Monday, December 25, 2006

தனுஷ் இன் திருவிளையாடல் ஆரம்பம்

வணக்கம் மக்கா,

ரொம்ப நாளைக்குப் பிறவு தனுஷ் நடிச்சப் படம் ஒண்ணைத் தைரியமாப் பாக்கப் போனேங்க... நம்ம சிவாஜி கணேசன் அன்னிக்கு நடிச்ச டாப் கிளாஸ் படமான திருவிளையாடல் படத்திலிருந்து டைட்டில் மட்டும் கடன் வாங்கிட்டு கலகலன்னு ஒரு படம் எடுத்துருக்காங்க...

கதை ஒரு வரி தான்.. ஏழைப் பையன் பணக்காரப் பொண்ணைக் காதலிக்கிறான்... கைப்பிடிக்கிறானா?அதுக்குத் திரைக்கதை அமைத்து ஆட்டம் போட்டிருக்கிறார் பூபதி பாண்டியன்.

நல்ல சினிமாவை ரசிக்க ஒரு கூட்டம் உண்டு அது போல் ஜனரஞ்சக சினிமாவை ரசிக்கவும் ஒரு கூட்டம் உண்டு. இந்தப் படம் பக்கா ஜனரஞ்சகப் படம்.

திரு என்னும் தனுஷ் குரு என்னும் உங்கள் செல்லம் பிரகாஷ் ராஜ் (டைட்டில் கார்டில் அப்படித் தான் பட்டம் போடுறாங்கப்பா)தங்கை ஸ்ரேயாவை லவ்வுகிறார். இந்தக் காதலில் மட்டுமின்றி தன் வாழ்க்கைக் குறிக்கோளிலும் வெற்றியடைய திரு செய்யும் விளையாடல்களைத் தமிழ் சினிமாப் பார்முலாப் படி காமெடி, ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், பாடல்கள், சென்டிமென்ட் என சரி விகிதத்தில் கலந்து கொடுத்து தயாரிப்பாளரின் கல்லாக் கலெக்ஷனை நல்லாவே நிறைக்கிறார் இயக்குனர்.

தனுஷ்க்கு இது இன்னொரு திருடா திருடின்னு சொல்லலாம்... பலத் தோல்விப் படங்களுக்குப் பின் கொஞ்சம் எழுந்து நிற்க இந்தப் படம் உதவும்.அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி இன்னொமொரு நடுத்தர குடும்பத்து விடலைப் பையன் ரோல். தனுஷ் நல்லாவே பயன்படுத்தியிருக்கார். கலகலப்பாய் வந்துப் போகும் வேடம். அதற்கு கச்சிதமாய் பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளில் ஜாக்கி சானின் பாணியை முயன்றிருக்கிறார். ஒரளவு செட் ஆகிறது. அந்த ஹேர் ஸ்டைல் தான் கன்டினியூட்டி காமெடி செய்கிறது.

ஸ்ரேயா...வருகிறார்... காதலிக்கிறார்.. டூயட் பாடுகிறார்... அவ்வப்போது அழுகிறார்... மீண்டும் வருகிறார்... காதலிக்கிறார்.. டூயட் பாடுகிறார்... தமிழ் சினிமாக்களின் இலக்கணம் மீறாத ஒரு கதாநாயகி வேடம் அவருக்கு.

செல்லம் பிரகாஷ் ராஜ்க்கு இன்னொரு அம்சமான அண்ணன் வேடம். தங்கைக்காக எதையும் செய்யத் துணியும் அண்ணனாய் அல்லோலப் படுத்துகிறார். கொடுத்த வேடத்தை நிறைவாய் செய்திருக்கிறார். என்னம்மா கண்ணு பாடலில் கொஞ்சம் ஏமாற்றுகிறார்.

இளவரசு பிரகாஷ்ராஜின் செயலராக சிரிப்பிற்கு தீனிப் போடுகிறார். கருணாஸ், சுகுமார் அன்ட் கோ முழுவதும் செய்ய முயலும் காமெடிகளை இளவ்ரசு தனியாளாகச் செய்து கைத்தட்டல்களை அள்ளிப் போகிறார்.

இவர்கள் தவிர தனுஷின் பெற்றோராக வரும் மௌலி, சரண்யா, தம்பியாக வரும் சின்னப் பையன் எல்லோரும் பாத்திரங்களைப் பொருத்தமாகச் செய்துள்ளனர்.

பாடல்கள் திரைக்கதைக்கு வேகத் தடைகள். இமான் இசை சுமார் ரகம். பின்னணி இசைக்கான வாய்ப்புக்கள் அதிகமில்லை.

லாஜிக் மறந்து சிரிக்க..ரசிக்க... நிச்சய உத்தரவாதம் இந்த திருவிளையாடல் ஆரம்பம்

Friday, December 22, 2006

வாங்கய்யா புள்ளகளைப் படிக்க வைப்போம்

வணக்கம் மக்கா,

பெருந்தலைவர் காமராசரை எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்... அவரோட கதைய அப்பாச் சொல்லக் கேட்டு எனக்கும் அவரைப் பிடிச்சிப் போச்சு...

முக்கியமா அவர் கல்விக்காக செய்த பணிகள் கேட்டு அசந்துப் போயிருக்கேன்...

அதுவும்..

"வாங்கய்யா நாமப் புள்ளகளைப் படிக்க வைப்போம்ன்னு" தலைவர் ஒரு திட்டம் போட்டப்போ...

"அய்யா.... இது எல்லாம் ஆவுறதில்லன்னு மண்டையைச் செரிஞ்கிட்டு நின்ன அதிகார வட்டத்தைத்

தலைவர் "ஏன்ய்யா..? ஏன் ஆவாதுன்னு?" காரணம் கேப்பார்...

