Friday, September 29, 2006

பயணங்கள் முடிவதில்லை - 1

வணக்கம்ங்கோ சிறு வயசுல்ல இருந்தே நமக்கு ஊர் சுத்தணும்ன்னு ரொம்ப ஆசைங்க.. அதுல்லயும் நாம படிச்ச இடங்களைப் போய் பாக்கறதுல்ல ஒரு தனி விருப்பம்.

ஜாலியான் வாலா பாக் பள்ளிக்கொடத்துல்ல வாத்தியார் பாடமாச் சொன்னப்போவும் சரி பின்னாடி எதோ டி.வி.யிலே பட்மாப பார்த்தப்போவும் சரி அந்த இடமும் அங்கே நடந்த நிகழ்ச்சியும் நம்ம மனசுல்ல ஆழ்மாப் பதிஞ்சுப் போச்சு.. அப்படி நான் பார்க்க ஆசைப் பட்ட ஜாலியான் வாலா பாகை இந்த் மாதம் நணபன் ஒருவன் பஞ்சாப் போலாம்டான்னு போட்ட பிளான் புண்ணியத்துல்ல பார்க முடிஞ்சது.

A PICTURE IS WORTH THOUSAND WORDS அப்படின்னு சொல்லுவாங்க.. ஜாலியான்வாலா பாக்ல்ல நான் எடுத்த புகைப்படஙக்ள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளது ஜாலியன் வாலா பாக். நம்ம திருவல்லிக்கேணி கடைவீதி மாதிரி ஒரு கூட்ட நெரிசலான வீதியில் இருக்குது இந்த இடம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமானப் பொற்கோயில் அமைந்துள்ளது.











இங்கேப் பாக்குறீங்களே இந்த சந்து வழியாத் தான் டயர் தன் காட்டுக் கூட்டத்தை ஓட்டிகிட்டு வந்து இருக்கான்.











இங்கிருந்து தான் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி வெறித்தனமானத் தூப்பாக்கி தாக்குதல் நடத்தி இருக்கிறான் டயர். ( இந்த்ச் செயலுக்கு ஆங்கில அரசு அவனுக்கு மெடல் வேறு குத்தியதாம்)











தியாகிகளின் உயிருக்கு குறி வைக்கப் பட்ட தோட்டாக்கள் அதை விடுத்து சுவற்றில் போய தாக்கி நிற்கின்றன. நல்லாப் பாருங்க குண்டுகள் பாயந்த இடங்கள் பச்சை வண்ண்ச் சதுரங்களீல் குறிக்கப்பட்டுள்ளன.













உயிர் காக்க இங்கு தான் 200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் குதித்துள்ளனர். இப்போதும் அந்த மரண ஓலங்கள் அந்தக் கிணற்றுக்குள் லேசாக எதிரொலிக்கின்றன.












ஜாலியான் வாலாபாக் தற்சமயம் ஒரு அழகிய பூங்கா வடிவம் கொண்டுள்ளது. ஒரு பொது அமைப்பு அதை பராமரித்து வருகிறது. அந்த இடத்தில் ஒரு அழகிய அமைதி குடிக்கொண்டுளளது.











மேலே பாக்குறீங்களே அது ஜாலியான் வாலாபாக் ப்டுகொலைகளுக்கு மௌனமாகச் சாட்சிச் சொல்லும் சுவர். அந்த சுவத்துல்ல போய்

"சும்மாவா வந்தது சுதந்திரம்"

அப்படின்னு த்மிழ்ல்ல எழுதுணும்ன்னு தோணுச்சு...

பயணம் தொடரும்...

Wednesday, September 27, 2006

பாராட்டுறாங்கய்யா பாராட்டுறாங்க

தோடா என்ன இது?




















கலர் டிவியிலே காட்டுவாங்களா?










அதோ பார் தெரியுதா ரெண்டு ஏக்கரா? அதைக் கொடுக்கறது யாருங்க... தலைவர் திமிங்கலம் தானுங்க...










2 ரூபாய் அரிசி சோறு தின்னியா.. வெயிட் தாங்கல்ல யம்மாடி










ஆகா... அப்படிப் போடு அள்ளி போடு.. ஆட்டம் போடு










மறந்துடாதீங்க... போட்ட ஆட்டம் எதையும் மறந்துடாதீங்க... எல்லாம் உங்களுக்காகத் தான் சாமியோவ்















எல்லாரும் சுத்துப் போட்டு என்னய்யா பண்றீங்க?
நோ டென்ஷன்.. தலைவரைப் பாராட்டுறோம்ய்யா... பாராட்டுறோம்ய்யா...

படங்கள் நன்றி தினகரன்


Monday, September 25, 2006

வசூல்ராஜா பார்ட் - 2

வணக்கம் மக்கா..

