Wednesday, June 27, 2007

இன்னும் எட்டாத எட்டு

தலைவர் கொத்ஸ் வழக்கம் போல நம்ம சட்டையைப் பிடிச்சு இழுத்து இந்த எட்டுக்குள்ளேத் தள்ளி விட்டுட்டார்..இப்போ கையிலேக் குச்சியை வச்சுகிட்டு எங்கப்பா எட்டு... சீக்கிரம் போட்டுக் காட்டுன்னு மிரட்டுறார்....இந்தா நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ அவரும் வாய்யான்னு கூப்பிடுறார் எட்டு போட
என் வாழ்க்கையிலே நடந்த பல சத்திய சோதனைகளை உங்க கிட்ட சொல்லுறேன்...(இப்படி நானும் சொல்லணும்ன்னு எம்புட்டு நாள் விட்டத்தைப் பாத்து யோசிச்சுருப்பேன்)..

1.வியாபாரம்ன்னா நமக்கு சிறு வயசுல்ல இருந்து உசுருங்க..ஆனா அதுக்கு வந்தச் சத்திய சோதனைகள் ஏராளம்ங்க...எட்டாம் கிளாஸ் படிக்கும் போது...நான் சொந்தமாப் படிக்க வச்சிருந்தக் கதைப் பொஸ்தகம் அப்புறம் எங்க அப்பாரு படிக்க வச்சிருந்தப் பொஸ்தகம் எல்லாம் நிறையக் கிடக்குறதைப் பார்த்ததும் நம்ம மனசுல்ல வியாபார திட்டம் ஒண்ணு ஒகோன்னு வளர ஆரம்பிச்சது....பெரிய அட்டை ஓண்ணை ரெடி பண்ணி அதுல்ல "தேவ் லெண்டிங் லைப்ரரி"ன்னு பெருசா எழுதி வீட்டு வாசல்ல தொங்க விட்டு..கஷ்ட்டப் பட்டு கஸ்டமர் எலலாம் புடிச்சு ஆளுக்கு அஞ்சு ரூவா வசூல் பண்ணி உறுப்பினராச் சேத்து வியாபாரத்தை விஸ்தரிக்க யோசிக்கும் போது வந்தது காப்பரீச்சை...

கணிதத் தேர்வுன்னு நினைக்குறேன்...நமக்கு கணித அறிவு ஆறாம் அறிவுக்கும் அப்புறமா ஆண்ட்வன் வைக்க மறந்த அறிவு..எங்கப்பா (ஸ்கூல் வாத்தியார்) தான் நமக்கு ட்யூஷன் மாஸ்டர்.. கொட்டு வாங்கி கதற கதற் படிச்சிட்டு இருக்கும் போது கட்டையிலே போற கஸ்டமர் வந்து கதவு பக்கம் நிக்குறான்..கஸ்டமர் சர்வீசா கணிதமான்னு சத்திய சோதனை எனக்கு....பட்டுன்னு நடு மண்டையிலே விழுந்தக் கொட்டுல்ல.. என் முதல் வியாபாரம் மூட்டைக் கட்டி மூலைக்குப் போனது...

கிட்டத்தட்ட அழுதுகிட்டே அஞ்சு ரூவாயை ரிபண்ட் பண்ணிட்டு கணக்குப் பாடத்து ரிவிசனுக்குத் திரும்புனேன்...அதுக்குப் பின்னாடியும் நம்ம வியாபார ஆசைகள் தொடர்ந்ததும் விதியின் வில்லத்தனம் என்னோடு மோதியதில் போனா போகுதுன்னு நான் விட்டுக்கொடுத்ததும் பின்னாளில் நான் எழுதப் போகும் என் வரலாற்றில் விரிவாய் படித்து அறிந்துக் கொள்ளுங்கள்..

2.சென்னைக் கச்சேரின்னு பெயர் வச்சு பதிவுப் போட்டாலும், நமக்கு பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்ங்கற ஊர்பககம் இருக்க் குளத்துக்குடியிருப்புங்கற குக்கிராமம்ஙக்... ஒரு குளமும் அந்தக் குளத்தின் கரையில் இருக்கும் ஒரு சின்ன நிலப்பரப்பளவு கொண்டது எங்க பூர்வீக கிராமம்... (குளம்ன்னா சும்மா மைல் கணக்குல்ல நீண்டு கிடக்குற குளம், கடம்பாக் குளம்ன்னு பேர்).. சிறு வயசுல்ல அந்த ஊர பெரியவர்கள் நமக்கு வச்ச பட்டப் பேர் மெட்ராஸ்காரன்... எலேய் மெட்ராஸ்காரா எப்போ வந்தா? அந்த அன்பானக் குரல்கள் என் வேர்களின் விலாசம் என நம்புகிறேன்... கிட்டத்தட்ட பத்து வ்ருசம் கழிச்சு இந்த முறை என் மகளோடு என் மூதாதையர் மண் பார்க்க ஊர் போனப் போது.. அந்த குரல் கேட்ட வீதிகளின் வெறுமை என்னை உலுக்கியது... வீடுகள் கேட்பாரற்று கிடந்தது மனத்தைக் குடைந்தது... ஒரு பக்கம் சென்னையின் வேகம்.. இன்னொரு பக்கம் கிராமங்களின் வெறுமை...
எதாவது செய்யணும்ய்யா அப்படின்னு அடிக்கடி மனசு சொல்லுது..

3.நமக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு கபடி...கடைசியா விவேகானந்தாக் கல்லூரி துறைகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் களம் இறங்கி... எதிர் அணி கொஞ்சம் கூட இவு இரக்கம் பார்க்காமல் கதற கதற கை கால்ன்னு அமுக்கி அழுத்தி.. இன்னும் சொல்ல முடியாத கொடுமை எல்லாம் பண்ணி...உச்சக்கட்ட ரவுசா அம்பையரைக் கைக்குள்ளேப் போட்டு எங்களைத் தோற்கடித்து அனுப்பியது இன்னும் மனத்தின் ஓரம் ஒரு மில்லி மீட்டர் வடுவாய் மீதம் உள்ளது.. இப்போவோவும் கபடி ஆட ஆசை இருக்கு.... இந்த வேகமான வாழ்க்கையில் அதுக்கு எல்லாம் நேரம் தான் மிச்சமில்ல...

4.பகல்ல குத்துப் பாட்டு கேட்டாலும்.. ராவுல்ல ராசாத் தாலாட்டு தான் சொகம்ன்னு நம்புற கோடிக்கணக்கான ராசா ரசிகர்கள்ல்ல நானும் ஒருத்தன்... ராசா சென்னையிலே இசை நிகழ்ச்சி நடத்துனப்போ 2500 ரூபாய் சொந்தக் காசு போட்டு டிக்கெட் எடுத்து அஞ்சு மணி நேரம் ராகதேவனின் மழையில் நனைந்தது வாழ்க்கையின் சுவையான அனுபவத்தில் ஒன்றுன்னா.. சென்னையில் நம்ம ரஹமான் க்ச்சேரி பண்ணப்போ ஆபிஸ்க்கு (நைட் ஷிப்ட்) அல்வா கொடுத்துட்டு நம்ம நட்பு வட்டத்தோடப் போய் கால் நோக நோக ஆட்டம் போட்டது இன்னொரு வித்தியாசமான அனுபவம்... இசைன்னா நாங்க அவ்வளவு இளிச்சவாய்த் தனம் புடிச்சவங்கன்னு சொல்ல வந்தேன்.. புரிஞ்சுக்கங்க..

5.அரசியல்ல அப்படி ஒரு ஆர்வம் நமக்கு.. எட்டாம் கிளாஸ்ல்ல கணக்கு அறிவு கொஞ்சம் கம்மியானப் போனக் காரணத்தால... கள்ள ஓட்டுப் போட்டு கூட இருந்த நண்பர்களாலே தோற்கடிக்கப்பட்ட ஒரு நல்லவன் பதிவை இப்போ நீங்க எல்லாம் படிச்சுட்டு இருக்கீங்க...எல்லாம் ஒரு சாக்லேட் பிரச்சனையாலே கிளாஸ் லீடர் தேர்தலில் நூல் இழையில் தோற்று போனேன்..வகுப்புக்கு வராதவன் ஓட்டையும் போட்டு என் கிளாஸ் லீடர் கனவில் பெரிய ஓட்டையைப் போட்டார்கள்... என்னய மாதிரி எனக்கு சிவிக்ஸ் (குடுமியல்) எடுத்த டீச்சரும் கணக்குல்ல கோட்டைய விட்டாங்க...நான் கோட்டைக்குப் போக முடியல்ல அன்னிலிருந்து அரசியலை ஆழமாய் பார்க்கத் தொடங்குனேன்... இன்னும் ஆழமாப் பாத்துகிடே இருக்கேன்... நம்ம பன்னிக்குட்டி ராமசாமி சொல்ற மாதிரி அரசியல்ல நான் தோத்தது எல்லாம் ரொம்ப சாதாரணம் அப்பா

6.திட்டம் போடாம தேசந்தரமாப் பயணம் போறதுன்னா.. எடு வண்டின்னு ரைட் விடுற அளு நானு.. யோசிக்காம.. சும்மா ஒரு நாள் நாடு நகரம் காடு கரை எல்லாம் சுத்தலாம்ன்னு சொல்லி கிளம்புறது கல்லூரிகாலத்துல்ல இருந்து பழகுன விசயம்.. இன்னுமும் தொடருது.. அப்படி போய் வந்த பயணங்களில் மறக்க முடியாதது கர்னாடகா மாநிலத்திலுள்ள ஜாக் நீர்வீழ்ச்சி தான்.. சும்மா 2 கீலோ மீட்டருக்கு அதிகமான ஆழமானப் பாதையில் அருவி விழும் இடம் தரிசிக்கும் ஆவலில் இறங்கி உயிருக்குச்ச் சேதம் இல்லாம திரும்புனது எங்க குடும்பத்து மக்கள் செஞ்சப் புண்ணியம்ன்னு நினைக்கிறேன்..இப்படி பயணம் போகும் போது சுமோ மாதிரி வண்டிகள் எடுத்துட்டுப் போறது பழக்கம்.. அந்த ஓட்டுனரோடு ஐக்கியமாகி உள்ளூர் தகவல்கள் வாங்குவது சுவரஸ்யமான விசயம்..சில சமயம் புயல் மழை பாதை தவறி போய் இப்படி சில இரவுகளைச் சாலையோரம் வண்டியிலே கழித்த அனுபவமும் உண்டு.. மொத்தத்தில் நமக்கு பயணப்பித்து ஜாஸ்திங்கோ..