"அவ்வளவு பணம் நிதியிலே இல்லங்கய்யான்னு" பதிலை பம்மி காரணமாச் சொல்லுவாயங்க

"நீங்க எவ்வள்வு பணம் ஆகும்ண்ணு மட்டும் சொல்லுங்க, அதுக்கு வேண்டியதை நான் போய் பிச்சை எடுத்துட்டு வந்தாவதுத் தர்றேன்ம்பாரு.." தலைவர்

கூடவே அழுத்தமாச் சொல்லுவார்... "வாங்கய்யா புள்ளகளைப் படிக்க வைப்போம்ய்யா.. அவன் படிச்சப் படிப்பை வச்சு நாளைக்கு நாட்டை அவன் பாத்துக்குவான்னு... "

இந்தாங்க இங்கிட்டு நம்ம நண்பர் ரவி கல்விக்குன்னு நம்ம கிட்ட கையேந்தி நிக்குறார் ..

அள்ளிக் கொடுக்க முடிஞ்சவங்க அள்ளிக் கொடுங்க.. கிள்ளிக் கொடுக்க நினைக்கறவங்க கிள்ளிக் கொடுங்க...

பாவம் புள்ள படிச்சுட்டுத் தான் போகட்டுமே....என்ன மக்கா நான் சொல்லுறது..

Tuesday, December 19, 2006

சிவாஜியின் மகா அவதாரம்!!!


என்னச் சொல்ல?
தலைவா போட்டோப் பார்த்தே பிகிள் அடிக்க வைக்குறீயே!!!!!!!

Monday, December 18, 2006

வாழக்கைக் கச்சேரி

வணக்கம் மக்கா,

இந்த வாரமும் மறுக்க வெயிலை... (படத்தத் தான்) பாக்க ஒரு குரூப் என்னிய கார் எல்லாம் வச்சி கடத்திக் கொண்டு போய் டிக்கெட் எடுக்க விட்டக் கொடுமைய நான் என்னன்னு சொல்லுவேன்..

இந்த வருசம் முடிய இன்னும் ஒரு 10 - 12 நாள் பாக்கி இருக்கும்ன்னு நினைக்கிறேன்...
இந்த சமயத்துல்ல நம்ம நடு மண்டையிலே ஒரு கேள்வி உக்காந்துகிட்டு நாட்டியமாடுதுங்க... விக்கி பயல்வளைக் கேளுங்கன்னு சொல்லுறீயளா.. ம்ஹும் சில விஷயங்களுக்கு நமக்கு நாமே திட்டம் தாங்க சரியா வரும்...

வேற ஒண்ணும் இல்லைங்க.. ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ என்ன வழின்னு தான்ங்க கேள்வி ஆரம்பிச்சது... ஆரம்பிச்சு ஆரம் வட்டம் ஆர்ப்பாட்டம்ன்னு அண்டமெல்லாம் சுத்தி வந்து நம்ம நடு மண்டையிலே நின்னுக்கிட்டு பதில் சொல்லுங்கண்ணேன்னு செம டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சது..

நானும் என்னவெல்லாம் சொல்லிப் பார்த்தேன்..

அடேய் பய மக்கா..

வாழ்க்கை ஒரு வாழப் பழம் அதை உரிச்சு வாயிலே போட்டவன் எல்லாம் ஆளைக் காணும்..

அதுன்னாலே அது அப்படித் தான்... ஆத்து வெள்ளம் மாதிரி வாழ்ந்துட்டுப் போயிருணும் ரொம்பக் கேள்வி கேட்கப்பிடாதுன்னு பச்சப் புள்ளக்குச் சொல்லுற மாதிரிச் சொல்லியும் அது அழிச்சாட்டியம் தாங்கல்ல மக்கா....

எப்பவோ நம்ம பதிவுலகச் சகா மனதின் ஓசையார் ஒரு புத்தகத்துப் பெயரைச் சொல்லி படி மாப்பூன்னு அன்பா நம்ம அறிவு வளர்ச்சிக்கு வரப்பு வெட்டியிருந்தார்.. அவர் சொன்னக் கையோட மூர் மார்கெட் பக்கம் அலைஞ்சி திரிஞ்சு அந்தப் புத்தகத்தை வாங்கிட்டேன்...

அந்த புத்தகத்தில் ஒரு குருவும் சிஷ்யனும் பேசிக்கிற மாதிரி போதனைத் தோரணையிலே கதை நகரும்... நிறைய விஷ்யங்கள் அட போட வைக்கும் படியான் செய்திகள்..

சே இது இம்புட்டு எளிமையான விஷ்யம் ஆச்சே... செய்யலாமே...

அப்படிங்கற மாதிரி செய்திகள் அந்தப் புத்தகம் முழுக்க வழிஞ்சு கிடக்கு...

புத்தகத்தைப் படிக்கும் போது பய மக்கா நம்ம வாழ்க்கையை நம்ம முதுகு பின்னால வச்சுகிட்டு வேற எங்கிட்டு எல்லாமோ தேடுறோமேடான்னு ஒரு உணர்வு தட்டுச்சுங்க...

சாமி எதைத் தேடிடா இம்புட்டு வேகமா ஓடுற கொஞ்சம் நில்லுய்யா.. பின்னாலேப் பார்.. ஓன் வாழ்க்கை அங்கிட்டே நிக்குது நீ தான் அதை விட்டுட்டு எங்கிட்டோ ஓடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லாமச் சொல்லுது அந்தப் புத்தகம்.

ஒரு சின்ன விடுகதை மாதிரி கதையைச் சொல்லி குரு தன் சிஷ்யனுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளக் கொடுக்கும் டிப்ஸ் சட்டுன்னு நம்ம மனசுல்லயும் ஒட்டிக்குது..

ஏழு எளிமையான் வழிவகைகளை ரொம்பவே அழுத்தமாச் சொல்லியிருக்கார் ஆசிரியர்.

முதலில்.. நம்ம எல்லோருக்குமே ஆட்சி அதிகாரம்ன்னா ஒரு சின்ன மயக்கம் இருக்கத் தான் செய்யுது.. அதுக்குத் தான் நமக்குன்னே ஆண்டவன் ஒரு பெரிய ஏரியாவை உள்ளுக்குள்ளே ஒதுக்கிக் கொடுத்து இருக்காரே ஆனாப் பாருங்க நாம அதைக் கண்டுக்குறதே இல்லை.. ஆமாம்ங்க
ஆளணும்.. நாம ஒவ்வொருத்தரும் நம்ம மனசை ஆளணும்....