'லகே ரஹோ முன்னாபாய்' படம் பார்த்து ஒரு வாரம் ஆச்சுங்க...
சில வருஷங்களுக்கு முன்னாடி திரையில் மும்பையின் தாதாவா டாக்டருக்குப் படிக்க அவர் அடித்த லூட்டிகளால் இந்தி சினிமா ரசிகர்களின் கவனத்தைத் தன் வசமாக்கினார் இந்த முன்னா பாய். படம் முன்னாபாய் MBBS, இந்தியாவின் பல வட்டார மொழிகளிலும் அந்தப் படம் ரீ-மேக் செய்யப்பட்டு கல்லாக்கள் களைக் கட்டியது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர்.

2006 இல் அதே மும்பை தாதா மீண்டும் தன் சகா சர்க்யூட்டோடு திரையுலகைக் கலக்கக் கிளம்பியிருக்கிறார் எனத் த்கவல் கிடைத்ததும் போனத் தடவை செம தமாஷ் பண்ணாங்களே இந்தத் தடவை என்னப் பண்ணுவாங்களோன்னு ஒரு ஆர்வம் நம்க்குள்ளே கிளம்பிருச்சு. சென்னையிலே மொத்தம் மூணு தியேட்டர்ல்ல ரிலீஸ். எங்கேயும் டிக்கெட் இல்ல.. பிளாக்குக்கு நமக்கு வசதி பத்தாது சாமி. அதான் காத்திருந்து பார்ப்போம்ன்னு முடிவு பண்ணதுல்ல படத்தை மூணாவது வாரம் அதுவும் வட இந்தியாவுக்கு பயணம் போகும் போது குர்கான்ல்ல தான் பாக்க முடிஞ்சது.. ( இங்கிட்டே பிளாக் கொடுத்துப் பார்த்திருக்கலாம். )

படம் பாக்கறதுக்கு முன்னாடி படத்தைப் பத்தி விசாரிச்ச வரையிலே படம் காந்தியப் பத்திய மேட்டர்ன்னு காதுக்குக் கிடைச்சத் தகவல் சொல்லிச்சு. "ஹே ராம்", "மேன்னே காந்தி கோ நஹி மாரா" டைப்ல்ல நம்ம இந்தியாவின் டேடியப் பத்தி பக்கா சீரியசா இல்ல படம் எடுப்பாயங்க.. நம்ம தாதாவுக்கும் தாத்தாவுக்கும் கொஞ்சம் கூட டேலி ஆவாதேன்னு யோசனையாத் தான் படம் பார்க்கப் போனேன்.

சஞ்சய் தத் (முன்னாபாய்), அர்ஷத் வார்சி (சர்க்யூட்) அதே கதாபாத்திரங்களில். வித்யா பாலன் தான் கதாநாயகி ( யார்ன்னு தெரியல்லன்னு சொல்லக் கூடாது படம் போட்டுருக்கோம் பாருங்க). முந்தையப் படத்துல்ல மெடிக்கல் காலேஜ் டீனா வந்த பொம்மன் இரானி இதுல்ல லக்கி சிங் அப்படிங்கற கேரக்டர்ல்ல வர்றாரு. அந்தப் படம் மாதிரியே இதுல்லயும் முன்னாவுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

அப்புறம் இன்னோரு முக்கிய கேரக்டரா... நாம எல்லாம் போட்டோ அப்புறம் நம்ம மெரீனாப் பீச் ஐ.ஜி ஆபிஸ்க்கு எதிரே சிலையா நிக்குறாரே அவர் நடிச்சுருக்கார். ( சிவாஜி சிலை இல்லீங்க... இது கொஞ்சம் பழைய சிலை)

முன்னாவுக்கு ரேடியோ ஜாக்கி ஜான்வி மேல லவ்ஸ்ன்னா அப்படி ஒரு லவ்ஸ்.. இந்த நேரத்துல்ல ரேடியோவில்ல நம்ம நேஷன் டேடி பத்தி பேஷ்னாப் போட்டி நடத்துறாங்க.. அதுல்ல கெலிச்சா அம்மணியை ரேடியோ ஸ்டேஷன்ல்ல மீட் பண்ணி ரேடியோவிலே பேச வாய்ப்புன்னு சொல்லிடுறாங்க. நம்ம தாதாவும் சர்க்யூட்டும் பழைய டெக்னிக் பாலோ பண்ணி.. காந்தி பத்தி விவரம் தெரிஞ்சவங்களைப் பக்கத்துல்ல உக்கார வச்சுகிட்டு போனைப் போட்டு காந்தி க்வீஜ்ல்ல கெலிக்கறது செம கூத்துங்கோ. ரேடியோ ஸ்டேஷன் போய் அங்கே ஜான்வியை மீட் பண்ணி முன்னா விடுற பீட்டர் ஹாஸ்யத்தின் அடுத்த் லெவல். வித்யா பாலனின் குட் மார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னிங் மும்பாய் என்ற உச்சரிப்பு ஜில் ஜில் ரகம். ( சலாம் நமஸ்தே ப்ரீத்தியின் சலாஆம் நமஸ்தே அளவுக்கு இல்லை.. இருந்தாலும் இதுவு ஓ.கே தான்.)