7.எந்த மதத்தில் பிறந்து வளர்ந்தேனோ அந்த மதம் எனக்குச் சொன்னக் கடவுளை ஆழமாய் நம்பும் ஆத்திகன் நான்.. அப்படி இருந்தாலும் என் மதம் சார்ந்த மனிதர்கள் இன்றளவும் சொல்லும் மதத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.. அதிகமா இதைப் பத்தி பேசுனா... உனக்கு நல்லது நடக்காதுன்னு சொல்லி பெரியவங்கப் பயமுறுத்தி வச்சுருராங்க... மதம் விட மனிதம் முக்கியமல்லவா...மத வாதம் வேண்டாம் எனபது என் கருத்து.. ஆனால் மதவாதிகள் சொல்லுவதோ மதத்திலே வாதம் கூடாது என்று... அட போங்கப்பா நீங்களும் உங்க பொழப்பும்..
I BELIVE IN THE GOD WHO BELIEVES IN ME..

8.நட்புக்கு என்றும் மரியாதை கொடுக்கணும்ன்னு இயன்ற வரை முயற்சிப்பேன்..
எனக்கு நண்பர்கள் குறைவு.. ஆனால் நான் நிறையப் பேருக்கு நண்பன்....(அய்யோ சும்மா பஞ்ச் வந்து தானா உக்காருதுங்க!!!)
இந்த ஒற்றை வரியிலுள்ள பொருளை நட்புள்ளம் கொண்டவ்ர்கள் அனைவரும் தங்கள் வாழ்விலும் உணர்ந்திருப்பார்கள் அப்படின்னு நினைக்கிறேன்...

எட்டுப் போட்டாச்சு இனி எகிறலாம்ல்ல

எட்டுக்குள் அழைப்பவர்கள் :-
1. ஜொள்ளு பாண்டி
2. கொங்கு ராசா
3. பினாத்தல் சுரேஷ்
4. JK
5. நந்தா
6. சுதர்சன் கோபால்
7. சந்திப்பு
8. அனுசுயா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Monday, June 25, 2007

ஆபிஸர் கவிஞர் ஆகிறார்

வணக்கம் மக்கா...

கொஞ்ச நாளா நம்ம ஆபிசரைப் பத்தி நான் எதுவும் பேசல்லயேன்னு ஊருக்குள்ளே ஆபிசர் ரசிகர்கள் கிட்ட இருந்து மெயிலாக் குவிஞ்சுப் போச்சு...

இப்போ எல்லாம் நம்ம ஆபிசர் ரொம்ப அமைதியாயிட்டார்.. அடிக்கடி மோவாயைத் தடவிகிட்டு விட்டத்தைப் பார்க்கிறார்..போன வாரம் உக்காரருற சீட்டுக்கு மேலே தெர்மாக்கோல்ல செஞ்ச நிலா ஒண்ணைக் கட்டி தொங்கவிட்டிருக்கார்...அந்த நிலாவைச் சாய்ஞ்சிட்டேப் பாக்குரதும..சைட்ல்ல பாக்குரது...மல்லாக்கப் படுத்துட்டேப் பாக்குறதுன்னு ஒரே ரவுசு..அப்புறம் தமிழ்ல்ல கவிதைப் போடறவங்களை எல்லாம் தேடி தேடிப் படிக்க ஆரம்பிச்சதல்ல.. அவர் மானிட்டர்ல்ல தமிழ் மணம் வீச ஆரம்பிச்சுருச்சு...ஆமாய்யா ஆபிசர் நெட்ல்ல கவிதைப் பதிவாப் படிக்க ஆரம்பிச்சாட்டாரு

ஒவ்வொரு எழுத்தாக் கூட்டிப் பெருக்கி வகுத்து ஆபிசர் கவிதைப் படிக்குறதை அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த வாத்தியார் மட்டும் பாத்துருந்தார்ன்னா அவருக்கு கண்ணுல்ல வெந்நீயே வந்துறும்..ஆபிசரின் இந்த 'திடீர்' கவிதைத் தாகத்துக்குக் காரணம் ஆபிஸ்ல்ல ஒருத்தருக்கும் புரியாமப் பெரும் கலவரமாப் போயிருச்சு

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாங்க எல்லாரும் பருத்திவீரனை என்ன ஏதுன்னு விசாரிக்க அனுப்புனோம்..

"சித்தப்பூ , நல்லாத் தானே இருந்த.. ஆன் சைட்க்கு ஆடப் போலாம் வாய்யான்னு சொன்னா..ஆலிவுட் ஹிரோ ரேஞ்சுக்கு ஆட்டயக் கிளப்புவன்னு பார்த்தா.. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுன்னு தாடி வளத்துருவே போலிருக்கு..."

"தம்பி.. நீ சின்னப் பைய அப்படி தள்ளி நில்லு. நான் சிந்திக்கும் போது சீண்டிப் பாக்காதே.. சொல்லிட்டேன்..ஆமா"

"யோய் சித்தப்பு சும்மா சீனைப் போடாதய்யா.. எங்கே இப்போ நான் சொன்ன அகர முதல் எழுத்து.. வரிக்கு விளக்கம் சொல்லு பாப்போம்..."

"டேய் சின்னப் பையலே.. நான் கவிதையைப் பத்திச் சிந்திச்சிட்டு இருக்கேன். நீ கவனம் சிதறுர மாதிரி சில்மிசம் பண்ணாதே மறுபடியும் சொல்லிட்டேன்.."

"யோவ் சித்தப்பு, நாங்களும் திருவள்ளுவர் சொன்னதைத் தானேச் சொன்னோம்.. நீ எந்த அளவுக்குக் கவிஞர்ன்னு தெரிஞ்சுக்குவோம்ல்ல...சொல்லுய்யா" பருத்தி வீரனும் விடவில்லை.

"இங்கேப் பார்றா.. கேக்குறான் கேனப்பைய... திருவள்ளுவர் எங்கேடா கவிதை எழுதுனார்.. அவர் காலத்துல்ல கவிதையே கிடையாதுரா தம்பி.. போ போய் கோட்ல்ல கொட்டிக் கிடக்குற பூச்சியை மருந்தடிச்சுக் கொல்லு..." சும்மாத் தெனவெட்டாச் சொல்லிவிட்டு காலைத் தூக்கி டேபிள் மேல வச்சுகிட்டு சிந்திக்க ஆரம்பித்தார் ஆபிசர்.

"சித்தப்பு.. நெசமாலுமே கொலையாகிப் போயிரும்... திருவள்ளுவர் அப்புறம் என்ன எழுதுனார்.. அதையாவது சொல்லு..." பருத்தி வீரனும் கொடாகொண்டான் ஆச்சே.. நடக்கிறதை எல்லாம் நகராம நாங்களும் பாத்துகிட்டு இருந்தோம்.

"தம்பி.. தவம் மாதிரி இருக்கேன்..தகராறு ஆயி போயிரும் சொல்லிட்டேன்... இன்னும் ரெண்டு நாளைக்குள்ள நான் நாலு கொயர் நோட்டு நிறைய கவிதை எழுதியாகணும்... சரி.. திருவள்ளுவர் கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டா சிந்தாமச் சிதறாம சீட்டுக்குப் போய் சின்சியரா வேலைப் பாப்பீயா சொல்லு பதிலைச் சொல்லுரேன்.." ஆபிசர் லைட்டா இறங்கி சமரசத்துக்குத் தயார்ங்கற மாதிரி சொன்னார்.

'ம்ம்ம்' என்றான் பருத்திவீரன்.. எல்லாரும் ஆபிசரின் அந்தப் பதிலுக்காகக் காதைத் தீட்டிக் கவனமானோம்..

"நல்லாக் கேளு.. திருவள்ளுவர் காலத்துல்ல கவிஜை எல்லாம் கிடையாது... அவர் எழுதுனதுக்கு பேர் செய்யுள்.. பாடப் பொஸ்தகத்துல்ல படிச்சிருப்ப.. இப்போ ரொம்பக் கேப் விழுந்ததாலே மறந்துப் போயிருக்கும்.. பரவாயில்ல.. கவிதைக்கும் செய்யுளுக்கும் வித்தியாசம் தெரியாம வளந்துருக்கடா நீ.. ரொம்ப அப்பாவி புள்ளயா இருக்கடா நீயு.. என்னத்தச் சொல்ல இந்தக் காலத்துல்ல வீட்டுல்ல பிள்ளைகளுக்கு யார் தமிழ் சொல்லிக் கொடுத்து வளக்குறாங்க"

கொலவெறியில் மானிட்டர் எடுத்து மண்டையில் அடிக்கப் போன பருத்திவீரன நாங்கப் பத்து பேர் பாஞ்சுப் பிடித்து அவன் சீட்டுல்ல உக்கார வைக்க பயங்கரப் பாடுபட்டுட்டோம்..
ஆனா இது எதையுமே கண்டுக்காம.. ஆபிசர் திரும்பவும் விட்டத்தையும் நிலாவையும் பாத்துட்டு இருந்தார்..பருத்திவீரனுக்கு வெறி அடங்கவே இல்லை...ஒரு வழியா தன்னைத் தானே அடக்கிட்ட பருத்திவீரன்...

