Showing posts with label கச்சேரி பிலிம்ஸ். Show all posts
Showing posts with label கச்சேரி பிலிம்ஸ். Show all posts

Thursday, November 29, 2007

பாலாகன்

சமீபத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ரீமேக் மயமாக உள்ளது.. நம்ம கச்சேரி பிலிம்ஸ் "விவாஜி" "காஞ்சித் தமிழ் மகன்" போன்ற 100 சதவீத அசல் படங்களைக் கொடுத்தாலும்... ரசிகர்களின் ரீ மேக் ரசனைக்கும் தீனி போடும் விதமாக படங்கள் கொடுக்கத் தீர்மானித்து களத்தில் இறங்கி விட்டோம்...

கச்சேரி பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் அடுத்த படைப்பு

உலகப் பதிவர் பாஸ்டன் பாலா (பாபா) கலக்கப் போகும் பாலாகன்

பாபா சிறுவன்..வாலிபன்..நடுத்தர வயது நாயகன், வயதான மனிதராக பலக் கெட்டப்புக்களில் கலக்க இருக்கிறார்.

இளையராஜாவின் இசையை ரீ மிக்ஸ் செய்து பாடல்கள் கலக்கப் போகிறதாம்.

பாபாவுடன் விஎஸ்கே, கொத்தனார், பெனத்தலார், மருத்துவர் ராமநாதன் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடிக்க இருக்கிறார்கள்.

வலையுலகத் திரை வரலாற்றில் முதல் முறையாக லக்கி லுக் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்பார் எனத் தெரிகிறது..அதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சு வார்த்தைகள் நடத்தப் பட்டு வருகின்றன.


பாலாகன் ட்ரெயிலர் உங்களுக்காக.........

1987.....மைலாப்பூர்...பள்ளிக்கூடம்

சிறுவன் பாலா...: பிட் எடுத்துட்டுப் போறது தப்பில்லையா

பெரியவர்: தப்பு இல்லைப்பா..எடுத்துட்டுப் போற பிட் இன்னும் நாலு பேர் காப்பி அடிக்க யூஸ் ஆகும்ன்னா எதுவுமே தப்புல்ல...

டொன்டொன்டொன்டொய்ங்....

சிறுவன் பாலா...: தப்புன்னு சொல்லுறாங்களே...

பெரியவர்: ஆமா..தப்புத் தான்..உன் பரீட்சைப் பேப்பர்ல்ல நீ பதில் எழுதாம.. இந்தக் கேள்விக்குப் பதிலை அவன் பேப்பர்ல்ல பார்.. அந்தக் கேளவிக்குப் பதிலை இவன் பேப்பர்ல்ல பாருன்னு சுட்டிக் கொடுத்தாத் தப்புன்னு தான் சொல்லுவாங்க... டொன்டொன்டொன்டொய்ங்....

பேக் கிரவுண்டில்...இளையராஜா வாய்ஸ் ஒலிக்கிறது...ஆஆஆஆ......

டென்த் ஸ்டாண்டட் பரீட்சையிலே...
சுட்டிக் கொடுத்து எழுதியவனை...
யார் அடிச்சாரோ..யார் அடிச்சாரோ....
வளரும் பிளாகா நீ சாயாதே...
சுட்டிக் கொடுக்க நீயும் தயங்காதே...


அடுத்தக் காட்சி....

பாலாகர் அய்யா....போயிருங்க....போயிருங்க.... ஒரு வயதான அம்மா குரல் கொடுக்கிறார்..

ஈ தமிழ் இணையத்தில் இருந்து பாலா எட்டிப் பார்க்கிறார்....

பாலாகர் அய்யா... போயிடுங்க... உங்களை எப்படியும் தமிழ்மண நட்சத்திரம் ஆக்கி ஒரு வாரம் நோகடிக்கணுங்கற முடிவோட வர்றாங்க... நாங்க எல்லாம் இருக்க வரைக்கும் உங்களை அந்த நிலைம்மைக்கு விட மாட்டோம்....

பாலாகர் அய்யா ஆண்டவா...அப்படின்னு வானம் பார்க்கிறார்....ஓஓஓஓஓஓ பேக் கிரவுண்ட் மீசிக் வருகிறது.

அடுத்த கட்...வெனீஸ் நகரத்து போட் காட்டுகிறோம்..அந்தப் போட்டில் நம்ம வெட்டிப் பயலும் பாலாவும் இருக்காங்க....பாபாவின் விருப்பபடி சானியா மிர்சா அந்த போட்டில் டென்னிஸ் பற்றி பதிவெழுதக் குறிப்புக் கொடுக்க வருகிறார்....

ஒய்யா ஓ...அது என்ன வோ....
கோலா அது அட்ல்ல பாரு....
பாலா என் கூட போட்ல்ல ஏறு...
ஒய்யா ஓ அது என்ன ஓ...

பொழுதானாப் போச்சு..
பதிவெல்லாம் படிச்சி
பொழப்பே கெட்டுப் போச்சு...

கொடுக்குற சுட்டியிலே
ஒரு சுட்டி நம்ம சுட்டித் தான்
அதைப் படிக்கிற குட்டியிலே
ஒரு குட்டி சிக்குற குட்டித் தான்..

