்னும் ஞாபகம் இருக்குப்பா நீ என்னப் புதுசா சவுண்ட் விட்டுரப் போறன்னு தியேட்டர் கூட்டம் (நானும் தான்) ஆவலாப் பாக்க..

ஆரம்பமே அம்புட்டு அலப்பரையைக் கொடுத்து என்டிரி ஆவுறார் கார்த்தி... ஒருத்தனைத் திருவிழாவில்ல கு****** குத்திப்போட.. அய்யயோ இது என்னடா தாமிரபரணி.. போக்கிரியில்லப் பார்த்த ரத்தமே.. மாசக்கணக்கா நம்ம சைவச் சாப்பாட்டுக்கு மாத்திருச்சு.. இனி நிரந்தரமா சைவச் சாப்பாட்டுக்கே மாத்திருவாய்ங்கப் போலிருக்கேன்னு யோசிக்கும் போது...

படம் காமெடியில் களைக் கட்டி கார்த்தி - சரவணன் (நந்தாவில்ல ராஜ்கிரண் மருமவனா வருவாரே) கூட்டணியில் பக்காக் கலாட்டாவ நகருது... நகைச்ச்வையில் அடக்கி வாசித்திருக்கும் கஞ்சா கருப்பு வரும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்புச் சில்லறை சிதறுகிறது.

யதார்த்தமா நக்கலும் நையாண்டியுமாக நகரும் கதையில் இயக்குனர் அமீர் ப்ரியாமணியை (முத்தழகு) வைத்து ஒரு மெல்லியக் காதல் பின்னல் போடுகிறார்.. அந்தக் காதல் பின்னல் இறுக இறுக.. திரையில் கதையும் சூடுப் பிடிக்கிறது..

கருப்பு வெள்ளை பார்மேட்ல்ல, அழகியில் பார்த்தக் கதையை இன்னொரு வாட்டி பருத்திவீரனிலும் ரசிக்க ரசிக்கச் சொல்லுகிறார் அமீர். சிறு வயசுல்ல பூக்குற அந்தக் கன்னுக்குட்டிக் காதலை முத்தழகு மனத்திற்குள் பூட்டி வைத்து வளர்க்கும் விதத்தைக் கவிதையாய் சொல்லுகிறார் அமீர். அதே சமயம் பருத்திவீரன் முத்தழகை விட்டு விலகி நிற்பதாய் காட்டிக் கதையில் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

வழக்கமான நம்ம கிராமத்துத் தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் சாதி குடும்பப் பகை இதிலும் காதலுக்கு என்னா வில்லத்தனம் செய்யுது. வில்லத்தனம், கோக்குமாக்குத் தனம் என பருத்திவீரனின் தாய் தந்தை மரணத்திற்கு இன்னொரு பிளாஷ் பேக்.. பிளாஷ் பேக்ககளைக் கதையோடு நுழைத்து அலுக்காமல் சொல்லியிருக்கார் அமீர்.

படத்தின் மிகப் பெரிய பலம் நடிகர்களின் படு யதார்த்தமான நடிப்பு. மதுரை சார்ந்தப் பகுதிகளின் வாழ்க்கை முறையை ஓரளவுக்குச் சினிமாத்தனம் இல்லாமல் படம்பிடித்திருக்கிறார்கள். அந்த ஆரம்பப் பாடல் காட்சி மதுரை ஏரியாத் திருவிழாத் தோரணங்களைத் திரையில் கட்டும் முயற்சியாக மிளிர்கிறது. பலமாகக் கைத் தட்டல்களால் வரவேற்கப்படுகிறது.

பருத்திவீரனின் சித்தப்பாவாக வரும் சரவணன் இப்படி எல்லாம் நடிப்பாரா? எளிமையான நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார்.

ப்ரியாமணி.. நிச்சயமாய் பருத்திவீரன் இவருக்கு ஒரு திருப்புமுனை.. அந்தப் பொன்ணு அப்படி கலக்கியிருக்கு. காதலை பொத்தி வைத்து மருகுவதும், காதலனிடம் போட்டு உடைத்துப் பொங்குவதும், காதலுக்காய் பெற்றோரிடம் மல்லுக்கு நிற்பதும் என கனமானப் பாத்திரம் நல்லாவே செஞ்சுருக்கார். மேக்கப் இல்லாமல் கிராமத்து முத்தழகாய் மனங்களை அள்ளுகிறார்.

பொன்வண்ணன் ப்ரியாமணியின் தந்தையாக வருகிறார். வழக்கமானக் காதலுக்கு எதிர் பார்ட்டியாய் வில்லத்தனம் பண்ணும் பாத்திரம். தாயாக வரும் பெண்மணி, பருத்தி வீரனின் பாட்டியாக வரும அம்மா எல்லாம் நடிச்சுருக்காங்கன்னு சொல்ல முடியாது. படு யதார்த்தமாய் தங்கள் பாத்திரஙகளைச் செய்திருக்கிறார்கள்.

யுவன் கதைக் களத்தோடு இசையைப் பயணிக்க வைத்துள்ளார்.. அறியாத வயசு.. பாடலில் ராஜாவின் குரல் நம்மைக் காற்றில் மிதக்க விடுகிறது. குத்துப் பாடல்களில் மண் வாசனை தூக்குகிறது.

தினேஷ் நடனத்துக்கு ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். அது காட்சிகளில் நன்றாகவேத் தெரிகிறது. தியேட்டர் மொத்தமும் குத்துப் பாட்டுக்களின் போது கார்த்தியோடும் கிராமியக் கலைஞர்களோடும் சேர்ந்து ஆடுகிறதுன்னாப் பாத்துக்கோங்க.. மதுரையின் பொட்டல் காடுகளை வெண்திரையில் ஒரு கவித்துவமான அழகோடு படைத்திருக்கும் அமீருக்கும் கேமிராமேனுக்கும் ஸ்பெஷல் சபாஷ்

இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம் படங்களுக்குப் பின் தந்திருக்கும் நல்ல படம் பருத்திவீரன்.. படததை விட நம்ம தமிழ் சினிமாவுக்கு ஒரு கலக்கலான அறிமுகமாய் கார்த்தியைத் தந்திருக்கார் அதுக்காக அவருக்கு ஒரு தேங்க்ஸ்

மொதல்ல கேட்டா மாதிரி சிவக்குமார் ரெண்டாவது மயன் கார்த்தி என்னத் தான் பண்ணியிருக்கார்ன்னு பாப்போம்ன்னு வந்தவங்களுக்கு கார்த்தி கொடுக்கும் பதில்

என்ன மாப்பூகளா.. இந்த சவுண்டு போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?


