Wednesday, June 20, 2007

சிவாஜி எப்படி - 3

சிவாஜி எப்படி - 2



சினிமா என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை இந்தக் கருத்து பரவலாக அனைவராலும் ஏற்றுகொள்ளப் பட்டக ஒன்று.. கனவுகளின் வியாபாரம் அங்கு படு ஜோராக காலம் காலமாக நடந்து வருகிறது.. உலகெங்கும் இந்த வியாபாரச் சந்தையில் கொள்வோரும் கொடுப்போரும் அதிகம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பான்மையானப் படங்கள் சந்தைப்படுத்துதலுக்குத் தோதாகவே எடுக்கப்பட்டவையாக இருக்கும்.. ரஜினியின் படங்கள் தமிழ் சினிமாவின் வியாபார எல்லைகளை விரிவுப்படுத்தி உள்ளன என்பதில் எந்தவொரு ஐயமிமுல்லை...

சிவாஜி வெளியாகி முதல் வாரத்திலேயே ஐரோப்பிய பாக்ஸ் ஆபிஸில் சூடுப் பரப்பதாய் தகவல்கள் வருகின்றன..சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் வியாபாரம் தூள் பரத்துவதாய் நெட்ல் காணக் கிடைக்கும் சினிமாச் செய்திகள் சொல்கின்றன... ஐக்கிய அரபு நாடுகளின் திரையரங்குகளில் புது வரலாறு படைக்கப்படுவதாய் பேச்சுக்கள் எழுகின்றன... ஜப்பான் கதைகளை பேசி நமக்கு அலுத்து விட்டது. சீனாக்காரர்களும் சிவாஜி ரஜினியைக் காண ஆயத்தம் ஆகி வருவதாய் தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது.வங்காள மாநிலத்திலும் கொல்கத்தாப் போன்ற நகரங்களில் சிவாஜி வரும் வாரம் திரையிடபடுகிறதாம்..

தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய சந்தை உருவாக்கிக் கொடுப்பதற்கு ரஜினியும் பங்கு அளிக்கிறார்.. அந்தப் பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்பது உள்ளூர் விம்ர்சகர்கள் ஏற்க மறுத்தாலும் அது உண்மை எனபது உண்மை.

"எங்க தலைவர் படம் இப்போ உலகமெல்லாம் ஓடுதுங்க.. ஆனாலும் பாருங்க உள்ளூர் மக்க இன்னும் அவரை இந்தச் சின்ன வட்டத்துக்குள்ள சிக்க வைச்சிரணும்ன்னு விமர்சனமாப் பண்ணித் தள்ளுறாங்க... அவருக்கு எதுக்குங்க உள்ளூர் அரசியல்.. அவர் உலக ரேஞ்சுக்கு படம் பன்ணிகிட்டு போயிகிட்டுருக்கார்.. நடிகராக அவர் அடைஞ்சுருக்க அடையும் சாதனைகளை வெற்றிகளைப் பாத்து நாங்களும் சந்தோசப்படுறோம்..."

சிவாஜி இடைவேளையில் கான்டினில் காபி குடித்தப்போது ஒரு ரசிகரின் கருத்து காதில் விழுந்தது..

அட ஆமா.. நம்மூர் படத்துல்ல பட்டயக் கிளப்புன ரஜினிங்கற நடிகர் ஒருத்தர் இன்னிக்கு தன் வழக்கமான ந்டிப்பால்.. அதே ஜனரஞ்சகமான படைப்பால்...அதே தமிழ் படம் வாயிலாக இன்று உலக பொது பொழுதுபோக்கான சினிமாவின் உலகளாவிய ரசிகர்களை மகிழ்விக்கும் நிலைக்கு தன் தொழிலில் உயர்ந்துள்ளார்...அந்த உயர்ச்சிக்குக் கொடிப் பிடிக்காவிட்டாலும்.. நம்ம மக்கள் அந்த உயர்ச்சியை இகழ்ச்சியாய் பார்க்காமல் இருக்கலாமோ...

தட்டிக் கொடுக்கா விட்டாலும் தட்டி விட முயற்சியாவது செய்யாமல் இருக்கலாமோ...