அட பதிவுல்ல
தினம் தினம்
அடிதடி தான்
அது படிக்கிற
கூட்டம்
அடிக்குது
கும்மி கும்மி தான்
அடி ஆத்தாடி
பிளாக் வெறும் கூத்தாடி
பிளாக் உலகில் நான் தாத்தாடி...


அடுத்து கட்..

பாலாகர் அய்யா, கொத்தனார், பெனத்தலார் எல்லாரும் நிற்க...

பாலாகர் அய்யா... இப்படி ஒரு பிளாக் முழுக்க சுட்டியாக் கொடுக்கறது தப்பு இல்லையா

கரகரப்பானக் குரலில் பாலாகர் அய்யா சொல்லுகிறார்...

நாலு பேர் படிக்கறதுக்காக நாப்பது பக்கத்துக்குச் சுட்டிக் கொடுத்து ஒரு பிளாக் போட்டாத் தப்பே இல்ல....

டொன்டொன்டொன்டொய்ங்

கட் அடுத்தக் காட்சி...

சிறுவன்: பாலாகர் அய்யா சொல்லுங்க... நீங்க பிளாகரா..பிளாக் வாசிப்பவரா...

பாலாகர்: தெரியல்லயேப்பா...தெரியல்ல...

டொன்டொன்டொன்டொய்ங்

கட் அடுத்தக் காட்சி

"யோவ் கொத்தனாரே... ஏன் அவங்க எல்லாம் நம்ம தமிழ் பிளாக்க்கு பின்னூட்டம் போட மாட்டாங்களாமா....நாம நாலு ஐடி ஓப்பன் பண்ணுறோம்... அதுல்ல நம்ம தமிழ் பிளாக்குக்கு மட்டும் தான் பின்னூட்டம் போடுறோம்...வெள்ளைக்காரன் பிளாக்கெல்லாம் போட மாட்டோம்...

ஒரு ஐடி ஓப்பன் பண்ண என்னச் செலவு ஆகும்ன்னு சொல்லு...

"பாலகர் அய்யா..ஒரு ஐடிக்கு.....ம்ம்மது..."

"ஆவட்டும்ய்யா..எவ்வளவு வேணும்ன்னாலும் ஆவட்டும்..ஓப்பன் பண்றோம்.. நாலு ஐடி ஓப்பன் பண்ணுறோம்..."

டொன்டொன்டொன்டொய்ங்

COMING SOON

THE BIGGEST ATTRACTION OF EARLY 2008

CUTCHERY FILMS

'ULAGA BLOGGER' BOSTON BALA in and as

BALAGAN

DUNT MISS IT IN A BLOG NEAR YOU !!!!

Wednesday, November 28, 2007

கச்சேரி பிலிம்ஸ்

விவாஜியின் சரித்திர வெற்றிக்குப் பின் கச்சேரி பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனம் துவக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது....

அது குறித்து பல மட்டங்களிலும் ஆலோசனை நடத்தி சார்பான கருத்துக்களைப் பெற்ற நிலையில் அந்த முயற்சியின் அடுத்தக் கட்டமாக கச்சேரி பிலிம்ஸ் துவக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கச்சேரி பிலிம்ஸின் முதல் படைப்பு பற்றி பேச்சு வார்த்தை நடத்திய போது.. மிக்க மகிழ்ச்சியுடன் தன் இடையறதா பணிகளுக்கு இடையேயும் நம்ம கச்சேரி பிலிம்ஸ்க்காக தன் கால்ஷீட்டை ஒதுக்கி தந்திருக்கிறார் பாசத்துக்குரிய சகோதரர் கப்பி பயல் அவர்கள்

தம்பி கப்பி கொடுத்துள்ள கால்ஷீட்டைச் சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தி படத்தை இயக்க நம்ம பாசத்துக்குரிய புலி சிவா ஒப்புக் கொண்டுள்ளார்...

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில்.. படத்தைப் பற்றிய சிறப்பு செய்திகள் உலகெங்கும் நிறைந்திருக்கும் கப்பி நிலவரின் ரசிகர்களுக்காக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

காஞ்சி தமிழ் மகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாராகிறது.

இந்தப் படத்தில் கப்பி பயல மற்றும் கப்பி கை என்ற இரு மாறு பட்ட வேடங்களில் அசத்தப் போகிறார் கப்பி. இதில் ஒரு வேடத்தில் ஜாவா பாவலராகவே இவர் வருவது கூடுதல் தகவல்.

கப்பிக்கு ஜோடியாக தீபிகா பதுக்கோன் மற்றும் நமீதா நடிக்கிறார்கள்

காஞ்சி தமிழ் மகன் படத்தில் முக்கிய வேடத்தில் துபாய் கோபி, குசும்பன், அய்யனார், மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்களாம்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதும் பொறுப்போடு தயாரிக்கும் பொறுப்பையும் கச்சேரி பிலிம்ஸ் ஏற்று கொள்கிறது.

கதையின் நாயகன் அறிமுக காட்சியும் அதை ஒட்டிய பாடலும் தற்சமயம் மிகவும் பிரமாண்டமாய் எடுக்கப் பட்டு வருகிறது...அந்தக் காட்சியில் நடிப்பதற்கு கப்பி அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

கச்சேரி பிலிம்ஸின் துவக்க விழாவை முன்னிட்டு அந்தக் காட்சியும் பாடலின் ஒரு சில வரிகளையும் இங்கு தெரிவிக்கிறோம்.