காந்தி பத்தி ஒரு பிரசங்கம் பண்ண முன்னாவை ஜான்வி அழைக்க.. முன்னா முரளி பிரசாத் சர்மா என்னும் பேராசிரியராய் அவதாரம் எடுக்க நகைச்சுவை வண்டி டாப் கியரில் கிளம்புகிறது. காந்திப் பற்றி படித்து அறிய முயலும் முன்னாவின் கண்களுக்கு மட்டும் காந்தி தெரிய ஆரம்பிக்கிறார். காந்தியை ஒரு மசாலாப் படத்திற்குள் இயக்குநர் கண்ணியமாக நுழைத்து இருக்கிறார். காந்தியோடு நட்பு கொள்ளும் முன்னா பிர்சங்கம் செய்கிறான். ஜான்வியின் மனம் கவ்ர்கிறான். அவளோடு அவள் வீட்டில் இருப்பவர்களின் இதயம் கொள்ளைக் கொள்கிறான். இதுக்குப் பிறகு முன்னா தான் ஒரு பேராசிரியர் என்ற பொய் போர்வை போர்த்தி ஜான்வியை டாவு கட்ட, திரைக்கதை இதமாய் நகர்கிறது.

காந்தியிடம் தன் காதல் நிறைவேற ஐடியாக் கேட்கிறான் முன்னா, காந்தியின் சத்யப் போதனைகள் நயமாக அந்த இடத்தில் நுழைக்கப் படுகின்றன. முன்னா மெல்ல மாறுகிறான். அந்த மாற்றங்கள் மெல்லிய நகைச்சுவை இழையச் சொல்லப்பட்டு இருக்கினறன. கதையின் போக்கில், வில்லனும் அவன் செயல்களும் வழக்கமானப் பாணியில் இருந்தாலும் கச்சிதமாகப் பொருந்தும் படி நுழைக்கப்பட்டுள்ளன.

வில்லனாக பொம்மன் இரானி, நகைச்சுவை வில்லன். நம்ம ஊர் மணிவண்ணன் மாதிரி. ரசிக்க வைக்கிறார். வித்யா பாலன் வீட்டைச் சூழ்ச்சியால் வில்லன் கைப்பற்ற, அதை எதிர்த்து நம்ம முன்னா காந்திய முறையில் போராடுகிறார். போராட்டம் போரடிக்கவில்லை. கலகலப்பாய் நகைச்சுவைத் தோரணங்களால் அந்தக் காட்சிகளை அலங்கரித்து வைத்துள்ளார் இயக்குனர். போராட்டம் ரேடியோவிலும் தொடர்கிறது. முன்னா மும்பையின் ரேடியோவில் காந்திய வழியில் பலப் பிரச்சனைகளுக்கு வழி சொல்லும் ரேடியோ ஜாக்கியாகப் புகழ் பெறுகிறார்.

தற்காலப் பிரச்சனைகளுக்கும் காந்திய வழியில் தீர்வுகள் உண்டு என இயக்குனர் எளிமையாகச் சொல்ல வந்திருக்கிறார். இறுதியில் முன்னா தன் காதல், மற்றும் வில்லனை எதிர்க்கும் தன்னுடையப் போராட்டம் இரண்டிலும் காந்தீயக் கொள்கைகள் கொண்டு எப்படி வெல்கிறான் எனபதே கிளைமாக்ஸ்
வித்தியாசமானச் சிந்தனையில் விளைந்திருக்கும் ஒரு நல்ல அம்சமானப் பொழுதுப் போக்கு படம்.

சஞ்சய் தத் அர்ஷத் வார்சியிடம் அக்டோபர் 2 குறித்து ஆரம்ப காட்சிகள் கலகல சிரிப்பு ரகம் என்றால், காந்தி தன் கண்களுக்கும் தெரிவதாய் அர்ஷ்த் வார்சி காட்டிக் கொள்ளூம் காட்சிகள் குபீர் சிரிப்பு.
பொதுவாகவே அர்ஷத் வார்சியும் சஞ்சய் இணைந்து வரும் காட்சிகளில் சிரிப்புக்குக் குறைச்சல் இல்லை. போட்டுத் தாக்குறாங்கப்பா.

சஞ்சய் தத் அதிகம் மெனக்கெடாமல் முன்னாவாகக் கலக்குகிறார். என் ஓட்டு சர்க்குயூட்டாக வரும் அர்ஷத் வார்சிக்கே. மனுஷன் செம டைமிங்ப்பா.

