Sunday, May 24, 2009

சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி

தமிழன் என்றொரு இனம் தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு...

பாடத்திலே படிச்சதா இல்ல பெரியவங்க சொல்லிக் கேட்டதான்னு ஞாபகம் இல்ல...ஆனா அப்படி ஒரு பெருமை தமிழ் சமூகத்துக்கு ஒரு காலத்தில் கட்டாயம் இருந்தது...காலப்போக்கில் தமிழினம் எப்படியெல்லாமோ போய் எங்கெல்லாமோ சாயந்து இன்று உலகத்திலே மிகவும் அதிகமான சகிப்புத் தன்மை கொண்ட ஒரு அற்புத இனமாக மாற்றம் கண்டு விட்டது...சகிப்புத் தன்மை என்றால் அப்படி ஒரு சகிப்புத் தன்மை...எருமை மாட்டிற்கு அடுத்தப் படியாக நம்மினம் தான் சகிப்பு தன்மைக்கு அர்த்தம் சொல்கிறது...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை.. நான் தாண்டா என் மனசுக்கு ராஜா.... திரையில் வந்த பாட்டே மொத்த தமிழ் இனத்தின் வாழ்க்கை முறையாகிப் போனது..சமூகம் சார்ந்த தமிழனின் வாழ்க்கை..குறுகிய வட்டத்திற்குள் அடைய ஆரம்பித்தது...ஊருக்காக வாழ்ந்த தமிழன்...தனக்காகக் கூட வாழத் தயங்கும் ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்கள் நாம்...ஆம் தமிழ இன்று மனத்திற்குள் மட்டுமே வீரன்... தன் மனத்தளவில் அவன் தான் ராஜா...அங்கு அவன் ஆட்சி செய்வான்...ராஜ்ஜியம் அமைப்பான்... பல வீரம் தீரம் நிறைந்த சாகசம் செய்வான்.... வீட்டின் உள்ளறைக்குள் பூட்டிக்கொண்டு உலகத் தலைவர்களை எல்லாம் நியாயம் விசாரிப்பான்...பொங்குவான்...புரட்சி செய்வான்...கதவுகள் திறந்து வீதிக்கு வரும் போதோ தலை குனிந்து கொள்வான்..தமிழன் என்ற அடையாளம் வெளியே தெரியாமல் பொத்திப் பார்த்துக் கொள்வான்..வேற்று மொழி மோகம்...அயல் நாட்டு ஆடை அலங்காரம்....தன் அடையாளங்கள் மொத்தத்தையும் தொலைத்து நிற்கிறான் இன்றைய தமிழன்...

தன் பணி தன் அன்றாடத் தேவைகளுக்கு பணம் பண்ணுவது மட்டுமே என சுருங்கி போய்விட்டது தமிழினம்...கலை இலக்கியம் ஆட்சி அதிகாரம் எனக் கோலோச்சிய இனமடா நம் தமிழினம் என எதாவது பள்ளியிலோ கல்லூரியிலோ எதாவது ஒரு தமிழ் ஆசான் பாடம் நடத்தினால் அதெல்லாம் தற்காலத் தமிழனுக்கு கொட்டாவியை மட்டுமே வரவழைக்கிறது...

தன் மற்றும் தன் குடும்பம் சார்ந்த பொருளாதாரப் பிரச்சனைகளே அவன் எண்ணங்களை இறுக்கி...வேகத்தைச் சுருக்கி...அவன் வாழ்க்கையைக் கருக்கி விட்டது...20களின் இறுதியிலே பெரும்பான்மையான தமிழின இளைஞர்கள் முதுமை எய்தி விடும் அவலம் நடந்தேறி கொண்டிருக்கிறது... தமிழின இளைஞனின் அதிகப் பட்ச லட்சியம் ஒரு கல்யாணம்..ஒரு குடும்பம்...அது நடந்தால் அவன் செட்டில் ஆகிவிட்டான் என்று அர்த்தம்...அதுவும் காதல் கல்யாணம் என்றால் அவன் அடுத்த தலைமுறையின் ஆதர்ச புருசன் ஆகிவிடுகிறான்...

அந்த தாக்கம் தான் நம் தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாரும் முதலில் காதல் நாயகர்களாகவே அறிமுகமாக காரணமோ என்னவோ...தன் கூட்டுக்குள் சுருங்கி போன தமிழன்...ஜன்னல் வழியே விழும் வெளிச்சமும் திரை வெளிச்சமே...அங்கிருக்கும் யதார்த்த வாழ்க்கை மீறிய பெரிய பிம்பங்களே அவனுக்கு ஆதர்ச அவதாரங்கள் என ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன...

