Thursday, June 19, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி

ரொம்ப நாளாக் கச்சேரி வைக்கல்லன்னு நம்ம மேலக் குத்தச்சாட்டு குவிஞ்சுகிட்டே இருக்கு.... அந்தக் குத்தச்சாட்டை எல்லாம் குப்புறக் கவுத்திப் போட்டு கும்மி அடிக்க கிளம்பிட்டோம்ல்லா...
ஒரு கேப்புக்கு அப்புறம் வர்றோம்ல்லா.. அது தான் சும்மா பஞ்சிங்க்கா ஆரம்பிக்கலாம்ன்னு நமக்கு புடிச்சப் பஞ்ச் டயலாக் எல்லத்தையும் போட்டு அதுக்குப் படமும் போட்டு பதிவு போட்டுருக்கோம்..

மக்கா இது 100 சதவீத சீரியஸ் பதிவு...


இந்தப் பஞ்ச் எல்லாம் படிச்ச்ட்டு அதுன்னாலப் பாதிக்கப்பட்டு எனக்கு ரசிகர் மன்றம் வைக்க நினைக்கும் அன்பு ரசிகர்கள் தனி மெயில் மூலம் என்னை அணுகலாம்... கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து 2011 அல்லது 2016ல் முதல்வராகும் என் திட்டம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் எனபதியும் இந்தப் பதிவின் மூலம் பணிவண்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.





மன்னிப்பு தமிழ்ல்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - ரமணா


மன்னிக்குறவன் மனுசன் !!! மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுசன் !!! - விருமாண்டி





எவ்வளவோ பாத்துட்டோம் இதைப் பாக்க மாட்டோமா - அழகிய தமிழ் மகன்





அதுதுதுது - தல ரெட்




இன்னுமாடா ஊருக்குள்ளே என்னை நம்புறாங்க.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித் தான் ஓடம்பை ரணகளமா ஆக்கிட்டாங்க - கைப்புள்ள



சும்மா அதிருதுல்ல !!!! - சிவாஜி




அரசியல்ல இதெல்லாம் சாதரணம் அப்பா... - பன்னிக்குட்டி ராமசாமி



ப்ரீயா விடு ப்ரீயா வீடு ப்ரியா வீடு மாமே.. வாழ்க்கைக்கு இல்ல கியராண்டி - ஆறு

தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்குறவங்களுக்கு இது தலைவர் கொத்தனார் நமக்கு கொடுத்த பஞ்ச்... இந்தப் பஞ்சுக்கும் ஒரு படம் போடுறோம்ல்லா..அது அடுத்தப் பதிவில்

Sunday, June 15, 2008

கலக்கல் கமல் - சொதப்பல் தசாவதாரம்

நடிப்புன்னா என்ன? மேக்கப் போடுறதா? விதம் விதமா மேக்கப் போட்டுகிட்டு சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் நடக்கிறதா நடிப்பு.... தசாவதாரம் படம் முடிஞ்சு வெளியே வரும் போது எனக்குள் எழுந்த கேள்வி இது...

சரி மூணு நேரம் உள்ளே உக்காந்து படம் பார்த்தோமே படத்துக் கதை என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன்... அதான் படத்துல்ல மிஸ்ஸிங்... 10 கமல் இது தான் படத்துக்கு ஒன் லைனர்... ஒரு கமல் துரத்த.. இன்னொரு கமல் ஓட... வழியில் பல கமல்.. இது தான் படம்.

பல வருடங்களுக்கு முன் வந்த ஜிம் காரியின் மாஸ்க் படத்தை கமலின் மேக்கப் ஞாபகப்படுத்தியது... சின்ன வயசில் பொம்மைகளுக்கு மைதா மாவு பிசைந்து மாஸ் செய்து மாடி விட்ட ஞாபகமும் வந்துப் போனது... இந்தியனில் கமலுக்கு ஏற்பட்ட மைதா மாவு மோகம்.. சாரி மேக்கப் மோகம் இன்னும் தீர்ந்தபாடில்லை... மைதா மாவு அரைப்பது தவிர்த்து பூசும் காட்சிகளைத் தொகுத்து இறுதியில் உலக நாயகனே பாடலில் தந்து இருக்கிறார்கள்..விருப்பமுள்ளவர்கள் பார்த்து பூசி பழகி உலக நாயகர்கள் ஆகும் முயற்சியில் ஈடுபடலாம்.

வழக்கமாய் ரஜினி படங்களில் ஒலிக்கும் நீ என்ன பெரிய இவனா பாணி காட்சி அமைப்பு அதற்கு கமல் தரும் பன்ச் டயலாக் பதில் ... யூ டூ கமல் என கேட்க வைக்கிறது...

பி.வாசு.. நீ என்ன உலக நாயகனா எனக் கேட்பது அதற்கு கமல் கேமராப் பார்த்து கமல் சொல்லும் பதிலும்... கமல் வெல்கம் டூ கோலிவுட் லோக்கல் சினிமா என சொல்ல வைக்கிறது...

