Monday, February 15, 2010

சினிமாப் பட்டியில் இருந்து கச்சேரி செய்திகளுக்காக சுகுமாரன்

டொட்டடொய்ங் டொட்டடொய்ங்...இதனால் சினிமா பட்டி மக்களுக்கு அறிவிக்கப்படும் செய்தி என்னவென்றால் நம்ம பாசக்கார சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பெரியவருக்கு சினிமாப் பட்டி வாழ் மக்கள் சார்பா நடத்தப்படும் நாலாயிரத்து நானூத்து எட்டாவது பாராட்டு விழாவுக்கு அனைவரும் கண்டிப்பாக கட்டாயமாக பாசத்தோடும் அன்போடும் பாராட்டு மேகங்களோடும் ( மேகம் விழாவில் மழையாக பொழிய) வந்து சேர வேண்டுமாறு அழைக்கப்படுகிறார்கள்.....மிக முக்கியமாக விழாவுக்கு தலைமையேற்க வரும் அகில உலக சூப்பர் ஸ்டார்கள்....கேலக்சி நாயகன்கள்...பெரிய தளபதிகள்..குட்டி தளபதிகள்...வாய்ஸ் கேப்டன் ஸ்...மற்றும் மேடையேற போகும் அனைத்து வருங்கால சினிமாப் பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் ஒரு நீளமான உரையை....அதாவது இது வரை கலந்து கொண்ட பாராட்டு விழாக்களில் தெரிவிக்காத பாராட்டுக்களை கொண்ட ஒரு உரையை தயார் செய்து முன் ஒப்புதலுக்காக அறிவான பஞ்சாயத்து ஆலய..ஆபிசில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

சினிமாப் பட்டியின் உயர்வான மக்களே...தமிழை தன் உயிராய் மதிக்கும் நம் பஞ்சாயத்து தலைவரை மகிழ்விக்கும் படி நம் தற்கால சினிமாவில் வரும் இலக்கிய கருத்து செறிவான..ஓமகசீயா...நாக்கமுக்க..ரண்டக்க..பல்லேலக்கா..டையலாமா..போன்ற இனிய கருத்து ஆழம் நீளம் அகலம் உள்ள பாடல்களை பாடி...சீரான தமிழ் உடைகளை உடுத்தி உடுக்கை அடித்து...உலக்கை இடித்து....மானாடா மயிலாட....காண்பவருக்கு எல்லாம்....ஆனந்த கூத்தாட....நிகழ்ச்சிகள் அமைக்க வேண்டும்

விழா மேடையின் இரு பக்கமும் பஞ்சாயத்து தலைவரின் பிஞ்சு மனம் விம்மும் போது உடன் விம்ம அப்படியே தும்ம....குரல் கம்ம...கண் கலங்க....அகில உலக நாயகன் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....

கடைசியாக....விழாவுக்கு வரும் சினிமாப் பட்டி மக்களுக்கு அழைப்பு சீட்டோடு ஒரு துண்டு சீட்டும் வழங்கப்படும் அந்த சீட்டில் தங்கள் பெயரை எழுதி கருப்பும் சிவப்புமாய் முத்திரை குத்தி அங்கிருக்கும் பஞ்சாய்த்து அதிகாரிகளின் கையில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

விழா முடிவில் துணை பஞ்சாயத்து தலைவரும்...மத்திய முனிசிபாலிட்டி கமிட்டி சேர்மனும் சேர்ந்து மூன்று அதிர்ஷ்ட்டசாலிகளைத் தேர்ந்து எடுப்பார்கள்...அந்த மூன்று பேருக்கும்

பீலாகதி வாரனின் டின் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படம்...மற்றும் அதோகதி வயலின் ரெட் பெயிண்ட் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம்... வைகை ஏரியா லவுட் வைன் பிலிம்ஸ் தயாரிக்கும் புது படம் ஆகியவற்றில் நடிக்காமல் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க சிறப்பு அனுமதி இனாமாக அளிக்கப்ப்டும்...ஆகவே பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுங்கள் அனுமதியை வெல்லுங்கள்..டீலா நோ டீலா....சினிமா பட்டி மக்களே

இந்த அறிக்கை சினிமாப்பட்டி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...இந்த அறிக்கை கேட்க பலரை நாம் தொடர்பு கொண்ட போது பலரும் இலங்கை தமிழர்களின் நலன் வேண்டி பஞ்சாயத்து தலைவர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க காலவரையற்ற மவுன விரதம் இருப்பதாய் சைகை மொழியில் தெரிவித்தனர்...

அலட்டி நாட் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த மண்ட நடிகர் மட்டும் வீரமா வாயைத் திறந்து...ஐய் ஆ....இவ்ங்க ஏன்னை மெரட்டுராங்க..ஆனாலும் நான் பேஸ் மாட்டேன்...நீங்க சொல்லுற வர்க்கும் ஏதுவ்வும் பேஸ் மாட்டேன்...ஆனா சொல்லிடுங்க ஐய் ஆ...ப்ளீஸ்...நான் பேஸ்ணும்..நறைய்ய பேஸ்ணும்...அப்படின்னு தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்...


இப்போ தலைப்பை படிச்சு பதிவை முடிங்க....

டிஸ்கி: இந்த அறிக்கையும் அதில் இருக்கும் கருத்துக்களும் சும்மா லுடுலுடுவாயி மட்டுமே...அது யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடுவன அல்ல....இது மெய் மெய் மெய்...மெய் மட்டுமே....

4 comments:

gulf-tamilan said...

welcome back !!!

ஆயில்யன் said...

பாஸ் வாங்க வாங்க :))))))

//னாலும் நான் பேஸ் மாட்டேன்...நீங்க சொல்லுற வர்க்கும் ஏதுவ்வும் பேஸ் மாட்டேன்...ஆனா சொல்லிடுங்க ஐய் ஆ...ப்ளீஸ்...நான் பேஸ்ணும்..நறைய்ய பேஸ்ணும்...அப்படின்னு தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.///


ஆஹா டெரரால்ல இருக்கு ரீ எண்ட்ரீ :)) பாவம் அவுரு வேந்தாம் வித்துடுங்க :)

பினாத்தல் சுரேஷ் said...

பஞ்சாயத்து தலைவர் முக்கியமான பணியில் இருக்கும்போதே இவ்வளவு கடமையாற்றவேண்டி இருக்கிறதே, ஓய்வு பெற்றுவிட்டால் வாரம் இருமுறையாக வரவேற்பு வளையம் கட்டி வாணவேடிக்கை கொண்டு நடனம் ஆடி அவ்வப்போது அழுது சிரிக்காமல் புகழ்ந்து அத்தனையும் ஒரே டேக்கில் செய்யவேண்டுமே என்று கோலிவுட் வட்டாரமே கிறுகிறுத்துப்போயிருக்கிறதாமே? நமது ரகசிய நிருபர் நட்டுவாக்காலி தெரிவித்தார்.

கோபிநாத் said...

அசல் கச்சேரி ;))

tamil10