நடிப்பிலும், மக்களை குதுகாலபடுத்துவதிலும் ஒரு கலைஞனாய் முதல்


படத்திலே நல்ல மார்க் எடுத்துத் தேறுகிறார் கார்த்தி...

கார்த்தி - ப்ரியாமணி - சரவணன் நடிப்புக்காக பருத்திவீரன் நிச்சயம் பேசப்படும்.


எல்லாம் சரி மக்கா.. பருத்தி வீரன் படம் பாக்காமா விட்டுருராதீங்கய்யா படு சூப்பர்ன்னு சொல்லலாம் நினைக்கையிலே அந்தக் கிளைமாக்ஸ் தான் படத்தின் மிகப் பெரிய நெருடல்...

திணிக்கப் பட்ட சோகமாய் முடிகிறது படம்...




கிளைமேக்ஸ் கொலை மேக்ஸ் ஆக மாறுவதால் பருத்திவீரன் முடிந்து வெளியே வரும் போது இயக்குனர் அமீர் மீது கோபம் வருகிறது.. எரிச்சல் ஏறுகிறது...

இது தான் அமீர் எதிர்பார்க்கும் வெற்றியோ?

நமக்குத் தெரிஞ்சது எல்லாம் இன்னும் கொஞ்சம் காலத்துக்கு நல்ல தமிழ் சினிமாவை ரசிக்கும் மக்களால் பருத்திவீரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்டாயம் விவாதிக்கப் படும் எனபது தான்,,,

ரைட் இப்போ மீ ஜூட்ங்கோ..

Thursday, February 22, 2007

உலகக் கோப்பைக்குப் போறோம் - ஆரம்பக் காட்சிகள்




உலகக் கோப்பைக்குப் போறோம் என்று உற்சாகமாய அறிவித்ததைத் தொடர்ந்து பதிவுலகின் பல முனைகளில் இருந்தும் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது... அதுப் பற்றிய முதல் செய்தித் தொகுப்பு..

நேற்று சிறப்பு விமானம் மூலம் அணிக்கான ஸ்பெஷல் பயிற்சியாளர் பினாட்டல் சுரேஷ் துபாயியிலிருந்து ஆந்திராப் பார்டர் வந்து இறங்கினார்.

அணியின் மொத்த வீரர்கள் கேப்டன் கொத்தனார் மற்றும் அணியின் பயிற்சி புயல் கிரேக் கைப்புள்ள தலைமையில் தெலுங்கு தேச லேட்டஸ்ட் ஆன்மீக சித்தி ( சித்தின்னா.. சித்தருக்கு அப்போஸிட்) வெட்டி மாதாஜியைச் சந்திச்சு அருளாசி வாங்க்ப் போய் முடியாம வெக்கத்தோடயும் வேதனையோடும் திரும்ப நேரிட்டுச்சு

ஜொள்ளு பாண்டி சித்தியோட சிஷ்யைகளிடம் சித்து வேலைகளால் ஈடுபட்டதாய் ஆந்திர பத்திரிக்கைகளில் கிசுகிசு செய்தி வந்தது. அந்தச் செய்தியை அணியின் மேனேஜர் டி.பி.ஆர் மறுத்து பதில் அறிக்கையை தமிழில் கொடுக்க... வெட்டி அதை தெலுங்கில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகக் கடைசித் தகவல்.


சிறப்புப் பயிற்சியாளர் வந்து நடத்திய முதல் கட்டச் சோதனையில் அணியின் பயிற்சி புயலுக்குப் பேட் பிடிப்பது எப்படி என்ற கிரிக்கெட் அடிப்படை அறிவு கூட இல்லாதது வெளி வந்துள்ளது.

அடுத்ததாக அணியின் 93% சதவிகித வீரர்கள் வெறும் பீல்டர்களா மட்டுமே களத்தில் நுழைந்திருக்கும் திடுக்கிடும் தகவ்லும் சிறப்பு பயிற்சியாளரைப் பதற அடித்துள்ளது.

தன்னை ஒரு சிறப்பானப் பீல்டர் என்று நம்மிடம் அறிமுகப்படுத்திய ஜி சொல்லியதாவது.. பந்து கொஞ்சம் சிறிசா இருக்கதால்ல பிடிக்கறது கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு.. பந்தை புட் பால், வாலி பால் மாதிரி பெரிசா ஆக்கிட்டா.. பீல்டிங் இன்னும் எளிமையாக இருக்கும் எனக் கருத்துத் தெரிவித்தார்.

ஆட்டத்தின் இடைவேளைகளில் தள்ளப்படும் குளிர்பான வண்டியை மீண்டும் மீண்டும் தள்ளிப் பார்த்துப் பயிற்சிச் செய்துக் கொண்டிருந்த ராயல் ராம்...சரக்கு வச்சிருக்கேன் அதை இறக்கி வச்சிருக்கேன் என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்.

நாட்டாமை ஸ்யாம் சுற்றி அம்ர்ந்திருந்த கப்பிப் பைய, தம்பி, நாகை சிவா போன்ற வீரர்கள் எதோ தீவிர ஆலோசனையில் இருந்தனர். விசாரித்தப் போது..

"ஏன் தம்பி.. தீர்ப்புச் சொல்லுறவனுக்கு ஒரு கவுரவம் வேணாமா.. வேகாத வெயிலே நின்னு தீர்ப்புச் சொல்லுற நீயு எப்படி இருக்க்கோணும்.. மார்ல்ல குளு குளுன்னு சந்தனம்.. ஒரு மரத்தடி.. கையிலே சொம்பு.. வாயிலே வெத்தலன்னு வீராப்பா இருக்க வேணாமா.. அதை விட்டுபுட்டு கோமாளி மாதிரி தொப்பி.. கோர்ட்ன்னு வெயில்ல நல்லாவா இருக்கு.. கிரிக்கெட்ல்ல தீர்ப்புச் சொல்லுற நாட்டாமைக் கெட்டப்பை மாத்தோணும் தம்பி.. அதான் இந்த நாட்டாமைத் தீர்ப்பு.."
உடனிருந்தவர்களும் பலமாக ஆமோதிக்க அவர் அம்பையரைத் தான் சொல்லுறார்ன்னு நமக்குப் புரிய ரொம்ப நேரம் ஆச்சு..