வித்யா பாலன் நல்லாச் சிரிக்கிறார். வருகிறார். போகிறார். அவர் பங்கு நிறைவு. வித்யா பாலன் வீட்டில் இருக்கும் முதியோர் கோஷ்ட்டியின் சேட்டைகளும் ஆசைகளும் லக்கலக்க ரகம்.

பாடல்கள் படத்தோடு ஓட்டி வருகின்றன. இயக்குனர் ராஜ்குமார் ஹிரேனிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி சோக்காக் கீதுப்பா. டைம் கிடைச்சா மக்கா டோன்ட் மிஸ் திஸ்

ஆமா தமிழ்ல்ல வசூல்ராஜா பார்ட் - 2 வருமா?? வந்தால் வசூல் நிச்சயம்... செய்ங்க்ப்பா

கடைசியாக் காந்தி தாத்தா ஒரு மேட்டர் சொல்லுவார் அதைச் சொல்லிட்டு அப்பீட் ஆகிக்குறேன்.

"என்னைப் பல வருஷத்துக்கு முன்னாடியேப் போட்டுத் தள்ளிட்டாங்க.. என் உயிர் வேணும்ன்னா குண்டு பட்டு போயிருக்கும் என்னுடைய சிந்தனைகள் சாகாது. அது இன்னும் இப்படி யார் மன்சுல்ல புகுந்து வாழ்ந்துகிட்டு தான் இருக்கும்.."

கரிக்டாஅ சொல்லிகிரார்ப்பா காந்தி தாத்தா

Friday, September 22, 2006

சூப்பர் ஸ்டாரின் மாநாடு

அட என்னப்பா இது.. நானும் இதே சென்னையிலேத் தான் இருக்கேன். நமக்கு மேட்டர் தெரியாமப் போயிட்டுச்சு...














படம் நன்றி தி ஹிண்டு

என்னடா இது இவ்வளவு கூட்டம்?

போஸ்ட்டர் லேது...
சுவருக்கு சுவர் வரவேற்பு இல்ல....
கட் அவுட் கூட லேது...
ஆனாலும் செமக் கூட்டம் கூடியிருக்கு...

எந்தக் கட்சி கூட்டம் இது? என்னத்துக்கு இதெல்லாம்?

எல்லாம் இவருக்கு தானுங்கோ...













படம் நன்றி தினந்தந்தி

செய்திக்கு இங்கேச் சுட்டுங்க

சீக்கிரம் திரையிலே முகம் காட்டு தலைவா!!!!

Monday, September 11, 2006

சில்லுன்னு ஒரு காதல்

சென்னை வெயிலுக்கு இதமான் தலைப்பிலே ஒரு படம் வந்துருக்கு.. அப்புறம் பார்க்கல்லன்னா எப்படி? சாயங்காலம் ஜமாவாக் கிளம்பி திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர் போய் நின்னாச்சு. வழ்க்கம் போல கவுண்டர்ல்ல ஹவுஸ்புல் போர்ட் பாத்துட்டு வழ்க்கம் போல நமக்குன்னு டிக்கெட் கொடுக்குற சைக்கிள் டோக்கன் போடுறவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டிய டிக்கெட்டை வாங்கிட்டு உள்ளேப் போய் வசதியா உட்கார்ந்தாச்சு...

சூர்யா ரசிகர்களின்(!!!) ஒய்ங் ஒய்ங் விசில் சத்தங்களுக்கு நடுவினின் டைட்டில் ஓட ஆரம்பித்தது...

ஆகா இது என்னடாப் புதுசா.. இல்ல நான் இப்போத் தான் பாக்குறேனா.. ஆமாங்க நன்றி போடுற வரிசையிலே வலைத்தள நண்பர்களையும் சேர்த்திருக்காங்க...

சூர்யா ஸ்டார் ஆயிட்டார்ங்கறதுக்கு தியேட்டருக்கு வெளியே அவருக்கு வைக்கப் பட்டிருக்கும் விளம்பரத் தட்டிகளே சாட்சி.. நல்ல வேளை அமெரிக்க ஜனாதிபதி, அவங்க அப்பா யாரையும் சவாலுக்கு இழுக்கும் வாசகங்கள் எதுவும் தட்டிகளில் இல்லை.

சூர்யாங்கற ஸ்டாருக்கு எவ்வளவு வேல்யூ இருக்குன்னு சோதிச்சுப் பார்க்க முடிவு பண்ணிட்டாங்கப் போல..படம் ஓடுவதற்கு பிரமாண்டமான போஸ்ட்டர் டிசைன்களும்.. போஸ்ட்டரில் பெரிய பெரிய பெயர்களும் இருந்தால் போதும் என்ற திடமான முடிவின் பின்னணி திரையின் முன்னால் தெரிகிறது,

கதையைச் சொல்லுங்கப்பா... இருங்க சார்.