"என்னை விடுங்கப்பா.. அந்த ஆளை எதுவும் செய்ய மாட்டேன்.. ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டு வந்து என் வேலையைப் பாக்குறேன்"னு எழுந்துப் போனான்...

அது என்னக் கேள்வியோன்னு எதுக்கும் உஷாரா இருப்போம்ன்னு நாங்களும் நாலுப் பக்கமும் தயார நின்னுக்கிட்டோம்.பருத்தி வீரன் ஆபிசர் பக்கமாய் போய் கிட்டத்தட்ட கண்ணுல்ல கண்ணீர் பொங்க...உள்ளுக்குள்ளே நாங்க எல்லாரும் ஒரு வாரமாக் கேக்க நினைச்சு அடக்கி வச்சிருந்தக் கேள்வியை உணர்ச்சிப் பொங்கக் கேட்டான்..

அந்தக் கேள்வி "என்னக் கொடுமை இது ஆபிசர்?" சும்மா மொத்த ஆபிசும் அந்தக் கேள்வியக் கேட்டு அதிர்ந்துச்சு இல்ல..

அன்னிக்கு சாய்ங்காலம் சுமார் ஓன்பது மணிக்கு நம்ம ஆபிசரின் கவிதை அறிவினை வளர்க்க அ வில் ஆரம்பித்து கோவில் முடியும் ஒரு பிரபல இணையக் கவிஞரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான் பருத்திவீரன்...

"கவிஞரே பெருசா எல்லாம் வேணாம் ஒரு மூணு நாலு வரி கவிதை எழுதற அளவுக்குத் தேத்தி விட்டுருங்கப் போதும்" அப்படின்னு பருத்தி வீரன் பலமாய் சிபாரிசு பண்ணான்.

தொண்டையைச் செருமிய கவிஞர்..

"நண்பரே...கவிதை எளிது...சொல்கிறேன் கேளுங்கள்
கடல் தொடு...வான் தேடு..மழையில் நனை..புல்லில் படு..பூவை பாடு...
ஆம் இயற்கையை ரசி..இதயத்தில் கவிதை இறக்கை கட்டும்"

'ம்க்கும்.. நீங்கச் சொல்லுற எதுவும் நம்ம சித்தப்புவுக்கு செட் ஆகாது.. முந்தாநாள் மழையிலே மெரீனால்ல கடலையே வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டே ரொம்ப நேராமா நின்னுருககார்.. கவிதை வர்றல்ல.. போலீஸ் தான் வந்துச்சு வந்து சித்தப்புவைச் சந்தேகக் கேசுல்ல அள்ளிகிட்டு ஈ - 1 ஸ்டேஷனுக்குக் கொண்டுப் போயியிருச்சு.. விடியற வரைக்கும் வெளியே விடல்லயே..."

கேப் விட்டு பருத்தி வீரன் தொடர்ந்தான்.

"வானம் பாக்குறேன்னு.. வாயைப் பொளந்து வானம் பார்த்ததுல்ல.. குருவியிலந்து... பருந்து வரைக்கும்...
வேணாம் அப்படின்னு பருத்தி வீரன் வாயைப் பொத்தினார் ஆபிசர்... சித்தப்புவின் மானம் நாணம் கோணம் கருதி அத்தோடு நிறுத்திக் கொண்டான் வீரன்.

கவிஞருக்கே கொஞ்சம் சவாலாகிப் போனது...வேற மாதிரி ஆரம்பிப்போம்ன்னு யோசிச்சவர் ஆபிசரைப் பார்த்தார்.. ஆபிசர் பவ்யமா கை எல்லாம் கட்டிகிட்டு அஞ்சாப்பு படிக்கிற பைய மாதிரி சின்சியாராப் பாடம் கேட்க தயாரானார்.

"நண்பரே.. நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?"

"எனக்கும் காதலிக்கணும்ன்னு ஆசை தாங்க.. பொண்டாட்டி புள்ளன்னு ஆனப் பொறவு.. அதுக்கெல்லாம் நேரமில்லங்க.. அதுல்லயும் என் பொண்டாட்டியை வச்சுட்டு நான் யாரையும் சைட் அடிச்சாலே அவளுக்கு ஆவுறதுல்ல.. இதுல்ல காதல் எல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம் தான்" படு சீரியசாய் பதில் சொன்னார் ஆபிசர்..

கவிஞர் குடித்தக் கோக் குப்பென்று அவருக்குப் பொறை ஏறியது.. பருத்திவீரனை பரிதாபமாய் பார்க்க.. பருத்தி KINDLY ADJUST என்பதாய் பதிலுக்குப் பார்த்தான்..

ஸ்ப்பப்ப்பா என்ற கவிஞர்.. நிதானமாய் நம்ம ஆபிசர் தோளில் கைப்போட்டு... உங்க கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு வர போற மனைவி பத்தி ஒருவித எதிர்பார்ப்பு இருந்து இருக்கும்.. அந்த எதிர்பார்ப்பு அந்த உணர்வு தான் காதல்.. காதல் கவிதை... கவிதை காதல் எனச் சொல்ல..வேலியில் விழுந்த வெள்ளாட்டுக் குட்டியாய் ஆபிசர் முழிக்க.. கவிஞர் கொஞ்சம் இறங்கி வந்தார்..

"நண்பரே.. திருமணத்திற்கு முன் வரப் போகும் உங்கள் மனைவியிடம் என்ன எதிர்பாத்தீங்க?" அப்படின்னு தோள் தொட்டுக் கேக்க.. ஆபிசர் முகம் குஷியானது.. வாயெல்லாம் சிரிப்புப் பொங்கச் சொன்னார்...

"அதுங்க கவிஞரே.. அதிகமா எல்லாம் எதிர்பார்க்கல்ல ஒரு 25 பவுன்... அப்புறம் 50 ஆயிரம் ரொக்கம்.. இது வீட்டுல்ல. நான் எதிர்பாத்தது ஒரே ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் பைக்.. அதைத் தரமா என் மாமனார் ஏமாத்திட்டாருங்க... பழையப் பீலிங்க்ஸ் எல்லாம் கிளப்பிட்டீங்கன்னு சிரிப்பு மறைந்து லேசா விசனப் பட ஆரம்பித்தார் ஆபிசர்.

கவிஞர் கன்னாப்பின்னாவெனக் கலங்கிப் போனார் என்பதைச் சொல்லத் தான் வேணுமா என்ன?

பருத்திவீரன் கவிஞரின் மனவலிமையை அதிகப்படுத்த பார்வையாலே முயன்றான்.. கவிஞரும் கஷ்ட்டப்பட்டு மனவலிமையைச் சேர்த்துக் கொண்டு ஆபிசரைப் பாரத்துக் கேட்டார்..

'இது வரைக்கும் நீங்க எதாவது கவிதை எழுதியிருக்கீங்களா?'

'ஓ' என்று தலையை ஆட்டிய நம் ஆபிசர், தன்னுடைய லேப் டாப்பைத் திறந்தார்...
கவிஞரோடு பருத்திவீரனும் ஆர்வம் ஆனான்...அந்தப் பக்கத்தைத் திறந்தார்...அதுல்ல்த் தெரிஞ்சது ஒரே வார்த்தை....

கொட்டை எழுத்துல்ல கவிதை அப்படின்னு ஒரே வார்த்தை

'இப்போத் தான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்.. முதல் வார்த்தை வந்த வேகத்துல்ல அடுத்த வார்த்தை வரல்ல..காத்துக் கிடந்தேன்..ஒரு கட்டத்துல்ல ஒரு வேளை நமக்கு கவிதையே வராதோன்னு எனக்கே எம் மேல சந்தேகம் வந்த சிச்சுவேஷ்ன்ல்ல நம்ம கவிப்பேரரசு வைரமுத்து பாட்டு ஒண்ணு கேட்டேன்.. அப்போத் தான் நான் ஒரு கவிஞர்ன்னு எனக்கே கன்பர்ம் ஆச்சு..'

ஆபிசர் பேச பேச, நம் கவிஞர் கரண்ட் கம்பியைக் கடவாய் பல்லுக்குள்ள எடுத்து வச்ச மாதிரி அதிர்ச்சியில் உறைந்துப் போனார்..

'சித்தப்பு.. நீ கவிஞர்ன்னு எப்படி சித்தப்பு உனக்கே கன்பர்ம் ஆச்சுன்னு' பருத்திவீரன் பரம பவ்யமாக் கேக்க...

"இந்தா இந்தப் பாட்டை நீயும் கேளு.. நீங்களும் கேளுங்க...' கவிஞர் பக்கமும் ஐ பாட்டை நீட்டினார் ஆபிசர்... பாட்டில் ஓடிய வரிகள்....
" வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா... "அந்த வரி அப்படியே ரிப்பீட்டில் ஓட... கவிஞர் எகிறி அப்பீட்டானார்....