அணித் தலைவர் கொத்தனார் புதிய வீரர்களான பாஸ்ட் பௌலர், மணிகண்டன் ஆகியோரிடம் கிரிகெட் விளையாடுவது எப்படி என்று விசாரித்தறிந்துக் கொண்டிருந்தார்.


சிபி,இளா, தேவ்.. மூவரும் பேட் கட்டுவது எப்படி என்று ஒருவரை ஒருவர் விசாரித்த வண்ணம் இருந்தனர்..

அடுத்த சிறப்புப் பதிவில் அணியின் சிறப்பு பயிற்சியாளர் பெனட்டலாரின் சிறப்பு பேட்டி மற்றும் அணித் தலைவர் கொத்தனாரின் நேர்காணலும் வெளிவரும்..

Tuesday, February 20, 2007

உலகக் கோப்பைக்குப் போறோம்




என்னத் தலைப்பைப் பார்த்தாப் பிரம்பிப்பா இருக்கா?

யாரும் பயப்ப்ட வேண்டாம்...

சென்னையிலே நடந்தக் கிரிக்கெட் மேட்ச் பாக்கப் போயிருந்த நம்ம பதிவுலகத் தங்கங்களைப் பார்த்து நம் இந்திய அணியை வென்ற மேற்கிந்திய அணியினர் லுடுவாயி.. லுடுவாயி.. என ஒழுங்கு காட்டிக் கண்டப்படி கலாய்த்துள்ளனர்...

அதிலும் நம்ம சின்னத் தங்கம் ராயலைப் பார்த்து லாராவே
லுடுவாயி.. லுடுவாயி.. எனக் குதித்து ஒழுங்குக் காட்டி உள்ளார்.. அதுல்ல வேற அவரைப் பார்த்து இங்கிலிஷ் பட வில்லன் பாணியில் சிரிக்க வேறு செய்துள்ளார்.. இது நம்ம சிங்கக்குட்டியைச் சிலிர்த்து எழும்ப வச்சிருச்சு...

ஓரமா உக்காந்து மேட்ச் முடிஞ்சது கூடத் தெரியாம குறட்ட விட்டுத் தூங்கிட்டு இருந்த நம்ம தானைத் தலக் கிட்ட ஒரு வார்த்தைக் கூடக் கேக்காம....

"ஏலே.. லாரா... மருதக்காரச் சிங்கத்தைப் பாத்தாலே சிரிச்சா..தைரியம் இருந்தா எங்கக் கூட மேட்ச்க்கு வர்றீயான்னு சவுண்ட்டாக் கேட்க...."

அதன் பின் நடந்தது எல்லாம் விரிவாய் நாளைய வரலாறு பேசும்..

இது அம்புட்டும் நடந்து முடிஞ்சப் பின்னாடி சாவகாசமா எழுந்த தல இதை எல்லாம் கேட்டு கண்ணுல்ல கண்ணீர் அதிகமாகி சேப்பாக்கம் கிரவுண்ட்டே நிறைஞ்சுப் போச்சுன்னாப் பாருங்களேன்..

"என்னத் தல பயமா?" அப்படின்னு நான், இளா, பாண்டி, வெட்டி, சிவா, தளபதி எல்லாம் கோரசாக் கேட்க....

"பயமா.. பிஸ்கோத்து ஆனந்தக் கண்ணீர் மக்கா.. இந்தச் சின்ன சிங்கத்துக்கு இருக்க வீரம் என் கண்ணுல்ல ஈரம் டா.. இவன் அப்படியே என்னிய மாதிரியே சுத்த வீரனா இருக்கான்டா"

ராம் ராயலாச் சிரிக்க... நாங்களூம் வேறு வழியில்லாமச் சிரிச்சோம்..

நம்ம டீம் லிஸ்ட் கீழே இருக்குப் பாருங்க...
(நம்ம டீம் லோகோ)


இலவசக் கொத்தனார். ( கேப்டன்)
வெட்டி பயல் (து.கேப்டன்)
ராயல் ராம்

இளா
தளபதி சிபி
தேவ்
ஜொள்ளு பாண்டி
நாகை சிவா
கப்பி பய
தம்பி
ஸ்யாம்
ஜி
உங்கள் நண்பன் சரவணன்
கில்லி பையன்
மனதின் ஓசை ஹமீது

எங்கடா தல் பேரைக் காணும்ன்னு பாக்குற்றீங்களா?
தலக் க்ரேக் கைப்புள்ள தான் நம்ம டீம் கோச்.. அதாங்க பயிற்சியாளர்

நம்ம டீம் மேனேஜர் வந்து நம்ம டி.பி.ஆர். ஜோசப்.

ஸ்பெஷல் கவுன்சிலிங் கோச் நம்ம ஜி.ராகவன்

இந்த லிஸ்ட்ல்ல ஓங்க பேரும் வரணுமா... பின்னூட்டத்துல்ல பேர் கொடுங்க..

முதல் பிராக்டீஸ் மேட்ச் நம்ம டூமிங் குப்பம் ஸ்டேடியுத்துல்ல இந்த வாரம் நடக்கும்.. எல்லாரும் வாங்க வாங்க.. வந்துருங்க....

சும்மா இங்கிட்டு லோக்கலாவே சவுண்ட் விட்டாப் போதுமா? கரீபியத் தேசத்துக்குப் போறோம் கப் அடிக்கிறோம்...


பதிவுலக ஆன்றோரே சான்றோரே.. வாங்க வந்து பயல்களை ஆசிர்வதியுங்க... ஜெயிச்சுட்டு வாங்கன்னு வீரத் திலகம் வைங்க....

ஊல்ல்ல்லாஆஆஆஆ..உல்லேவோ...ஊல்ல்லாஆஆஆ ஊஊஊ...

THIS SUMMER WATCH THE BOYS IN ACTION IN CARRIBEAN ISLANDS DANCING TO THE SPIN AND PACE NEVER SEEN BEFORE....

தொடரும்...

Sunday, February 18, 2007

பச்சைக் கிளி முத்துச்சரம்

"தப்பு நடக்குது.. எல்லா இடத்துல்லயும் தப்பு நடக்குது..