வீரம் சார்ந்த விளையாட்டு...அறிவு சார்ந்த கலைகள்...சமூகம் சார்ந்த வாழ்க்கை...சுயமரியாதை சேர்ந்த உயர்பண்புகள்.. இது தானடா தமிழினம்..இப்படி வாழ்ந்தவனடா உன் மூப்பாட்டன் தமிழின பெரியோன்.. என தமிழனுக்கு அடித்துச் சொல்ல இன்று ஒரு குரல் இல்லை....

சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் ஆங்கிலேயனை எதிர்த்த பொம்மு வரை அப்படி தான் தமிழின குரல் ஒலித்து வந்தது.... ஏன் 50 களில் ஆரம்பத்தில் கூட அப்படி திராவிடக் குரல்கள் ஒலித்தன...காலப் போக்கில் அந்த கரும்சிவப்பு குரல்கள் தம் ஒலி அளவை குறைத்து தாள லயத்தை மாற்றி கொண்டு போன அவலம் தனிக்கதை...

சொல்ல வருவது என்னவென்றால் எத்தனையோ தமிழ் வீரர்களின் கதையைப் படித்திருக்கிறோம்...கேட்டிருக்கிறோம்...நம் தலைமுறையில் நமக்கு அருகிலே கேட்ட ஒரு வீரக் குரலுக்கு சொந்தக் காரன்...தன்னலம் பாராமல்...இன நலம் காக்க களம் கண்டவன்... போராட்டப் பயணத்தில் தினம் ஆயுளைச் செலவழித்தவன்...இன விடுதலைத் தேடலில் தன்னை முழுமையாக அர்பணித்தவன்.. தீவுத் தமிழனின் துயர் துடைக்க துப்பாக்கி ஏந்தியவன்...

அந்த வீரத் தமிழன் செய்த மொத்த செயல்களும் புனிதம் வாயந்தவை என இந்தப் பதிவில் நான் வக்காலத்து வாங்கவில்லை....சில பல ஏற்கதகாத விரும்ப முடியாத முடிவுகளும் அவன் தம் இயக்கப் பாதையில் இருப்பது கசப்பான உண்மையே

ஆனாலும் தமிழ் தமிழன் தமிழினம் என்னும் அடையாள மிச்சங்களை நெஞ்சோரம் கொஞ்சமாயினும் தேக்கி வைத்திருக்கும் எந்த ஒரு தமிழனுக்கும் எதோ ஒரு விதத்தில் அவனைக் கட்டாயம் பிடிக்கும்...

தலைகுனிவே வாழ்க்கையின் நியதி என வாழ பழகி விட்ட தற்கால தமிழினத்தில் இன எழுச்சி காண தலை உயர்த்திய ஒற்றை தமிழன் அவன்.... அவன் வேட்கை வென்றிருந்தால் இன்னும் ஒரு சில கோடி தமிழர்களின் தலையும் நிலையும் உயர்ந்திருக்கும்......

தற்காப்புக்காக தலை குனியலாம்.... தன்மானம் தொலைத்து எக்காலமும் பணியக் கூடாது என கொள்கை உறுதி கொண்ட அந்த வீரன் வேலு தம்பிக்கு என் சல்யூட் இந்தப் பதிவு

Friday, May 22, 2009

சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி டேர் டெவில்ஸ்

"சென்னை சூப்பர் கிங்ஸ்"



Vs

"டெல்லி டேர் டெவில்ஸ்"



இந்த அரசியல்ல...சாரி ஐ.பி.எல்ல.... பைனல்ஸ் நெருங்கிடுச்சு..... யார் ஜெயிக்கப் போறாங்கன்னு ஒரே டென்சனப்பா.... 20 - 20 ஆட்டம் ஒரு மூணு.... ஏழு ரன் ல்ல எல்லாம் தோக்குறாங்க...ஜெயிக்குறாங்க... பயபுள்ளக போடுற ஆட்டம் தாங்கல்ல... அவ்வளவு என்டர்டெயின்மென்ட் போங்க.....
எப்படியோ....டில்லி டேர் டெவில்ஸூம் சென்னை சூப்பர் கிங்ஸும் தான் கடைசியிலே மோதப் போறாய்ங்கன்னு நான் நினைக்கிறேன்.... அதுல்ல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிச்சாவது ஜெயிச்சுருவாங்கன்னு நம்புவோமாக....ஆமென்

Thursday, May 21, 2009

மூன்று எழுத்து...மூன்று எழுத்து...

கூட்டு மூன்று எழுத்து

ஓட்டு மூன்று எழுத்து

கட்சி மூன்று எழுத்து

ஆட்சி மூன்று எழுத்து

தில்லி மூன்று எழுத்து

சோனியா மூன்று எழுத்து

ராகுல் மூன்று எழுத்து

திமுக மூன்று எழுத்து

பதவி மூன்று எழுத்து

அப்பா மூன்று எழுத்து

மகன் மூன்று எழுத்து

மகள் மூன்று எழுத்து

தாத்தா மூன்று எழுத்து

பேரன் மூன்று எழுத்து

இல்லை மூன்று எழுத்து

அல்வா மூன்று எழுத்து

மூக்கு மூன்று எழுத்து

ஆப்பு மூன்று எழுத்து

முடிவு மூன்று எழுத்து

வெளியே மூன்று எழுத்து...