சூர்யா-ஜோதிகா தமிழக இளசுகளின் இன்றைய ஆதர்ச காதல் ஜோடி... அவங்க நடிச்ச படமாம்.

ஏ.ஆர்.ரஹமான் பாட்டெல்லாம் சொக்காப் போட்டுருக்காராம். சொந்தக் குரல்ல முதன் முதலா ஒரு காதல் பாட்டு கலக்கியிருக்காராம் இல்ல...

நம்ம வைகைப்புயல் வேற இருக்காராம்.. அப்போ ரவுசுக்கும் சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது. கூடவே கல்லூரி சனஙகளின் கலைஞனாய் விவேக் பாணியில் உருவாகி வந்துக் கொண்டிருக்கும் நம்ம சந்தானம் வேற.. அப்படின்னா லொள்ளூக்கு கேரண்டி

ரோஜாக் கூட்டம் பூமிகா வேற INDIAGLITZ வால் பேப்பர்ல்ல் ஜொலிக்குது..ஆக மெய்யாலுமே சில்லுன்னு தான் இந்தக் காதல் இருக்கும்

இப்படியெல்லாம் நினைப்புப் பொங்கப் படத்துக்குப் போனா உங்க நினைப்புல்ல எண்ணெய்யை ஊத்தி அப்பளம் பொறிக்க


இப்போவாது கதையைச் சொல்லுங்கப்பா... அட இருங்க சார். 50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வந்து உடனே கதைக் கேட்டா எப்படி? சொல்லுவோம்ல்ல

சூர்யா-ஜோதிகா கல்யாணததைப் பார்க்கணும்ன்னு ஒரேத் தவிப்பாத் தவிக்கறவங்களுக்கு ஒரு வாய்ப்பு.. முதல்ல கல்யாண சீன் தான்....

அய்யோ ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு எழுந்து உக்கார வைக்கிறார் இயக்குனர்.

பிடிக்காத கல்யாணம்... ஆறுவருடங்களுக்குப் பின் பிடிக்கிற கல்யாணம் ஆகி பிடிப்பின் அழகான பரிசாய் ஒரு பெண் குழந்தை என வாழ்க்கை ரசனையாய் நகர்கிறது சூர்யா-ஜோதிகா காதல் தம்பதிகளுக்கு.. இடைஇடையே வரும் சின்ன ஊடல்கள்..தொடரும் கூடல்கள் எனக் கொளுந்து விட்டு பிரகாசமாய் எரிகிறது முதல் பாதி.

கதையைச் சொல்லுங்க சார்...

இதையேத் தான் படம் பாக்கப் போன எல்லாப் பேரும் கேட்டு வைக்க பாவம்ய்யா இயக்குனர் படாதப் பட்டு போயிருக்கார் கதையைச் சொல்ல

கரையான் அரிச்ச ( இல்ல அரிக்க மறந்த) ஒரு டைரியின் பக்கங்களில் இருந்து சூர்யாவின் பழையக் காதல் சில்லுன்னு கிளம்பி நம்ம் ஜோவைச் சுள்ளுன்னு தாக்குது...

டக்குன்னு பீளிச் மண்டையும், லேசானத் தாடியுமாக. துள்ளல் வாக்கோடு சூர்யா.. தமிழ் சினிமாக் கல்லூரி நாயகர்களின் இலக்கணத்திற்குள் சிறைப் படுகிறார்.

கொஞ்சம் மின்னலே மேடி..இன்னும் கொஞ்சம் மௌனராகம் கார்த்திக் எனக் கலகலப்பின் சகலையாகிறார் சூர்யா. அடி, தடி, பீர், காதல், மோதல்,பதிவுத் திருமணம் என ஜாலியாய் நகர்ந்து தோல்வியைத் தழுகிறது சூர்யாவின் முதல் காதல் எனக் கதையைக் கஷ்ட்டப்பட்டு பின்னுகிறார் இயக்குனர்.

இப்போப் பார்த்தீங்கன்னா சூர்யா ஒரு சந்தோஷமானக் குடும்பத் தலைவர், ஜோ கணவனின் பழையக் காதலைக் கண்டுபிடித்துத் தடுமாறி நிற்கும் மனைவி...என்ன நடக்கும் என்ற ஆவல் கொஞ்சமும் மேலோங்க விடாமல்.. கதையைக் கலலைக் கட்டி கிணற்றில் வீசுகிறார் இயக்குனர்.