அதை எடுக்கணும் படமா எடுக்கணும்...

**$%%..அதே காட்டணும் ஊருக்கே போட்டுக் காட்டணும்..

போடணும் அதுக்கு மியுசிக் ஹாரிஸ் ஜெயராஜ் போடணும்..

எனக்கு வேணும்.. ஜோ வேணும்.. இந்தப் படத்துல்லயும் ஜோ ஹிரோயினா வேணும்..

எடுக்குறோம்...எந்தப் படம் எடுத்தாலும் அதுல்ல க்ரைமை ஒரு கலக்கு கலக்குணும்..
நாம யார்ன்னு ஊருக்குக் காட்டணும்.. பயப்படணும் படம் பாக்க வர்றவன் எல்லாம் அலறணும் இந்தப் படத்துல்ல என்னக் க்ரைம் கதையோ அப்படின்னு அலறணும்....."

இதைக் காக்க காக்க வில்லன் ஜீவன் திரையில் பேசும் குரலில் ஸ்டைலில் படிக்கவும் (நம்ம கௌதம் வாய்ஸ் தான்)

AN EPISODE IN A MEDICAL REPRESENTATIVE'S LIFE..


வேலி தாண்ட நினைக்கும் வெள்ளாட்டுக்கு மஞ்சத் தண்ணி தெளிக்கப் படுவது தான் படத்தின் கதை.

அதாவது கண்ணாலாம் ஆன நம்ம நாட்டாமை அவர் தங்கமணியை விட்டுட்டு லைட்டா மனசு சிலிப் ஆகி புதுசா ஒரு வைரமணியைப் பார்த்து பீலிங் ஆகி அவ்ர் லைப் எப்படி வீலிங் ஆவுதுன்னு சொல்லியிருக்கார் கவுதம்.

முதல் பாதி சென்னையின் புறநகர் ரயில் பயணம்.. சரத் வீடு குடும்பம் என ஒரே விதமானக் காட்சியமைப்புகளில் சலிப்புத் தட்டுகிறது.. இதற்கிடையில் JUVENILLE DIABETES என்னும் மருத்துவச் சமாச்சாரம் வேறு தொட்டுக்கோ தொடைச்சுக்கோ ரேஞ்சுல்லச் சொல்லி கதையை பில்டப்பு பண்ணுறாங்க..

நம்ம சரத்க்கு இது புதுமையான வேடம்..அதாவது ஒரு நடுத்தர வயது குடும்பத் தலைவர் வேடம்.. கச்சிதமாய் பொருந்துகிறார். அதிக வசனங்கள் இன்றி அமைதியான நடிப்பின் மனத்தைக் கொள்ளைக் கொள்கிறார். ஆனாப் பாருங்க மனுசருக்கு ரொமான் ஸ் தான் பாடாய் படுத்துகிறது. பாடல்களில் இயந்திரத் தனமான அசைவுகளில் சரத் மீது நமக்கே பரிதாபம் வருகிறது.

சரத்தின் தங்கமணியாக புது முகம் ஆன்டிரியா.. அம்மணி அம்சமாத் தான் இருக்காக. முதல் படத்திலேயே அம்மாவா நடிச்சிருக்காங்க துணிச்சலா. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழும் பாத்திரம். சரத் ரூட் மாறி மீண்டும் திரும்பி வந்து சேரும் போது அவரிடம் இவர் தன் மனக்குமுறல்களைக் கொட்டும் காட்சியில் கவனிக்கப் படுகிறார்.

ஜோ.. இன்னோரு லக்க..லக்கவிற்கான முயற்சி... கரு கரு விழிகளால் பாடல் அவருக்காக எழுதப்பட்டது வீண் போக வில்லை. ஆரம்ப ரயில் காட்சிகள் காதல் தேவதையாகவும் போக.. போக.. ஜோ எடுக்கும் விசுவரூபம் ரசிக்கும் படி உள்ளது.

மிலிந்த் சோமன்.. படத்தின் சர்ப்ரைஸ் பேகேஜ்.. இன்னொரு பாண்டியா ( காக்க காக்க வில்லன் பாத்திரம்) கவுதம் பின்னணி வாய்ஸ். மிலிந்த் மிரட்டலான அலட்டல் இல்லா நடிப்பு. மனிதருக்கு கண்கள் ப்ளஸ்.

ஹாரிஸ் பாடல்கள் தியேட்டருக்குக் கூட்டம் அழைத்து வரும் விசிட்டிங் கார்ட் இந்தப் படத்துக்கு. வழக்கமான கௌதம் - ஹாரிஸ் - தாமரைக் கூட்டணியில் இந்த் முறை இன்னொரு புதுமுகம் ரோகிணி.. ஒரு பாடல் எழுதியிருக்கிறார். நிறைவு. ஹாரிஸ் பின்னணி இசையிலேக் கொஞ்சம் கவனம் சேர்த்திங்கண்ணா நல்லாயிருக்கும்.. படம் பாக்குறவங்க காது பொழைக்கும். பாடல்காட்சிகளின் படமாக்கலில் கௌதம் பழைய படங்களின் பிடியில் இருந்துக் கொஞ்சம் வெளியே வாங்க ப்ளிஸ்

குறைவானப் பாத்திரங்கள்.. அளவானச் செலவு.. போட்டக் காசுக்கு நிச்சயம் லாபம் என்ற கணக்கில் வெளிவந்திருக்கும் படம்.

சரத்துக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனை.. கௌதம்க்கு இது JUST ANOTHER அக்மார்க் கௌதம் டெம்ளேட் படம்..

நம்ம மருத்துவர் ராமனாதன் பார்வையில் பச்சைக் கிளி முத்துச்சரம்.

Tuesday, February 13, 2007

தலைவரே இவிங்க உங்களை விடமாட்டாங்க


சொய்ங்க்ன்னு பறக்குது பாரு விமானம்....

அதுல்ல வேலைப் பாக்குற ஆபிசர் ஒருத்தன் தான் நம்மூர் அம்மாவைக் கண்ட மானமா ஏசிட்டானாம்..

அப்படியாண்ணே என் ரத்தம் கொதிக்குதுண்ணே..அவனை..

ஆமாடாப் படிச்ச எனக்கும் ரத்தம் கொதிச்சுப் போச்சி.. எம்புட்டு இருந்தா அப்படி பேசி இருப்பான்..