பொதுவாக எங்கும் வெற்றிகள் விமர்சிக்கப்படுகின்றன... இருப்பவனை இல்லாதவனும் இயன்றவனை இயலாதவனும் விமர்சிப்பதாய் மேலுக்கு தோன்றும் சமாச்சாரங்கள்...

பொதுவா விமர்சனங்கள் குறித்து என்னுடைய கருத்து..EVERY BODY HAS A STRONG AND JUSTIFIABLE REASON FOR HIS COMMENTS AND SO DO I....

சரி சிவாஜியின் விமர்சனம் ரிட்டன்ஸ் இப்போ..

இடைவேளை வரை காமெடி, காதல், வில்லனோடு மோதலுக்கான அடித்தளம் என நகரும் சிவாஜி.. இடைவேளைக் காட்சியில் வில்லனோடு வெடிக்கும் மோதலின் உச்சக்கட்டத்தோடு.. சிவாஜி சீறும் சிங்கமாக சில்லரைக் காசை சுண்டிப் போட்டு சவால் விடுவதுமாய் நிற்கிறது...




இடைவேளைக்குப் பின் சூப்பர் ஸ்டார் பார்மூலா புதுப் பொலிவுடன் திரையில் அனல் கிளப்புகிறது...

கனவுகளின் மொத்தமுமாய் ரஜினி அதிரடிகளை அரங்கேற்றுகிறார்...

"நான் சொன்னா நீ கேட்கணும்.. அடம் பிடிச்சா ஆப்பு அடிப்பேன் ..." என்று அரசாங்க உயர் ஊழியன் முதல் அரசாங்கம் வரை 'ஆபிஸ் ரூம்' ஆட்டம் காட்டி சும்மா அதிருதுல்லன்னு விசிலையும் கைத்தட்டல்களையும் அள்ளி சுவிங்கம்மாய் வாயில் போட்டு மென்று கொண்ட திரையில் தீ தெறிக்க ராஜ நடைப் போடுகிறார் சூப்பர் ஸ்டார்..

வில்லன்களுக்கு அல்வாக் கொடுத்து சும்மா எமலோகம் வரை சென்று அங்கு எமனுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு நட்பான டாக்டர் ரகுவரனும், அன்பான மனைவி ஸ்ரேயாவும் பாசக்கார 'அம்மாத் தம்பி' விவேக்கும் கூப்பிட்டு விட திரும்ப மண்ணுலகம் திரும்புகிறார் சூப்பர் ஸ்டார்

திரும்புனவர் சும்மா வராமால்.. படுக் கெத்தா வர்றார்...


சிவாஜியாச் செத்து எம்.ஜி.ஆரா வந்து மேட்ரிக்ஸ் பாணியில் பறந்து பாயந்து சண்டைப் போட்டு வில்லனையும் முடிக்கிறார் படத்தையும் முடிக்கிறார் ரஜினி...

எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் பார்ப்பதும், ரசிப்பதும், கொண்டாடுவதும், கூத்தாடுவதும் ரஜினி... ரஜினி மட்டுமே...

அதுப் போல ரஜினியை விமர்சிப்பவர்கள் குறைக்காணுவதும்..குற்றம் சொல்ல விழைவதும்..குத்திக் காட்ட நினைப்பதும்... ரஜினி... ரஜினி மட்டுமே...

அந்த வகையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமன்றி ரஜினியை வைத்து விமர்சித்து குறை சொல்லி குற்றப்படுத்தி கும்மியடிக்கும் அனைத்து தரப்பினருக்கும் குறைவில்லாத விருந்துப் படைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்...

சிவாஜி எப்படி அடுத்தப் பகுதியில் முடியும்..

2 comments:

SurveySan said...

தொடருங்க தொடருங்க.

வெயிட்டிங்!

Senthil said...

its rajini who saves shankar, don't expect anything in collection, it is always safer to calculate later like in chandramukhi. if it doesn't meet, we feel some sad, this is what we experienced in our thalaivar vijay's pokkiri, paruthi veeran, mozhi affected our collection

tamil10