மனத்தை ஆண்டாப் போதுங்க.. அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்ட மாதிரி தான்..

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் வாழ்க்கையின் நோக்கம்ன்னு ஒண்ணுக் கண்டிப்பா இருக்கும்ன்னு நம்புங்க.. உங்க வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிச்சு.. உங்க மனசு கிட்ட அந்த நோக்கத்தை அறிமுகப் படுத்தி கைகுலுக்க வைங்க... அப்புறம் என்ன மனம் நோக்கத்தின் இலக்கு நோக்கி மெதுவா மெதுவா உங்களை நகர்த்திச் செல்லும்

நோக்கம் புரிந்தாலே வாழ்க்கையிலே பாதி ஏக்கங்கள் தீரும்

நோக்கம் தெரிஞ்சுப் போச்சு அதை நோக்கி அப்படியே நகரும் போது லைட்டா நம்ம கவரவுத்துக்குப் பங்கம் வர்றலாம்.. விதி வில்லங்கமா டேகரேட் பண்ணி வந்து நம்ம வீதியிலே இழுத்து விட்டு வித்தைக் காட்டலாம்.. எதுவும் நடக்கலாம் இல்லையா... அதுனால நாம என்ன செய்யணும்..நம்மை நாம சுய பரிசோதனைச் செஞ்சுகிட்டு சுய் மேம்பாட்டுல்ல இறங்கிடணும்.. அதுல்ல ஒரு விடா முயற்சி வேணும்.. நமக்கு நாமே முதல்ல விசிலைப் போடுவோம் அப்புறம் ஊரே கூட வந்து கச்சேரி வைக்கும் பாருங்க..

தொடர்ச்சியான சுய மேம்பாடு வாழ்கையை அதன் உயரங்களுக்குச் வளர உரம் போடும்

அடுத்து சொல்லுறது தாடி வச்ச நம்ம வள்ளுவர் தாத்தால்ல இருந்து தடி பிடிச்சி நடந்த நம்ம ஒளவையார் பாட்டி வரைக்கும் சொல்லிக் கொடுத்த மேட்டர் தான்.. ஒழுக்கம்..

இதைக் கூடவே வச்சிகிட்டா நிறைய வேண்டாதக் கும்பலை எல்லாம் நம்ம வாழ்கையிலே கேரண்டியாக் கும்மியடிக்காமாப் பாத்துக்கலாமாம்.

ஒழுக்கம் அஸ்திவாரம் போட்டு ஒவ்வொரு செங்கல்லாப் பாத்து பாத்துக் கட்டுன வாழ்க்கைங்கற வீட்டுக்கு டாப் மாதிரி அதாவது கூரை மாதிரி ஓ.கேவா

நெக்ஸ்ட் மேட்டர் இன்னும் ரொம்ப டக்கர் விசயம் தான்.. கண் முன்னாடியே காணமாப் போயிட்டு இருக்கும்.. எந்த போலீஸோ.. எந்த ராணுவமே வந்தாலும் மீட்டு தர முடியாது.. அதுனால அதை பயங்கர ஜாக்கிரதையா பயன் படுத்திக்கணுமாம்.. அது படா தில்லாங்லங்கடி மேட்டர்.. எல்லாருக்கும் சமம் தான்.. ஆனா அதை எப்படி மாத்தி வச்சிக்குறோம்ங்கறது நம்ம கையிலே தான் இருக்கு.. இன்னும் புரியல்லயா..

எங்க ஆபிஸ்ல்ல நானும் 10 மணி நேரம் தான் வேலைப் பாக்குறேன்... எங்க நிறுவனத்தின் முதலாளியும் 10 மணி நேரம் தான் வேலை??!!! பாக்குறார்..என்னோட பத்து மணி நேரங்களுக்கு பொருளாதார ரீதியாகக் கிடைக்கும் மரியாதை அவரோட 10 மணி நேரத்து கூட ஒப்பிட்டுப் பார்த்தா ரொம்ப... ஹி..ஹி

ஆக அது என்ன விசயம்ன்னு விளங்கிச்சா மக்கா.. காலத்தை மதிக்கக் கத்துக்கிட்டா நம்ம வாழ்க்கைக்கும் மதிப்பு கூடுமாம்

உனக்கென வாழ்வது வாழ்க்கை இல்லை.. ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை.. ஓடனே ரொம்ப யோசிக்காதீஙக்... அடுத்தவங்களுக்கு பலன் தர்ற மாதிரி ஒரு மரம் ந்ட்டு வச்சு இருக்க வரைக்கும் அதுக்கு தண்ணி ஊத்துறது கூட ஒரு சேவைத் தான்...

நல்லதொரு வாழ்க்கை நாலு பேர்க்கு நன்மைச் செய்வதில் அடையாளம் காணப் படுகிறதாம்.

கடைசியா.. 2006க்கு வாங்க... முடிஞ்சுப் போச்சு 2005.. வரப் போகுது 2007.. சூப்பரா அமையும் கவலை வேண்டாம்.. ஆனா இப்போ இன்னிக்கு இன்னும் மீதியிருக்க் நேரம் அதுல்ல வாழுவோம்..

கடமையச் செய்ங்க... தோடா இன்னிக்குத் தான் என் வாழ்க்கையிலே கடைசி நாள்ன்னா எப்படி இருப்போமோ அப்படி வாழணுமாம்...

அதாவது.. நல்லதே செய் நைனா.. அதையும் அப்புறம் பண்ணிக்கலாம்ன்னு அப்பீட் ஆகமா இன்னிக்கே ஜோராச் செய்யணுமாம்

தோடா ந்டு மண்டையிலே இருந்தக் கேள்வி ஒரு குதி குடிச்சு என் முன்னாடி வந்து நின்னு ஒரே நக்கல் சிரிப்பு சிரிக்குதுங்க...