காட்சி 1:

அமெரிக்கா டல்லாஸ் நகரத்தின் மிக பெரிய அலுவலக வளாகம்..அங்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.

அனைத்துக் கம்ப்யூட்டர்களில் கலர் கலராக பக் தெரிகிறது..எல்லாக் கம்ப்யூட்டர்களும் பக் அட்டாக்கில் ஆடி தவிக்கின்றன... பக் ரிப்போர்ட் மெயில் பாக்ஸ் தாண்டி வ்ழிந்து வெளியே விழுகிறது... பக் ரிப்போர்ட் எடுத்துப் படிக்கும் அலுவலக பாஸ் டென்சன் ஆகிறார்...

"பத்தாயிரம் பக்ஸா...என்னப் பண்ணுறது?" பாஸின் கேள்வி ஆபிசையே கட்டிப் போடுகிறது...

"என்ன பண்றது?.."என்ன பண்றது?.." எல்லாரும் தவித்து நிற்க...

அலுவலகக் கண்ணாடி எல்லாம் அப்படியே வெடித்துச் சிதறுகிறது.. காற்று பேயாட்டம் அடிக்க....திரைச் சீலைகள் எல்லாம் கண்டப் படி பறக்க... மானிட்டர்கள் எல்லாம் கண்ட படி ரீபுட் ஆகி.. ஸ்கிரீனில்... தளபதி...ஜாவா தளபதி அப்படின்னு தெரிய.....
ஆபிஸ் சுவர்கள் கிராபிக்ஸில் தளபதி ..தளபதி ஜாவா தளபதி என மாற...

ஒரு நிமிட நிசப்தத்தில் குரல் ஒலிக்கிறது....

"எவ்வளவோ பிக்ஸ் பண்ணிட்டோம்... இதை பண்ண மாட்டோமா...."

அந்த குரல் கேட்டதும் எல்லோர் முகத்திலும் புன்னகை வருகிறது...

அங்கேப் பாட்டு ஸ்டார்ட் ஆகிறது...


"எல்லா பக்கும் ஒருவன் ஒருவனுக்கே....
நீ பிக்ஸ் போட ஓடிக் கொண்டே இரு...

எந்தப் பக்குக்கும் பிக்ஸ் உண்டு
பிக்ஸ்க்கும் ஒர்க் உண்டு...
நீ டைம் ஷீட்டைப் பில் அப் பண்ணு...

ஆன் சைட் மக்கா
புராஜக்ட் நமக்கே

ஜவஜவ ஜாவா தளபதி தளபதி
காஞ்சி புரத்துத் தமிழ் மகன் நீ தானே...

கப்பி நிலவன் மனது வைத்தாஆஆஆஆல்.....

இந்தப் பாட்டை ரஹமான் குரலில் கற்பனைப் பண்ணிப் பாருங்க....

இந்தத் தகவல்களே கப்பி நிலவரின் ரசிகர்களின் மத்தியில் ஒரு மாபெரும் கிறக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நிச்சயம்...

காஞ்சி தமிழ் மகன்.... கே.டி.எம் என்று சுருக்கமாக அவரது ரசிகர்கள் வட்டத்தில் இப்போதே பரபரப்பாகப் பேசப்படுகிறது எனவும் சொல்லத் தான் வேண்டுமா...

KTMல் பங்களிக்க விரும்புவோர் கச்சேரி பிலிம்ஸ் நிறுவனத்தை உடனே அணுகலாம்.

காஞ்சி தமிழ் மகன் திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் எனவும்.. சங்கம் பிலிம்ஸ் மூலம் உலகமெங்கும் ஒரே நேரத்தில் திரையிடப்படும் எனவும் தெரிகிறது..

MOST AWAITED MOVIE OF THIS SEASON

கப்பி பயல் VS KAPPI GUY காஞ்சி தமிழ் மகன் (KTM)

DUNT MISS IT IN A BLOG NEAR YOU

Friday, October 13, 2006

லகே ரகோ கொத்ஸ் பாய்

வணக்கம் மக்கா,

பீலிங் பதிவுப் போட்டுட்டு பீலிங்காத் திரிஞ்சிகிட்டு இருந்த எனக்கு அமெரிக்காவில்ல இருந்து போன்.. அரக்க பரக்க போனை எடுத்தா என் தானைத் தலைவர் கொத்ஸ் லைன்ல்ல இருக்கார்.

என்னய்யா ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி அப்படின்னு அக்கறையா நமக்கு நாலு வார்த்தைச் சொன்னவர்..சரி சரி.. நமக்கு டக்குன்னு ஒரு படம் பண்ணனும் கதை ரெடி பண்ணு.. யாகூல்ல ஆன்லைன்ல்ல வர்றேன் கதையச் சொல்லுன்னுட்டு போயிட்டார்.நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல.. மறுபடியும் நம்ம கலைத்தாகத்துக்கு தலைவரே பீர் ஊத்துறாரேன்னு பொங்கி வழிஞ்சுது நம்ம மனசு.