பி.கு: வர்ற ஜுலை 10 ஆபிசருக்குப் பத்தாவது கல்யாண நாளாம் அதுக்கு அவர் வீட்டம்மாவுக்கு கவிதை ஒண்ணு எழுதித் தருவதாய் ஒரு மப்பானப் பொழுதில் வாக்குக் கொடுத்துருக்கார் ஆபிசர்... அந்த அம்மாவும் அதை நம்பி நாலுப் பேத்துக்கு எங்க வூட்டுகாரரு வெறும் பொட்டி மட்டும் இல்ல கவிதை எல்லாம் சும்மா அப்படித் தட்டுவாரு தெரியும்ல்லன்னு சொல்லி இவரை உசுப்பிவிட்டிருக்காய்ங்க... வர்ற ஜூலை 10 வீட்டம்மா தோழிகள் எல்லாரும் கவிதைக் கேக்க வர்றோம்ன்னு சொல்லியிருக்காங்களாம்...

இந்தா ஆபிசர் ஆகாயம் பாக்க ஆரம்பிச்சுட்டார்ப்பா..... ஒரு ஆபிசர் கவிஞர் ஆகிறார்.... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

Thursday, June 21, 2007

சிவாஜி எப்படி - 4

சிவாஜி எப்படி - 3





'A Perfect film has not been made so far... '

சிவாஜி வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்த நிலையில்.. படம் ஒரு மாபெரும் வெற்றி என அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப் பட்டு விட்டது...

சுமார் 250 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகும் என நாட்டின் முன்னணி வியாபார நாளிதழ் செயதி தருகிறது

சிவாஜியின் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன?

சிவாஜியின் வெற்றிக்கு காரணங்களாகப் பொதுவாகச் சொல்லப்டும் விஷயம்... படத்தைத் தயாரிப்பாளர்கள் சந்தைப் படுத்திய முறை.. அதற்கு ஏற்படுத்திய பிரமாண்டமான முன் வெளியீட்டு விளம்ப்ர யுக்திகள்...இந்த வியாபார உக்தியின் மூலம் படம் குறித்த ஒரு படு பிரமாண்ட் எதிர்பார்ப்பு எல்லா மட்டங்களில் கிளம்பிவிட்டிருந்தது...

ஒரு ஆபாயகரமான உக்தி தான் இது என்றாலும், ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரையும் அவருக்கு இருக்கும் முரட்டுத் தனமான விசுவாசிகளையும் அளவுக்கு அதிகமாகவே நம்பி ஏவி.எம் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்... ரஜினி அவர் ரசிகர்களை ஏமாற்றவில்லை.. ரசிகர்களும் கல்லாக் கட்ட தங்கள் உதவியைச் செய்ய தவறவில்லை.

எனக்கும் ரஜினியைப் பிடிக்கும்.. ரஜினியை ரசிப்பவன் என்ற முறையில் சொல்லுகிறேன்...

சிவாஜி முடிந்து வெளியே வரும் போது.. ஒரு சின்னப் பையன்.. எட்டு பத்து வயதிருக்கும்..அவன் தந்தையிடம் " அப்பா ரஜினி என்னமா அடிக்கிறார்.. சும்மா பறந்து பறந்து ட்சூயும் .. ட்சூயும் அப்படின்னு... கூல்ல்ல்ல்ல்ல்"

இதே தான் இதே தான் இருபது வருடத்துக்கு முன் நான் என் அப்பாவிடம் ரஜினி பார்த்து ஆச்சரியப்ப்பட்டுச் சொன்னது.. இருபது வருடங்கள் தாண்டியும் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் வரும் போது எனக்குள் இருக்கும் அந்த சிறுவன் ரஜினியால் தட்டி எழுப்பப்படுகிறான்.. ரஜினி மேஜிக் பார்த்து ஆச்சரியப்படுகிறான்...


இந்தக் கருத்தை நம்ம பதிவுலகத்தில் இளவஞ்சி முதல் என்னையும் சேர்த்துப் பலர் சொல்லியாச்சி..ரஜினி படங்கள் மீதான எங்கள் ஈர்ப்புக்கு காரணம் இது தான்...

ITS GOOD TO BE A CHILD AGAIN...THANKS TO RAJINI BRAND ENTERTAINMENT

ஹாலிவுட்க்கு ஜேம்ஸ் பாண்ட், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் இப்படி பல சூப்பர் ஹீரோக்கள்... உலகெங்கும் ரஜினி ரசிகர்களுக்கு எல்லாம் கலந்த ஒரே வடிவில் சூப்பர் ஹீரோவாக ரஜினிகாந்த்...






இந்த பதிவினை ஒரு விம்ரசனமாக எழுதாமல் சிவாஜி ரஜினி குறித்தான என் பார்வைகளாக மட்டுமே பதிவு செய்துள்ளேன்...

இப்போ நாலு பகுதியாகக் கேட்டு வந்த சிவாஜி எப்படி? கேள்விக்கான பதிலைப் பார்ப்போமா..

இணையம் பத்திரிக்கை எனப் பல இடங்களில் சிவாஜி விமர்சனங்களில் நீங்கள் படித்த வரிகள் தான் .. நானும் வழிமொழிகிறேன்.. சிவாஜி நோ லாஜிக்.. ஒன்லி சூப்பர் ஸ்டார் மேஜிக்

பாருங்கள் குடும்பத்தோடு... மகிழுங்கள்....ஓ.க்கே இத்தோடு சிவாஜி கச்சேரி ஸ்டாப்....

Wednesday, June 20, 2007

சிவாஜி எப்படி - 3

சிவாஜி எப்படி - 2



சினிமா என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை இந்தக் கருத்து பரவலாக அனைவராலும் ஏற்றுகொள்ளப் பட்டக ஒன்று.. கனவுகளின் வியாபாரம் அங்கு படு ஜோராக காலம் காலமாக நடந்து வருகிறது.. உலகெங்கும் இந்த வியாபாரச் சந்தையில் கொள்வோரும் கொடுப்போரும் அதிகம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பான்மையானப் படங்கள் சந்தைப்படுத்துதலுக்குத் தோதாகவே எடுக்கப்பட்டவையாக இருக்கும்.. ரஜினியின் படங்கள் தமிழ் சினிமாவின் வியாபார எல்லைகளை விரிவுப்படுத்தி உள்ளன என்பதில் எந்தவொரு ஐயமிமுல்லை...

சிவாஜி வெளியாகி முதல் வாரத்திலேயே ஐரோப்பிய பாக்ஸ் ஆபிஸில் சூடுப் பரப்பதாய் தகவல்கள் வருகின்றன..சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் வியாபாரம் தூள் பரத்துவதாய் நெட்ல் காணக் கிடைக்கும் சினிமாச் செய்திகள் சொல்கின்றன... ஐக்கிய அரபு நாடுகளின் திரையரங்குகளில் புது வரலாறு படைக்கப்படுவதாய் பேச்சுக்கள் எழுகின்றன... ஜப்பான் கதைகளை பேசி நமக்கு அலுத்து விட்டது. சீனாக்காரர்களும் சிவாஜி ரஜினியைக் காண ஆயத்தம் ஆகி வருவதாய் தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது.வங்காள மாநிலத்திலும் கொல்கத்தாப் போன்ற நகரங்களில் சிவாஜி வரும் வாரம் திரையிடபடுகிறதாம்..

தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய சந்தை உருவாக்கிக் கொடுப்பதற்கு ரஜினியும் பங்கு அளிக்கிறார்.. அந்தப் பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்பது உள்ளூர் விம்ர்சகர்கள் ஏற்க மறுத்தாலும் அது உண்மை எனபது உண்மை.

"எங்க தலைவர் படம் இப்போ உலகமெல்லாம் ஓடுதுங்க.. ஆனாலும் பாருங்க உள்ளூர் மக்க இன்னும் அவரை இந்தச் சின்ன வட்டத்துக்குள்ள சிக்க வைச்சிரணும்ன்னு விமர்சனமாப் பண்ணித் தள்ளுறாங்க... அவருக்கு எதுக்குங்க உள்ளூர் அரசியல்.. அவர் உலக ரேஞ்சுக்கு படம் பன்ணிகிட்டு போயிகிட்டுருக்கார்.. நடிகராக அவர் அடைஞ்சுருக்க அடையும் சாதனைகளை வெற்றிகளைப் பாத்து நாங்களும் சந்தோசப்படுறோம்..."

சிவாஜி இடைவேளையில் கான்டினில் காபி குடித்தப்போது ஒரு ரசிகரின் கருத்து காதில் விழுந்தது..

அட ஆமா.. நம்மூர் படத்துல்ல பட்டயக் கிளப்புன ரஜினிங்கற நடிகர் ஒருத்தர் இன்னிக்கு தன் வழக்கமான ந்டிப்பால்.. அதே ஜனரஞ்சகமான படைப்பால்...அதே தமிழ் படம் வாயிலாக இன்று உலக பொது பொழுதுபோக்கான சினிமாவின் உலகளாவிய ரசிகர்களை மகிழ்விக்கும் நிலைக்கு தன் தொழிலில் உயர்ந்துள்ளார்...அந்த உயர்ச்சிக்குக் கொடிப் பிடிக்காவிட்டாலும்.. நம்ம மக்கள் அந்த உயர்ச்சியை இகழ்ச்சியாய் பார்க்காமல் இருக்கலாமோ...

தட்டிக் கொடுக்கா விட்டாலும் தட்டி விட முயற்சியாவது செய்யாமல் இருக்கலாமோ...