என்ன நக்கலா அப்படின்னு நான் கேட்டா?

ம்ஹும் அதெல்லாம் இல்லை. உன்னிய நக்கல் அடிச்சு நான் என்னைக் கேவலப் படுத்துவேனா?

அப்படி எல்லாம் இல்ல...

சொல்லுதல் யார்க்கும் எளியவாம்.. அதைக் கேட்டுக் கைத்தட்டி சொன்னவனைத் தலையிலே வச்சு கரகம் ஆடுவது இன்னும் எளியவாம்...அப்படின்னு இழுத்துச்சு..

போது நிப்பாட்டிக்க எங்களுக்கு என்னச் சொல்ல வர்றேன்னுப் புரிஞ்சுப் போச்சு.. இப்போப் புறப்படு 2007 டிசம்பர் இதே தேதிக்கு ரிட்டன் வா அப்போப் பேசிக்கலாம்.. சொல்லி ஒரு வழியாக் கேள்விக்கு டாட்டா காட்டினேன்

Thanks THE MONK WHO SOLD THE FERRARI BY ROBIN SHARMA and Hamid for your recommendation to read

Monday, December 11, 2006

தலைவருக்கு HAPPY BIRTHDAY

தலைவருக்குப் பிறந்த நாள் கச்சேரி பண்ணுவதில் நமக்கு ரொம்ப சந்தோசம்ங்கோ!!!!!



ஹேப்பி பர்த் டே தலைவரே !!!!!

குளிர் காலத்தில் வெயில் படம்

வணக்கம் மக்கா.

எஸ் பிலிம்ஸ் நம்ம இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்..


எஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூன்று தொடர் வெற்றிகளுக்குப் பின் நாலாவதா வந்திருக்கப் படம்..இசை ஜி.வி.பிரகாஷ், (நம்ம சிக்குப் புக்கு ரயிலு பாட்டு பாடுன அந்தச் சின்னப் பையன் தான் இப்போ ஒரளவு வளந்து தனிக் கடைப் போட்டிருக்கார்.) ஆலபம் அப்படின்னு சில வருஷங்களுக்கு முன்னாடி வந்த ஒரு படத்தை இயக்குன வசந்த பாலன் இந்தப் படத்தை இயக்கிருக்கார்.

பைபிளில் கெட்ட குமாரன் கதைன்னு ஒரு கதை இருக்கு (PRODIGAL SON)..அதை ஒத்த ஒரு கதைக் களத்தில் தான் வெயில் திரைப்படத்தின் நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளன..ஒரு அழுத்தமானக் கதைக் களத்தைத் தேர்ந்துடுத்த இயக்குனருக்கு நம்ம பாராட்டுக்களைச் சொல்லியே ஆகணும்.

ஒரு மனிதன் ஆசிர்வதிக்கப் பட்டவன்.. இன்னொரு மனிதன் சபிக்கப்பட்டவன்... அவர்கள் இருவரும் சகோதரர்கள்... இது தான் கதை.


சபிக்கப் பட்ட மனிதனின் பார்வையில் கதைச் சொல்லப் படுகிறது. ஆரம்பத்தில் பசுபதியின் ஆர்ப்பாட்டமான அறிமுகத்துடன் துவங்கி..வெயிலோடு விளையாடி பாடலில் பார்வையாளர்களை அப்படியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

வெயிலோடு விளையாடி பாடல் இசையும் சரி.. படமாக்கப் பட்ட விதமும் சரி... காமிராவில் ஒரு ஓவியமே எழுதியிருக்காங்கப்பா..தென் தமிழ் நாட்டு கிராம வாழ்க்கையை அந்தப் பாடல ஒரு ஆல்பமாக்கி நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது.

அதற்குப் பின் படம் கொஞ்சம் வேகம் குறைகிறது..பள்ளிக்கூடத்தைக் கட்டடித்து விட்டு வாத்தியார் படத்தை வாயில் சிகரெட் புகைத்தப் படி (ஆமா வாத்தியார் ரசிகர்கள் அவ்வளவா தம் அடிக்க மாட்டாங்கன்னு ஒரு பேச்சு அது பொய்யா) பார்த்து அப்பாவிடம் பிடிப்பட்டு அப்பாவின் அடக்கு முறைக்கு ஆளாகி அவமானப்பட்டு வீட்டில் இருந்து ஊரை விட்டு பணம் நகைத் திருடிக் கொண்டு ஓடுகிறான் அண்ணன் முருகேசன். கரெக்ட் நீங்க எதிர்பார்க்கிற மாதிரியேத் தான் பணம் நகைத் தொலைத்து ஒரு தியேட்டரில் தஞ்சம் அடைகிறான்.. அங்கேயே வேலைச் செய்கிறான்..தியேட்டர் ஆப்பரேட்டராக வளர்கிறான்..( எதிர் ஹோட்டல் காரப் பெண்ணை காதலிக்கிறான்...(ஓட்டல் கார புதுமுகமாய் நடித்திருக்கும் பெண் பழைய ஜானி படம் தீபாவை ஞாபகப் படுத்துகிறார்)

இந்தக் கட்டத்தில் திரையரங்கக் காட்சிகள் என்ற பெயரில் திரைப்படங்களின் ட்ரெயிலராய் ஓட்டித் தள்ளுகிறார் இயக்குனர். ஏன் சார் உங்க படத்தைப் பாக்க வந்தா ஏற்க்னவே பார்த்து முடிச்ச்ப் படத்தை எல்லாம் விடாம மறுபடியும் பாக்க வைக்கிறீங்க.. நாங்க என்ன பரீட்சைக்கு ரிவிஷன் பண்ணவா தியேட்டருக்கு வந்தோம்.)