இந்தப் பதிவைப் படித்து அனைவரும் அட்லீஸ்ட் வெளியே இருந்தாவது பதிவுக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்...

நாளையே கூட இந்தப் பதிவின் உட்பொருட்கள் மாற்றி அமைக்கப்படலாம் என இப்போதே கூறி கொள்கிறேன்...

ஏனென்றால்... மாற்று என்பது மூன்று எழுத்து....மூன்று எழுத்து...மூன்று எழுத்து...

Sunday, May 17, 2009

சற்று முன் கிடைத்தப் படங்கள் - 2



சகோதிரி மேடம்.. 7ம் போயிருச்சு... வைகோ கூட ஒண்ணு தேத்திட்டார்... அந்த ராஜ்ய சபா கணக்குல்ல ஒண்ணு கொடுத்தீங்கன்னா..அதை வச்சு என் பொழப்பை ஓட்டிருவேன்..ப்ளீஸ்
சசி நான் நிரம்ப டிஸ்டர்ப் ஆகி இருக்கேன்.. இந்தக் கூட்டணி பசங்களை எல்லாம் கேட்டுக்கு வெளியேவே நிறுத்தி கேட்டைச் சாத்து...

Saturday, May 16, 2009

மொத்தமாக வென்றது அதிமுக தான்

கருத்துக் கணிப்புகளை மீறி திமுக கூட்டணி இந்த நாடாளுமன்றத்தில் வென்றது வரலாறு ஆகிவிட்டது....தமிழகத்தில் உண்மையில் வென்றிருப்பது யார் என ஆழமாக யோசித்துப் பார்த்தால்...மறுக்கமுடியாத உண்மை தெரிய வரும்....ஆம் அதிமுக தான் வென்றிருக்கிறது.....

தென் மண்டலப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி சொன்ன சொல் என்ன....
தென் மண்டலத்தில் திமுக நிச்சயம் ஜெயிக்கும்.....சொன்னதைச் செய்தும் காட்டி விட்டார்...

வட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ...திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ... கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை... சும்மா நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது திமுக தென்மண்டலத்தில்... மதுரையில் அழகிரியும் சாதனை வெற்றி பெற்றுள்ளார்...

அதான் சொல்லுறோம் மொத்த வெற்றி பெற்றிருப்பது அழகிரி திமுக தானே.... அதாங்க அதிமுகன்னு கமுக்கமாச் சொன்னோம்..


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அப்படியே மக்களுக்கும் எதாவது நல்லது செய்யுங்க மக்கா..நல்லா இருப்பீங்க...

முடிவுகள் தமிழக நிலவரம்

தற்சமயம் வெளிவந்திருக்கும் முடிவுகளின் ஆரம்ப அறிகுறிகள் திமுக அணிக்கு வெற்றி முகம் இருப்பதை தெரிவித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு இறங்கு முகத்தையே காட்டுகிறது...

ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்...சிவகங்கையில் ப.சிதம்பரம்...தேனியில் ஆருண்...திருச்சியில் சாருபாலா தொண்டைமான்..மயிலாடுதுறையில் மணி சங்கர் அய்யர் சேலம் தங்கபாலு...கோவை பிரபு ஆகியோர் பின் தங்கியே உள்ளனர்...

பா.ம.கவைப் பொறுத்த வரை உற்சாகடைய எந்த ஒரு காரணமும் இப்பொது வரை இல்லை என்றே சொல்ல வேண்டும்

மதிமுக ஈரோட்டில் உற்சாகம் அடைந்தாலும்.... விருது நகரில் எழுச்சி பெற வில்லை என்பதே இப்போதைய நிலை....

வி.சி..சிதம்பரத்தில் வெற்றி முகம்...

சென்னையின் மூன்று தொகுதிகளிலும் திமுக முன்னிலை

தேமுதிக பாராளுமன்ற கணக்கைத் திறப்பதற்கான ஒரு அறிகுறியும் இதுவரை தெரியவில்லை

நடிகர்கள் ஜே.கே.ரீத்தீஷ், நெப்போலியன் ராமனாதபுரம் மற்றும் பெரம்பலூரில் முன்னணி

மு.க. அழகிரி சுமார் 20 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை

புதுச்சேரியில் காங் முன்னிலை

ஆரணி கிருஷ்ணசாமி முன்னிலை..மத்திய அமைச்சர்கள் பழனிமாணிக்கம், ஆ.ராசா முன்னிலை

திமுக டி.ஆர்.பாலு பின்னடைந்து மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தற்சமயம் முன்னணி