புல்லட்டால் கேன்சர் சிகிச்சை செய்வது.... ஒடும் ரயிலில் தாவி ஏறுவது...மீண்டும் குதிப்பது, பைக் வைத்து லாரிக்கு அடியில் போவது, வேளாங்கண்ணி வரை எம்.ஆர்.டி.எஸ் ட்ரெயினில் போய் சேர்வது என கேப்டன் , இளையதளபதி, படங்களின் பாதிப்பு கமல் படத்திலும் தெரிவது கொடுமை..

மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், பாணி நகைச்சுவை தோரணங்கள் இதிலும் உண்டு கொஞ்சம் சலிப்பு, கொஞ்சம் சிரிப்பு

எல்லாருக்கும் "நானும்" பொது ஆள் தாம்ப்பா எனக் காட்டிக் கொள்ள அம்மாவும் ஹெலிகாப்டரில் வர்றாங்க.. அய்யாவும் கடைசியா சார்ஜ் புஷ் கூட மேடையேறி வர்றார் படத்துல்ல...

கமலின் அரசியல் முகவரி சொல்லும் வசனங்களும் படத்தில் உண்டு... ( கமல் தி.க. உறுப்பினர் தானே) . ரயிலில் அவர் பேசும் வசனங்கள் அதற்கு உதாரணம். மடம் குறித்து கமல் பேசும் சில வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பலாம் என்பது என் கணிப்பு. ஒரு நல்ல கலைஞன் மதம் தீண்டாமல் மக்கள் ரசனையை மெருகேற்றும் விதம் படம் எடுக்கலாமே...

ஒரு சாரசரி தமிழ் மசாலா படம் கமல் போடும் 10 வேடங்களால் அளவுக்கு மீறிய ஆவலைத் தூண்டி விட்டுள்ளது என்பது படம் பார்த்து வந்தப் பின் எனக்கு உதித்த கருத்து...

படத்தில் நான் ரசித்த விசயங்கள்... பல்ராம் நாயுடு கமலின் காமெடி... ஜப்பானிய கமலின் மேக்கப்... பிளட்சரின் அனாசயமான ஆங்கில உச்சரிப்பு....பூவராகவன் கமல் அருமையான பாத்திரப்படைப்பு..ஒரு தனிப் படமே எடுக்கலாம்... அசத்தியிருக்கிறார் கமல்.. அந்த மைதா மாவு மேக்கப் பெரிதாக உறுத்தாத ஒரு கமல் இவர்... குமரி மொழியை சரளமாய் பேசுகிறார் கமல்...சூப்பர். மத்தப் படி மற்ற கமல்கள் மேக்கப் என்னும் முகமுடிக்குள் சிக்கிய அனானிகளாகவே எனக்கு தென்பட்டனர்...

படம் ஆரம்பிக்கும் போது 12ஆம் நூற்றாண்டில் ஒரு கமல் வருவதாய் காட்டுகிறார்கள்.. அது கமலின் அடுத்தப் பட ட்ரெயிலரா.. இல்லை அந்த கமலுக்கும் இந்த தசாவதாரத்துக்கும் எந்த சம்பந்தமாவது இருக்குதா.. இருந்த மாதிரி எனக்கு தெரியல்ல... அந்த காட்சி அமைப்புகள் ப்ளஸ் கமல் நடிப்பு கலக்கல் ரகம்.

நாகேஷ், கூட கே.ஆர்.விஜயா, ஜெயப்ரதா,சந்தானபாரதி, பி.வாசு, ரேகா,வையாபுரி, சிட்டி பாபு, ரமேஷ் கண்ணா... இவங்களும் படத்துல்ல வர்றாங்க... பேசாம இவங்க ரோலையும் கமலே பண்ணியிருக்கலாம்...

எம்.எஸ்.பாஸ்கர் ஜொலிக்கிறார்.. குறிப்பாக... அந்த காற்றில் விரலால் S போட்டுக் காட்டும் காட்சி கலக்கல் காமெடி.

மல்லிகா ஷெராவத் அறிமுக காட்சி வசனம் அபத்தமாய் துவங்கினாலும் போக போக நன்றாகவே செய்துள்ளார்..அவரை இன்னும் கொஞ்சம் நேரம் வாழ விட்டிருக்கலாம்.

மொத்ததில் சொல்லணும்ன்னா கமல் ரசிகர்களுக்கு ஆஹா.. நல்ல சினிமா ரசிகர்களுக்கு அய்யோ...நம்மளை மாதிரி சாதாரண ரசிகனுக்கு ம்ம்ம்

பொதுவா கமல் என்ற கலைஞனுக்காக ஓ.கே.

தம்பியின் விமர்சனம் பாருங்க...
பா.ராகவன் விமர்சனம் படிங்க

Saturday, June 14, 2008

விசாவதாரம் போஸ்ட்டர் போட்டாச்சுப்பா

இன்று வெள்ளித் திரையை அலங்கரிக்கப் போகும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் 'தசாவதாரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற

விரைவில் இணையத் திரையை அலங்கரிக்கப் போகும்


உலக தமிழ் பதிவுலக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் மெகா மகா பதிவுலக காவியம் விசாவதாரம் குழுவின் வாழ்த்துக்கள்
COMING SOON TO A BLOG VERY NEAR YOU

tamil10