"சரா.. ஏலேய் சரா" அப்படின்னு நம்ம நண்பனுக்குப் போனைப் போட்டுக் கூப்ப்ட்டேன்..லைன்ல்ல வந்தவன் ஆனந்தக் கூத்தாடிட்டான்.. அடுத்த அரை மணி நேரத்துல்ல மெரீனாக் காந்தி சிலைக்குக் கீழே வானத்தைப் பாத்துகிட்டு கதை ஆலோசனையிலே நாங்க ஆழமா இறங்கிட்டோம்ய்யா.

"தேவ்.. ஒரு அருமையானக் கதை இருக்கு சொல்லுறேன் கேளு"
"சொல்லு"
"நம்ம கொத்ஸ்பாய் பழைய வண்ணாரப் பேட்டை ஏரியாவில்ல பெரிய தாதா. அவர் பேரு சொன்னாலே நம்ம மொத்தச் சென்னையும் நடுங்கும்"
" அப்புறம்.. அவருக்கு ஒரு சிஷ்ய புள்ள கூடவே வ்ர்றான்.. அவன் பேர் ப்யூஸ் கேரியர்"
"பேர் வித்தியாசமா இருக்கே"

"நம்ம தலைவர்க்கு காலையிலே எந்தரிச்சு ரெகுலராக தேன்மணம் எப் எம் கேக்குறது வழக்கம் அது ஒரு பிளாக் ரேடியோ.. அதுல்ல சங்வி அப்படின்னு ஒரு சூப்பர் பிகர் டெய்லி தன்னோட மெலடியான வாய்ஸ்ல்ல கவிதைச் சொல்லும்.. அதுல்ல இம்ப்ரஸ் ஆவுற நம்ம தலைவர் அந்தப் பொண்ணு எழுதற பிளாக்க்கு மட்டுமில்லாம அந்தப் பொண்ணுக்கே பயங்கர பேன் ஆகி லவ்ஸ் வூடுறார்"

"சூப்பர் ஸ்டோரிப்பா"

"அப்புறம் அந்தப் பொண்ணு ஒரு நாள் தன் பிளாக்ல்ல வெண்பா எழுதும் போட்டி வைக்குது.. ஜெயிக்கறவங்களுக்கு தன் கையலே வெண்பொங்கல் சாப்பிடுற வாய்ப்பும் தருவதாகச் சொல்லுது.. நம்மத் தல முடிவு பண்ணிடுறாரு அவர் வெண்பா எழுதி வெற்றி பெற்று விடுவதுன்னு"

"அப்புறம்"

"அவர் சிஷ்யன் ப்யூஸ் கேரியர்கிட்டே போன் போட்டு வெண்பான்னா என்னன்னு விசாரிக்கிறார். புதுசா வந்த பிகர் மினிஷா லம்பா சிஸ்டரா இருந்தாலும் இருக்கும் தலை.. ஆனா எப்படியும் எல்லா விவரங்களையும் விசாரித்துச் சொல்லுவதாகச் சொல்கிறான்"

"ம்ம்ம் அதுக்குப் பிறகு விசாரிக்கிறானா?"

"ஆங் பயங்கரமா விசாரிச்சு அது எதோ தமிழ் டிபார்ட்மென்ட் சம்பந்தப் பட்ட மேட்டர்ன்னு சொல்லுறான்.

தலை..பெரிசா விஷயம் ஒண்ணுமில்ல மாங்கா, தேங்கான்னு சிம்பிள் மேட்டர் தான். உடனே நம்ம தலை மாங்கா, தேங்கான்னா கோயம்பேடு மார்க்கெட்ல்ல கிடைக்குமான்னு கேட்க..அதுப் பத்தியும் விசார்ப்பதாச் சொல்லுகிறான் ப்யூஸ் கேரியர்"

"அப்புறம் எப்படி வெண்பா எழுதுறாங்க?"

"இங்கே தான் மேட்டரே.. நம்ம ப்யூஸ் கேரியர் இந்தப் பிளாக்ல்ல எல்லாம் வெண்பா எழுதுற எஸ்.கே, வெண்பா வாத்தி மாதிரி நம்ம மக்களை எல்லாம் கடத்திட்டு வந்து நம்ம தலக் கொதஸ்க்காக வெண்பா எழுத வைக்கிறான்"

"ஆகா.. நல்லாயிருக்கு சரா மேலேப் போ"

"அப்புறம் தலைவர் வெண்பா போட்டியிலே ஜெயிச்சுப் பரிசு வாங்கப் போறார்..அங்கே ஒரு பாட்டு போடுறோம்.. நம்ம தளபதி சிபி வழக்கம் போல நல்ல வரிகளை ரெடி பண்ணிடுவார்..அப்புறம் தலைவர் பிகர் கையால வெண்பொங்கல் சாப்பிடுறார்.. அப்போ அந்தப் பிகர் தலைவர்கிட்டெ வெண்பாப் பத்தி நிறைய கேள்வி கேக்குது"

"தலிவர் மாட்டிக்கிறாரா?"