கன்யாகுமரியில் திமுக முன்னணி

தென்சென்னை அதிமுக முன்னிலை

கரூர் அதிமுக தம்பித்துரை முன்னணி

திருப்பூர் அதிமுக முன்னணி

பா.ம.க போடியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு

திமுக கூட்டணி - 28 அதிமுக கூட்டணி - 12

1.வட சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன் ( திமுக)
2.மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
3.திரு பெரும்புதூர் - டி.ஆர்.பாலு ( திமுக )
4.கன்யாகுமரி - ஹெலன் டேவிட்சன்( திமுக)
5.தூத்துக்குடி- ஜெயதுரை ( திமுக)
6.நீலகிரி - ஆ.ராசா (திமுக)
7.பெரம்பலூர் - நெப்போலியன் (திமுக)
8.மதுரை - மு.க.அழகிரி (திமுக)
9.ராமநாதபுரம் - ஜெ.கே.ரித்தீஷ் (திமுக)
10.நாமக்கல் - காந்திசெல்வன் (திமுக)
11.கள்ளக்குறிச்சி - ஆதி சங்கர் (திமுக)
12.நாகப்பட்டினம் - ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக)
13.கிருஷ்ணகிரி - சுகவனம் (திமுக)
14.தருமபுரி- தமிழ்செல்வன் (திமுக)
15.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக)
16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் (திமுக)
17.திருவண்ணாமலை - வேணுகோபால் (திமுக)

18.சிதம்பரம் - திருமாவளவன் ( விசி)

19.விருது நகர் - மாணிக் தாக்கூர் ( காங்)
20.திண்டுக்கல் - சித்தன் ( காங்)
21.தேனி - ஆருண் (காங்)
22.சிவகங்கை - ப.சிதம்பரம் (காங்)
23.திருநெல்வேலி - ராமசுப்பு (காங்)
24.காஞ்சிபுரம் - விசுவநாதன் (காங்)
25.ஆரணி- கிருஷ்ணசாமி (காங்)
26.கடலூர் - கே. எஸ்.அழகிரி (காங்)
27.புதுச்சேரி - நாராயணசாமி (காங்)

28.வேலூர்- அப்துல் ரகுமான் - (முலீக்)


29.தென் சென்னை - சிட்லபாக்கம் ராஜேந்திரன் ( அதிமுக)
30.விழுப்புரம்- எம்.ஆனந்தன் ( அதிமுக)
31.திருவள்ளூர் - வேணுகோபால் (அதிமுக)
32.சேலம் - செம்மலை ( அதிமுக)
33.திருச்சி- குமார் (அதிமுக)
34.பொள்ளாச்சி - சுகுமார் (அதிமுக)
35.கரூர் - மு.தம்பிதுரை ( அதிமுக)
36.திருப்பூர்- சிவசாமி (அதிமுக)
37.மயிலாடுதுறை - ஓ.எஸ்.மணியன் (அதிமுக)

38.ஈரோடு - கணேசமூர்த்தி ( மதிமுக)

39.தென்காசி - லிங்கம் - (கம்யூ)
40.கோவை - நட்ராஜ் (கம்யூ)

Friday, May 15, 2009

திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள்

வழக்கமான தேர்தல்கள் போல அல்லாமல் எந்த ஒரு அலையும் இல்லாமல் ஆழமாம அமைதியாக இந்த பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது...தமிழகத்தில் இந்த முறை இன்னார் தான் வெல்வார் என உறுதியாக கூற முடியாத படி இரண்டு கழகங்களும் சம பலத்தோடு களம் கண்டு மோதி முடித்துள்ளன...

திமுக தன் சொந்த வாக்கு வங்கி பலம்...ஒரளவு கூட்டணி வாக்கு வங்கியின் துணை பலம்..மற்றும் ஏராள தாரள வைட்டமின் 'ப' கொண்டு களம் சந்தித்த தேர்தல் இது..திமுகவைப் பொறுத்த வரை இந்த தேர்தல் ஒரளவு விசேஷமானது..கழகத் தலைவர் கலைஞர் பெரிதும் பிரச்சாரத்திற்கு சென்று உடன்பிறப்புக்களை உற்சாகப்படுத்த முடியாத ஒரு சூழல்..திமுக்வின் எதிர்காலத் தலைவர் எனப் பல காலமாக இளவரசராக வலம் வரும் தளபதி மு.க.ஸ்டாலின் பெருமளவு பிரச்சாரப் பாரம் மட்டுமன்றி களகண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ள தேர்தல் இது...அவருக்கு இது ஒரு சவால் எனவே கூறலாம்.. கலைஞரின் மதுரை மைந்தன் அழகிரி கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல்...திமுகவைப் பொறுத்தவரை கலைஞருக்கு அடுத்த தலைமுறை முன்னின்று சந்திக்கும் அதி சவாலானத் தேர்தல் இது...சிங்கத்தின் வாரிசுகளின் திறன் வெளிப்பட வேண்டிய தேர்தல் இது...