ஜோ புதுமைப் பெண்ணாகிறார்!!!!??? கணவனின் டைரி வரிகள் படி அவன் பழையக் காதலை அவனுக்கு ஒரு நாள் திருப்பிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

சூர்யா, பூமிகா யாருமே அந்த முயற்சிக்கு எதிர்ப்போ!!! ஆதரவோ??? தருவதுப் போல் தெரியவில்லை அல்லது காட்டப் படவில்லை...

ஜோவின் இந்தத் தியாகச் செயல்,
நமக்கு வேலியிலே போற ஓணானை எடுத்து.. என்ற புகழ்பெற்ற பழமொழியினை ஞாபகப் படுத்துகிறது...
அதுக்கு மேல குத்துதுடா சாமி குடையுதுடா சாமி என்று திரைக்கதைப் பாவம் மூச்சு திண்றி நம் கண் முன்னால் ஆக்சிஜென் கேட்டு யாசிக்கிறது... அப்புறம் என்ன ஆசைத் தோசை அப்பளம் வடை என ஜோ... என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்ன்னு அழுதுகிட்டு முழியை உருட்டி உருட்டிச் சொல்ல.. சரி நீயே வ்ச்சிக்கோ உன் புருஷனை அப்படின்னு இவங்க குடும்பத்து ஆப்பரேஷன்சை ஆடிட் பண்ண வந்த KPMG ஆடிட்டர் மாதிரி பூமிகா ஒரு லெட்டர் கொடுத்துட்டு ஆஸ்திரேலியாவுக்கு சொய்ங்க்ன்னு விமானம் ஏறிடுறாங்க...

தியேட்டர்ல்ல படத்துப் பேர் சில்லுன்னு இருக்குன்னு ஏஸியை வேற நிறுத்தி தொலைச்சு அவன் பங்குக்கு அவன் புண்ணியம் கட்டிக்கிட்டான்

ஆகக் கூடி... சூர்யா அடுத்தப் படத்துக்குக் கதைக் கேட்டு நடிங்க...

அப்புறம் இன்னொரு விஷ்யம் எப்.எம்ல்ல எல்லாம் வந்து சாலைப் பாதுகாப்பு பத்திப் பேசிட்டு படத்துல்ல குடிச்சு முடிச்ச பீர் பாட்டிலை ஸ்டைலா ரோட்டுக்கு நடுவே விட்டு எறியறது அவ்வளவு நல்லா இல்ல சூரி...TAKE CARE

LAST SIGNING OFF WITH WISHES FOR A HAPPY MARRIED LIFE

Friday, September 01, 2006

மோகன்ராஜ்க்குப் பொண்ணுப் பார்த்தாச்சு

டிஸ்கி: 'இவர்' 'அவர்' இல்ல எனபதைத் தெளிவா முதல்லயே சொல்லிடுறேன்

நமக்கு ரொம்ப நெருக்கமானப் பங்காளிப் பேரு மோகன் ராஜ்ங்க... இன்னிக்குக் காலையிலே ரொம்ப நாள் கழிச்சுப் பயகிட்ட இருந்து ஒரு மெயில் வந்துருந்துச்சு...

மாப்பூ..எனக்கு கல்யாணம்டா.. பொண்ணுப் பாத்துட்டாங்கடா.. தேதி நவம்பர்ல்ல இருக்கும்ன்னு ரத்தினச் சுருக்கமா நாலே வரி

அடக் கொக்கமக்கான்னு சீட்ல்ல இருந்து எகிறி குதிச்சே புட்டேன் நான்...
இவனுக்கெல்லாம் கல்யாணம் நடக்குதுன்னா அது எல்லாம் புளுட்டோ பண்ற சதின்னு நினைச்சுகிட்டேன்..

இருக்காதாப் பின்னே..

பத்து வயசில்ல இருந்தே நமக்கு மோகன் பழக்கம்ங்க.. பய நல்லவன்.. ரொம்ப நல்லவன்.. அறிவுல்ல எல்லாம் அசகாய சூரன்... விவரமானப் பய தான்.
அவனுக்கு ஒரே ஒரு விசயம் தான் விவகாரம். அதுப் பொண்ணுங்க விஷயம்... தப்பா நினைச்சுராதீங்க, பய அப்படி எல்லாம் இல்லை...
ஒரு பொண்ணுன்னா எப்படி இருக்கணும்ன்னு நம்ம புரட்சித் தலைவருக்கும் சூப்பர்ஸ்டாருக்கும் அItalicப்புறம் அதிகம் பஞ்ச் டயலாக் பேசுன பைய இவனாத் தான் இருப்பான்...

எங்களுக்கெல்லாம் சைக்கிள் ஓட்ட பழகுறதுக்கு முன்னாலே சைட் அடிக்கப் பழக்குனவன் அவன்.