பொதுவாக எங்கும் வெற்றிகள் விமர்சிக்கப்படுகின்றன... இருப்பவனை இல்லாதவனும் இயன்றவனை இயலாதவனும் விமர்சிப்பதாய் மேலுக்கு தோன்றும் சமாச்சாரங்கள்...

பொதுவா விமர்சனங்கள் குறித்து என்னுடைய கருத்து..EVERY BODY HAS A STRONG AND JUSTIFIABLE REASON FOR HIS COMMENTS AND SO DO I....

சரி சிவாஜியின் விமர்சனம் ரிட்டன்ஸ் இப்போ..

இடைவேளை வரை காமெடி, காதல், வில்லனோடு மோதலுக்கான அடித்தளம் என நகரும் சிவாஜி.. இடைவேளைக் காட்சியில் வில்லனோடு வெடிக்கும் மோதலின் உச்சக்கட்டத்தோடு.. சிவாஜி சீறும் சிங்கமாக சில்லரைக் காசை சுண்டிப் போட்டு சவால் விடுவதுமாய் நிற்கிறது...




இடைவேளைக்குப் பின் சூப்பர் ஸ்டார் பார்மூலா புதுப் பொலிவுடன் திரையில் அனல் கிளப்புகிறது...

கனவுகளின் மொத்தமுமாய் ரஜினி அதிரடிகளை அரங்கேற்றுகிறார்...

"நான் சொன்னா நீ கேட்கணும்.. அடம் பிடிச்சா ஆப்பு அடிப்பேன் ..." என்று அரசாங்க உயர் ஊழியன் முதல் அரசாங்கம் வரை 'ஆபிஸ் ரூம்' ஆட்டம் காட்டி சும்மா அதிருதுல்லன்னு விசிலையும் கைத்தட்டல்களையும் அள்ளி சுவிங்கம்மாய் வாயில் போட்டு மென்று கொண்ட திரையில் தீ தெறிக்க ராஜ நடைப் போடுகிறார் சூப்பர் ஸ்டார்..

வில்லன்களுக்கு அல்வாக் கொடுத்து சும்மா எமலோகம் வரை சென்று அங்கு எமனுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு நட்பான டாக்டர் ரகுவரனும், அன்பான மனைவி ஸ்ரேயாவும் பாசக்கார 'அம்மாத் தம்பி' விவேக்கும் கூப்பிட்டு விட திரும்ப மண்ணுலகம் திரும்புகிறார் சூப்பர் ஸ்டார்

திரும்புனவர் சும்மா வராமால்.. படுக் கெத்தா வர்றார்...


சிவாஜியாச் செத்து எம்.ஜி.ஆரா வந்து மேட்ரிக்ஸ் பாணியில் பறந்து பாயந்து சண்டைப் போட்டு வில்லனையும் முடிக்கிறார் படத்தையும் முடிக்கிறார் ரஜினி...

எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் பார்ப்பதும், ரசிப்பதும், கொண்டாடுவதும், கூத்தாடுவதும் ரஜினி... ரஜினி மட்டுமே...

அதுப் போல ரஜினியை விமர்சிப்பவர்கள் குறைக்காணுவதும்..குற்றம் சொல்ல விழைவதும்..குத்திக் காட்ட நினைப்பதும்... ரஜினி... ரஜினி மட்டுமே...

அந்த வகையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமன்றி ரஜினியை வைத்து விமர்சித்து குறை சொல்லி குற்றப்படுத்தி கும்மியடிக்கும் அனைத்து தரப்பினருக்கும் குறைவில்லாத விருந்துப் படைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்...

சிவாஜி எப்படி அடுத்தப் பகுதியில் முடியும்..

Monday, June 18, 2007

சிவாஜி எப்படி - 2

சிவாஜி எப்படி? - 1

"It doesnt matter how deep u fall.. All that matters is how u bounce back..."


பாபா தோல்வி என ஊடகங்களும் மற்றவர்களும் பொங்கி பொங்கல் வைத்து முடித்தக் கதையும் அதன் பின் வந்த விசுவரூபம் எடுத்த சந்திரமுகியின் வெற்றியும் இந்த சொல்லாடலுடன் பொருத்திப் பார்க்க முடிகிறது.. விழுவது அவமானம் அல்ல.. விழுந்தேக் கிடப்பது தான் அவமானம்.. பொதுவாக ரஜினி படங்களில் மறைமுகமாக ஒலிக்கும் கருத்து இது தான்.. இந்தப் பாணி கருத்து கொண்ட படங்கள் தான் அவரை இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக.. 'தலைவர்' என்ற அடைமொழியோடு இன்றளவும் நடைப்போட வைக்கிறது எனச் சொல்லலாம்.

திரைப்படங்களில் மூன்று மணி நேரங்களில் விழுந்து எழுவது லாஜிக் இல்லா மேஜிக்... ரஜினி நிஜ வாழ்க்கையில் அதை தன் தொழிலில் சாத்தியப்படுத்திக் காட்ட முடிந்ததை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.. 52 வயதில் பாபா தோல்வி... 55ல் மீண்டு(ம்) சந்திரமுகி வெற்றி.. 57ல் உலகமே எதிர்பார்க்கும் சிவாஜி என மீண்டு(ம்) மீண்டு(ம்) கிடுகிடுவென இன்னொரு ரவுண்டுக்கு ரஜினி ரெடி...

'சூப்பர் ஸ்டார்' என்ற எழுத்துக்கள் திரையில் தெரிந்ததும் ஆரம்பித்த ஆரவாரம் உச்சம் அடைந்தது...




ரஜினி படங்களில் அவர் அறிமுக காட்சி மிகவும் எதிர்பார்க்கப்படும் விசயங்களில் ஒன்று. 'பாம்புக்கு முத்தம் கொடுப்பார்...' 'பூசணிக்காயைத் தலையால் சிதறடித்து வணக்கம் வைப்பார்..' இப்படி இயக்குனரின் கற்பனா சக்தி ரஜினியின் அறிமுகக் காட்சியில் கண்டப்படி கரை உடைக்கும்.. இந்தப் படத்தில் ஷங்கர் மெனக்கெடவில்லை.. சும்மா ஒரு சாதாரணமான அறிமுகத்தைக் கொடுத்து ரசிகர்களுக்கு 'தலைவர்' முகம் காட்டச்செய்கிறார்...

சும்மா அதிருதுல்ல...இயக்குனர் ஷங்கரும் அதிர்ந்து விட்டாரோ என்னவோ சூப்பர் ஸ்டாரை இயக்கும் அதிர்ச்சியில் திரைக்கதை என்ற ஒரு மேட்டரை சுத்தமாக ஓரம் கட்டி வைத்து விட்டு படத்தைக் கிளப்புகிறார்...

வழக்கம் போல் அதாவது சந்திரமுகி, பாபாவுக்கு முந்தைய ரஜினியாய் 'சிவாஜி' ரஜினி வருகிறார்.. நாட்டுக்கு நல்லது செய்ய விரும்பும் ஒரு நல்லவனாய் தலைவர்... துவக்கத்தில் கொஞ்சமாய் படத்தில் ஷங்கர் வாசனை அடித்தாலும்..( ஆரம்ப அலுவலக காட்சிகள்) ஷங்கரின் அரசாங்க இயந்திரம் மீதானக் கருத்துக்கள் துளிர்க்க ஆரம்பிக்கும் போது..

"ஷங்கர் கண்ணா ....COOL நான் இருக்கேன் நான் பார்த்துக்குறேன் COOL " அப்படின்னு தலைவர் குரல் ஒலித்ததோ என்னவோ... மற்ற ரஜினி இயக்குனர்கள் (கே.எஸ். ரவிக்குமார் படையப்பா, பி.வாசு சந்திரமுகி, சுந்தர்.C. அருணாச்சல்ம்) போல் சமர்த்தாய் ரஜினியுடன் வந்து பல்லேலக்கா பாட்டில் கால் அசைத்து விட்டு போகிறார் ஷங்கர்.

80 களின் மத்தியில் ரஜினியின் கால்ஷிட் கிடைத்தால் என்னக் கதைச் சொல்லுவார்களோ அதே கதையை கொஞ்சம் 90 களின் ரஜினி பாணி கலந்து.... மிக்ஸ்யில் அடித்து குழம்பு வைத்திருக்கிறார்கள்... சும்மா நேத்து வச்ச மீன் குழம்பு ருசியாய் ரசிகர்களுக்கு பக்கா விருந்து.

படத்தில் போட்டக் காசைச் சம்பாதிப்பதைப் பற்றி தயாரிப்பாளர் யோசித்தாரோ என்னவோ.. ஷங்கர் தன் உதவியாளர்களிடம் ரஜினி ரசிகர்களின் விசில் சத்தம் சம்பாதிக்க என்னவெல்லாம் செய்யலாம் எனப் போட்டி அறிவித்தாரோ என்னவோ...

அதன் பயனாய் ரசிகர்களுக்குக் கிடைத்தது..

இளமையான ரஜினியின் தோற்றம்... ஆரம்பக் காலத்தில் தொடங்கி இன்று வரை ரஜினி ரசிகர்களை வசிகரீத்த அவர் ஹேர் ஸ்டைல்... சிகரெட் தவிர்த்த அவரது இன்னப் பிற ட்ரேட் மார்க் ஸ்டைல்கள் அதாவது கண்ணாடி சுழற்றுவது.. சுலோ மோஷனில் பின்னணி இசை அதிர நடப்பது.. காமெடி கலந்த பைட்..

ரஜினியின் பழைய படங்களில் இருந்து தேடி தேடி காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்..