"இல்ல தலிவர் செமையா டபாய்க்கிறார். உம்பா உம்பா அப்படின்னு பஞ்சதந்திரம் பாடு எல்லாம் பாடிக் கலக்குறார். அவரை ஒரு வெண்பா பாடச் சொல்லி பிகர் பீலிங்காக் கேட்க.. தலைவர் அதை விட பீலிங்கா அன்னிக்குத் தான் அவங்க வெண்பாச் சொல்லிக்கொடுத்த குருவோட மாமியார் மண்டையப் போட்ட நாள் அதுன்னால அவர் வெண்பா பாட முடியாதுன்னு எஸ் ஆயிடுரார்"

"அப்பாடா மாட்டிக்குவாரோன்னு பயந்துட்டேன்.. தலீவர் மாட்டுன்னா ரசிகர்கள் செம கடுப்பாயிடுவாங்க"

"அது தெரியும்ண்ணா.. அப்புறமும் உடாம அந்தப் பொண்ணு தலைவரை வெண்பா எப்போப் பாடுவீங்கன்னு கேக்க தலைவர் வழி இல்லாம சனிக்கிழமை அந்த்ப் பொண்ணு பிளாக்ல்ல வந்துப் பாடுறதா ஒத்துக்கிடுறார்"

"இது கஷட்டம்டா சாமி.."

"ப்யூஸ் கேரியர் என்ன என்னமோ கொடுக்கிறான்.. எதுவும் ஓர்க் அவுட் ஆகாது போகவே தலைவர் நேரா தேவனேயபாவாணர் லைப்ரரிக்குப் போய் இரவு பகலாக உக்காந்து வெண்பா படிக்கிறார். அப்போ கவிச்சக்கரவர்த்தி கம்பர் தலைவ்ருக்குத் தரிசனம் தர்றார்.. அவர் வெண்பாவின் மகிமையை தற்காலம் எப்படி மறந்துப் போச்சின்னு தலைகிட்ட சொல்லுறார்.. இங்கிட்டு கதை டேக் ஆப் ஆகுது"

"ஆகா இதெல்லாம் ரைட்.. நம்ம தலைவர்க்கு பைட் அவர் ரெகுலர் ஸ்டைல் பஞ்ச் டயலாக், வில்லன், இந்த் மேட்டர் எல்லாம் இல்லைன்னா எப்படி?"

""இருக்குதுண்ணா மாயன்சிங் அப்படின்னு ஒரு பெரிய பிளாகர்.. கிட்டத்தட்ட ஒரு 500 பிளாக், 1256 பிளாகர் ஐடி, அப்புறம் அவருக்குன்னு ஒரு 3456 அனானி மன்றங்கள் அப்படின்னு பெரிய கை அவர்.. நட்பு காரணமா நம்ம தலைவர் மாயன்சிங் எழுதுற வெத்துப் பதிவுக்கெல்லாம் 1000 - 5000ன்னு பின்னூட்டம் போட்டு வளர்த்துவிடுறார். மாயன் சிங்க்கு எதிரா எழுதுறவங்க பதிவுக்கு எல்லாம் வ்ர்ற பின்னூட்டத்தை மேஜிக் மாடுரேஷன் முறையிலே காலி பண்ணி கலங்க வைக்கிறார்."

"ம்ம் அப்புறம்.. "

"ஒரு கட்டத்துல்ல மாயன் சிங் தலைவர் லவ்ஸ் பண்ற பொண்ணு பிளாக்கையே காலி பண்ண்ச் சொல்லித் தலைவர்கிட்டேச் சொல்ல.. அப்புறம் தலையோட சிஷ்யனை வச்சே அந்த பிளாககைக் காலி பண்ண.. தலைவருக்கும் மாயன்சிங்க்கும் முட்டிக்குது"

"இங்கே பைட் எல்லாம் வைக்கிறோம்.. அந்தப் பொண்ணுகிட்ட லவ்ஸ் சொல்ல தலைவர் அந்தப் பொன்ணு அப்புறம் அவங்கச் சொந்தங்களை எல்லாம் கூட்டிட்டு கிஷ்கிந்தாப் போறார்.. அங்கே ஒரு பாட்டு நம்ம கவிஞர் நவீன்பிரகாஷ் ப்ரியன் கிட்டே சொன்னா ஆளுக்கு ஒரு நல்ல காதல் பாட்டு போட்டுருவாங்க,,, தலைவர் காதலைச் சொல்லருதுக்குள்ளே பெரிய பிரச்சனை வந்து வில்லன் கூட மோதல் ஆயிடுது"

"ம்ம்ம் அப்புறம் என்ன நடக்குது?"

" இங்கே தான் புதுமை.. தலைவர் கோபமாப் போய் வில்லனைப் புரட்ட்ப் போக.. கம்பர் வர்றார்.. வெண்பா வழியிலே எதுக்கும் தீர்வு உண்டுன்னு சொல்லுறார். அதாவது தலைவர் வழ்க்கமாப் போடுற பின்னூட்டத்தை எல்லாம் சுத்த தமிழ் வெண்பாக்கள்ல்ல போடச் சொல்லுறார்"

"ம்ம்ம்"

"தலைவர் அப்படியே செய்யுறார்,, தனியா வெண்பாக்குன்னு பதிவு தொடங்கி அங்கே வெண்பாப் பயிற்சி கொடுக்குறார்.. அவ்ர் கிட்ட் பயிற்சி எடுத்தவங்க எல்லாம் மாயன் சிங் பிளாக்ல்ல போய் வெண்பாப் பின்னூட்டமாப் போட்டுத் தாக்குறாங்க...தமிழேத் தெரியாத மாயன் சிங் இதுன்னால டென்ஷன் ஆகுறான்"

"தலைக்கு வெண்பாவில்ல பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்கா?"

