Monday, September 11, 2006

சில்லுன்னு ஒரு காதல்

சென்னை வெயிலுக்கு இதமான் தலைப்பிலே ஒரு படம் வந்துருக்கு.. அப்புறம் பார்க்கல்லன்னா எப்படி? சாயங்காலம் ஜமாவாக் கிளம்பி திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர் போய் நின்னாச்சு. வழ்க்கம் போல கவுண்டர்ல்ல ஹவுஸ்புல் போர்ட் பாத்துட்டு வழ்க்கம் போல நமக்குன்னு டிக்கெட் கொடுக்குற சைக்கிள் டோக்கன் போடுறவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டிய டிக்கெட்டை வாங்கிட்டு உள்ளேப் போய் வசதியா உட்கார்ந்தாச்சு...

சூர்யா ரசிகர்களின்(!!!) ஒய்ங் ஒய்ங் விசில் சத்தங்களுக்கு நடுவினின் டைட்டில் ஓட ஆரம்பித்தது...

ஆகா இது என்னடாப் புதுசா.. இல்ல நான் இப்போத் தான் பாக்குறேனா.. ஆமாங்க நன்றி போடுற வரிசையிலே வலைத்தள நண்பர்களையும் சேர்த்திருக்காங்க...

சூர்யா ஸ்டார் ஆயிட்டார்ங்கறதுக்கு தியேட்டருக்கு வெளியே அவருக்கு வைக்கப் பட்டிருக்கும் விளம்பரத் தட்டிகளே சாட்சி.. நல்ல வேளை அமெரிக்க ஜனாதிபதி, அவங்க அப்பா யாரையும் சவாலுக்கு இழுக்கும் வாசகங்கள் எதுவும் தட்டிகளில் இல்லை.

சூர்யாங்கற ஸ்டாருக்கு எவ்வளவு வேல்யூ இருக்குன்னு சோதிச்சுப் பார்க்க முடிவு பண்ணிட்டாங்கப் போல..படம் ஓடுவதற்கு பிரமாண்டமான போஸ்ட்டர் டிசைன்களும்.. போஸ்ட்டரில் பெரிய பெரிய பெயர்களும் இருந்தால் போதும் என்ற திடமான முடிவின் பின்னணி திரையின் முன்னால் தெரிகிறது,

கதையைச் சொல்லுங்கப்பா... இருங்க சார்.

சூர்யா-ஜோதிகா தமிழக இளசுகளின் இன்றைய ஆதர்ச காதல் ஜோடி... அவங்க நடிச்ச படமாம்.

ஏ.ஆர்.ரஹமான் பாட்டெல்லாம் சொக்காப் போட்டுருக்காராம். சொந்தக் குரல்ல முதன் முதலா ஒரு காதல் பாட்டு கலக்கியிருக்காராம் இல்ல...

நம்ம வைகைப்புயல் வேற இருக்காராம்.. அப்போ ரவுசுக்கும் சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது. கூடவே கல்லூரி சனஙகளின் கலைஞனாய் விவேக் பாணியில் உருவாகி வந்துக் கொண்டிருக்கும் நம்ம சந்தானம் வேற.. அப்படின்னா லொள்ளூக்கு கேரண்டி

ரோஜாக் கூட்டம் பூமிகா வேற INDIAGLITZ வால் பேப்பர்ல்ல் ஜொலிக்குது..ஆக மெய்யாலுமே சில்லுன்னு தான் இந்தக் காதல் இருக்கும்

இப்படியெல்லாம் நினைப்புப் பொங்கப் படத்துக்குப் போனா உங்க நினைப்புல்ல எண்ணெய்யை ஊத்தி அப்பளம் பொறிக்க


இப்போவாது கதையைச் சொல்லுங்கப்பா... அட இருங்க சார். 50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வந்து உடனே கதைக் கேட்டா எப்படி? சொல்லுவோம்ல்ல

சூர்யா-ஜோதிகா கல்யாணததைப் பார்க்கணும்ன்னு ஒரேத் தவிப்பாத் தவிக்கறவங்களுக்கு ஒரு வாய்ப்பு.. முதல்ல கல்யாண சீன் தான்....

அய்யோ ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு எழுந்து உக்கார வைக்கிறார் இயக்குனர்.

பிடிக்காத கல்யாணம்... ஆறுவருடங்களுக்குப் பின் பிடிக்கிற கல்யாணம் ஆகி பிடிப்பின் அழகான பரிசாய் ஒரு பெண் குழந்தை என வாழ்க்கை ரசனையாய் நகர்கிறது சூர்யா-ஜோதிகா காதல் தம்பதிகளுக்கு.. இடைஇடையே வரும் சின்ன ஊடல்கள்..தொடரும் கூடல்கள் எனக் கொளுந்து விட்டு பிரகாசமாய் எரிகிறது முதல் பாதி.

கதையைச் சொல்லுங்க சார்...

இதையேத் தான் படம் பாக்கப் போன எல்லாப் பேரும் கேட்டு வைக்க பாவம்ய்யா இயக்குனர் படாதப் பட்டு போயிருக்கார் கதையைச் சொல்ல

கரையான் அரிச்ச ( இல்ல அரிக்க மறந்த) ஒரு டைரியின் பக்கங்களில் இருந்து சூர்யாவின் பழையக் காதல் சில்லுன்னு கிளம்பி நம்ம் ஜோவைச் சுள்ளுன்னு தாக்குது...

டக்குன்னு பீளிச் மண்டையும், லேசானத் தாடியுமாக. துள்ளல் வாக்கோடு சூர்யா.. தமிழ் சினிமாக் கல்லூரி நாயகர்களின் இலக்கணத்திற்குள் சிறைப் படுகிறார்.