கரெக்ட்ண்ணே.. அவனை எல்லாம் நிக்க வச்சு நாக்கு தள்ளூற மாதிரி நாலு கேள்விக் கேட்டு மன்னிப்புக் கேட்க் வைக்கணும்ண்ணே..

அந்த ஆபிசர் யார்ண்ணே விவரம் சொல்லுங்க.. வெளிநாடு போற நம்ம அம்புட்டு இந்தியக் கூட்டத்தையும் கூட்டி கையெழுத்து இயக்கம் நடத்தி நம்ம பவர் என்னன்னு அவனுக்குக் காட்டிருவோம்ண்ணே..

செய்யலாமே.. அந்த ஆபிசர் பேர் கூட அந்தப் பத்திரிக்கையிலே இருந்துச்சே..

கொடுங்கண்ணே..அவரைப் பத்தி மொத்த டீடெயிலையும் நம்ம பத்திரிக்கைக் காரங்கப் போட்டுட்டாங்களாண்ணே..

அவரைப் பத்திப் போட்டா யார் படிப்பா

பொறவு யாரைப் பத்திண்ணே போட்டிருக்காங்க..

நம்ம சூப்பர் ஸ்டார் ரசினியப் பத்தில்லா போட்டுருக்காங்க..

அண்ணே அந்த லுப்தான்சா விமானக் கம்பெனியிலே நம்ம தலீவருக்கும் பங்கு இருக்காண்ணே..

அதெல்லாம் இல்ல டா

பொறவு.. சூப்பர் ஸ்டார் இந்திய விமானப் பயணிகள் மக்கள் இயக்கம் எதாவுது சைட்ல்ல ஆரம்பிச்சுட்டாரேண்ணே

ஏலே டவசர்பாண்டி .. நக்கல் வேண்டாம்... வாங்கி வீங்கிறப் போற.. அவர் நடிக்க சிவாசி படத்துக்கு ஷுட்டீங் போக அமெரிக்காவுக்குப் பிளைட் ஏற மனுசனும் அதே வரிசையில்ல நின்னு இருக்கார்...

புரியல்லண்ணே..

உனக்கெல்லாம் எல்லாம் விளங்கிருச்சுண்ணா நம்ம நாடும் விளங்கிருமேல்ல... இந்தா அந்த ஆளு என்னச் செஞ்சாலும் செய்யாட்டியும் அதை எழுதி அவர் படத்தை ஒன்ணைப் போட்டா பத்திரிக்கையும் விக்கும் அதைப் படிச்சுப் போட்டு நாலு பேர் திட்டுவான்.. இன்னும் நாப்பது பேர் ஏன்டா தலைவரை திட்டுனன்னு சண்டைக்குப் போவான்.. நமக்கும் பொழுது போவும்ல்லா..

அண்ணே நீங்க தலீவரை வச்சு காமெடி கீமெடி பன்ணல்லயே.. நான் டென்சன் ஆயிருவேன்னு சொல்லிருங்கண்ணே..

ஆகான்னு பேச்சை அத்தோட நிறுத்திகிட்டு தினந்தந்தியிலே இன்னிக்கு வந்து இருக்க ரஜினி வரலாறு படிக்க ஆரம்பிச்சுட்டேன்.. போதுமா மக்கா மேட்டர்
ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...மைக்க நீட்டீட்டாங்க... இனிமே அட்லீஸ்ட் உன் மூச்சை ரெக்கார்ட் ப்ன்ணி அதுக்கு எபெக்ட் கொடுத்து எழுதி ஆட்டம் போடாம அடங்க மாட்டாங்க..
டவுட்டே இல்ல..எம்புட்டு அமைதியா நீ இருந்தாலும் இவிங்க உன்னை விடமாட்டாயங்க.... நீ பாக்குற ஏரியாவைக் கவர் பண்ணி அடுத்த கவர் ஸ்டோரி வரப் போகுது பார்.. ரஜினியின் பார்வை சரியா? தவறா? ரெடி ஜூட்

Friday, February 09, 2007

ஆங்கிலத்தில் வீராச்சாமி

மக்கா வலையுலக மக்களின் கட்டுக்கடங்காத வேண்டுகோளுக்கிணங்கி...வீராச்சாமி விம்ர்சனம் ஆங்கிலத்தில் இங்கே சென்னைக் கச்சேரியில் வழங்குகிறோம்.. இது மெயிலில் வந்தது.. முழுப் படத்தையும் பார்த்து இந்த விமர்சனமும் எழுதிய அந்த அஞ்சா நெஞ்சனுக்குக் கச்சேரியின் கலக்கல் சல்யூட்..



This is not a review for a movie...... but for a life history of a great
man called "VEERASAAMY" , So plz read this review keeping all fun
apart......Ive never written any reviews for a movie.... but this movie
has forced me to do write one....

I went to this movie on sunday thinking that the theatre would be empty
, but to my surprise it was full , and that too with youngsters.. . Thats
when i got the feeling that this movie has a strong message...

The movie starts with Antisocial elements, this time its "RAVUSU" Rani,
troubling the poor civilians and then suddenly a car suddenly goes 100
feet on top against the gravity of earth... then 4 ppl enter into a
small house and are thrown away from all directions, the door opens and
u can see the man himself , TR and theatre goes crazy... shouting and
calling him thalaivaa, clapping and whistles all aroundAruvals and
Kattais come from all directions and hit this man , but nothing happens
to him (Thanks to the Graphics).. You must see his costume , its the
same as wat dhanush wears in thiruvilayadal arambam and wat vijay wears
in Pokiri.... but trust me , it suits this guy a lot better than the
other two.....

And jus wen ppl think that only kamal haasan and vikram can change their
physique for each movie...... our man does that tooo , he has shed 2
kios of weight , and wen everyone wonders where he had done that , we
could see his famous "Thaadi"(beard) trimmed , unlike his earlier
movies.... this makes him even smarter....

Then we can see our man fight like bruce lee.... jumping on the cars ,
running over them... break glasses and so on... at one point all the
adiyaatkal ( poor guys) surround him and cover him up in all directions
, jus wen our hearts beat faster(sathyama) and wen we think wats gonna
happen next , he uses a different weapon thats never used before

in the history of Indian , even Hollywood Movies...... . our man takes
the "Tharaasu" ( Physical balance ) and uses

it to perfection, ofcourse not to weigh vegetables but to hit the bad
guys and throw them in all directions.. .