பத்து பைசா ஆசை சாக்லேட்டை ''ஆர்டினாக்கி" வச்சு அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போதே அம்பிகான்னு அம்சமான ஒரு கேரளாப் பொண்ணைச் செட் பண்ண ட்ரைப் பண்ணி அந்தப் புள்ள ஆர்டினுக்கு அர்த்தம் புரியாம என் சாக்லேட்டை இந்தப் பைய நசுக்கிபுட்டான்னு மேரி மிஸ் கிட்ட போட்டுக் கொடுக்க பய பரிதாபமா முழிச்சான் பார்க்கணும்.

ஆறாம் கிளாஸ்ல்ல அம்பிகா ஆசை அத்துகிட்டுப் போய் சோனாலிக்கான்னு ஒரு சேட்டுபொண்ணு மேல கண்டப் படி காதலாகி அதன் பயனா, முக்குத் தெரு பங்கஜம் மாமி கிட்டே போய் ஏக்.. தோ... தீன்... அப்படின்னு முக்கி அலறனதுல்ல மையிலாப்பூர் பகுதியிலே கணிசமானப் பேர் அவன் தயவுல்ல இலவசமாவே ஹிந்தி கத்துகிட்டாங்க. அப்போ அண்ணே நம்ம கிட்ட வந்து கயாமத் சே கயாமத் தக்., தில் தோ மாந்தா நஹின் அப்படின்னு அள்ளி விடுறது எல்லாம் ரொம்ப நாள வரைக்கும் எதோ சேட்டு வீட்டு பலகாரம்ன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தோம்.

சோனாலிக்கா மேரி ஜான்... அப்படின்னு அடிக்கடி புலம்புவான்... இதைக் கேட்டுபுட்டு நம்ம சங்கத்து ( அது வ.வி.ச) பய ஒருத்தன் சோனாலிக்கா கிறிஸ்டீன்னாடா அவங்க அப்பா பேர் ஜான்ங்கற அப்படின்னு அப்பாவியாக் கேட்டுட்டான்...

சோனாலிக்கா சொரம் பயலுக்கு எப்போத் தெளிஞ்சதோ சரியா ஞாபகம் இல்லை பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அவனை விட நாலு வயசு மூத்த ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் பொண்ணு மேலப் பித்தாயிட்டான். அவங்க அண்ணன் ஜீன்ஸ் பேண்டைத் திருடிப் போட்டுகிட்டு அந்தப் பொண்ணு முன்னாடி பிலிம் காட்டுறது.... அவங்க அண்ணன் படிக்கிற பெயர் தெரியாத நாவல் எலலாம் எடுத்து அலங்காரமா உக்காந்து சீன் போடுறதுன்னு பய பம்ப்ரமாச் சுத்துனான் அந்தப் பொண்ணு பார்வைக்கு..

வந்தது வினை... அந்தப் பொண்ணுகிட்ட தானும் காலேஜ்ன்னு ரீல் விட்டு வச்சிருக்கான்..( பய பாக்க உயரமா வேற இருப்பான்.. அந்தப் பொண்ணு அதை நம்பியிருக்கு) ஒரு நாள்... என்ன கொஞ்சம் இந்தக் கடையிலே ட்ராப் பண்றீயான்னு கேக்க.. புள்ளையும் ஓ,கே சொல்ல.. அந்தப் பொண்ணு ஊருக்கு போயிருந்த அவங்க பைக் சாவியைக் கொடுக்க நம்மாளு பைக் பில்லியனில் அந்தப் பொண்ணை வச்சுகிட்டு எங்க முன்னாடி கெத்தா ரவுண்ட் விட்டுட்டு போனான்.. பாவம் போற வழியிலே மாசக் கடைசியிலே கொத்தாக் கேஸ் புடிச்சிட்டு இருந்த மாம்ஸ் கிட்ட மாட்டிகிட்டார்ன்... மாட்டுன்னா லைசென்ஸ் கேட்க.. பய முழி பிதுங்க...

அந்நேரம் அங்கிட்டு வந்த ஸ்கூல் வாத்தி.... என்னப்பா மோகன்ராஜ்? இங்கே எங்கேன்னு கேட்க.. விவரம் சொல்ல.. அவர் மாம்ஸைக் காம் பண்ணி பயலை ரிலீஸ் பண்ணி விட்டுட்டு....

"அட என்னம்மா நீ? அவன் தான் சின்னப் பைய.. ஸ்கூல் பாய்.. நீயாவது யோசிக்க வேண்டாமா லைசென் ஸ் இல்லாம இப்படி வரலாமா? மோகன் அக்காவைப் பார்த்துக் கூட்டிட்டுப் போடான்னு"

சொல்லிட்டு கிளம்ப... அதுக்கு மேல நடந்தது என்ன? உங்க ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

நம்ம பைய லேசுல்ல அடங்கல்ல... காலேஜ்ல்ல லவ் லெட்டர் கொடுக்காதே பொண்ணே கிடையாது.