காதல் தியேட்டர் என ஒரு சீராக ஓடும் முருகேசனின் வாழ்க்கையில் மீண்டும் விதி விளையாடுகிறது.. காதல் தோல்வி, காதலியின் மரணம்,(பாவம்ய்யா அந்தப் புது முகம் இப்படி அநியாயமாச் சாகடிச்சிட்டீங்களேய்யா) தியேட்டர் மூடல் என மீண்டும் சாப செண்டிமெண்ட் தாய பாஸ், பல்லாங்குழி பரம் பதம் என எல்லா டைப் கேம்ஸும் விளையாடி அதுவும் களைப்படைஞ்சு.. படம் பாக்குற நம்மையும் களைப்படைய வச்சு காபி தண்ணி தேட வைச்சுருது. குறிப்பா அந்தக் காதல் தோல்வி காட்சிகள் காதல் படக் கிளைமாக்ஸ் காட்சிகளை நினைவுப் படுத்தி ஏன்ய்யா இப்படி கொலைவெறி உங்களுக்கு படம் பாக்க வந்த எங்க மேலன்னு கதற விட்டுருது

அதே நேரம் முருகேசனின் தம்பி கதிர் தொட்டதெல்லாம் துலங்க.. விளம்பர நிறுவனம் ஆரம்பித்து ஆஹா ஓகோன்னு வளர்கிறான். வள்ரும் போது தொழில் போட்டி வலுக்கிறது. வெட்டுக் குத்து என நீள்கிறது. இடையில் அவனுக்கும் ஒரு காதல்.

இந்நிலையில் எல்லாம் தொலைத்து பரதேசியாக வீடு திரும்புகிறான் முருகேசன். தந்தையின் வெறுப்பு தணியாமல் அவனை இன்னும் வாட்டி வதைக்கிறது, ஆனால் தம்பி கதிர் அண்ணனைக் கொண்டாடுகிறான். தம்பியின் பாசத்துக்குக் கட்டுபட்டு முருகேசன் உள் வீட்டில் உடன் பிறந்த தங்கைகளின் அலட்சியத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கிறான்.

(அண்ணனை பாசமாப் பார்க்கும் அண்ணனுக்கு எதாவ்து வேலை கீலைச் செய்ய துவங்க ஓத்தாசப் பண்ணலாமில்ல.. கை கால் எல்லாம் திடகாத்திரமாய் இருக்கும் முருகேசனின் நிலையைப் பார்த்து பரிதாபத்திற்குப் பதில் நமக்கு எரிச்சலே மிஞ்சுகிறது... ஏன் டிரைக்டர் சார்.. சென்டிமென்ட் சிம்பதின்னு லாஜிக்கை லாக்கர்ல்ல வச்சி பூட்டிட்டுத் தான் படம் எடுப்பீங்களா?)


முருகேசனுக்கு இன்னொரு ஆறுதல் அவன் சிறு வயது தோழி பாண்டியம்மாள் ( லைட்டா அழகி வாசம் வீசுது இந்த பாண்டிம்மாகிட்ட..தன்னோடச் சுய கவுரவமே கேலிக்குரியதா இருக்க அவர் தெருவில்ல பம்பரம் விளையாடுற மாதிரி காட்டுறது எல்லாம் ஏன்ய்யா? அவர் மனக்கஷ்ட்டத்தோட பாவம் தீப்பொட்டி செஞ்சு கஷ்ட்டபடுர்ற ஸ்ரேயா கையிலே பம்ப்ரம் விடுறது எல்லாம் எப்படிங்க திங்க் பண்றீஙக...?

அப்புறம் என்ன தம்பி கதிரின் தொழில் போட்டியில் அண்ணன் முருகேசன் உயிர் கொடுத்து தம்பியைக் காப்பாற்றி தியாகி ஆகிறார். கடைசியிலெ எல்லாரும் அழுகிறார்கள். வழக்கம் போல் இருக்கும் போது அவ்னை மன்னிக்காத அவன் அப்பாக் கூட அவன் இறந்தப் பிறகு அவ்னுக்கு இரங்கல் போஸ்ட்டர் ஒட்டுவதாய் படம் முடிகிறது.

தோற்றுப் போன மனிதன் முருகேசனாய் பசுபதி சும்மா நடிப்பில் பந்தி பரிமாறி இருக்கார். காதல் காட்சிகளில் மனிதர் ஒரு ரொமாந்ச் லுக் ட்ரை பண்ணியிருக்கார். ஆனாலும் பசுபதியின் வெற்றி என்னவோ ஒரு தோல்வி அடைந்த மனிதனாகவே எழுந்து நிற்கிறது.

தம்பி கதிராக பரத்.. சுறுசுறு பட்டாசு... சும்மாக் கொளூத்திப் போட்டிருக்காங்க.. அவரும் வாங்குன சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாம ஆடுறார்.. சண்டைப் போடுறார்.. பைக் ஓட்டுறார்.. நடிக்கவும் செஞ்சிருக்கார்.

பாவனா.. பரத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து நடுங்கிப் பின் பரத்தைப் பிடிச்சிருக்குன்னுச் சொல்ல்க் காதலிக்கும் ப்ச்சைக் கிளியாக அவ்ருக்குக் கிடைத்த பாத்திரத்தில் பச்சக்குன்னு மனதில் இடம் பிடிக்கிறார்.

ஸ்ரேயா ரெட்டி.. வாழ்க்கையில் தோற்ற ஒரு மனிதன் மீது பரிவும் நட்பும் கொண்ட ஒரு தோழி பாத்திரத்தில் கொஞ்சமே வருகிறார்.. அவர் பங்குக்கு ஓ.கே..

இது தவிர படத்தில் அம்மாவாக வரும் டி,கே.கலா, அப்பாவா பிடிவாதம் பிடிக்கும் குமார்.. அந்த கிருதா வில்லன் என அவரவர் பாத்திரங்களில் நல்லாவே நடிச்சிருக்காங்க...

இசையில் வெயிலோடு விளையாடி.. உருகுதே மருகுதே... காதல் தீயின் நடனம்.. போன்ற பாடல்கள் ஜி.வி.பிரகாஷ்க்கு ஒரு நல்ல விசிட்டிங் கார்ட் தான்.

