Monday, July 12, 2010

வெள்ளிகிழமைக்குள்ளே வெற்றி வேண்டுமா?

அண்ணாமலை...படையப்பா....மாதிரி வாழ்க்கையிலேயும் மூணு மணி நேரத்துல்ல அப்படியே சொய்ங்ன்னு உயரத்துக்குப் போனா எப்படி இருக்கும்..நல்லாத் தான் இருக்கும்..ஆனா அதெல்லாம் சினிமா.... நிழல்..நிஜம் என்னவோ வேற மாதிரி இல்ல இருக்கு.... திங்கட் கிழமையும் அதுவுமா உங்களுக்கு எல்லாம் ஒரு அருமையான யோசனை...வர்ற வெள்ளிகிழமைக்குள்ளே நீங்க எல்லாரும் உங்க வாழ்க்கையிலே உயர...உங்க லட்சியங்களை அடைய....என்னப் பண்ணனும்ன்னு கேக்குறீங்களா....சிம்பிள் மேட்டர் தான்...கீழே இருக்கப் படத்தைப் பாருங்க..... அப்புறம் உங்க கருத்தைச் சொல்லுங்க....

ஜக்கு பாய்ஸ் 1

ஜக்கு பாய்ஸ் 2

ஜக்கு பாய்ஸ் 3


வெள்ளி கிழமை சந்திக்கலாம்...எல்லாரும் இதை அப்படியே பிளான் பண்ணி பண்ணுங்க....வெற்றி நிச்சயம் பாஸ்....பிரமோஷன் டிரீட் ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க ரைட்டா...

Sunday, July 11, 2010

மனத்தை வருடிய மெளன ராகம்

தமிழ் படங்களில் எனக்கு இப்போவும் ரொம்ப பிடிச்ச படங்களின் பட்டியல் போடச் சொன்னா முதல் இடம் பிடிக்கும் படமிது...எண்பதுகளின் இறுதியில் வந்த படம்...மணிரத்னம் என்ற இயக்குனரை பெரிய அளவில் உலகத்துக்கு அறிமுகம் செய்த படமும் இது தான்..


ஒரு ஞாயித்துகிழ்மை மதியம் பிராந்திய மொழிகளில் விருது வாங்கிய படங்கள் வரிசையில் இந்தப் படத்தை தூர்தர்ஷன்ல்ல போட்டாங்க...அப்போத் தான் முதல் முறையா இந்தப் படத்தைப் பாத்தேன்...முதல் தடவைப் பாக்கும் போது நான் ரொம்ப ரசிச்சது...என்னன்னா வி.கே.ராமசாமிகிட்டே அந்த சர்தார் மெக்கானிக் பண்ணுவாரே அந்த காமெடியைத் தான்...ரேவதி அந்த ஆளுக்கு சொல்லித் தர்ற தமிழ் வசவு மொழிகளையும் அதை அப்ப்டியே அச்சரம் பிசகாமல் சர்தாரும் நம்ம வி.கே.ஆர் கிட்டே அன்பான பணிவோட சொல்லுற அந்த அழகு இருக்கே..செம சிரிப்பு அது...

அதுக்கு அப்புறம் அந்தப் படத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் போது பாத்தப்போ மனசுல்ல பச்சக்குன்னு ஒட்டுனது நவரச நாயகன் கார்த்திக்கோட அந்த மிஸ்டர் சந்திர மெளலி டயலாக் தான்...இன்னிக்கும் அது ரொம்ப பிரபலம்...படத்துல்ல சும்மா பத்து பதினைஞ்சு நிமிசம் வந்தாலும் கார்த்திக்கோட நடிப்பு காலத்துக்கும் நிலைச்சு நின்னுருச்சுன்னு தான் சொல்லணும்...அதுக்கு அப்புறம் தமிழ்ல்ல வந்த சிட்டி ரொமான்டிக் ஹீரோ பாத்திரங்களுக்கு அது தான் ஒரு மைல் கல்...வழிகாட்டின்னு கூடச் சொல்லலாம்....அதுல்ல கார்த்திக்கோட நடை உடை பாவனை துள்ளலான நடிப்பு அந்த காலத்து காலேஜ் பெண்களின் தூக்கத்தைக் கெடுத்ததாகப் பின்னாளில் கேள்வி பட்டேன்

காலேஜ் நாட்களில் தூங்காமல் நண்பர்களோடு கழித்த பல இரவுகளின் இன்னிசைத் தோழன் யார்ன்னா இளையராஜா தான்...ராஜா பாடல்கள் மீது ஒரு தணியாத பைத்தியமே பிடித்தக் காலகட்டம் அது...முக்கியமா மன்றம் வந்த தென்றலுக்கு...அப்புறமா நிலாவே வா..பாடல்கள்...அந்த பாடல்களுக்காகவே மெளன ராகம் படம் இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது....பாக்க பாக்க படத்தின் முதல் மழை பாடலும் மனத்தை ஈரப்படுத்தியது...வான்மேகம் பூ பூவாய் தூவும்...மழை வரும் போதெல்லாம் அந்தப் பாடலை நான் முணுமுணுக்க தவறியதில்லை...பாடல்கள் மொத்தமும் அவ்வளவு ஹிட்...இன்னும் ஹாட் ஹிட் தான்...