கொஞ்சம் மின்னலே மேடி..இன்னும் கொஞ்சம் மௌனராகம் கார்த்திக் எனக் கலகலப்பின் சகலையாகிறார் சூர்யா. அடி, தடி, பீர், காதல், மோதல்,பதிவுத் திருமணம் என ஜாலியாய் நகர்ந்து தோல்வியைத் தழுகிறது சூர்யாவின் முதல் காதல் எனக் கதையைக் கஷ்ட்டப்பட்டு பின்னுகிறார் இயக்குனர்.

இப்போப் பார்த்தீங்கன்னா சூர்யா ஒரு சந்தோஷமானக் குடும்பத் தலைவர், ஜோ கணவனின் பழையக் காதலைக் கண்டுபிடித்துத் தடுமாறி நிற்கும் மனைவி...என்ன நடக்கும் என்ற ஆவல் கொஞ்சமும் மேலோங்க விடாமல்.. கதையைக் கலலைக் கட்டி கிணற்றில் வீசுகிறார் இயக்குனர்.

ஜோ புதுமைப் பெண்ணாகிறார்!!!!??? கணவனின் டைரி வரிகள் படி அவன் பழையக் காதலை அவனுக்கு ஒரு நாள் திருப்பிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

சூர்யா, பூமிகா யாருமே அந்த முயற்சிக்கு எதிர்ப்போ!!! ஆதரவோ??? தருவதுப் போல் தெரியவில்லை அல்லது காட்டப் படவில்லை...

ஜோவின் இந்தத் தியாகச் செயல்,
நமக்கு வேலியிலே போற ஓணானை எடுத்து.. என்ற புகழ்பெற்ற பழமொழியினை ஞாபகப் படுத்துகிறது...
அதுக்கு மேல குத்துதுடா சாமி குடையுதுடா சாமி என்று திரைக்கதைப் பாவம் மூச்சு திண்றி நம் கண் முன்னால் ஆக்சிஜென் கேட்டு யாசிக்கிறது... அப்புறம் என்ன ஆசைத் தோசை அப்பளம் வடை என ஜோ... என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்ன்னு அழுதுகிட்டு முழியை உருட்டி உருட்டிச் சொல்ல.. சரி நீயே வ்ச்சிக்கோ உன் புருஷனை அப்படின்னு இவங்க குடும்பத்து ஆப்பரேஷன்சை ஆடிட் பண்ண வந்த KPMG ஆடிட்டர் மாதிரி பூமிகா ஒரு லெட்டர் கொடுத்துட்டு ஆஸ்திரேலியாவுக்கு சொய்ங்க்ன்னு விமானம் ஏறிடுறாங்க...

தியேட்டர்ல்ல படத்துப் பேர் சில்லுன்னு இருக்குன்னு ஏஸியை வேற நிறுத்தி தொலைச்சு அவன் பங்குக்கு அவன் புண்ணியம் கட்டிக்கிட்டான்

ஆகக் கூடி... சூர்யா அடுத்தப் படத்துக்குக் கதைக் கேட்டு நடிங்க...

அப்புறம் இன்னொரு விஷ்யம் எப்.எம்ல்ல எல்லாம் வந்து சாலைப் பாதுகாப்பு பத்திப் பேசிட்டு படத்துல்ல குடிச்சு முடிச்ச பீர் பாட்டிலை ஸ்டைலா ரோட்டுக்கு நடுவே விட்டு எறியறது அவ்வளவு நல்லா இல்ல சூரி...TAKE CARE

LAST SIGNING OFF WITH WISHES FOR A HAPPY MARRIED LIFE

9 comments:

மனதின் ஓசை said...

என்னா தேவு இப்படி சொல்லிபுட்ட?
:-(

பாக்கலாம்னு நனச்சிகிட்டு இருந்தேன்..
யாரோ நல்லா இருக்குன்னு சொன்னா மாதிரி ஞாபகம்!!!

Unknown said...

ஹமீத் உள்ளதைச் சொன்னேன்ப்பா. :)

Boston Bala said...

----குடும்பத்து ஆப்பரேஷன்சை ஆடிட் பண்ண வந்த KPMG ஆடிட்டர் மாதிரி ----

:-)))

வல்லிசிம்ஹன் said...

சரியான கணிப்புதான்.
சூரியா இனி இந்தமாதிரி
டைப்காஸ்ட்(அடிதடி)
ரோல் செய்யாமல் இருந்தால் நல்லா இருக்கும்.

Anonymous said...

आ एन्न इप्पtइ सुरियावा पण्णितिङ्क

Karthikeyan said...

//சரியான கணிப்புதான்.
சூரியா இனி இந்தமாதிரி
டைப்காஸ்ட்(அடிதடி)
ரோல் செய்யாமல் இருந்தால் நல்லா இருக்கும்.

//
இதை வழிமொழிகிறேன்

இலவசக்கொத்தனார் said...

ஆக மொத்தம் நான் தலைக்கு 10 டாலர் மிச்சம் பண்ணிட்டேன். ரொம்ப டாங்கஸ்பா.

Anonymous said...

யண்டா டெய் ..சூர்யா அடி தடி ல (ஆரு) பெண்டு கயட்டினாலும் ..கலாயிகிர..சில்லுனு காதல் பண்ணாலும் டென்சன் ஆவுர ..அவர யென்ன தாண்டா செய்ய சொல்ர ???

ரவுசுபார்ட் ராமனாத்

செ. நாகராஜ் - C. Nagaraj said...

Sillunu oru kadhal, i saw till the vadivelu's bombay visit, the movie was not engrossing, but as you said i was also waiting for the story to start, i was wondering what has the director done till now, for i was searching for the story.

How to type in tamil, any help page or bllog is there please guide me or send mail to nagaraj15@mail.com

tamil10