கள அரசியல் சூழல் அறிந்தவர்கள்..தொடர்ந்து கவனிப்பவர்கள்...தளபதியின் இந்தத் தேர்தல் அணுகுமுறையை வெகுவாக பாராட்டவே செய்கிறார்கள்...திமுக உடன் பிறப்புக்களுக்கும் தளபதியின் இந்த் மாற்றம் தித்திப்பாகவே இருக்கிறது... மதுரைக்காரரின் உற்சாகமும் உத்வேகமும் பல இடைத்தேர்தல்கள் மூலம் நாடறிந்த செய்தி...

கனிமொழி, தயாநிதி என திமுகவின் இளைய முகங்கள் வெகு சிரத்தையாய் தேர்தல் களத்தில் வளைய வந்தது திமுகவின் தேர்தல் அணுகுமுறையை பெருவாரியாக மாற்றி அமைத்து இருந்தது...திமுகவின் வரலாறு அறியாத சென்னைத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு "ப" வைட்டமின் நல்ல முறையில் அளிக்கப்பட்டதாய் களத்தில் இருந்து வரும் செய்திகள் திமுகவின் வெற்றி வேட்கையை உறுதி செய்கிறது... வந்த வைட்டமின்கள் ஒரே இடத்தில் ஒதுக்கப்படாமல் ஓட்டுக்களாய் வடிவெடுக்க உடன்பிறப்புக்கள் உண்மையாகவே பல இடங்களில் உழைத்துள்ளனர்..

இலங்கைப் பிரச்சனை திமுகவிற்கு எதிரான ஒரு அஸ்திரமாக எதிரணியால் பயன்படுத்தப்பட்டாலும்..உண்மையில் அது தமிழக வாக்காளர்களில் பெரும் பகுதியினர் மத்தியில் ஒரு பெரிய விஷயமாகவே எடுபடவில்லை...

திமுகவுக்கு எதிராக அதிமுகவின் கூட்டணி பலம்...வாக்கு கணக்கு...பத்திரிக்கைகளின் பலமான ஆதரவு..அதுவும் குறிப்பாக வட இந்திய தொலைக்காட்சி மற்றும் இணையங்களின் ஆதரவு இல்லாத ஒரு நிலைமையை உருவகப்படுத்துவதாகத் தெரிகிறது...திமுக அரசின் பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதே உண்மை நிலவரம்...

திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவர் தம் குடும்ப அரசியல் மீதும் மக்கள் தனிப்பட்ட முறையில் வெறுப்பும் கோபமும் கொண்டிருப்பது உண்மை என்றாலும்..திமுக அரசின் செயல்பாடு குறித்த பெரிய அங்கலாய்ப்பு குரல்கள் கேட்கவில்லை என்பது உண்மை...

ஒரு கழகத்தின் மீது உள்ள திருப்தியில் இன்னொரு கழகத்தை ஆதரிக்கும் தமிழக மக்கள் இந்த முறை எந்த ஒரு பெரிய அதிருப்தியையும் சந்திக்காத நிலையில்...கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினர் செய்யும் அரசியல் மீது கொண்டுள்ள கோபத்தை திமுக என்ற கட்சியின் மீதும் அது நடத்தி வரும் அரசு மீதும் காட்டுவார்களா என்பது பில்லியன் டாலர் கேள்வி...


நான் சொல்லுவது முரணாக கூட அமையலாம்..ஆனாலும் அதிக அளவில் ஓட்டுப் பதிவு...களத்தில் கடைசி நேரம் வரை ஓயாது திமுககார்கள் காட்டிய சுறுசுறுப்பு...இதை எல்லாம் வைத்து பார்த்தால் திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு எனப் படுகிறது,,,,

எல்லா யூகங்களும் இன்னும் 12 மணி வரைத் தான் தாங்கும்.. நம்ம பங்குக்கும் கச்சேரி வைச்சாச்சு...

இனி முடிவுகளை எதிர்நோக்குவோம் பாஸு

Wednesday, May 13, 2009

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,விஜயகாந்த் மற்றும் சீரஞ்சீவி

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் ஆட்சியை அசாத்தியமாகப் பிடிப்பதும் 70 களில் தென்னிந்தியாவில் மிகவும் எளிதாக இருந்த விஷயம்..குறிப்பாக தமிழகமும், ஆந்திரமும் சினிமா மோகத்தில் உச்சத்தில் இருந்த காலம் அது....தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரும்...ஆந்திரத்தில் என்.டி.ஆரும் நிகழ்த்திய அந்த அரசியல் சாதனைகள் இன்றளவும் கோலிவுட்டிலும் தொலிவுட்டிலும் மேக்கப் போடும் பச்சா நடிகர்களுக்கு கூட ஒரு லட்சியாமாக அமைந்து பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி கோட்டையே எட்டிப் பிடிக்கலாம் என மனப்பால் குடிப்பது நிகழ்கால நிதர்சனம்..