கேமரா மதி கலக்கியிருக்கார். போஸ்ட்டரே மிரட்டலா இருக்குதுங்க...

சரி இவ்வளவு இருந்தும் வெயில் படம் ஓடும் போது சீட்ல்ல நெளிய வேண்டியதா இருக்கே ஏன்ய்யா?
அட ஒவ்வெரு அஞ்சு நிமிசத்துக்கும் ஒரு தரம் வாட்ச் பார்க்க வேண்டியதா இருக்க ஏன்ய்யா?
லேசாத் தலை வலிக்கற மாதிரி இருக்கே ஏன்ய்யா?

ம்ஹும் இத்தனை ஏன்களும் இயக்குனர் வசந்த பாலனுக்கு அனுப்பப் படுகின்றன...

நல்ல நடிகர்கள்.. நல்ல பேனர்...நல்ல் டெக்னிஷ்யன்கள் இருந்தும்... திரைக்கதையில் ஆங்காங்கு சென்டிமென்ட் என்ற பெயரில் தெரியும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாஜிக் ஓட்டைகள்..படததை முழுசா ரசிக்க விடாமல் நம்மை தடுக்கிறது...

காலம் மாறுதுங்க... அதுக்கு ஏத்தாப்புல்ல நீங்களும் கொஞ்சம் வேகமா.. கலக்கலா கதையைச் சொல்லுங்க...

நான் பார்த்த வரைக்கும் சொல்லணும்ன்னா...

ஆரம்பம் எல்லாம் நல்லாத் தான் இருந்துச்சி.. அப்புறம் இடையிலே திரைக்கதைக்கு வச்ச ஆப்பு.. அப்பப்பூ..

பி.கு: இந்தப் படத்தில் சிறுவர்கள் தம்மடிக்கும் காட்சி சர்வசாதரணமாகக் காட்டப் படுகிறது.. இது தப்பில்லையா.. விவரம் தெரிஞ்சவங்கச் சொல்லுங்கப்பா

Friday, December 08, 2006

மா மன்னாரு அன்ட் கோ சாப்ட்வேர் (பி) லிமிட்

வணக்கம் மக்கா,
முடிவு பண்ணிட்டோம்ல்ல.. கலை உலக வாழக்கையோட ஒரு பிஸினஸ் மகாராசாவாம் அவதாரமெடுக்கிறதுன்னு.. நம்ம சகா நம்ம நண்பன் சரா லாங் லீவ் போட்டுட்டுப் போனாலும் போனாரு நம்ம லெப்ட் ஹேண்ட் ரிப்பேர் ஆன மாதிரி ஆயிடுச்சு..சரின்னு பொது வாழ்க்கையிலே இருந்து ஒதுங்க முடியுமா.. நம்ம இன்னொரு நண்பர் ( பேர் பின்னாலச் சொல்லுறேன்) கொடுத்த ஐடியாவில்ல முடிவு பண்ணி இறங்கிட்டோம்ல்ல..

ஆமா கம்பெனி ஆரம்பிக்கப் போறோம்.. காலத்துக்கு ஏத்தாப்புல்ல கலெக்ஷ்ன் கல்லாவை நிரப்புற கம்பெனி... ஆமாங்க.. கச்சேரிகாரன் இனி கம்பெனிகாரன் ஆகப் போறாரு...

ஜொள்ளுப் பேட்டை டைம்ஸ்ல்ல விளம்பரம் எல்லாம் கொடுத்தாச்சிங்கோ...

"பீப்பிள் வான்டட்.. நியூ சாப்ட்வேர் கம்பெனி லாஞ்ச்... "

எச்.ஆர் மேனஜரா... யாரைப் போடலாம்ன்னு ஒரே குழப்பம்ஸ் ஆப் இன்டியாவா இருக்கும் போது நம்ம தளபதி சிபி வந்து நயந்தாராவோட கலக்கல் ரெஸ்யூம் ஒண்ணு கொடுத்தார்...

டமீல் சாப்ட்வேர் கம்பினியா நாக்குத் டமீல் கம்பினி இப்புடு லேது.. மன வாடு ஆந்துருல்ல கம்பினி காவாலி.. அக்கட உன்னவா? ந்னு அந்த அம்மா ஜிலேபி பாஷையில் பீட்டுருடு விட தளபதி பயங்கர அப்செட்..

அட்லீஸ்ட் பூமிகாவது ஓ.கே பண்ணுங்கப்பா நகத்தை பல்லுக்கு இடையில் வச்சுகிட்டு பயங்கர குறும்பு பண்ணிகிட்டு இருக்கார்.

அப்புறம் நம்ம ஜொ...(ஆமாங்க கிளைன்ட வாயில்ல ஜொள்ளு சரியா நுழையாதக் காரணத்தினால் ஜொன்னு சுருக்கிட்டோம்) அவர் பேட்டை பிகர்கள் லிஸ்ட்ன்னு ஒரு ஆறே முக்கால் லட்சத்து 78 ஆயிரத்து நானூத்து நாப்பதிரண்டு பேரோட ரெஸ்யூம் கொண்டு வந்துக் கொடுத்தார்.. தற்சமயம் அந்த அப்ளிகேஷன்ஸ் எல்லாம் படிச்சு ஷார்ட் லிஸ்ட் பண்ற வேலையைக் கொருக்கு பேட்டை மூணாவது சந்துல்ல நாலாவது பில்டிங்க்ல்ல இருக்க முதல் மாடியில் இயங்குற ரெஸ்யூம்கிரிகிரி அப்படிங்கற கம்பெனிக்கு அவுட் சோர்ஸ் பண்ணியிருக்கோம்.

ஜொ பயங்கர டென்சனா ரிசல்ட்டுக்கு வெயிட்டீங்க்..

நிலைமை இப்படி போக.. வழி இல்லாம போர்ட் ஆப் இயக்குனர்கள் பட்டியலில் அவசரமா அவசரமாச் சேர்த்தப் பெயர்கள்..