"நல்லாக் கேட்டீங்க போங்க.. மாயன் சிங் கடுப்பாகி கொத்ஸ் அடிக்க ஆள் அனுப்புறான்..அவங்களை நம்ம தலைவர் வெண்பாவில்ல அடி அடின்னு அடிச்சு துவைக்கிறார். அப்புறம் என்ன தியேட்டர்ல்ல விசில் பறக்குது"

"கிளைமேக்ஸ் என்ன.. ?"

"அது மட்டும் சஸ்பென்ஸ் இப்போதைக்கு இந்தக் கதையை டெவலப் பண்ணி தலைவர்கிட்டச் சொல்லுங்க..அவர் ஓ,கே சொன்னா மேலே தாக்கிடலாம்"

"ம்ம் சரி.. இந்த ப்யூஸ் கேரியர், மாயன் சிங் , தலைவர் டாவடிக்கற பொண்ணு ரோல் இதுக்கு எல்லாம் யாரைப் போடலாம்ன்னு யோசிக்கிறேன்"

" அண்ணே ப்யூஸ் கேரிய்ர் ரோல் நான் பண்ணட்டுமா.. நல்லா நடிப்பேனண்ணா"

சராவை ஒரு ஆங்கிளாய் பார்த்துச் சிரித்தேன்.. தலைவர் ஆன்லைன் வருவாரா எனக் காத்திருக்கிறேன்.

இப்போதைக்கு இதுவரை நாங்கள் யோசித்தக் கதை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

தலைவரின் அன்பு ரசிகர்கள் கதையை மேலும் மெருகேற்ற ஐடியாக்களை அள்ளிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆங்.. படம் பேர் அதான்ங்க தமிழ் பெயரா வைக்கணும்ன்னு யோசிச்சிகிட்டு இருக்கோம் அதுக்கும் ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்

Monday, July 31, 2006

இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி

நம்முடைய நீண்ட நாள் ஆசை எப்படியாவது ஒரு படமெடுக்கணும்ங்கறது தான்ங்க...ஆனாப் பாருங்க அதுக்கு நிறைய காரணிகள் சரியா அமையணும்.. நம்ம அரைவேக்காட்டுத் தனத்துக்கு அதெல்லாம் சரிப்படாதுன்னு நம்ம பினாத்தலார் சொல்ற மாதிரி அடங்குடா மவனேன்னு ஆசையை லகான் போட்டு அடக்கி வச்சுருந்தேன்.. ஆங்கிலேயப் பாணியிலான அந்த அடக்கு முறையையும் மீறி நம்ம கலைத் தாகம் தலை விரித்து தண்ணிக் கேட்டு ஆடுனா நான் என்னப் பண்றது சொல்லுங்க...

ஒரு சூப்பர் கதைச் சிக்கிருச்சு... உடனே அந்தக் கதைக்கு தோதான்னா கலைஞனைத் தேட ஆரம்பிச்சேன்... பட்டுன்னு நினைவுக்கு வந்தது.. நமக்கு ரசிகர் மன்ற தலைவர் பதவி எல்லாம் கவுரவப்படுத்துன தலைவர் பின்னூட்டப் புயலார் கொத்ஸ் தான்...

தன் அயராதப் பின்னூட்டப் பணிகள் மற்றும் அவ்வப்போது செய்யும் அலுவலகப் பணிகளுக்கு இடையிலும் நமக்கு நேரம் ஒதுக்கிக் கதைக் கேட்க ஒத்துக் கொண்டார். அந்தப் பெருந்தனமைக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்..

"'அதாவது... இது ஒரு சரித்திரக் கதை.... ''
நான் இப்படி ஆரம்பிச்சதும் ஒரு ஆழ்ந்த தியான நிலைக்கு பி.பு போயிட்டார். மோவாக் கட்டயிலே கையை ஊன்றி கிட்டு அப்படியே தீவிரமாக் கதைக் கேட்க ஆரம்பிச்சார்.

"கிபி. 1800, இந்தியாவில்ல ஒவ்வொரு ராசாவும் 10- 15 கலியாணமெல்லாம் பண்ணி கணக்கற்ற இளவரசர்களையும் இளவரசிகளையும் உருவாக்கி நாட்டை ஒரு வீடு போல் ஆக்கி ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தக் காலம். "

கொத்ஸ் மேலும் கவனமாகக் கதைக் கேட்க ஆரம்பித்தார்.

