Thursday, April 10, 2008

சில தலைவர் படப் பாடல் வரிகள்



உப்பிட்டத் தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்..
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்...
கட்சிகளைப் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்...
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்....


உன்னைப் பத்தி யாரு அட...என்னச் சொன்னப் என்ன..
அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...
அட மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
ஆகாயம் தான் அழுக்காகதுன்னு சொல்லு...

மூன்றாம் பிறை மெல்ல மெல்ல
முழு நிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா..... ரீப்பீட்டு


சிங்கம் ஒன்று புறப்பட்டதே...


அதற்கு காலம் கனிஞ்சிருக்கு...

நேரம் நிறைஞ்சிருக்கு...

Saturday, April 05, 2008

வந்தார் ரஜினி



வருவீயா .. வரமாட்டீயா.. தலைவா.... அப்படின்னு ஒட்டு மொத்த மீடியாவும் கேள்வி கேட்டுகிட்டு இருந்த நேரத்தில் வந்தார் ரஜினி... தலைவர் ரஜினிகாந்த் நேற்று உண்ணாவிரதத்தில் பேசிய பேச்சின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன். இதற்காக வேதனைப்படுகிறேன்.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. கவர்ன்மென்ட் இருக்கா, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.

இப்ப நம்மளோட நிலம் இருக்கு... அதை வேறொருத்தர் சொந்தம்னு சொன்னா, பட்டா இருக்கா எடுய்யான்னு கேட்டு, அது இருந்தா ரிஜிஸ்திட்ராரே ஒதைச்சு அனுப்பிச்சுடுவார்...

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா ஒதைக்க வேண்டாமா...

இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டிருக்காங்க... விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன வருத்தம்னு சொன்னா... ஒரு தேசியக் கட்சி... மிகப்பெரிய தேசியக் கட்சி (பாஜக), அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர் (எதியூரப்பா).. இப்ப வந்து இந்த விஷயத்தைத் தூண்டிவிடறார். என்ன கேவலம் பாருங்க.

என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடா அவுங்க இவுங்க எல்லாத்தையும் விட்டுடுங்க...

பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு பெரிய தலைவர் வந்து இதைத் தூண்டிவிடுறார். எதுக்கு? எலக்ஷன்... தேர்தல் வருது. அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் (காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா) அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு (மகாராஷ்டிர கவர்னராக இருந்தவர்), இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார்.

என்ன கேவலங்க இது. மக்கள் என்ன முட்டாள்களா... அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா.... மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க முட்டாள்கள் அல்ல...

அரசியல்வாதிகளே உண்மையைப் பேசுங்க. சத்தியம் பேசுங்க. சுயநினைவோட பேசுங்க. (நெஞ்சில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்... அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.

இங்க இருக்கிற நீங்கள்ளாம் (மக்கள்) தெய்வத்துக்குச் சமம்... எனக்குத் தெரியாதா... உண்மை, சத்தியம், நியாயம் அதுதான் என்னிக்குமே சோறுபோடும். என்னிக்குமே காப்பாத்தும்.

சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காங்க...
இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.

நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.

இதை மீண்டும் மீண்டும் வளர விடாதீர்கள், காவிரி பிரச்சினை மாதிரி. பத்து வருஷம் ஆச்சி, இந்திய அரசு இந்த விஷயத்தில் (ஓகேனக்கல் விவகாரத்தில்) என்ஓசி போட்டு.

அறிவோட செயல்படுங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது.

இப்பவே, இந்த நிமிஷமே ஏந்த வேலையைச் செய்யணும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இப்போது கிடையாது.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்காதீர்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டுங்க... என்றார் ஆவேசமாக.

பேச்சு விவரம் : நன்றி தட்ஸ் தமிழ்

Tuesday, April 01, 2008

கச்சேரி வித் ஜி.ரா மற்றும் கே.ஆர்.எஸ்

வணக்கம் மக்கா,

பொதுவாக் கச்சேரி வச்சுக் கொஞ்ச் கேப் விழுந்துப் போச்சு அதுன்னால்லா யாருக்கும் எந்த டேமேஜுமில்லன்னு வைங்க... இப்போ கச்சேரி வைக்க வேண்டிய அளவுக்கு ஒரு சரித்திர புகழ் வாயந்த சம்பவம் திங்கள் மாலை அடையார் காபி டேவில் நடந்த படியால இந்த்க் கச்சேரி..