விவ் பார்டனர் ( அது ஒண்ணும் இல்லங்க வாங்க விவசாயி.. பங்காளி அப்படின்னு கூப்பிடுவோம் அதுக்குத் தான் கொஞ்சம் தகாஸ் நகாஸ் வேலை எல்லாம் பண்ணி விவ் பார்ட்னர்ன்னு மாத்திட்டோம்)

ப்ரீ பன்ச்சர் ( இலவசம்ன்னா ப்ரீயாம் கொத்து அப்படின்னா BUNCHஆமா.. கொத்தனார் அந்த 'னார்' ல்ல 'னா' கட் பண்ணி 'ர்' மட்டும் சேர்த்து அப்படியே போட்டு அவரையும் சேர்த்தாச்சு..

எல்லாம் நியூமராலஜி.. அப்புறம் பேஷனாலஜி.. கிளைன்ட் சைக்காலஜி.. பிரேட்டும் பட்டரும், பீசாவும், பர்க்கரும் திங்கற அசலூர்காரப் பைய நம்ம பேரைக் கொலைப் பண்ண விடலாமா.... நம்மளே பண்ணிகிட்டா அது மருவாதின்னு மாத்திட்டோம்ல்ல.

இது தவிர எஸ்.பிளாபரார். டி.சி. கான்சர்ட்டர், கட்.டி.பாய், இவங்கக் கூட இயக்குனர்கள் வரிசையிலே இருக்காங்க...

ம்ம்ம்.. அட ஹெச்.ஆர் மேனேஜர் அவசரமாப் போடணும்ன்னு சொன்னவுடனே.. மனதின் ஓசை.. அட நம்ம மனச்சாட்சியிலே இருந்து ஒரு சவுண்ட் கேட்டுச்சு.. நல்லா கேள்விக் கேக்கத் தெரிஞ்சவங்களா ஹெ.ஆர்ல்ல போடுங்கப்பான்னு...

ஆகா டக்குன்னு டவுட்டே இல்லாமா முடிவு பண்ணிட்டோம் நம்ம மா மன்னார் கோவுக்கு மூணு ஹெச்.ஆர் மேனேஜர்ன்னு

எல்லாரையும் உக்காரவச்சு இருபத்திய்யொரு கேள்வி கேட்டு கடைசியிலே அவரே பதிலும் சொல்லுவாரே நம்ம கிராண்ட் மாஸ்டர்... அவர் தான் நம்ம கம்பெனி சீப் ஹெ.ஆர் மேனேஜர். அவருக்கு அஸிடென்ட்டா யாரை வைக்கலாம்ன்னு பயங்கர ஆலோசனைக்குப் பிறகு தக..தக.. தங்கவேட்டை புகழ் சல்யூட் நீலாம்பரி அக்கான்னு ஏகமனதா மேலிடத்து ரெகமண்டேஷனோடு முடிவாச்சு....

போர்ட் ஆப் இயக்குனர்கள் எல்லாம் அயல்நாடுகளுக்குக் கிளைன்ட் புடிக்க அவசரமாக் கப்பல் பிளைட்ன்னு கிளம்பிப் போயிட்டதுன்னாலே.. ரெக்ரூட்மன்ட் வேலையை நம்ம கிராண்ட் மாஸ்ட்டர் சாரும் நிலாம்பரியும் செய்ய வேண்டியதாப் போச்சு....

முதல் ரெஸ்யூம் வேலு நாயக்கர் தாராவி மும்பை....

ஆகா என்ன ஒரு கேப்ஷன்ப்பா ..
நாலு வரி கோடு நல்லாயிருக்கணும்ன்னா எதுவுமே தப்பு இல்ல...

ஆகா வித்தியாசமா இருக்கே ஈ யாளை செலக்ட செஞ்சு கால் அனுப்பு

"மாஸ்டர் இதைப் பாருங்க..."

"அய்யோடா எந்தா இது ரெஸ்யூம்க்குப் பதிலா ஜாதகம்..."

ஆயிரம் கோடி அதிசயம் கொண்டது பாபா ஜாதகம்... என்ற பாட்டு எங்கிருந்தோ ஒலிக்கிறது..

"எந்தா சாங் கேக்குது?"

ப்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆஆஆ .. பாபா...பக்மா!!!! பக்மா!!! பாபா...பக்மா!!!! பக்மா!!! தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு எரரரு .....

பேர் எந்தா பரைஞ்சு?

"YO.. B2theA2theB2theA..HIS NAME IS BABA.. BABA hes a macho man... u can trust this man.."
நீலாம்பரி பயங்கர பீலிங்காகி பாட்டாகவே பாடி விடுகிறார்.

"ரெஸ்யூம்க்குப் பதில் ஜாதகம் அனுப்பியிருக்கும் ஈயாள் ஸ்டைல் வல்லியாதாயிட்டு உண்டு.. ஈ ஆளுக்கும் கால் கொடுத்துடு"

"நெக்ஸ்ட் ஆரான்ணு...?"

கேரியர் அப்ஜக்டிவ் படிக்கிறார் நீலாம்பரி

"தெம்புக்கு குடிக்கணும் விவா
சிம்பு அப்பனுக்குத் தெரியும் ஜாவா

அம்மான்னா இங்கிலீஷ்ல்ல மம்மி..
வி.பி. டாட் நெட்ன்னு நான் நல்லாவே அடிப்பேன் கும்மி
என் படம் ஓடுனா அது மிராக்கள்
எனக்கு நல்லாவே தெரியும் ஓராக்கள்"


"ஆகா ஈயாளுக்கு எந்தா ஒரு க்ரியேட்டிவிட்டி.. ஈயாளையும் கூப்பிடு.. பக்ஷ ஈயாள் பேர் எந்தா?"

"பீர்ல்ல மொகம் கழுவுனது ஆரிச்சாமி..
சாப்ட்வேர்ல்ல வயித்து கழுவ வந்துருக்கவன் வீராச்சாமி... வீராச்சாமி... "
கீழே வீராச்சாமி@ டண்டனக்கா.காம்ன்னு போட்டிருக்கு மாஸ்டர் என்று நீலாம்பரி படித்து முடிக்கிறார்.