We get a feeling that TR is playing the role of a Dada in this movie...
, but to everyone's surprise ( trust me , i was surpirsed ) he is a
lawyer and more than that he is the MLA of that locality.... This
should the best twist in tamil cinema more than wat Vikram gave in Saamy
and recently Vijay in Pokirri....



He is a very straightforward MLA and makes sure that he questions
wherever wrong things happen and our man does with humour ,
for eg :

1. A collector asks for bribe and tells a lady " weighta yethavathu
konduvaama" and our man gets a big stone and places it in collector's
hand and asks if this weight is enough

2. A traffic police constable stops a person for no reason and tells him
, " Yethavathu konjam Vettu" , our mans comes there and cuts the
constable's hand and says "Vettinathu Pothuma"

Wat a comedy , wat a comedy .......



he has a sister ,a lover gal mumtaz who is his neighbour and follows him
alwayz.... and about 4 guys surrounding him to talk al good things abt
him... the sad part is that "Lollu sabha" Santhanam is also in this gang
and his talent has been wasted in this movie.....



Then comes the flavour of every TR movie.... a north indian guy who does
not know to speak tamil , but is the hero of the movie.... this guy
carries the same tag and looks like a perfect "AJAKKU".... This guy is
the brother of "RAVUSU" Rani and loves TR's sister...... .very
unusual....



Our man is very attached to his sister and will do anything for his
sister.... then there are a lotta dialouges like ,
"Nee chinna vayasula irukumbothu , intha annan , unakkaga.... ...." and
so on.... TR has continued to impress with his emotional expressions in
this movie too..... Not even kamal cud give a perfrmance like this....
the way he keeps his mouth open and turns his head in all directions
except the direction where the person is standing and talkin to him.....

Wow wat a performance !!!!



Then comes the best of TR and this is something that he has never done
before...... . ROMANCE AND DANCE......

there are 3 peppy duets for TR and a soft romantic song..... The
noteable point here is that this guy has done his best in dancing... ..
every single person in the theatre appreciated it with loud laughters
and clapping as this man danced like pabhu deva , even better than
him.... and his costumes where superb ...... The Costume list included...


1. Full suit , not with a tie , but a bow
2. Sherwani
3. Tight half shirt with pants upto his chest and wonderful black and
white coolers..
4. Lungi and Baniyan

5. Sleeveless Track suit
6. Ramarajan shirt and so on....

He had also given a wonderful performance for a "Tamil Kuthu" with a
pakka banyan and lungi , with his undergarment visible..... . u shud see
his reaction ....man !!! amazing..... . just like vivek tells in a
movie.... "kai kaal muliacha kathirikai , but here its kai kaal muliacha
Poosinikaai"






His Romantic expressions make us think that he should be just 30 years
old..... He also dances with Mumtaj inside a tub filled with Milk....
warrae waah !!! He has Done excellently well in the romantic
sequences... .... Mumtaz even steals his SOAP as a extreme step for her
love towards him and uses it ( UAAAGHHHH... ........ , nothing jus
puking), then she cleans his slippers , sleeps with his poster and
kisses his foto... and all nonsense happens.....

He has not failed to talk abt his son "SIMBHU" and his lyrics for a song
also include his son's name..... then the area where they live is filled
with Simbhu's cut outs and posters... even the bus stops..... There is
also a sequence where in mumtaj tells a person tat " There is no ticket
available for simbhu starrer SARAVANAA as its running houseful.... "

Maybe TR is showing his gratitude to his son , who has sung a song for
him , YES , Simbhu has sung a duet song for TR in this movie....... .

Meghna Naidu has acted in this movie and she is used as a item number
for this movie , unlike the other movies, the item number does not
restrict to a single song , but comes through out the movie and gives u
a feeling that uve come for a BIT movie , coz there are a lotta obscene
scenes...... ..

Then there is a sequnce where there is a "PAASA PORAATAM" between his
sister and him......... . and again he has excelled in his
expressions. ...Then a lotta TR dialouges... . including vulgar diagloues
like " nee intha auntya correct panna use pannuva VIAGARA , naan vasanam
pesa arambichenna athu MANOGARA" ... wat a comparison, HATS OFF.....,

There are scenes where he compares himself to Kamaraj , MGR and also
SACHIN Tendulkar... .... at this point the crowd loses its patience and
started shotuing and abusing TR........ He even talks abt CM chair and
also has words of praise for the current CM , kalaignar ... may be he
wants to join with DMK again

To me there was only one dialouge that was THE BEST in the movie.....
this comes twice or thrice in the movie...... its when TR asks " NAAN
YELLAM MANUSHANAAA ??? ".... for this , the whole crowd gives the answer
in a chorus "ILLADA.... KARADI"

There are a lotta twists and turns in the movie..... U really wonder ,
this man shud be directing a hollywood movie , wat a sequence of
unbeleiveable incidents... ...... but only i liked it , coz the whole
crowd was abusing badly .......

like , "***** padatha mudida" ," Mookai ^%$%$" and so on......

U shudnt miss the final fight sequence in the movie where TR , removes
his dhoti and fights with his underwear , holding his dhoti in one hand
and "ARUVAL" in another hand and perfoms a dance , ohhh sorry fight....
Extraordinary fight... he does a "RuthraThaandavam" , better than wat
Vikram did in Pithaamagan climax.... wat a fight , we shud name it the
"Underwear fight" after this movie....... ..

Finally , all good things should come to an end ....... Veerasamy is
being questioned for his Integrity and this makes him feel so bad that
he dies immediately. ... ( he has a lotta hair and shud belong to the
"KAVARI MAAN" jaathi) and so does Mumtaz who is in true love with
him......

U shud see the theatre at this point , again TR has indirectly given a
twist , when we expect tearful eyes and Silence all over..... the crowd
bursts out and laughs as loud as hell (including me........ :) ) ,
everyone shouts and are happy that this movie is over and more than that
, Veerasaamy is dead.... Ppl jump around in joy , give high fives , hug
each other and leave the theatre happily..... ..

TR and the other cast have done a wonderful job and shud be appreciated
for wat theyve done...... Excellent movie ...... , Now when the producers
think of remaking "KING KONG" in tamil , they have the best actor in
line for it..........

