Sunday, February 21, 2010

கொலை முயற்சி வழக்கு

நகல் படத்தில் நடித்த மண்ட நடிகர் மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது சினிமாப் பட்டி மக்கள் மத்தியில் கடும் பீதியைக் கிளப்பி உள்ளது...

காலம் காலமாக சினிமாப் பட்டியின் பல உலகத் தரம் வாய்ந்த படைப்புகளை ஆரவாரமாக வரவேற்று...உயிரைக் கொடுத்து...கையில் இருக்கும் கடைசி காசு வரைக்கும் செலவழித்து ஆராதித்து ஒப்பற்ற கலை சேவை செய்து வந்த தமிழ் ரசிக ஜனம் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கருத்து கேட்க முயற்சித்தோம்...

மண்ட நடிகர் பல காலமாக வயெலட், வெட்டிசன், மூனா, கெட்ட வாசம், ரீகன், முல்லா..போன்ற படங்களில் நடித்து அந்தப் படங்கள் திரைக்கு வந்து பலத் தரப்பட்ட மக்கள் மீது ஈவு இரக்கமின்றி அராஜகத்தைக் கட்டவிழ்த்தப் போதெல்லாம் கைக் கட்டி வேடிக்கை பார்த்த அரசு..இப்போது நகல் படம் வந்த நேரத்தில் விழித்துக் கொண்டது ஓரளவு மன ஆறுதல் தரும் விஷயமாகவே பார்க்கிறோம்....

இன்னும் சிலர் மண்ட நடிகராவது பரவாயில்லங்க...கொஞ்சம் ஓ.கே தான்..... இன்னும் நிறைய பேர் இருக்காங்க பாஸ் அவங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனையே தரலாம் பாஸ் அப்படின்னு அனியாயத்துக்கு பொங்கிட்டாங்க...அதுவும் குளவி, அழுகிய தக்காளி மகான், பல்லு, சேட்டைக்காரன் இப்படியெல்லாம் சின்னப்புள்ளங்க மேல எல்லாம் கூட டிவி மூலமா எல்லாம் கடுமையான கொலை வெறி தாக்குதல் நடத்துற சின்ன சேனாதிபதி நடிகரை எல்லாம் கூட உள்ளே தள்ளுனாப் புண்ணியமாப் போவுமுங்க..

சினிமாப்பட்டி ரசிகனின் கொந்தளிப்பால் சினிமாப்பட்டி சேனாதி பதி நடிகர்களும்...பழைய புதிய ஸ்டார் நடிகர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர்...தங்கள் மீதும் இப்படியான கொலை முயற்சி வழக்குகள் பாயலாம் எனக் கருதி முன் ஜாமீன் மனு மட்டுமின்றி இனி நடிக்கும் படங்களில் கதை மற்றும் நல்ல திரைக்கதையும் வேண்டுமெனத் தேடத் துவங்கி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...

பாஸ் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அதை அரசாங்கம் தான் கவனிக்கனும்...அரசியல் வாதிங்க தான் கவனிக்கணும்....ஒய் சினிமாப்பட்டி சிட்டிசன்களை டிஸ்டர்ப் பண்ணுறீங்க....பொதுவா ஒரு ரசிகரிடம் நாம் எக்குத் தப்பாக் கேக்குறீங்க...

பாஸ் எம்ப்பேர் சின்ன மலை....பசு மாடு வச்சு மில்க் வியாபாரம் பண்ணுறேன்...தமிழ்நாட்டுல்ல தான் பண்ணுறேன்...ஆனா நானே இதுவரைக்கும் என்னை வாழ வச்சது தமிழ் பால்...அழ வச்சது ஆந்திரா பால்ன்னு பாலை ஸ்டேட் வாரியா பிரிச்சதே இல்லை..ஆனா இந்த சினிமாப்பட்டிகாரங்க அப்படி எல்லாம் பாடும் போது மட்டும் நாங்க கைத்தட்டுணும்...எங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அவங்க வெறும் நடிகன் அப்படின்னு நாங்க அவங்களை விட்டுரணும்....படா சோக்கா கீதுப்பா மேட்டர்

அப்புறம் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் டமிலுக்கு டமிலர்க்கும் தர்றதா பாடுனா மட்டும் நாங்க காசு கொடுத்து கேக்கணும்...உண்ணாவிரதத்துக்கு வா நைனா அப்படின்னு கூப்பிட்டா மட்டும் அப்பீட்டூன்னு அவங்க சொல்லுவாங்க அதுக்கும் நாங்க ரிப்பீட்டேன்னு சொல்லணும்ன்னா என்ன நைனா...படா காமெடியா கீதுப்பா...

அப்புறம் இந்த ஹாலிவுட்ல்ல எந்த ஸ்டாருமே...மை டிரிங்க் இஸ் அமெரிக்கன் இங்கிலீஸ் மில்க்...மை பாடி லக்கேஜ் கேஸ் ஆல் பிளாங்க் டு அமெரிக்கா அப்படின்னு சொல்ல மாட்டேங்குறாங்க...சோ அவங்களை அந்த ஊர் மக்களும் பொதுவா எந்தப் பிரச்சனைக்கும் கூப்பிடுறது இல்ல....நடிகன் நடிகனா இருந்தா அவனை யார்ப்பா இதுக்கெல்லாம் கூப்பிடப் போறா...அவன் அதையும் தாண்டி ட்ரை பண்ணும் போது தான் இப்படி கொலை முயற்சியிலே போய் முடியுது...

அய்யா பயானிதி அய்யா..தொடர்ந்து நீங்க தான் டமில் படம்...அதுவும் நெல்லை டமில் படம்...கோவை டமில் படம்...சென்னை டமில் படம்ன்னு எடுத்து சினிமாப்பட்டியையும் சினிமாப் பட்டி ரசிகனையும் காப்பாத்தணும்...ப்ளீஸ்....