ஓ.கே எல்லாரையும் திங்கட் கிழமை இன்டர்வியூக்கு வரச் சொல்லி பறையு... எனக்கு இப்போக் கொறச்சுச் சோலி உண்டு.. பிரேக்...
அடுத்து இன்டர்வியூ நிகழ்வுகளையும் நம்ம கச்சேரிக்கு வந்துக் கேட்டு மகிழுங்க...

இந்தப் பதிவினை உங்களுக்கு வழங்குவது செந்தழலாரின் தேடுவேலை டாட் காம்.

Wednesday, December 06, 2006

தமிழ் பதிவுலகம் 2006 - நம்ம வியூ பாயிண்ட்

வணக்கம் மக்கா,

அட அப்படி இப்படி திரும்பி பார்க்கறதுக்குள்ளே 2006 டிசம்பர் வந்துருச்சு.. வருஷம் முடியப் போகுது.. இந்த வருஷம் எப்படிடா இருந்துச்சுன்னு நமக்கு நாமே திரும்பி பார்த்துக்கறது ஒரு விதத்துல்ல நல்லது.. ஒரு வருஷமா நானும் பதிவுப் போட்டிருக்கேன்.. ப்ல பதிவைப் படிச்சுருக்கேன்.. அதைப் பத்தி பதிவு செய்யவே இந்த பதிவு.. இது நிச்சயமாய் ஒரு விம்ர்சனப் பதிவு அல்ல..

இந்த வருசம் நமக்குத் தெரிஞ்சு ஒரளவுக்கு குழு பதிவுகள் வரத் துவங்கி வெற்றிகரமாச் செயல்படவும் ஆரம்பிச்சு இருக்கு

குழு பதிவுகளில் இந்த வருடம் நான் ஆர்வமாப் படிச்ச பதிவுன்னா அது தேர்தல் 2006... தேர்தல் டைம்ல்ல பல்வேறு கருத்துக்கள், அலசல்கள், செய்திகள்ன்னு பின்னிட்டாங்க... அவங்க உள்ளாட்சி தேர்தல் போது கொஞ்சம் அமைதி ஆயிட்ட மாதிரி எனக்கு ஒரு பிலீங்...

அப்புறம் பார்த்தீங்கண்ணா திராவிட தமிழ்ர்கள்ன்னு ஒரு குழு... அது மேல ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்துச்சு.. இன்னும் இருக்கு.. அவங்க எல்லாம் இன்னும் எழுச்சியாச் செயல்பட்டா நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடக்கும் அப்படிங்கறது என் தனிப்பட்ட எதிர்பார்ப்பு.

அடுத்து நம்ம சென்னப் பட்டிணம்ங்க.. என்னமா கலக்குறாங்க... ஏற்றமிகு தலைமை.. துடிப்பான உறுப்பினர்கள்.. நான் வளர்ந்து வாழும் சென்னை நகரத்தை மையமாக் கொண்டு பதிவுகள் வரும் இந்த் குழுப் பதிவு நமக்கு ரொம்ப பேவரீட்ங்க.. பதிவுலகைத் தாண்டியும் பதிவாளர்களை இவங்க ஒருங்கிணைக்கச் செய்யும் முயற்சிகள் எனக்கு ஆச்சரியம் தரும் விஷ்யம்.. சென்னைப் பட்டினம் இன்னும் கலக்கணும்...கண்டிப்பாப் பாராட்டியே ஆகணும்.

அடுத்து இப்போத் தான் வளந்து வரும நம்ம விக்கிபிடியாப் பசங்க...நல்ல ஐடியா.. பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஒண்ணுக் கூடி நம்ம கேள்விக்குப் பதில் சொல்லக் கிளம்பியிருக்காங்க.. நான் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லி ஒரு பதிவை டக்குன்னு போட்டு இவங்களும் நம்ம நம்ம பேவரிட் லிஸ்ட்ல்ல சேந்துட்டாங்க

தமிழை நம்ம மரமண்டைக்கும் புரியற மாதிரி சொல் ஒரு சொல்ன்னு சொல்லிக் கொடுக்குறதும் குழு பதிவுன்னு எடுத்துக்கலாம் ஜி.ராவும் குமரனும் செய்யும் இந்த பணியும் நமக்கு ரொம்பப் புடிச்சு இருக்குங்க..

இயன்ற வரை இனிய தமிழில் எனக்கு வெண்பா வடிக்க சொல்லித் தர்றேன்னு வாக்கு கொடுத்த வெண்பா குழுவும் நான் ரசிச்ச இன்னொரு குழு பதிவு.. வெண்பா வாத்தி இப்போ மிஸ்ஸிங்... யாராவது பார்த்தாச் சொல்லுங்கப்பா

அப்புறம் க.பி.கன்னு ஒரு குழு பதிவு தமாஸ்க்கு தோரணம் கட்டி ஆரம்பிச்சாங்க... என்னத் தான் அதுல்ல உறுப்பினர் ஆக நமக்கு தகுதி இல்லன்னாலும் இதன் ஆரம்பக் கால பதிவுகள் மிகவும் ரசிக்கும் படி இருந்தன. இந்த பதிவு அமைதியாக போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே...

சிரிப்புக்கு மரியாதைக் கொடுக்கும் நம்ம வ.வா.சங்கமும் அப்படிப்பட்ட குழு பதிவுகளில் ஒண்ணுங்கறது எனக்குத் தனிப்பட்ட முறையில்ல ரொம்ப மகிழ்ச்சியைத் தருது..

சங்கத்தின் ஒரு அங்கமா இருக்கும் தமிழ் சங்கமும் 2006ல் தான் ஆரம்பம் ஆச்சு.. அது இன்னொரு சந்தோஷமான விஷ்யம்..

2006இல் தமிழ் பதிவுலகமும் தமிழ் பதிவர்களும் இன்னும் நான் பேச நினைக்கும் விஷயங்கள் தொடரும்

tamil10