No one in this whole world can make a serious movie in such a comical
fashion , think wat will happen if he takes a comical movie.... man!!!
hilarious... . if u wanna laugh for all 3 hours , then this is the right
movie... make sure u watch it

At last when all the fun is over and i come out of the theatre , A
middle aged man asks me , "Is the movie good ?" , all i tell him is "
Yes , its a wonderful movie and watch it today , coz u never know if the
movie will be running in the theatre tomorrow......."

So friends , plz goto theatres ( u have to search for them) and watch
this Mind blowing movie....... plz make sure that u make this movie a
big hit , coz TR has promised to retire after giving a HIT
movie....... ..

Thursday, February 08, 2007

மாப்பிள்ளை ரஜினி ராம்கிக்கு வாழ்த்துக்கள்

என்னைத் தமிழ் வலையுலகுக்கு அழைத்து.. தமிழில் தட்டச்சப் பொறுமையாக வழி காட்டிய தமிழ் பதிவுலகின் முன்னோடியும், ரஜினி சப்தமா, சகாப்தமா, மு.க. போன்ற நூல்களை எழுதி எழுத்துலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துக் கொண்டிருப்பவருமான அன்பு நண்பர்.. ரஜினி ராம்கி நாளை மணநாள் காண்கிறார்..

இந்த சந்தோஷமானத் தருணத்தில் மாப்பிள்ளை ராம்கியையும் மணமகளையும் மனமார வாழ்த்துகிறேன்..

இல்லறத்தில் இனிமைக் கண்டு எல்லா வளமும் பெற்று ஆல் போல் தழைத்துச் சீரோடும் சிறப்போடும் வாழ மணமக்களை வாழ்த்துக்கிறேன் ...

தலைவர் டச் இல்லாம வாழ்த்து நிறையுமா



இருக்கே....

"நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்
பேரு விளங்க் இங்கே வாழனும்
சோலை வனத்து ஒரு சோடிக்குயில் போலத் தான்
காலம் முழுக்க சிந்துப் பாடணும்'


தலைவரின் முழு வாழ்த்தையும் கேட்க இங்கேச் சுட்டுங்க..

HAPPY MARRIED LIFE RAMKI !!!!

அமெரிக்காவில் ரஜினி

வணக்கம் மக்கா,

தலீவர் ரஜினி இப்போ அமெரிக்கால்ல தான் இருக்காராம்... 'சிவாஜி' ஷூட்டீங் அங்கே தான் நடக்குதுதாம்... இது வரைக்கும் தலீவர் படம் எதுவும் அமெரிக்கால்ல எடுக்கல்லன்னு நினைக்கிறேன்..

நியு ஜெர்சியில்ல தான் இப்போ இருக்காராம் தலைவர்.. பாக்குறவங்க பாருங்கோ.. படம் புடிச்சுக்கோங்க.. இந்தா கீழே இருக்கப் படம் மாதிரி..ஆட்டோகிராப் வாங்குறவங்க வாங்குங்கோ...

அப்படியே நைசாப் பேசி சிவாஜி கதை என்னன்னு கேளுங்கோ...

LAST BUT NOT LEAST நான் அவரை ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்கோ..



அமெரிக்கால்ல பாட்டா? பைட்டா?




தலைவர்க் கூட நிக்குறப் பசங்களைப் பாத்த மாதிரி இருக்கு.. ஏம்ப்பா நீங்களும் பிளாக் எல்லால் எழுதுறீங்களா?

சரி மக்கா ஜூட்

Tuesday, February 06, 2007

வாரான் வர்றான் வர்றான்லே... தாமிரபரணி

பிராத்தனா திரையரங்கம் நாலாவது வாரமும் கூட்டம் நிரம்பி வழியுது... இந்த வாரம் நாங்கப் பார்த்து பரவ்சப்பட்டு பீலிங் ஆனப் படம் தாமிரபரணி...



"டேய் மாப்ளே என்னடா இது...இந்தப் பைய வர்ற வேகத்தைப் பாத்தா ட்ரெயினை அரிவாளை வச்சு ஒர்ர்ரே போடா போட்டுருவான் போல இருக்கு... புதுமை புதுமைன்னு நம்ம கோலிவுட் மக்க அப்படி எதாவது பண்ணியிருப்பாங்களோ"

தாமிரபரணி படத்தின் ஓப்பனிங்க் சீனில் விஷால் ரயில் ஓடப் போட்ட தண்டவாளத்தில் அரிவாளைத் தீட்டி அல் டாப்பாக் கிளம்புறதைப் பார்த்து நம்மக் கூட வந்த நண்பன் பச்சபுள்ள பயந்தேப் போயிட்டான். நான் கூட அவன் சொன்ன மாதிரி எதுவும் வில்லங்கம் இருக்குமோன்னு மிரண்டு திரையேப் பார்த்துகிட்டு இருக்கேன்.

டக்குன்னு ட்ரெயின் நிக்குது.. ஆகா.. அடுத்து ட்ரெயினை எட்டி உதைக்கப் போறானா... அப்படி எல்லாம் ஹரி (அவர் தாங்க இயக்கம்) ரூம் போட்டு சிந்திச்சுருப்பாரோன்னு பயங்கரமான எண்ணம் எல்லாம் மனசுல்ல ஓட ஆரம்பிச்சு தியேட்டர் எக்ஸிட் எங்கேன்னு துழாவ ஆரம்பிச்சுட்டேன்.

ஆங்.. தாமிரபரணி.. விஜயின் இடத்தைப் பிடிக்க விஷால் எடுத்திருக்கும் அடுத்த முயற்சி..(ஆமாங்க விஜய் தான் இப்போ ரஜினி ஆயிட்டார் இல்ல). படத்தில் கதை இருக்கற மாதிரி தான் இருக்கு.. ஒரு வேளை எனக்கு தெரியல்லயோ என்னவோ..