சினிமாப் பட்டி ரசிகர்களின் ஏகோபித்த உணர்வுகளை பதிவு செய்த படி கச்சேரி செய்திகளுக்காக சினிமாப்பட்டியிலிருந்து ஷிவா.........:)

Monday, February 15, 2010

சினிமாப் பட்டியில் இருந்து கச்சேரி செய்திகளுக்காக சுகுமாரன்

டொட்டடொய்ங் டொட்டடொய்ங்...இதனால் சினிமா பட்டி மக்களுக்கு அறிவிக்கப்படும் செய்தி என்னவென்றால் நம்ம பாசக்கார சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பெரியவருக்கு சினிமாப் பட்டி வாழ் மக்கள் சார்பா நடத்தப்படும் நாலாயிரத்து நானூத்து எட்டாவது பாராட்டு விழாவுக்கு அனைவரும் கண்டிப்பாக கட்டாயமாக பாசத்தோடும் அன்போடும் பாராட்டு மேகங்களோடும் ( மேகம் விழாவில் மழையாக பொழிய) வந்து சேர வேண்டுமாறு அழைக்கப்படுகிறார்கள்.....மிக முக்கியமாக விழாவுக்கு தலைமையேற்க வரும் அகில உலக சூப்பர் ஸ்டார்கள்....கேலக்சி நாயகன்கள்...பெரிய தளபதிகள்..குட்டி தளபதிகள்...வாய்ஸ் கேப்டன் ஸ்...மற்றும் மேடையேற போகும் அனைத்து வருங்கால சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் ஒரு நீளமான உரையை....அதாவது இது வரை கலந்து கொண்ட பாராட்டு விழாக்களில் தெரிவிக்காத பாராட்டுக்களை கொண்ட ஒரு உரையை தயார் செய்து முன் ஒப்புதலுக்காக அறிவான பஞ்சாயத்து ஆலய..ஆபிசில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

சினிமாப் பட்டியின் உயர்வான மக்களே...தமிழை தன் உயிராய் மதிக்கும் நம் பஞ்சாயத்து தலைவரை மகிழ்விக்கும் படி நம் தற்கால சினிமாவில் வரும் இலக்கிய கருத்து செறிவான..ஓமகசீயா...நாக்கமுக்க..ரண்டக்க..பல்லேலக்கா..டையலாமா..போன்ற இனிய கருத்து ஆழம் நீளம் அகலம் உள்ள பாடல்களை பாடி...சீரான தமிழ் உடைகளை உடுத்தி உடுக்கை அடித்து...உலக்கை இடித்து....மானாடா மயிலாட....காண்பவருக்கு எல்லாம்....ஆனந்த கூத்தாட....நிகழ்ச்சிகள் அமைக்க வேண்டும்

விழா மேடையின் இரு பக்கமும் பஞ்சாயத்து தலைவரின் பிஞ்சு மனம் விம்மும் போது உடன் விம்ம அப்படியே தும்ம....குரல் கம்ம...கண் கலங்க....அகில உலக நாயகன் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....

கடைசியாக....விழாவுக்கு வரும் சினிமாப் பட்டி மக்களுக்கு அழைப்பு சீட்டோடு ஒரு துண்டு சீட்டும் வழங்கப்படும் அந்த சீட்டில் தங்கள் பெயரை எழுதி கருப்பும் சிவப்புமாய் முத்திரை குத்தி அங்கிருக்கும் பஞ்சாய்த்து அதிகாரிகளின் கையில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

விழா முடிவில் துணை பஞ்சாயத்து தலைவரும்...மத்திய முனிசிபாலிட்டி கமிட்டி சேர்மனும் சேர்ந்து மூன்று அதிர்ஷ்ட்டசாலிகளைத் தேர்ந்து எடுப்பார்கள்...அந்த மூன்று பேருக்கும்

பீலாகதி வாரனின் டின் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படம்...மற்றும் அதோகதி வயலின் ரெட் பெயிண்ட் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம்... வைகை ஏரியா லவுட் வைன் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம் ஆகியவற்றில் நடிக்காமல் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க சிறப்பு அனுமதி இனாமாக அளிக்கப்ப்டும்...ஆகவே பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுங்கள் அனுமதியை வெல்லுங்கள்..டீலா நோ டீலா....சினிமா பட்டி மக்களே

இந்த அறிக்கை சினிமாப்பட்டி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...இந்த அறிக்கை கேட்க பலரை நாம் தொடர்பு கொண்ட போது பலரும் இலங்கை தமிழர்களின் நலன் வேண்டி பஞ்சாயத்து தலைவர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க காலவரையற்ற மவுன விரதம் இருப்பதாய் சைகை மொழியில் தெரிவித்தனர்...

அலட்டி நாட் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த மண்ட நடிகர் மட்டும் வீரமா வாயைத் திறந்து...ஐய் ஆ....இவ்ங்க ஏன்னை மெரட்டுராங்க..ஆனாலும் நான் பேஸ் மாட்டேன்...நீங்க சொல்லுற வர்க்கும் ஏதுவ்வும் பேஸ் மாட்டேன்...ஆனா சொல்லிடுங்க ஐய் ஆ...ப்ளீஸ்...நான் பேஸ்ணும்..நறைய்ய பேஸ்ணும்...அப்படின்னு தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்...


இப்போ தலைப்பை படிச்சு பதிவை முடிங்க....

டிஸ்கி: இந்த அறிக்கையும் அதில் இருக்கும் கருத்துக்களும் சும்மா லுடுலுடுவாயி மட்டுமே...அது யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடுவன அல்ல....இது மெய் மெய் மெய்...மெய் மட்டுமே....

tamil10