கண்டேன் ஜி.ரா வை.... இப்படித் தான் இந்தப் பதிவுக்கு தலைப்பு வச்சிருப்பேன் அவர் கூட இன்னொரு வி.ஐ.பி வராமல் இருந்திருந்தால்...முதல்ல ஜி.ரா பத்திச் சொல்லணும் நான் பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் நான் படித்து ரசிதத பதிவ்ர்களில் ஒருவர்...கிட்டத்தட்ட மூணு வருசம் ஆச்சு நானும் பதிவெல்லாம் எழுத வந்து....அவரது எழுத்துக்களில் எப்போதும் நிறைந்திருக்கும் கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்தமான மட்டுமின்றி நான் வியக்கும் விஷயமும் கூட...முடிந்த வரை அதை என் பதிவுகளிலும் பின்பற்ற நான் முயலுகிறேன்...

ஜிராவின் கதைகளுக்கு மட்டுமன்றி அவருடைய பயணக்கட்டுரைகளுக்கும் நான் விசிறி.. என்னக் காரணமோ இப்போதெல்லாம் அவர் அதிகமாய் பயணக் கட்டுரைகள் எழுதுவது இல்லை.. அவர் எழுத வேண்டும் என்பது என் அவா..நல்லதொரு சினிமா ரசிகர்...அவரோடு ஒரிருமுறை தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன்... ஆனா நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை...மஞ்சச் சொக்காப் போட்டுகிட்டு படு ஸ்மார்ட்டா வந்திருந்தார் ஜிரா..

ஒலக லெவல்ல அவர் கூட என்னத்தைப் பேசறது அப்படின்னு நாலு நாள் வளத்த தாடியை பிச்சிகிட்டு இருக்கும் போது போன் பண்ணார் ஜி.ரா... நான் தனியா வர்றல்ல...அப்படின்னு அவர் விட்டச் சின்னக் கேப்ல்ல மோனிகா சால்சா பாலையும் கூட கூட்டிட்டு வரப் போறாரோன்னு நினைச்சேன்... ஆனா அவரே கேப்பை பில் பண்ணார்..அவர் கூட வர்றதா சொன்ன அந்த வி.ஐ.பி... ஆன்மீகச் சுனாமி... சங்கம் வந்து நகைச்சுவை விருந்து பரிமாறிய சிரிப்புச் சித்தர் அன்பர் கே.ஆர்.எஸ்..

ஆகா ஓலகம் சுற்றும் வாலிபர் ஒரு பக்கம்ன்னா இன்னொரு பக்கம் பக்தி இலக்கிய வித்தகர் வேறவா... வாய்ல்ல கம் தடவாமலே கம்ன்னு இருந்தா தான் நம்ம பொழப்பு ஓடும்ன்னு முடிவு பண்ணிகிட்டேன்...

முதல்ல நாங்க சந்திக்க நினைச்ச இடம் அடையார் ஷேக்ஸ் அன்ட் க்ரீம்ஸ் ஆனாப் பாருங்க... இப்படி ஒரு ஆன்மீகச் சுனாமி வந்தா இடம் தாங்காதுன்னு மராமத்து பணி நடப்பதாய் சொல்லிக் கடையைச் சாத்திட்டாங்க...

அப்புறம் அப்படியே இந்திரா நகர்ல்ல தேடி அலைஞ்சு திரிஞ்சதுல்ல அமைஞ்ச இடம் தான் காபி டே...வரும் போதே முகமெல்லாம் பூரிக்க புன்னகை ஏந்தி இளமைத் துள்ளலோடு வந்தார் நம்ம சிரிப்பு சித்தர்... அதிக அறிமுகம் இல்லன்னாலும் முதல் சந்திப்புல்ல அப்படி ஒரு நட்பு பூத்திருச்சுன்னாப் பாருங்களேன்...

காபி கடையிலே காபிக்குச் சொல்லிட்டு.. கூட பிரட் பன் எல்லாம் சொன்னோம்... அதுக்குக் காத்திருந்த நேரத்திலே கும்மியை ஆரம்பிச்சோம்... ஜி.ராவுக்கு இன்னொரு பிரபல பதிவர் கொடுக்கச் சொன்னப் பரிசைக் கொடுத்துட்டு ஒரு சின்ன விளையாட்டு நடத்தினோம்...