குடும்பப் பகை..மாமன் - மருமகன் பாசம், அண்ணன் - தங்கை உருக்கம், கணவன் - மனைவி பிணக்கு, அத்தை மகன் காதல் இப்படி உறவுகளின் சென்டிமெண்ட் குழம்பை ஊற்றி ரசிகர்களுக்கு தாமிரபரணி சோறு ஊட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

விஷால் ஆக்ஷ்ன் ஹீரோ அங்கீகாரம் பெற்றுவிட்டார். கொடுத்த ரோலை நல்லாவே செய்து இருக்கிறார். தமிழ் சினிமா நட்சத்திர நாயகன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்கிறார். சண்டைக் காட்சியோடு அறிமுகம், உடனே ஒரு பாட்டு, அப்புறம் விறைப்பா வம்புக்கும் தும்புக்கும் போவது, நாயகியோடு மோதுவது, நண்பர்களோடு கும்மி.. அப்புறம் இடைவேளைக்கு மேல கொஞ்சமாய் நடிக்க முயல்வது, தியாகியாவ்து என சாமி அதே பழைய டெம்ளெட்.. நேத்து வந்த பிளாக் மட்டையெல்லாம் கூட பீட்டாவுக்கு மாறிடுச்சு.. கோலிவுட் மக்கா நீங்க எப்போய்யா டெம்ளெட்டை மாத்தப் போறீங்க..



'என்னக் கொடுமை சரவணன்' புகழ் பிரபு விஷாலுக்குத் தாய் மாமனாக வருகிறார். நதியா அவரது மனைவி. ஆச்சி மனோரமா பிரபுவின் தாய். ரோகிணி பிரபுவின் தங்கையாக வருகிறார். இது ஒரு குடும்பம். இதற்கு எதிர் வரிசையில் விஜயகுமார், நாசர் வில்லன் அணியாக வருகிறார்கள்.

ஆச்சி... மனோரமா ஆச்சி முடியல்ல... ஒவ்வொரு வாட்டியும் நீங்க் சவுண்ட் கொடுத்து அழும் போதும் தியேட்டர் ஸ்பீக்கர் மேல பல பேர் கோவத்தோடு பார்வையை செலுத்தறது நல்லாவா இருக்கு.. போது விட்டுருங்க.. எங்களை விட்டுருங்க.. உங்களுக்கு ஓய்வு தேவை. எங்களுக்கு உங்ககிட்ட இருந்து விடுதலை தேவை.

விஜயகுமார்..நாசர்... என்னத்தச் சொல்ல.. திறமை இருக்க நடிகர்கள்.. பொழப்புக்காகத் தான் இப்படி வேஷங்களை ஒத்துக்குறாங்களோன்னு நினைக்கத் தோணுது.

ஆகாஷ், நிழல்கள் ரவி ஆகியோரும் வந்துப் போகிறார்கள்.

கதாநாயகி புது முகம் பானு பளிச் அறிமுகம். ஒரளவுக்கு நடிக்கவும் வருது பொண்ணுக்கு. பொழைச்சுக்கும். கஞ்சா கருப்பு காமெடி சில் இடங்களில் சிரிப்பு.. மற்ற இடங்களில் கழுத்தறுப்பு. கிரேன் மனோகர், டாப் 10 ஆர்த்தி வரும் காமடி காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன.



இசை யுவன் ஷங்கர் ராஜாவாம்... வாரான்.. வர்றான் வர்றான்லே.. அப்படின்னு ஆரம்பிச்சு.. கருப்பான கையால என்னைப் புடிச்சான்னு பழையப் பக்தி பாட்டை ரிமிக்ஸ் பண்ணிட்டு காணாமப் போயிடுறார்..

தூத்துக்குடி மாவட்டத்தைத் திரையில் காட்டியதற்காக தூத்துக்குடிகாரர்கள் ஹரியைத் தாராளமாய் பாராட்டலாம்.

அது எல்லாம் சரி வசனம் எழுதுன மகானை அப்படியே பொங்கப் பானையிலே வ்ச்சுப் பொங்கிப் போடணும்...ஹரி சாமி.. எப்படி இப்படி எல்லாம் உங்களால முடியுது..

உதாரணம்...

"விஜயகுமார் பிரபுவைப் பார்த்து கேட்கும்.. பாசம் மிகுதின்னா பொஞ்சாதிக்குப் பதிலாத் தங்கச்சிக் கூட படுத்துருவீயோன்னு..."

இது போல 'A'டாகூடா வசனங்கள் 'A'ராளம்.. தவிர்த்திருக்கலாம்

மொத்ததில் மக்கா படம் பாத்துட்டு இது சொத்த... அது மொக்கன்னு நான் என்னக் கரைச்சல் கொடுத்தாலும் படம் பட்டயக் கிளப்புதாம் வசூல்ல.. விஷால் தாராளமாய் தாமிரபரணியின் வெற்றியைக் கொண்டாடலாம்..

ஆங்.. சுத்தமாப் பொழுது போகல்லன்னா கண்டிப்பா நீங்களூம் ஒரு தரம் பாக்கலாம்..

Monday, February 05, 2007

வீராச்சாமி - THE COMPLETE MAN

வணக்கம் மக்கா,

வழக்கம் போல பட திரை விமர்சனம் தான் போட இந்த வாரம் வீராச்சாமி பாக்க முயற்சி பண்ணேன்.. ஆனாப் பாருங்க.. சில படம் பாக்க டிக்கெட் தான் கிடைக்காது.. ஆனா நம்ம சிங்கம் படம் பாக்க தியேட்டரே கிடைக்கல்ல.. ஆமாங்க எங்க ஊர் பக்கமா இருக்க எந்தக் கொட்டாவுல்லயும் சிங்கம் படம் ரிலீஸ் ஆவுல்ல.. இது பெரிய சதி..

சதிகளை எங்க சிங்கம் பிடரியைச் சிலுப்பிவிட்டு சிதறடிக்கத் தான் போவுது.. அது வரை சிங்கத்தின் சிஷ்ய படைகளேப் பொறுமை.. பொறுமை.. பொறுமைன்னு ஏரியாவில்ல ஆட்டோவில்ல மைக் கட்டி சொல்லி அமைதிப்படுத்தி வச்சிருக்கோம்.. மக்களின் கொந்தளிப்பைப் போக்க ஒரு குதூகாலச் செய்தி...

டூபாக்கூர் டி.வியில்ல சொன்னாங்க.. ரேம்ண்ட் நிறுவனத்தின் அடுத்த மாடல்...

வேற யாருமில்லங்க... நம்ம வீராச்சாமி தான்.. எஸ் வீராச்சாமி - THE COMPLETE MAN

சிங்கம் ஸ்டில் பாருங்க மக்கா.. உய்ய்ய்ய்ய்ய்ய்ய் விசில் தான் அடிப்போமா

tamil10