அரசியலில் வென்ற நடிகர்கள் பட்டியலை விட தோற்றவர்கள் பட்டியலே மிகவும் நீளம்....திரைப்படங்கள் அந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் உணர்வுகளை உச்சரிப்பதாக அமைந்த காலக்கட்டங்களில் கதாநாயகர்கள் தலைவர்களாக உருவாக்கப்பட்டார்கள்...உருவானப் பின் தலைவர்களாக தங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள்..எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா என அரிதாரம் பூசி பின் அரியணை ஏறிய அனைவருக்கும் இது பொருந்தும்

பின்னாளில் சினிமா வியாபாரம் மட்டுமே பிரதானம் என மாற்றம் கண்ட் பின் வந்த திரைக் கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமிருந்தாலும் அதை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவது லேசுப்பட்ட காரியாமாக இல்லை... இந்தியாவிலே மிக அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட ரஜினிகாந்த் கூட ஒரு கட்டத்தில் அரசியலோடு நெருங்கி வந்து பின் ஒதுங்கி போய்விட்டார்...

காலம் காலமாக அரசியல் களம் கண்டு உரம் பெற்ற கட்சிகள் இன்று தேர்ந்த கார்பரேட் நிறுவனங்கள் போல திறம்பட கிளை பரப்பி நிறுவகிக்கப் படுவதும்.. புதிதாக எதாவது ஒரு கட்சி களம் கண்டால் முளையிலே அதைக் கிள்ளி எறிய அவை பயன்படுத்தும் அஸ்திரங்களும் இன்றைய சூழலில் புதிய அரசியல் கட்சிகள் செல்வாக்கு பெறுவதை பெருமளவில் தடுத்து விடுகின்றன..

கிட்டத்தட்ட எல்லா பெரிய கட்சிகளுக்கும் மீடியா பலம் அதிக அளவில் இருக்கிறது...சினிமா என்னும் மீடியா மூலம் வெளிச்சம் கண்டு கோட்டை கனவுகள் காணும் நடிகர்களை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவைகளாக இந்தக் கட்சி மீடியாக்கள் உள்ளன...கட்சிகளின் முக்கிய புள்ளிகளே படத் தயாரிப்பாளர்களாக இருப்பதால் நடிகர்களை ஒரளவுக்கு கடிவாளம் போட்டே வைக்க அவர்களால் முடிகிறது

நடிகர்களாக ஜெயிக்கவே பலத்தரப்பட்ட மக்களின் ஆதரவை ஒரு நடிகன் பெற வேண்டியுள்ளது..அப்படி வென்றாலும் தற்காலத்தில் அதைத் தக்க வைக்க பெரிதும் போராட வேண்டியுள்ளது...முன் காலத்தில் ரசிகர் மன்றங்கள் மூலம் லோக்கல் வெளிச்சம் காண துடித்த பல இளந்தாரிகளை இன்று பல ஜாதிக் கட்சிகள் வளைத்துப் பிடித்து உள்ளன...நடிகனின் பின் பட ரிலீஸ்க்கு மட்டும் போகும் இந்த இளைஞர் கூட்டம் நிச்சயம் எதாவது ஒரு ஜாதிச் சங்கத்திலோ ஒரு அரசியல் கட்சியில் இளைஞரணியிலோ இருக்கிறார்கள்... மன்றங்கள் பணம் செலவழிக்கும் இடங்களாகவும் மற்றவை ஒரளவுக்கு வருமானம் கிடைக்கும் இடமாகவும் உள்ளன. அன்று எம்.ஜி.ஆர் ..என்.டி.ஆருக்கு கிடைத்த கண் மூடித் தனமான பக்தர்கள் இன்றைய விஜயகாந்துக்கும் சீரஞ்சிவிக்கும் இல்லை...

எம்.ஜி.ஆரை,என்.டி.ஆரை வெல்ல வைக்க வேண்டும் என அவர்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்பணித்து உழைக்க ஒரு பெரும் கூட்டம் தயாராக இருந்தது...அந்தக் கூட்டத்தை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வேலை வாங்கும் திறன் அந்த தலைவர்களுக்கு இருந்தது..கட்சி என்பது தங்கள் சினிமாக் கவர்ச்சியைத் தாண்டி பல விஷ்யங்களால் கட்டப்பட்டது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவர்கள்...சினிமாக் கவர்ச்சியை ஒரு பிரதான ஆயுதமாக பயன்படுத்தி கட்சியின் அடித்தளத்தை மாநிலமெங்கும் பலப்படுத்தினார்கள்..நம்பிக்கையான தளகர்த்தரகளை ஏற்படுத்தி களம் கண்டார்கள்..எதிரணியின் பலம் பலவீனம் கண்டு அதற்கு தக்க தங்களை மாற்றி கொண்டு போராடி வென்றார்கள்..