"இந்த நேரம் இங்கிலாந்தில் இருந்து ஆன் சைட் புரொஜ்க்ட்க்காக இந்தியா வந்திறங்கிய பல ஹார்ட்வேர் கைஸ் இந்தியாவை ஒரு கிளைன்ட் பிளேஸ் என்றும் பாராமல்.. பல வைரஸ்களை நாசுக்காய் நம் மீது டவுண்லோட் செய்த படி இருந்தனர். நம்முடைய விலை மதிக்க முடியாத சொத்துக்களை அவர்களது சர்வ்ருக்கும் அப்லோட் செயதப் படி அட்டகாசம் புரிந்தனர். பல ஜலபொல டகால்டி மன்னர்களும் அவ்வப்போது வெள்ளையர்கள் காட்டிய கிளு கிளுப் படங்களில் மயங்கி... அந்த நினைப்பிலேயே தவறாக இயங்கி ஆன் சைட் வந்த அந்நிய அனானி கூட்டத்திடம் கோலியாய் உருண்டு கேலியாய் நின்றனர்...

கொத்ஸ் தலையை நிமிர்த்தி நம்மைப் பார்க்கிறார்...

"இங்கேத் தான் தலைவா உங்க இன்ட்ரோ.....
நீங்கப் பின்னூட்டக்கேசி அப்படிங்கற ஒரு பெரும் தேசப் பக்தி மிக்க வலைப்பதியும் அரசர். அப்படியே தஞ்சாவூர் தவில் ஒலிக்க நாதஸ்வர பேக் கிரவுண்ட்ல்ல.... ஒரு கம்ப்யூட்டர்ல்ல ஜூம் பண்றோம்... அங்கே....
ஒரு ஆயிரம் குதிரைகள் புழுதி கிளப்ப வருது... நீங்க முன்னாடி வருவீங்கன்னு உங்க ரசிகர்கள் உங்களைத் தேடுவாங்க பட் நீங்க பின்னாடி வர்றீங்க.. இங்கே நாம கேரக்டரை எஸ்டாப்ளிஷ் பண்றோம்.
பின்னூட்டியக் கறையினைத் துடைப்போம்
பின் ஈட்டியாய் மாறி அழிப்போம்....

அப்படின்னு ஒரு சாங்... ஷங்கர் மகாதேவன் வாய்ஸ்ல்ல வைக்கிறோம்.....

மக்களுக்காக, விடிய விடிய யோசிச்சும் நீங்கப் பதிவு போடாமா தவிக்கிறீங்க.... பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கடைசியா பதிவு தலைப்பை மட்டும் போட்டுட்டு அயர்ந்துத் தூங்கப் போறீங்க...
பட் காலையிலே நீங்க கண் முழிச்சு உங்க அம்மாவை வணங்கிட்டு வந்து கம்யூட்டரைத் திறக்கிறீங்க... பார்த்தா பதிவு இல்ல நீங்கப் போட்ட தலைப்புக்கே ஒரு 500 பின்னூட்டம் வந்து இருக்கு....

அப்படியே அண்ணாமலையிலே சூப்பர்ஸ்டாருக்கு கொடுக்குற பி.ஜி.எம் கொடுக்குறோம்....

ஒரு சாதரண டப்பா கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து நீங்க அப்படியே படி படியா பின்னூட்டம் வாங்கி வளர்ந்துலாப் டாப் தூக்கிட்டு டூவின் டவர்ஸ்ல்ல குறுக்கும் நெடுக்குமா நடக்குறீங்க. ( டுவின் டவர்ஸ் இடிந்துப் போனாலும் அதே மாதிரி நாம் செட் போடுறோம்) அந்த அளவுக்கு ஒரு அபார வளர்ச்சி... நாடெங்கும் உங்க புகழ் பரவுது.

நீ போட்டால் பதிவு அழகு...
நீ விடும் ரீல் அழகு....
அப்படின்னு ஒரு ட்ரீம் சாங்...

கொத்ஸ் புன்னகைப் பூக்க ... நாம் மேலும் தொடர்கிறோம்.

ஆங் இங்கே தான் கதையிலே டர்னிங் பாயிண்ட்...
ஆமா நீங்க திரும்பி நிக்குறீங்க.. அப்போ மிசிசொமெ..மிசிச்சொமெ.. அப்படின்னு வெஸ்ட்ர்ன் பி.ஜி.எம்.. டிஜிட்டல் சவ்ண்ட்ல்ல அலற விடுறோம்....

செவ்வாய் கிரகத்திலிருக்கும் பின்னூட்டா பல்கலைக் கழகம் உங்களுக்கு மாபெரும் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செயகிறது...

அந்த பட்டம் தான் இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி என்பது... நீங்களும் அந்தப் பட்டம் வாங்க... அரசர் உடையில் இடுப்பில் உடை வாள் ஏந்தி குதிரையில் ஸ்டூல் போட்டு ஏற போகும் நேரத்தில்

"ஸ்டாப் இட் பின்னூட்டக்கேசி...U ARE NOT ELIGIBLE FOR THIS AWARD... "
அப்படின்னு ஒரு வெள்ளைக் காரன் பெரும் படையோடு வந்து நிற்கிறான்.

அப்போவும் மிசிசொமெ..மிசிச்சொமெ.. அப்படின்னு வெஸ்ட்ர்ன் பி.ஜி.எம்.. டிஜிட்டல் சவ்ண்ட்ல்ல அலற விடுறோம்....
குதிரை ஏறாமல் சும்மா ராயல் வாக் விட்டு நீங்க வர்றீங்க....