பரிசு கொடுத்தப் பதிவர் யார்ன்னு ஜிராவைக் கண்டுபிடிக்கச் சொன்னோம்... ஜி.ராவும் கரெக்ட்டா தப்பா சில பெயர்களைச் சொன்னார்... பரிசுப் பொருளைப் பார்த்து ரொம்ப நேரம் யோசிச்சார்.. யோசிச்சுகிட்டே இருந்தார்... அதுக்குள்ளே காபியைக் கலக்கிக் கொண்டு வந்துட்டாங்க...

நம்ம கே.ஆர்.எஸ்குள்ளே இருந்த அம்புட்டு புகைப்படம் ஆர்வமும் பீறிட அந்தக் காபியை கன்னாபின்னான்னு போட்டோ எடுக்க ஆரம்பிச்சுட்டார்.. ஒரு கட்டத்துல்ல காபியே போதும்ய்யா... என்னைக் குடிக்கப் போறீயா...இல்ல அப்படியே கவுந்துரவான்னு கேக்க ஆரம்பிச்சுருச்சுன்னாப் பாருங்க...

கே.ஆர்.எஸ் கலையார்வம் காபியைத் தாண்டி காபி டே சுவத்துல்ல இருந்த ஒரு புலி மேலே பாஞ்சுது... ஆனாப் பாருங்க.. நம்ம ஜி.ரா இன்னும் யோசிச்சு முடிக்கவே இல்ல... நிலவரம் கலவரமாப் போயிட்டு இருந்துச்சு.. நான் காபியை கடக்குன்னு குடிச்சுட்டு நிமிந்தா... என்னை புலி பக்கமாப் போய் நிக்கச் சொல்லி போட்டோவா எடுத்து தள்ளுனார்...

இன்னும் ஜிரா யோசிச்சுகிட்டே இருக்க.. அப்படியே அசால்ட்டா களத்தில் குதிச்ச கே.ஆர்.எஸ் சரியாப் பதிவர் யாருன்னு சொல்லி அசத்துனார் பாக்கணும்... அதான் கே.ஆர்.எஸ்ன்னு சொல்லத் தோணுச்சு,,

ஒரு வழியா யோசனை எல்லாம் முடிஞ்சு வெளியே வந்த ஜிரா நம்ம கும்மியிலே என்டிரி ஆனாரு...மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை என்னையும் கவனிக்க வச்ச ஜிரா... இந்த ஆன்மீகச் சிங்கம் தமிழ் கலையுலகுக்கு கிடைக்கவேண்டிய ஒரு தவப்புதல்வன் அப்படின்னு டாபிக் மாத்துனார்....

ஆகா.... விவாஜிக்கு அப்புறம் நாமும் சரியானக் கதைச் சிக்காம சைலண்ட்டாவே இருக்கோமேன்னு பீலீங்ல்ல இருந்த என்னையும் உசுப்பி விட்டார்...கே.ஆர்.எஸ்க்கு ஏத்த கதையாக இருந்தால் தானே தயாரிப்பதாகவும் அயல்னாடுகளில் சூட்டீங் நடத்த ஆவனச் செயவதாகவும் வாக்கு கொடுத்தார்...

அப்புறம் என்ன சூடான காபியும் சிக்கன் க்ராசன்ட்டும் உள்ளே போய் மூளையை முட்டி எழுப்ப... அழகான கதை ஒண்ணு ரெடி ஆச்சு... படத்துக்குப் பேரும் வச்சோம்....

இந்த லோகத்தில் நானும் அழகப்பன்

கே.ஆர்.எஸ் மூன்று வேடங்களில் நடிப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்... நாலாவதாக நாயகி வேடத்திலும் அவரே நடிக்க ஜி.ரா ஆலோசனை வழங்கினார்.. அதையும் புன்முறுவலோடு கே.ஆர்.எஸ் ஏற்றுகொண்டார்...படத்தில் பல கோலிவுட், பாலிவுட், டொலிவுட் மற்றும் ஹாலிவுட் முக்கிய பிரபலங்களோடு நம் பதிவுலகின் அதி முக்கிய பிரபலங்களும் இந்தப் படத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது தயாரிப்பாளர் அளித்த உறுதி...

அப்புறம்... கே.ஆர்.எஸ் பகிர்ந்த முக்கிய செய்திகள் அடுத்து வரும் பதிவுகளில்....

சும்மா ஒரு சின்ன ட்ரெயிலர்.... மேயர் வீட்டில் இளாவும் ஆப்பிள் மரமும்.... பாபாவுக்கு பிடித்த பாபி....விரைவில் எதிர்பாருங்கள்....

இப்போதைக்கு இம்புட்டு தான்.. வர்றட்டா

tamil10