'செருப்படி காதல் வாழ்க்கையின் முதல் படி'

அப்படின்னு ரூம்ல்ல ரூலாவே எழுதி ஒட்டி வாழ்ந்துகிட்டு இருந்தான்.

எங்க ஏரியா இன்ட்ர்நெட் சென்டர் கீ போர்ட் பூராத்துல்லயும் A S L என்ற மூணு எழுத்தும் இவன் விரல் பட்டு தீஞ்சேப் போச்சு.

தலைமுடியை திடீரென்னு தோள் வரைக்கும் வளப்பான்.. இப்படியிருந்தா தான் ஷாலுவுக்குப் பிடிக்கும் அப்படிம்பான்.

அடுத்த வாரமே மொட்டை அடிச்சுட்டு மோவாய்ல்ல லேசா அழுக்கு ஒட்டுனாப்ல்ல ஆட்டுத் தாடி விட்டுகிட்டுத் திரிவான்... இது மேக்னாவுக்குப் பிடிச்சுருக்காம் அப்படின்னு ராயலாப் பேசுவான்.

நாலாம் வருசம் முடிக்கறதுக்குள்ளே இவன் பாத்த அத்தனைப் புள்ளகளுக்கும் ஆள் செட்டாகி கடைசி வருசம் ராக்கி அன்னிக்கு இவனை ஹாஸ்ட்டல் கக்கூஸ்ல்ல ஒளிச்சு வைக்க வேண்டியதாப் போச்சுன்னாக் கேளுங்களேன். அவன் பொழைப்பு அவ்வளவு நாறிப்போச்சு.

மச்சி... உனக்கு வெக்கமே இல்லையாடான்னு ஒரு நாள் ஊத்திவிட்டு கேட்டப்போ...

அழகு மயில் ஆட.. அபிநயங்கள் கூட.. அப்படின்னு ஒரு பழைய ராஜாப் பாட்டை ஊதிகிட்டே அள்ளிவிட்டு ஆடுனான் பாருங்க.... நாங்க மட்டையாயிட்டோம்.

மோகன் ராஜ் அப்புறம் வேலைக் கிடைச்சு நார்த் இன்டியாப் பக்கம் போனான்.. போனில் ஒரு முறை பேசும் போது சோனாலிக்காவுக்காக கற்றுகொண்ட ஹிந்தி இப்போக் கை கொடுக்குதுன்னு சொன்னான்.

அப்புறம் அமெரிக்கா, லன்டன்னு சுத்திட்டு ஆஸ்திரேலியாவில்ல செட்டில் ஆயிட்டான்... எங்க செட்ல்ல ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆகிட்டே வந்துச்சு...

"மச்சான்... கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணா.. ஒரு பொண்ணைப் பண்ணனும்டா.. பொண்ணுன்னா மச்சி..பார்த்தவுடனே அப்படியே பொங்கணும்டா.. " யார் கல்யாணத்துக்கோக் கடைசியா வந்திருந்த போது சொன்னான்.

""யூ நோ ஒரு ஐஸ்வர்யா ராய்... கேததரீன் சிட்டா ஜோன்ஸ், ஏஞச்லினா ஜோலி., இல்லை அட்லீஸ்ட் ஒரு ராணி முகர்ஜி, அப்படி ஒரு லுக் வேணும் மச்சி...""

" ஆக நீ சொல்ல வர்றது.. மோகன்ராஜ் ஆகிய் எனக்கு இந்த ஜென்மத்துல்ல நோ மேரேஜ் அப்படித்தானே..."

" நோ.. நோ.. இப்போக் கூட என் ஆபிஸ்ல்ல லிசான்னு ஒரு நைஸ் கேர்ள் .. இத்தாலியன்... எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு" என்றான்.

"அவளுக்கு" நம்ம பங்கு யாரோ கேட்டாங்க..

"இப்போத் தான் ஸ்டார்ட் ஆகி இருக்கு இன்னும் போகணும் அப்புறம் அவளுக்கும் என்னையப் பிடிச்சிடும்" பயங்கரச் சிரியஸாச் சொன்னான்.

இன்னுமாடா நீ இப்படித் திரியறன்னு அவன் அவன் உளுந்துப் பொரண்டுச் சிரிக்க, மோகன் ராஜ் செல்போனில் இருந்த லிசாப் படத்தை எனக்குக் காட்டினான்...

அது ஆச்சு ஆறு மாசம், இப்போ அண்ணனுக்கு கல்யாணம் அதுவும் நம்ம மதுரைப் பக்கம் மேலூர்ல்ல.. பொண்ணு பேர் லிசாவான்னு இனி தான் விசாரிக்கணும்...

இப்போதைக்கு சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா என் நண்பன் மோகன்ராஜ்க்குப் பொண்ணு பார்த்தாச்சுங்கோ

tamil10