"யாராடா நீ...செவ்வாய்க்கு நான் கிளம்பும் போதும் நாறவாயால் நிற்க சொல்கிறாய்"
"ஹே பின்னூட்டக் கேசி.. நான் டைசன்... பிரிட்டீஷ் கவர்மெண்ட் போலீஸ் போர்ஸ்"

"ஓ.. நீ தான் டைசன் துரை என்பவனோ?"
"எஸ்"
"எங்கு வந்தாயடா டைசா?"
"உன் மீது புகார் வந்து இருக்கிறது"
"எனக்கு கார் எல்லாம் வேண்டாம்.. குதிரைச் சவாரி தான் பிடிக்கும்"

"பின்னூட்டக்கேசி.. புகார் என்றால் கம்ப்ளேயண்ட்"
"என்ன... கம்ப்ளெயண்ட்டா யார் கொடுத்தது..எதற்காக?"
"பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணியிருக்கீயாம் நீ?"
"டைசா சின்னப் பய்லே... என்னப் பேச்சு இது ராஸ்கல்"

"ஆம் பிரிட்டீஷ் சர்க்கார் நடத்தும் பதிவுகளில் நீ பின்னூட்டமிட மறுத்தது முதல் குற்றம்.. அடுத்து அங்கு பின்னூட்டமிட வரும் பிறரையும் பின்னூட்ட விளையாட்டு என நீ உன் பதிவுக்கு ஓட்டிக் கொண்டு போவது மாபெரும் குற்றம்"

"ஆ.... "என சவுண்ட் விட்டபடி பின்னூட்டக்கேசி டைசன் கையிலிருக்கும் லாப் டாப் கனெக்ஷன்களைக் கண்டமேனிக்குப் பிடுங்கி விட்டு அவன் லாப் டாப்பை வாங்கி தரையில் போட்டு உடைக்கிறார்.

"பின்னூட்டக்கேசி.. இது மன்னிக்க முடியாத குற்றம்"

"போடா.. வெறும் அட்டையினால் செய்த வெற்று பெட்டியின் மேல் காம்பேக் பிரச்ரியோ என எழுதி வைத்திருப்பாய் அதை நான் எடுத்து உடைத்து விளையாடுவது குற்றம் என்றால் அந்த குற்றத்தை இன்னும் ஆயிட்ரம் முறை செய்வேன்.. போ போய் மிச்சமுள்ள அட்டைப் பெட்டிகளே எடுத்துவா... அழுக்கு துணிகள் போட்டு ஆற்றுக்கு துவைக்க அனுப்புகிறோம்"

"முடிவாக் கேட்கிறேன்.. பின்னூட்டமிடுவாயா மாட்டாயா"

"பின்னூட்டம்..அதுவும் உன் அதிகாரத்திற்கு பயந்தா... நெவர்... தெரியாமல் தான் கேட்கிறேன்...
பதிவு போட நான் தலைப்புக் கிடைக்காமல் விழித்திருந்தப் போது என்னோடு புல் நைட் விழித்திருந்து என்னோடு லார்ஜ் அடித்து நீயும் யோசித்தாயா...
இல்லை...பதிவுகளை மொத்தமாய் அரசாங்கம் தடைச் செயத் நேரத்தில் என் குலக் கொழுந்துக்களுக்கு பிராக்சி சர்வர் செட் பண்ணிக் கொடுத்து படிக்கத் தான் உதவினாயா நாதாரி பயலே..
அதுப் போகட்டும்.. பிராஜக்ட் மேனஜருக்குத் தெரியாமல் என் பாசமிகு நட்பு கைப்புள்ள பதிவுப் படித்து பி.எமிடம் பிடிப்பட்டு பெஞ்ச் மேல் ஏறி நின்ற போது நீ வாளோடு போய் கைப்புக்குத் தான் தோள் கொடுத்தாயா.. போடா போக்கத்தவனே....
பிளாகர் இருக்கிறது!!! பதிவுகள் பொழிகின்றன!!! உனக்கேன் போட வேண்டும் பின்னூட்டம்... மானம் கெட்டவனே... "

"ஏய் பின்னூட்டக் கேசிசிசிசிசிசிசி..."
"போடா வெள்ளைக்கார குண்டூசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசி...."

உணர்ச்சிப் பொங்க நாம் கதைச் சொல்லி முடிக்க கொத்ஸ் நம்மைப் பாரட்டுகிறார்...

அதுக்கு மேல பின்னூட்டக்கேசி போலீஸ் ஆதிக்கத்தை வென்று எப்படி செவ்வாய் பின்னூட்டா பல்கலைக்கழ்கம் சென்று பட்டம் பெறுகிறார் எனப்து தான் மீதிக் கதை.....

DISCLAIMER: இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் பூமி, செவ்வாய் இன்ன பிற கிரகங்கங்களில் வாழும் வாழ்ந்த வாழப் போகும் யாரையும் குறிப்பிடுவதல்ல... இது முழுக்க முழுக்க கற்பனையே.. கறபனை மட்டுமே.

பிகு: இந்தப் படத்திற்கு ஒரு நல்ல தாராள மனம் கொண்ட தயாரிப்பாளர் வேண்டும்.

tamil10