ஷங்கரின் அசிண்டெட் டைரக்டர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.. ஷங்கரே தேடிப் பிடித்திருந்தால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லலாம் ரசிகர்கள்.. பின்னே பழைய சுறு சுறு ரஜினியை திரையில் ஒரு 20 வயது குறைத்துக் காட்டி படம் பாக்கப் போன அனைத்து ரஜினி ரசிகர்களின் வயதையும் ஒரு இருபது குறைத்து விட்டார் அல்லவா.. ( சராசரி ரஜினி ரசிகனுக்கு இப்போது முப்பது வயது என்று வையுங்கள்) ரசிகர்களையும் வயதைத் தொலைக்க வைத்து லாஜிக் மீறிய ரஜினி மேஜிக் காட்சிகளாய் சிவாஜி திரையில் விரிந்தது...

ஒரு ரஜினி ரசிகனாய் மட்டுமல்லாமல்... சினிமா ஒரு மாயாஜால மந்திர உலகம் அதில் ரஜினி ஒரு சர்வவல்லமை பொருந்திய நாயகன் என்பதை ஒத்துக் கொண்ட பொது ஜனங்களும் திரையரங்குகளில் குழந்தைகளாய் மாறி கும்மாளமாய் சிவாஜியின் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தனர்..

சினிமா என்பது பொழுது போக்கு மட்டுமே என்பது தான் ரஜினி படங்களின் அடிப்படை கட்டுமான அமைப்பு.. காலப் போக்கில் அதில் சேர்க்கப்பட்ட இதர கட்டுமானங்கள் ஏராளம்... அந்தச் சுமையை ரஜினியும் 90களின் இறுதி வரை நன்றாகவே சுமந்தார்...

WHEN THINGS GO WRONG STICK TO THE BASICS...இது அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும்.. சினிமாவுக்கும் நடிப்புக்கும் மட்டும் விதிவிலக்கா என்ன? ரஜினி தன் அடிப்படை பலமான ஜனரஞ்சக படங்களுக்கு திரும்பி விட்டார்.. எனபதை சிவாஜியின் ஆரம்பக் காட்சிகள் ஆணித் தரமாய் அறிவுறுத்தின...

சிவாஜியின் சில்லி சூனியக் காட்சிகள்...பழக..பழக காட்சிகள்.. போன்றவை ரஜினியின் அண்ணாமலை பாம்பு பிராண்ட் நகைச்சுவைப் பாணியில் சிரிப்பை சிந்தாமல் சிதறாமல் அள்ளியது என்றால் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.

அன்று பள்ளியில் படிக்கும் போது பார்த்த எங்கள் ரஜினி அங்கிள் மீண்டும் திரையில் என்று ரஜினி ரசிக கண்மணிகள் பரவசமடைந்தது உண்மை... இரண்டு தலைமுறையை வசப் படுத்திய அந்த நட்சத்திரத்தின் ஆட்டத்தில் மெய்யாலுமே முதல் பாதி அரங்கம் பாதி சிரிப்பும் ..மீதி கொண்டாட்டமுமாய் களைக் கட்டியது...

Saturday, June 16, 2007

சிவாஜி எப்படி? - 1

"நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்ன்னு யாருக்கும் தெரியாது...ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வருவேன்"



அரசியல் பேசுவதாய் நினைத்தால் மன்னிக்கவும்...மேல குறிப்பிடப்பட்டிருக்கும் வரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1996ல் முத்து திரைப்படத்தில் சொன்ன ஒரு வசனம்,அது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அவரது நடிப்பில் தற்சமயம் வெளிவந்துள்ள சிவாஜி - தி பாஸ் படத்தின் வெளியீட்டிற்கு இந்த வசனம் மிகவும் பொருந்தும். அட ஆமாங்க.. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டு ,வியாபார மற்றும் தொழில் நுட்பக் காலதாமத்தால் ஒரு வழியாக ஜூன் 15 உலகமெங்கும் திரைக்கு வந்தே விட்டது.

சிவாஜியில் ஷங்கர் - ரஹமான் - ஏவி.எம் என ஒரு பிரமாண்டக் கூட்டணியோடு களத்தில் ரஜினி...

பாபா தோல்விக்குப் பின் சந்திரமுகி வெற்றியடைந்த நேரம்...சந்திரமுகியின் வெற்றிக்கு யார் காரணம் என்று ஒரு விவாதமே நடந்தது... சந்திரமுகி சூப்பர் ஸ்டார் படம் அல்ல.. சந்திரமுகியில் நடிகர் ரஜினியும் நடித்திருக்கிறார் அவ்வளவே என ஆங்காங்கே தீர்ப்புகள் எழுதப்பட்டன.. தமிழகத்தில் இனி சூப்பர் ஸ்டார் அத்தியாயங்கள் முடிந்து போயாச்சு என் ஆருடங்கள் சொல்லப்பட்ட நேரம் அறிவிக்கப்பட்ட படம் சிவாஜி - தி பாஸ்..

ரஜினி என்ற குதிரை வென்றது சந்திரமுகியில்.. சிவாஜியில் ரஜினியா...சூப்பர் ஸ்டார் ரஜினியா... இல்லை ஷங்கர் இயக்கும் நடிகர் ரஜினியா இப்படி பக்கம் பக்கமாய் அலசப் பட்டன ஊடகங்களில்... ரஜினியின் சம வயது கதாநாயகர்களும் சின்னப் பெண்களை விரட்டி விரட்டி டூயட் பாடிக்கொண்டிருக்க ரஜினியை மட்டும் வயது என்ற வட்டத்துக்குள் வீழ்த்த பேனா முனைகளும்.. பொட்டித் தட்டும் விரல்களும் தம் பணி முடித்தப் பின்னும் ஓவர்டைம் பார்த்தன...

ஏன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே உலக திரை வரலாற்றிலே முதன் முறையாக விமர்சனங்கள் கூட வெளியான படம் என்றால் அது ரஜினியின் சிவாஜி தான்..

சிவாஜியைச் சூழ்ந்த ஒவ்வொரு சின்ன விஷயமும் உள்ளூர் கேபிளில் இருந்து உலகத் தொலைக்காட்சிகள் வரை கொலை வெறி வியாபார நோக்கோடு அலசப்பட்டன ஆராயப்பட்டன.. ரஜினி ரசிகன் தகவல் வெள்ளங்களில் மூழ்கிவிடுமளவுக்கு சிவாஜி தகவல்கள் கொட்டப்பட்டன.. பொது மக்களும் கவனிக்கும் அளவு சிவாஜி ஊடகங்களால் ஊதி பெருசாக்கப்பட்டது...

பாடல்கள் வெளியீடு.. அதன் பின் நெட்டில் பாட்டு வந்தது.. ட்ரெயிலர் ஊசி முனை கேப்பில் ஆன் லைனில் முந்தி வந்தது..என கடந்தப் பல மாதங்களாக சிவாஜி சூடு நம்ம சென்னை வெயிலைத் தாண்டி பற்றி எரிந்தது..

சினிமா என்பது கலை என்பதாய் ஒரு புறம் மைக் கட்டிச் சொல்லப்பட்டாலும்.. அடிப்படையில் அது ஒரு வியாபாரம்.. போட்டக் காசை எடுக்கணும்.. அதுவும் சீக்கிரத்தில் எடுக்கணும்... அள்ளி எடுக்கணும்.. இது மேற்கத்திய நாடுகளில் வழக்கத்தில் உள்ள நடைமுறை..

சமீபத்தில் தான் அந்த வகை சிந்தனை நம் இந்தியாவிற்குள் வந்துள்ளது... இந்தி திரைபடங்கள் அந்த வகை வியாபாரத்திற்கு முழுசாய் மாறிவிட்டார்கள்.. நம்ம தென்னகத்து சினிமா ரசிகர்கள் தான் இன்னும் வெற்றியின் கணக்கை நாட்கணக்கோடு கூட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

மேற்கத்திய வியாபார முறையான 'கிராண்ட் ஓப்பனிங்' வகையை தமிழகத்துக்கு சிவாஜி மூலம் அதன் வெளியீட்டாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.. அதாவது ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் படததை வெளியிட்டு சீக்கிரமாய் போட்ட முதலை எடுக்கும் உத்தி.. இந்த உத்தியும் விம்ர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்.

சிவாஜி வெளியாகி மூன்று நாட்கள் ஆகி உள்ள நிலையில் சென்னைப் போன்ற பெருநகரங்களில் இந்த் முறை வெற்றி பெற்றுள்ளது எனச் சொல்லலாம்.. சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் இந்த முறையின் வெற்றி விவாதத்துக்கு உரியதே...

சிவாஜி சுற்றிய அரசியல் சர்ச்சைகளைப் பற்றி நாம் இந்தப் பதிவில் விவாதிக்க வில்லை..அதனால் அவைகளை விட்டு விடுவோம்...

சிவாஜி படத்துக்குக் கொடுத்தப் பில்டப்பு மாதிரி சிவாஜி விமர்சனத்துக்கும் ஒரு பில்டப்பு கொடுத்தாச்சு.. அப்புறம் என்ன?

ரசிகர்கள் ரஜினியிடம் இந்தப் படத்தின் மூலம் என்ன எதிர்பார்க்கிறார்கள்....

விசாரித்த வரையில் ஒரு நிறைவான பொழுதுபோக்கு படம்.. ரஜினியிடம் கடந்தக் காலங்களில் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்த அரசியல் வழிகாட்டுதல்களை இம்முறை ரசிகர்கள் குறைத்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்... 80களில் இருந்த ரஜினியிடம் அவர் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அதே எதிர்பார்ப்போடு சிவாஜிக்கான கவுண்ட் டவுண் சொல்ல ஆரம்பித்தார்கள் ரஜினி ரசிகர்கள்

இந்த முறை ரஜினியின் ரசிகர் பட்டாளத்துடன் இன்னொரு தலைமுறையும் சேர்ந்துக் கொண்டிருந்தது...

