Sunday, August 28, 2011

திராவிட முகமூடி கழகம்

பதிவு எல்லாம் எழுதி பல காலம் ஆச்சு !!! 2011ல்ல மொத்தமே 1 பதிவு தான் போட்டிருக்கேன்..எழுத ஒண்ணுமில்லயா இல்ல எழுதுனா படிக்க ஆள் இல்லயா இரண்டுமே ஒரளவுக்கு சரியான காரணங்களே

அப்புறம் எதுக்கு இந்த பதிவு..இருக்கு காரணம் இருக்கு... பொதுவா பலத் தரப்பட்ட புத்தகங்கள் படிக்குறது நம்ம பழக்கம் லேண்ட்மார்க்லல வேடிக்கை பாத்து பேரை மட்டும் குறிச்சுகிட்டு பிளாட்பாரக் கடைகளிலே அதே புத்தகங்களைத் தேடி அலைஞ்சு பேரம் பேசி வாங்கி வீட்டுல்ல அடுக்கி வச்சு அப்புறம் எப்போவது நேரம் உண்டாக்கி படிக்குற அந்த அனுபவம் இருக்கே அது அலாதியானது...

இப்போ சமீபக் காலமா கண்ணதாசன் புத்தகங்கள் நிறைய வாசிக்க முடிஞ்சது.. கவிஞரின் சினிமா பாடல்களுக்கு தமிழறிந்த அனைவரும் எதோ ஒரு விதத்துல்ல ரசிகர்களா இருக்கும் போது நான் மட்டும் என்ன விதிவிலக்கா

கவிஞரின் பாடல்கள் வாழ்க்கையின் மொத்த பரிமாணங்களையும் தமிழுக்குள் அடக்கி ஆள்வதைக் கண்டு வியக்காமல் இருக்க முடிவதில்லை கவிஞரின் புத்தகமெல்லாம் படிக்கும் போது திராவிடத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையே கிடந்து ஊசலாடிய தருணங்களையும் உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடியுது

பகுத்தறிவு என்றால் என்ன? பல காலமாய் புலப்படவில்லை... இப்போவும் சரியா புரியல்ல ஈரோட்டு வயல்களில் நடப்பட்டு காஞ்சிபுரம் சந்தையில் கொள்முதல் ஆகி கோபாலபுரத்தில் அசத்தலா பாக்கெட் போட்டு தமிழகம் மொத்தத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட ஒரு விற்பனை பொருள் தான் பகுத்தறிவோன்னு 2011ல்ல மல்லாக்க படுத்து சிந்திக்கும் போது எனக்கு தோன்றுது

அதுக்கு கண்ணதாசனும் ஒரு காரணமான்னு எனக்குத் தெரியல்ல. உழுதவன் நடுவுல்ல வாங்குனவன் எல்லாம் பெருசா லாபம் பாக்கல்ல ஆனா ஏஜென்சி எடுத்து வித்த குரூப் மட்டும் செமயா கல்லாக் கட்டுனது கண்ணெதிரே கண்ட உண்மை

நம்பிக்கை தான் வாழ்க்கை என்பது உலக மொத்தமும் ஒப்புக் கொண்ட தத்துவம் ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறான் அந்த நம்பிக்கை அவன் வாழ்க்கைக்கு ஒரு ஊன்று கோலா இருந்து வழிகாட்டுகிறது. சில பல நம்பிக்கைகளால் மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு ஆறுதல் கிடைக்கிறது. பெரும்பாலான நேரங்களில் அந்த நம்பிக்கை இறைவன் சார்ந்தாகவே அமைந்து போகிறது

நேரு வால்டேரின் மேற்கோளிட்டு சொன்னதாய் நினைவு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல ஆனால் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க கடவுள் அவசியமாய்படுகிறது

தலைமையோ தலைவனோ மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் நம்பிக்கையை குலைக்க கூடாது எப்படி பார்த்தாலும் திராவிடமும் அதைச் சார்ந்த தலைவர்களும் மக்களின் நம்பிக்கையை நையாண்டி செய்தும் அதைக் குலைத்துமே தம் இயக்கத்தை வளர்த்து உள்ளார்கள்...உடைத்தெறிந்த நம்பிக்கைகளுக்கு பதிலாக புதிய நம்பிக்கைகளையும் கொடுக்கவும் இல்லை வளர்க்கவும் இல்லை...

நம்பிக்கை கொடுக்காத இயக்கமும் கொள்கையும் சமுதாயத்துக்கு எந்த விதத்தில் பயனளிக்கும்...வெறும் வாயிலே வடை சுட்டு அதில் ப்குத்தறிவு முத்திரை குத்தி பேச்சாலே அதை ஊருக்கு எல்லாம் வித்து வயிறு வளக்கும் ( வளத்த) திராவிடமும் திராவிடத் தலைவர்களையும் என்னன்னு சொல்ல...

சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்... தோணும் போதெல்லாம் இன்னும் சொல்லுவேன்

ஆங் அப்புறம் 8வது பதிவுல ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு நண்பர் இளாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்குறேன்.

tamil10