Saturday, November 27, 2010

நந்தலாலா

மழை மெல்லியதாக தூவும் வெள்ளிகிழமை மாலையிலே கடற்கரையோர பிராத்தனா திரையரங்கில் நேற்று நந்தலாலா திரைப்படம் பார்த்தேன்...அஞ்சாதே...சித்திரம் பேசுதடி திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த மிஷ்கின் இயக்கம்...அதற்கு அப்பால் படத்துக்கு விலாசம் சொல்லும் முக்கிய அம்சம் இசைஞானியின் இன்னிசை...

ஒரு வரி கதை...தாயைத் தேடிச் செல்லுன் இரு உயிர்களின் பயணம்...

ஒருவன் பள்ளி சிறுவன்...இன்னொருவன் மன நலம் குன்றியவன்...இரு வேறு காரணங்களுக்காக தாயைத் தேடி இருக்கும் சூழல் பெயர்ந்து இருவரும் பயணப்படுகிறார்கள்...பயணம் இருவரையும் இணைக்கிறது...போதுமான பணமின்றி அவர்கள் பயணம் எப்படி தொட்ர்கிறது...வழியில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்...சம்பவ்ங்கள்....என் நீள்கிறது படம்...



பயணம் தொட்ர்கதை என்றால்...வழி நெடுக அவர்கள் சந்திக்கும் மனிதர்களும் சம்பவங்களும் குறுங்கதைகள்....அழகான திரைக்கதை...

சின்ன சின்ன பாத்திரங்களைக் கொண்டு கோர்வையாக கதையை சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார் மிஷ்கின்....போலீஸ்காரர்...லாரி டிரைவர்....பள்ளி மாணவி....இளநீர் கடை வியாபாரி....பைக் பயணிகள்...என ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதம்...நடிகர்களும் அழகாக நடித்துள்ளனர்...பலரும் புதுமுகங்கள் என நினைக்கிறேன்..

மிஷ்கின் காட்சிகளின் வழியே கதை சொல்வதில் மகாக் கெட்டிக்காரர்...கேமராவை ஒரு தேர்ந்த கதைச் சொல்லியாகப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளார் ..படத்தின் எழுத்துக்கள் போடும் போதே கேமரா அழகான ஒளிபதிவில் மிரட்டுகிறது...நீரில் வளைந்தாடும் நாணலில் அழகு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.... பயணப் பாதைகளின் தன்மைக்கு ஏற்ப கேமராவும் உடன் பயணிக்கிறது...கேமரா நிறைவு

சிறுவனின் நடிப்பு அளவான நிலையில் திருப்தி தருகிறது....மிஷ்கின் தான் கதையின் நாயகன்....மனநலம் குன்றியவராக அவர் போதுமான அளவு செய்துள்ளார் எனவே சொல்லலாம்....மிஷ்கினின் நடிப்பில் அஞ்சாதே படத்தில் வ்ரும் மாற்று திறனாளியின் (அவர் பெயர் ஞாபகம் இல்லை)உடல் மொழியும் குரல் மொழியும் அப்படியே பிரதிபலிக்கிறது...அதை அவர் சற்று தவிர்த்து இருக்கலாமோ...

அஞ்சாதே கத்தால கண்ணழகி ஸ்னிக்கிதாவும் படத்தில் இருக்கிறார்...படம் முடியும் நேரத்தில் வருகிறார்...அவர் பங்குக்கு நடிக்கிறார்....கவர்ச்சி தவிர்த்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரம் ஏற்று நடித்திருப்பதற்கு அவரை மனதாரப் பாராட்டலாம்....


படத்தின் முடிவு என்ன...இருவரும் தங்கள் தாய்களைச் சந்திக்கிறார்கள்...சந்திக்கும் முன் தாய் மீதிருந்த எண்ணங்கள் இருவருக்குமே மாறுகிறது....அழுத்தமாய் ஆனால் மெல்லியதாக ஒரு புன்னகையை வரவழைத்துப் படத்தை முடித்திருக்கிறார் மிஷ்கின்....

எல்லாரைப் பத்தியும் சொல்லியாச்சு....படம் பாக்கப் போன முக்கிய காரணகர்த்தாவைப் பத்தி சொல்லணுமே....ராசா எப்பவும் ராசா தான்....பின்னணி இசையில் விருந்து பரிமாறியிருக்கிறார்...சில இடங்களில் இசை மிரட்டுகிறது...சில இடங்களில் தாலாட்டுகிறது...சில இடங்களில் நெகிழச் செய்கிறது...ராஜாவின் இசை ராஜ்ஜியம் நந்தலாலாவில் பரந்து விரிகிறது... ராஜா ரசிகர்களுக்கு இன்னிசை மழை

படத்தில் வழக்கமான தமிழ் சினிமாவின் கிளிஷேக்களும் இல்லாமல் இல்லை...முதல் பாதி கொஞ்சம் வேகம் கம்மி..நீளம் அதிகம்...அடுத்த பாதி சட்டெனப் போய் முடிகிறது...

மிஷ்கின் சொல்ல வந்திருப்பது...உலகத்தில் யாரும் அனாதை இல்லை...ஒண்ணுக்கு ஒண்ணு துணையாக யாரோ இருக்காங்க என்பதை தான்...அதை ராஜாவின் ராகத்தில் யேசுதாசின் குரலில் கேட்பது சுகமோ சுகம்...

மொத்ததில் நந்தலாலா ம்சாலா நெடி தவிர்த்த தமிழ் சினிமா எதிர்பார்க்கும் ரசிகர்கள் போய் பார்க்கலாம்...ராஜா ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள்...எப்பவும் ராஜா ராஜா தான்ன்னு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்...

tamil10