கல்லூரி காலத்தில் தான் திவ்யா மீது ஒரு தனி கவனம் வந்தது...அட திவ்யா தான் அந்த படத்தில்ல நம்ம ரேவதியோட கேரக்டர் பேர்....எனக்கு தெரிஞ்சு ரேவதிங்கற நடிகையை விட அந்தப் படத்துல்ல திவ்யாங்கற அவங்க பாத்திரம் தான் எனக்கு அதிகம் தெரிஞ்சது

திவ்யா நகரத்து நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி பெண்களின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு...துடிப்பு...துடுக்கு..இடக்கு..எனக் கலவையாக ரேவதி கலக்கியிருந்தார்...ரேவதி - கார்த்திக் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவின் எவ்ர் கிரீன் ரொமான் ஸ் பக்கங்களில் நீங்கா இடம் பிடித்தன என்று சொன்னால் அது மிகையாகாது....

முக்கியமாக அந்த கல்லூரிக்கு சென்று கார்த்திக் ரேவதியிடம் செயினைத் திருப்பிக் கொடுக்கும் காட்சி...அந்த மைக் போட்டு காதல் சொல்லும் காட்சி....காபி கடை சந்திப்பு என மொத்தமும் ரகளையான ரொமான் ஸ் ...இன்னிக்கும் பாக்கலாம்...ரசிக்கலாம்..

இருபது வயதுகளின் இறுதியில் படத்தைப் பாக்கும் போது தான் மோகன் பாத்திரத்தின் வடிவமைப்பு குறித்தான மதிப்பிட்டீல் இறங்க முடிந்தது...மோகனுக்கு அமைதியான அருமையான கனமான வேடம்...மனிதர் கொஞ்சம் கூட அலட்டிக்காமல் அருமையாக பண்ணியிருப்பார்...மோகனோட கேரியரில் மைக் இல்லாமல் மோகன் நடிப்பில் அசத்திய படமென்றால் அது இது தான்....

ப்டத்துல்ல என்னைக் கவர்ந்த இன்னொரு முக்கிய அம்சம் அந்த டெல்லி வீடு...என்ன ரசனையோடக் கட்டியிருக்காங்க...அப்படி ஒரு வீடு கட்டணும்ன்னு ரொம்ப நாள் ஆசை...எத்தனையோ மாடல் வீடு பாத்தாலும் இன்னிக்கும் அந்த வீட்டு மேல ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு குறையல்ல...

இவ்வளவு சொல்லிட்டு படத்தோட மகுடம் யாருக்குன்னு சொல்லாம விட்டா எப்படி..? மணிரத்னம் நகர மாந்தர்களை மையப்படுத்தி ஒரு அட்டகாசமான நகர காதல் கதையை சினிமாவா வடிச்சு திரையிலே ஓட விட்டார்ன்னா...ரேவதி, கார்த்திக், மோகன்...எல்லோரும் தங்களோட நடிப்பால் படத்தை இன்னும் ஒரு உயரம் கொண்டு போனாங்கன்னா...படததைச் சிகரம் தாண்டி கொண்டு போனது யார்ன்னா சந்தேகம் இல்லாமல் அது இசை ஞானி இளையராஜாவே தான்...செல் போன் வாங்குன புதுசுல்ல அந்த கார்த்திக் வரும் போது ராஜா போட்டிருப்பாரே ஒரு பின்னணி இசை ....அதை ரிங் டோனாத் தேடி பிடிச்சு வச்சுகிட்டவங்கள்ல்ல நானும் ஒருத்தன்...

நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி ஒரு நல்ல திரைப்படமான மெளன ராகம் இப்போது பாத்தாலும் என் மனத்தை வருட தவறுவது இல்லை....

ராவணன் பத்தி ஊரே பேசி அடங்கி விட்ட இந்த நேரத்தில் மணியோட மணியான இந்தப் படத்தை பத்தி பதிவு போடணும்ன்னு தோணுச்சு...போட்டாச்சு..v

tamil10