அதி முக்கியமாக தங்களுக்கு எனத் தனி அடையாளம் இருந்தது அவர்களிடம்..அந்த அடையாளததை பெருக்கி பலன் கண்டார்கள்..

இன்று களம் காணும் முக்கிய நடிகர்கள் விஜயகாந்த்..சீரஞ்சிவி...சினிமா வாழ்க்கையின் அந்தியக் காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள்...திரை வாழ்க்கையில் முடிவுரை எழுதும் தருணத்தில் அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்திருக்கிறார்கள்..அவர்களோடு இருப்பது பெரும்பாலும் அவர் தம் சொந்தக் குடும்பத்தினர்...முக்கிய தளகர்த்தர்கள் எனப் பெரிதாக அவர்களால் யாரும் உருவாக்கப்படவில்லை...

போருக்கு போக ஆயுதம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்...ஆயுதத்தை சமயோசிதமாக இயக்கத் தெரிந்தவ்ர்களோ தெரிந்திருக்க வேண்டும் என்பதோ அவர்கள் கருத்திலேயே இல்லை..வேர்களை ஆழமாகப் பதிக்காமல் வெறும் கிளைகளைப் பரப்பி கவர்ச்சிப் பந்தல் போடும் வியாபாரிகளாகவே இவர்கள் உள்ளார்கள்.. அரசியலில் எந்தவொரு ஆசானிடமும் நேராகப் பாடம் படித்து அறியாதவர்கள்...போஸ்ட்ட்ர்களில் மட்டும் பெருந்தலைவர்களின் படம் போட்டு வெத்து சவுடால் விடுபவர்கள்...அரசியல் அடிப்படை தெளிவு பெற நேரம் கூட ஒதுக்க முடியாதவர்கள்..அரசியலில் பால பாடம் கூடப் படிக்காமல் நேராக தேர்வு வந்தால் கூட பரவாயில்லை பட்டமளிப்பு விழாவுக்குச் செல்ல்த் துடிப்பவர்கள்


அரசியலில் செல்வாக்கு எவ்வளவு முக்கியமோ அதற்கும் அதிகமாய் கட்டமைப்பும் முக்கியம்.. திறமையாய் களம் கண்டு சாதிக்கக் கூடிய தளகர்த்தர்கள் முக்கியம்... இவர்களோடு அதிகமாக இருப்பது...இவர் தம் சொந்தக் குடும்பத்தினரே...


இவர்களோடு இருக்கும் ரசிகர் பட்டாளம் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கு பெற மட்டுமே லாயக்கு ஆனவர்கள்... வெற்றிக்கு உழைக்க தயார் ஆனவர்களா என்பது மிகப் பெரிய கேள்வி குறி?

ரசிகர்கள் பலம் திரையரங்குகளில் வேண்டுமானால் வசூலை அள்ள போதுமானதாக இருக்கும்...அரசியல் தேர்தல் என வரும் போது போராட்டம்...கட்டமைப்பு... திடமான நடத்தை...அசாதரண வேகம்... அசாத்திய விவேகம்... இவை எல்லாம் முக்கியம்... இது இல்லாத பட்சத்தில்...அரசியலில் வென்ற நடிகர்கள் அல்ல,,,,வெல்ல முடியாதவர்களின் பட்டியலில் தான் இவர்கள் பெயரும் இடம் பெறும்...

தற்சமயத்தில் இவர்கள் செய்ய வேண்டியது சினிமாவுக்கும் யதார்த்தக்கும் உள்ள இடைவெளியை புரிந்து கொள்வது.... முடிந்த வரை அந்த இடைவெளியை சீர் செய்து தங்கள் அடுத்த கட்டப் பயணத்துக்கு தயார் ஆவது... அதைச் செய்ய இவர்கள் தவறும் பட்சத்தில் வெற்றி வெளிச்சம் காணக் கிடைக்காத இவர் தம் ரசிகர்கள் வெகு சீக்கிரமே கோலிவுட்டிலும் டொலிவுட்டிலும் காத்திருக்கிறார்கள் எத்தனையோ வருங்கால முதல்வர்கள்... அவர்களுக்கு விசில் அடிக்க அவசரமாய் கிளம்பி போய் விடுவார்கள்

சூரியனுக்கு இலை ஆதரவு




ஓட்டுப் போட்டாச்சா...