எதிர்பார்ப்புகள் எகிறி நிற்க.. பந்தயக் குதிரை சிவாஜியின் ரிலீஸ் கிட்டத் தட்டத் திருவிழாக் கணக்காய் டிவிக்களிலும் பத்திரிக்கைகளிலும் பிரமாண்டப் படுததப்பட்டு

சென்னையில் வியாழன் அன்று இரவு படம் வெளியானது...



ஏ.ஆர்.ரஹமானின் புதிய துள்ளல் இசையோடு சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் மின்ன... ரஜினி என்ற மூன்றெழுத்து திரையில் நிறைய எழுந்த ஆரவாரம் தமிழ் திரை ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமான ஒரு விழாவின் துவக்க உரை...

மேலும் சிவாஜி பார்வை தொடரும்...

சிவாஜி எப்படி? - 2

Thursday, June 14, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 7

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

இம்சை அரசியின் ஞாபகம் - 5

வைகை ராமின் ஞாபகம் - 6



"நான் ஆர்டெனரி கேர்ள் தான், வாழ்க்கையிலே நடக்கிற விஷயங்களை சாதாரணமா அதோட போக்கிலே வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ஆனா என்னை சுத்தியிருக்கிற சில பேர் புரிஞ்சுக்காமே தான் நான் ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரியா'ன்னு நினைக்கிறாங்க... அதை நான் தப்புன்னும் சொல்லலை... "

இனி....

உமா போய் நீண்ட நேரம் வரை காவேரி தனியாக அமர்ந்திருந்தாள்.. அவள் அறை ஜன்னலுக்கு வெளியே எங்கிருந்தோ இளையராஜாவின் குரலில் காதல் ஓவியம் தேனாய் குழைந்து காற்று வழி தவழ்ந்து வந்து அவள் சிந்தை நுழைந்தது..
காதல்.. காதல்..காதல்.. காவேரியின் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் மோதிச் சிதறிய அந்த வார்த்தை அவளுக்கு தலை வலியைக் கொடுத்தது...

"ஒரு பொண்ணு... ஒரு பையன்.. காதல் மட்டும் தான் அந்த உறவுக்குப் பேரா.. என்ன உலகமடா இது ?"

யோசிக்க யோசிக்க அவள் தலைவலி அதிகரித்தது.. ம்ம்கூம்..தலையை பலமா ஆட்டிகிட்டு படுக்கையில் சாய்ந்தாள்..

இப்போ ஜன்னல் வழி பாடல் மாறியிருந்தது...கண்மணியே காதல் என்பது கற்பனையோ....கண் வரைந்த ஓவியமோ... இசை மெல்ல அவளைத் தாலாட்டியது.. பாடல் வரிகளில் கவனம் செலுத்த முயன்றாள்..



காதல்..காதல்... என்ற வார்த்தை கொஞ்சம் அதிகப் படியா ஒலிக்க கண்மூடியவள்.. அவளையுமறியாமல் அதிர்ந்து எழுந்தாள்...முகம் துடைத்தாள்.. முத்து முத்தாய் வியர்வைப் பூக்கள் காவேரியின் முகத்தில் விடாது பூத்தன.. எழுந்துப் போய் தண்ணீர் குடித்து விட்டு வந்து மீண்டும் படுத்தாள்.. கண் மூடாது உருண்டு புரண்டாள்..

ஜன்னல் வழி பாடல் ராஜாவை விட்டு நகர்ந்து ரஹமானுக்கு மாறி இருந்தது.. நேற்று இல்லாத மாற்றம் என்னது.. என்று காவேரியை ச்சீண்டலாய் கேட்பபது போல் பாடியது..

காவேரி மிகவும் சிரமப்பட்டுக் கண் மூடினாள்..
அங்கு கனவினில் அவன் சிரித்தான்... காவேரியின் முகம் சிவக்க அவன் குறும்புப் பார்வைப் பார்த்தான்.. கண்களால் அவள் மனசுக்கு மொத்த உரிமைப் பேசினான்..

காவேரி வெட்கம் முழுசாய் தன்னை தின்ன அவனுக்கு அவன் கேட்பதை எல்லாம் கொடுக்க ஆயத்தம் ஆன அந்தப் பொழுதினில் அவள் கனவினைக் கலைக்க ஒரு குரல் ஒலித்தது...

கொஞ்சம் கோபமாய் கண்விழித்த காவேரிக்குத் தன் முன் எப்படி ஒரு கரடி வந்து நிற்கிறது என்று ஒரு குழப்பம் மிஞ்சியது...

மனித குரலில் பேசும் கரடி...

கண்ணைக் கசக்கினாள்..

சற்றே அந்த கரடியின் உருவம் பழக்கப்பட்டதாய் தோன்றியது...

இன்னும் கண்ணைத் தேய்த்துப் பார்த்தாள்..

கரடி உருவம் மெல்ல விலகி அங்கு உமாவின் உருவம் வந்தது.. கிராபிக்ஸ் காட்சி அது...

"உமா நீ எப்போ வந்தே? "

"அடி பாவி கரடியாக் கத்திகிட்டு இருக்கேன்.. (இதைக் கேட்டதும் காவேரி சுளுக்கெனச் சிரித்து விட்டாள். உமா எதுவும் புரியாமல் முழித்தாள்) பத்து நிமிசம்.. சரி ஒரு இருபது நிமிசம் நான் ரூம்ல்ல இல்லை அதுக்குள்ளே நான் என்னமோ அயர்லாந்துப் போயிட்டு வந்த மாதிரி அதிர்ச்சியாக் கேக்குற... கன்பர்ம்டீ.. நீ காதல்ல தான் இருக்க.. "

"பாம்பின் கால் பாம்பு அறியும்.. " அப்படின்னு உமா எக்ஸ்ட்ராவா முணுமுணுக்க.. காவேரி கொஞ்சம் தன் நிலை அடைந்தாள்.

"அது என்ன டயலாக் பாம்பு..கால்..அது இதுன்னு..."

"அது ஒண்ணுமில்ல..." உமாவின் முகத்தில் வெட்கம் லிட்டர் கணக்கில் வழிந்தது.. அசடு அதை விடவும் அதிகம் வழிந்து வெட்கத் தடங்களை அழித்தது தனி சோகம்.

"உமா..நீ யாரையாவது லவ் பண்ணுறீயா? "

"ம்" ஒற்றை எழுத்தைச் சொல்ல உமா முக்கி முனகினாள்...

"அதான் என்னை அந்தக் கேள்வி கேட்டியா...? "
காவேரி தோழியின் காதல் கதையினை விசாரிக்கும் ஆவலில் அடுத்து கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயுத்தமானாள்.

ஜன்னல் வழியே.. மீண்டும் இளையராஜாவின் இசை பாய்ந்து வந்தது..
என் மன்னவன் உன் காதலன் என்ற சிட்டுக்குருவி படத்துப் பாடல்...

"நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. நீ உன் காதலைப் பத்தி எதுவும் சொல்லமாட்டேங்குற.. நான் மட்டும் சொல்லணுமா?"" என்றாள் உமா.

"அய்யோ உமா.. மறுபடியும் சொல்லுறேன்.. வசந்தும் நானும் நண்பர்கள்.. அவ்வளவு தான்.. நான் காதலிக்கறது வசந்த் இல்ல...." என்று நாக்கை மடித்தாள்.

உமா கொஞ்சம் உஷார் தான் ஆனாலும் காதல் வந்தால் எப்படி பட்ட் உஷார் பேர்வழியும் உலகம் இருட்டு என்று ஒரு திருட்டு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடும் போது பாவம் உமா மட்டும் என்ன செய்வாள்.. காவேரியின் வார்த்தைச் சிதறல் உமாவின் கவனம் பெறவில்லை..

"அப்படின்னா வசந்த்க்கும் உனக்கும் வெறும் ப்ரண்ட்ஷிப் தானா.. ப்ச் "என்று உதட்டைப் பிதுக்கினாள்.

அப்பாடா என பெருமூச்சு விட்ட காவேரி.. "நல்ல வேளை நம்ம கதையை இவ இன்னும் நோண்டாம விட்டாளே.. இவக் கிட்ட நம்ம கொசுவர்த்தியைச் சுத்த வேண்டிப் போயிருக்கும்"

"சரி, நாளைக்கு சனிக்கிழமை... நீ என் கூட சினிமாவுக்கு வர்றீயா...காதலன் அப்படின்னு ஒரு படம்.. நல்லா இருக்குதாம்.." உமா கேட்டாள்

"ம்ம்ம்ம்..விளையாடுறீயா... படிக்கணும் அசைன்மென்ட் இருக்கு முடிக்க.. இப்போ படம் ரொம்ப அவ்சியமா..?? " சீறினாள் காவேரி..

"சரி, நீ வந்தா என் ஆள் யார்ன்னு உனக்குக் காட்டுறேன்... வசந்தும் வர்றேன்னு சொல்லி இருக்கான்..ப்ளீஸ்" என்று உரிமையாய் உருகினாள் உமா.

காவேரி பலமாக யோசித்தாள்.. கடைசியாத் தியேட்டர் போய் என்னப் படம் பார்த்தோம் யோசித்துப் பார்த்தாள்.. ம்ஹூம் ஒன்றும் நினைவுக்கே வரவில்லை.. சரி ஒரு நாள் போலாமே.. உமாவின் உள்ளம் கவர் கள்வன் யாருன்னு பாக்கலாம்.. எல்லா வாரமும் படிக்கிறோம்.. ஒரு வாரம் கொஞ்சம் ஜாலியாத் தான் இருப்போமே.. காவேரி முடிவெடுத்தாள்..

"சரி வர்றேன்.. டிக்கெட் காசு எவ்வளவு ஆகும்?" என்று தயக்கமாய் கேட்டாள் காவேரி..

"லூசு.. டிக்கெட் எல்லாம் நான் பாத்துக்குறேன் நீ வர்றேன்னு சொன்னதே போதும்" சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் உமா...

ஜன்னல் பாடல் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்று வெட்கம் சொல்லி குழைந்தது..

உமா வெளியில் போனாள். காவேரி கட்டிலில் சாய்ந்து கண் மூடினாள். மீண்டும் அவள் கனவினில் அவன் வந்து அவள் ஆசைகளூக்கு ஊஞ்சல் கட்டி அவளோடு விளையாடினான்.. விளையாட்டு கனவினை களிப்பாக்கியது.. காவேரி தூங்கிப்போனாள்.. முகம் முழுக்க சின்னதாய் ஒரு பூரிப்பு படர்ந்து கிடந்தது..

ஜன்னல் வழி மவுனம் எட்டிப்பார்த்தது.. மவுனம் கூட நல்ல இசை தான்.. ரசிக்கத் தான் தனி திறமை தேவைப்படுகிறது.

"ஏய் இந்த பச்சை சுடிதார் நல்லாயிருக்கா... ? "உமா அத்தோடு ஆறு தடவை உடை மாற்றி விட்டாள்.. அறுபது தடவை தலை வாரி விட்டாள்.. இன்னும் சில நூறு முறை அலங்காரம் சரிப்படுத்திக் கொண்டாள்..

"உமா.... நீ நேத்தே கிளம்ப ஆரம்பிச்சு இருக்கணும்.. அப்போக் கரேக்ட்டா இருந்து இருக்கும்..இன்னிக்கு கிளம்பி நாளைக்குத் தான் போவோம் போல இருக்கு..."

உமா அதற்கும் வழிந்தாள்...

"இல்லப்பா என் ஆளை ரொம்ப நாள் கழிச்சுப் பாக்கப் போறேன்.. அதான் கொஞ்சம் அழகாப் போய் அசத்தலாமேன்னு" அப்படின்னு இழுத்தாள்.

காவேரிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.. கடகடவெனச் சிரித்துவிட்டாள். உமா கொஞ்சம் நொந்துத் தான் போனாள்...

ஒரு வழியாக உமா சகல் அலங்காரங்களையும் முடித்து கிளம்ப இன்னுமொரு அரை மணி நேரம் ஆகியது. காவேரி வெள்ளையில் சிவப்பு பூப் போட்ட சுடிதாரும், சிவப்பு துப்பட்டா அது இருக்க வேண்டிய இடத்திலும் போட்டு, தூக்கி வாரியக் கூந்தலில் ஒரு சின்ன பட்டாம்பூச்சி கிளிப் அணிந்து அழகாய் இருந்தாள். உமாவின் அழகு விவரனை இங்கும் நமக்கு வேண்டாம்.. அவ அழகோ அழகுன்னு இருந்தான்னு சொல்லிக்குறேன்.

தியேட்டருக்குப் போகும் வழியில் வசந்த அவர்களைச் சந்தித்தான்.. பஜாஜ் கேலிபர் வண்டி ஒன்றை வைத்திருந்தான்..அதில் ஓ மை காட் என்று எழுதப் பட்ட வாசகம் வேறு...

மூவரும் சேர்ந்து உமாவின் காதலனுக்காகக் காத்திருக்க துவங்கினார்கள். வசந்து வழ்க்கம் போல் கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்தான். உமா பேச்சில் சுவாரஸ்யமின்றி பாதையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது கையைக் குலுக்கி கடிகாரம் ஓடுதா என்றும் பார்த்துக் கொண்டாள்...

"ம்ம் லேட்டா வந்ததே இல்ல.. எதாவது பிரச்சனையோ!!!??" அப்படின்னு உமா கொஞ்சமாய் பதட்டம் வேறு அடைந்தாள்.

அந்த இடைப்பட்ட நேரத்தில்...

"ஹே ஒரு அஞ்சு நிமிசம் வந்துடுறேன்" என்று வசந்த் எங்கோக் கிளம்பினான்..

காவேரி ஒன்றும் செய்ய முடியாமல் கைக்கட்டி கண் மூடி யோசனையில் ஆழ்ந்தாள்.. கண்மூடினாலே இப்போவெல்லாம் காவேரிக்கு அவன் முகம் தானாய் திரை கட்டி தன் கண்ணுக்குள் ஓடுவதைத் தடைச் செய்ய முடிவதில்லை.. மீண்டும் அவன்...

எவ்வளவு நேரம் அவன் நினைவாய் நின்றாளோ அவளுக்கேத் தெரியாது..

கீங்ங்ங்ங் கீங்ங்ங்ங் பைக் ஹாரன் சத்தம் கேட்டு அதிர்ந்து கண் விழித்தவள்.. ஏறக்குறைய மூர்சையாகிப் போனாள் என்றே சொல்லலாம்.. இது கனவா..!!!?? இல்ல நனவா.....!!!???

தன்னையேக் கிள்ளிக் கொண்டாள்...

வசந்த் கையில் ஒற்றை ரோஜாவோடு நின்றான்.. பக்கத்தில் உமா கலகலவென சிரிப்போடு...

ஒரு கணம் திகைத்துப் போனாள் காவேரி... அவள் மொத்த உணர்வுகளும் ஸ்தம்பித்துப் போனது.. கண்களின் ஓரமாய் சிறு துளி கண்ணீர் அரும்பியது..

இருவருக்கும் இடையில் இருந்து இவள் விழிகளை நேருக்கு நேராய் சந்தித்தப் படி புத்தம் புது யமஹா வண்டியில் இருந்து இறங்கி நடந்து வந்தான் அவன்.....

வினோத்.... காவேரி தன் வாய் திறக்கும் முன் உமா குரலில் அவன் பெயர் உச்சரிக்கப்பட்டது...

காவேரி. .இது வினோத்.. என் ஆளு.... காவேரி கண்களை வேகமாய் மூடி திறந்தாள்...

அந்த இடைவெளியில் அவள் பார்த்த வினோத்கள் மொத்தம் ரெண்டு..

அவள் கண்ணுக்குள் இருந்த வினோத்துக்கும் அவள் கண் முன்னால் நிற்கும் வினோத்துக்கும் எத்தனை வித்தியாசம்..

அவள் தடுமாறி நின்றாள்...வினோத்தைக் கண்டு அவள் தடுமாறி நின்ற அதே வினாடியில்

"காவேரி.. என் மொத்த வாழ்க்கையையும் உன்னோடு வாழ ஆசைப்படுறேன்... நான் உன்னைக் காதலிக்கிறேன் காவேரி" ஒற்றை ரோஜாவை காவேரியிடம் நீட்டினான் வசந்த்...


___________________________________________________________________

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்து வரும் (வந்த) ஞாபகங்களை நம்மோடு பகிரந்துக் கொள்ள நட்பில் சிறந்த அருமை நண்பர் ஜி,ரா.வை அன்போடு அழைக்கிறேன்;-)

Tuesday, June 12, 2007

பல்லேலக்கா பல்லேலக்கா - THE PREVIEW

சிவாஜியில் சூப்பர் ஸ்டார் அறிமுகமாகும் பாடல் காட்சி பல்லேலக்கா..பல்லேக்கா ஸ்பெஷல் ப்ரீவியூ உங்களுக்காக...

பாடல்: நா. முத்துகுமார்
பாடியது: பாடும் நிலா பாலு, ரைஹானா, பின்னி

பல்லே லக்கா பல்லே லக்கா



Female Chorus:

சூரியனோ...சந்திரனோ...யாரிவனோ..
சட்டுன்னு சொல்லு...
சேர பாண்டிய சூரனும் இவனோ...
சொல்லு சொல்லு...சட்டுன்னு சொல்லு..
(சூரியனோ... )

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ.....

Male Chorus :

ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா...
ஒட்டு மொத்த மக்களுக்கா...
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா...








Male:
காவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
ஒஹோ...தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா? நம்ம களத்து மேடு...
கம்மாகரை கரிசகாடு..
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு....

ஏய்...சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி...
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி...
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி...
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி...
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி...
கடகட கடவென கடக்கிற காவிரி...
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை...
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்...
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ..)









சரணம் 1:

Male:
எலேய்...
கிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்...
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்...
கூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,
கொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்...
வெறும் காலில் செருப்பின்றி நடந்து ,
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்...
மழலைகள் ஆவோம் !

Female:
ஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்...

Male :
ஊர் ஓரம்...அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்...
( ஏய்...பல்லே லக்கா )













சரணம் 2:

Male:
ஏலேய்..லேய்..
அஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்...
அம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...

ஏலெய்..
ஆடு மாடு மேல உள்ள பாசம்..
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்...
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்..
மண்ணு எங்கும் வீசும்...

Female:
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்!

Male:
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்..
( ஏய்...பல்லே லக்கா )





COOL !!!!!!!!!!!!!!!!!!!!!


சிவாஜி கவுண்ட் டவுண் ஆரம்பம்

tamil10