நம்ம அய்யா கோபாலபுரத்துல்ல ஓட்டுப் போட்டுட்டார்...அம்மாவும் ஓட்டுப் போட்டாச்சு....

சற்று முன் கிடைத்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லத் தான் இந்தப் பதிவு..தகவலைச் சொன்னது நம்ம புரட்சித் தலைவி அம்மாவே தான்....

எப்படி எப்படியோ பேசி என்ன மாதிரி எல்லாமோ கூட்டணி அமைச்சா...கடைசி நேரத்துல்ல் சைக்கிள் கேப்புல்ல ஒரு புதுக் கூட்டணி அமைஞ்சிருச்சாம்...

அதாவது பூத்க்கு போய் முக்கியமா தென்சென்னை ஏரியாவுல்ல... இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....சின்னத்துக்குள்ள இப்படி ஒரு கூட்டணி அமைஞ்சுப் போனது அரசியல் வட்டாரத்துல்ல பெரும் பரபரப்பு ஏற்படும்ன்னு எதிர்பாக்குறாங்க...தேர்தல் முடிவை இந்த கூட்டணி பாதிக்குமோன்னு பதட்டம் நிலவுதாம்....

ஆக இலையை அமுக்குனா சூரியன் சிரிக்குதாம்.... சூரியனை அமுக்குனா என்ன ஆவுதுன்னு இன்னும் தெரியல்ல தெரிஞ்சதும் அப்டேட் பண்ணுறேன்....

போங்க பாஸ் போய் ஓட்டைப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பாருங்க...

Tuesday, May 12, 2009

சர சர சரத் கணக்கு



"என்றா கண்ணு... போன வாட்டி 800 சொச்சம்..... அது ஒரு தொகுதி..அதுவும் ஒரே ஒரு சட்ட மன்ற தொகுதியிலே இந்த நாட்டாமை கணக்கு...இப்போ நாடாளுமன்ற தொகுதி அதுவும் நிறைய தொகுதி...நாடளும் மக்கள் கட்சி கூட கூட்டு வேற வச்சிருக்கோம்...போஸ்ட்டர்ல்ல போட்டுருக்க நெம்பர் தெரியுதா கண்ணு...கூட்டிக் கழிச்சு அந்த நெம்பரை நாம வாங்கிரணும் கண்ணு அப்போத் தான் நாம நினைக்கிற மாதிரி இஸ்திரியை...அதான் கண்ணு வரலாறை திருப்பி எழுதணோம்... நாட்டாமைக்கு வாக்கு முக்கியம் கண்ணு....கணக்கு ....வாக்கை ஒழுங்கா கணக்கு பண்ணு....என்றா சம்முகம் எடுறா வண்டிய.... ம்ம் தேறுதல் தொடங்கட்டும் கண்ணு...."

மக்கா... பிரச்சாரம் எல்லாம் ஓஞ்சுப் போச்சு... இனிமே ஓட்டுப் போடுற பங்காளி டூ நாட்டாமை...நாட்டாமை டூ பங்காளி....

மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....ஜனநாயக கடமை அது..

கள்ளக்குறிச்சியில் தேர்"தலை" ராகம்



தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி
தலை நிக்குற தொகுதி கள்ளக்குறிச்சி
தேர்தல் தேதி வந்தாச்சி
எதிரி ஓடணும் தெறிச்சி
மறக்காம ஓட்டுப் போடுங்க அண்ணாச்சி....

வந்தாச்சு எலெக்சன்
சிம்பு தான் என் பர்ஸ்ட் சன்
திமுகன்னா ரைசிங் சன்
அதிமுகன்னா அம்மா டாமினேசன்
கேப்டனுக்கு நோ குவாலிப்பிகேசன்
நீங்க எல்லாம் இந்த நாட்டு சிட்டி சன்
மறக்காம ஓட்டு போட்டு பண்ணுங்க நல்ல செலக்சன்

ஏய் டண் டணக்க...டணுக்கு நக்க...டண் டணக்க...டணுக்கு நக்க....


VOTE IS YOUR RIGHT SO DONT MISS IT

சற்று முன் கிடைத்த படங்கள்












இந்தப் படங்கள் எல்லாம் பழசு தான்...ஆனா எனக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி தான் இணையத்துல்ல தேடும் போது கிடைச்சுதுங்கண்ணா.....

சினிமால்ல எல்லாம் பழைய படத்தை ரீமேக் பண்ணுறாங்க...அதை மாதிரி தான் இதுவும் அரசியல் ரீமேக் படம்....எப்படி...

சரி நாளைக்கு எல்லாரும் மறக்காமல் ஓட்டுப் போட்டுருங்க....அவங்க அவங்களுக்கு பிடிச்ச வேட்பாளருக்கு...நல்லது செய்வாங்கன்னு நம்புற வேட்பாளருக்கு.... ஓட்டு போடுங்க மறக்காதீங்க..

tamil10