Monday, September 17, 2007

கல்யாணம் கச்சேரி

ஆடி மாசம் முடிஞ்சாலும் முடிஞ்சது இப்போ ஒரே கல்யாண சீசன் தாங்க..

மெயிலைத் திறந்துப் பார்த்தா பத்து வருசத்துக்கு முன்னால பழக்கம் கட் ஆகிப் போன பழைய பிரண்ட் கிட்ட இருந்து கல்யாண அழைப்பு...

வீட்டு போஸ்ட் பாக்ஸ் திறந்தா நம்ம பேர் போட்டு ஒரு இரண்டு மூணு கல்யாண அழைப்பு...

மெயிலாவது பரவாயில்ல அனுப்புறவங்க யார்ன்னு தெரியும் அதுன்னால அவருக்குத் தான் கல்யாணம்ன்னு தெரிஞ்சுக்கலாம்.. வீட்டுக்கு வர அழைப்புல்ல சில சமயம் பொண்ணு நமக்கு வேண்டியவங்களா இல்ல பையன் நமக்கு வேண்டியவங்களான்னு பெரிய குழப்பமெல்லாம் நடந்திருக்கு...

என்னப் பண்ணுறது காலம் போற வேகத்துல்ல கூட வந்தவங்க முகமெல்லாம் மறந்துப் போயிருது..

இப்படித் தான் போன வாரம் நம்மக் கூடப் படிச்ச பய ஒருத்தனுக்கு திருச்சியிலே கல்யாணம்.. கூட வேலைப் பார்த்த தோழி ஒருத்தங்களுக்குச் சென்னையிலே அதுக்கு அடுத்த நாள் கல்யாணம்...

பையன் கல்யாணத்துக்குப் போய் ரூம் எல்லாம் போட்டு பழையக்கதையை எல்லாம் பேசி... அவன் காதலிச்ச பொண்ணுக்கு கார்ட் அனுப்புனானா கடமையாக் கேள்வி எல்லாம் கேட்டுட்டு அவசரமா அவசரமா கல்யாணச் சாப்பாடு எல்லாம் சாப்புட்டு பஸ் புடிச்சு ஊருக்கு வந்தேன்.

பொண்ணு கல்யாணத்துக்குப் போறதுக்கு ஒரு சின்னத் தயக்கம்.. அவங்களைப் பார்த்து ஒரு ரெண்டு வருசம் ஆச்சி.. என் கல்யாணத்தப்போ பாத்தது.. இப்போ பழைய ஆபிஸ் மக்கள் யாராவது வருவாங்களா? இல்லை தனியாத் தான் போய் நிக்கணுமான்னு ஒரே யோசனை.. பொறவு இன்னொரு நண்பனும் வர்றதாச் சொல்ல ஒண்ணாக் கிளம்புனோம். மழையிலே நனைஞ்சுகிட்டேப் போயிட்டோம்.

மண்டபத்துல்ல போய் மேடையைப் பார்த்தா பொண்ணு மாப்பிள்ளை எல்லாம் வந்துட்டாங்க... அப்போத் தான் எங்களுக்கு பெரும் சந்தேகம்.. வேறக் கல்யாணத்துக்கு வந்துட்டோமான்னு...

பின்னே மேடையிலே தோழியைத் தேடுனா காணும்... அங்கிட்டு இருக்கப் பொண்ணுக்கும் எங்க தோழிக்கும் சம்பந்தமே இல்ல.. பொறவு மெதுவா எங்க அறிவுக்கண்ணைத் தொறந்து புரிஞ்சுக்கிட்டோம்.. எல்லாம் கமலஹாசன் டெக்னிக் தான்.. மேக்கப்ங்கோ மேக்கப்...எப்படியோ தோழியோட கெட்டப் சேஞ்சைக் கண்டுபிடிச்சு கரெக்ட்டான இடத்துக்குத் தான் வந்துறுக்கோம்ன்னு கன்பர்ம் பண்ணிகிட்டோம்.

கடைசி வரிசையிலே பந்திக்கு முந்துறதுக்குத் தோதா ஒரு இடம் பார்த்து உக்காந்துகிட்டோம். கொஞ்சம் கொஞ்சமா பழைய அலுவலகச் சகாக்கள் எல்லாரும் வந்து சேர அப்படியே கல்யாணம் களைக் கட்ட ஆரம்பிச்சுது.. ஊர் கதை, உலக கதை, உழவர் சந்தை கதை, வந்த கதை, நொந்த கதை, அந்த கதை, எடுத்துக் கட்டுன கதை, விட்டுப் போன வரலாறு, அப்படின்னு ஆசையா நாலு வார்த்தைப் பேசலாம்ன்னு பார்த்தா....

கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமான்னு ஸ்டேஜ்ல்ல இருந்து ஒரு பொண்ணு கேக்குது..ச்சே பாடுது...பாவம் அந்தப் பொண்ணு என்னமோ பாடத் தான் செஞ்சுது.. ஆனா அதுக்கு எபெக்ட் கொடுக்குறோம்ன்னு மியூசிக் பார்டி எக்குத்தப்பா டெசிபலை அலற விட்டு அடிவயித்துல்ல சுனாமி கிளப்புனாங்களே ...யப்ப்பா... மண்டபமோ சிறுசு... இதுல்ல இந்த அளவுக்கு சவுண்ட் பார்ட்டி வச்சுதுல்ல எங்கிட்டு நாலு வார்த்தைப் பேசுறது..

"என்ன மச்சான் ஹாய் கூட இல்லையா?" நண்பனைக் கேட்டேன்.

அவன் வாய் மட்டும் அசையுது.. வாய்ஸ் நாய்ஸொட மிக்ஸ் ஆகி... என் காதுல்ல தாலியைத் தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா இல்ல புள்ளக்குட்டிப் பெத்துகிட்டு கட்டிக்கலாமான்னு பாட்டு தான் கோக்குமாக்கா விழுந்து வைக்குது..

ஆமா எதுக்கு அப்பூ கல்யாணம் காது குத்து விருந்து எல்லாம் நாலு சொந்தம் பந்தம் சுற்றம் சூழல் எல்லாம் பார்த்து நாலு வார்த்தைப் பேசி.. யூ ஒ.கே...? மீ ஓ.கேன்னு குசலம் விசாரிக்கத் தானே.. அதுக்கு ஆப்பூ வைக்கிற மாதிரி இந்த அதிரடி இரைச்சல்கள் அவசியமான்னு இசை பிடிச்ச எனக்கே யோசனையாப் போச்சு..

திரும்பவும் டாபிக் மணப்பெண்களின் மேக்கப் மேட்டருக்கு திரும்ப...நண்பர் ஒருத்தர் தன் வீட்டில் நடந்தக் கூத்தைச் சொன்னார்.. அவருக்கு ஒரு வயசுல்ல ஒரு பெண் குழந்தை இருக்கு...அவர் கல்யாணப் போட்டோவை எடுத்து அது கிட்டக் காட்டி அப்பா எங்கேம்மா செல்லம்ன்னு கேட்டிருக்கார்... டக்குன்னு கோட்டு சூட்டு போட்டுகிட்டு நின்ன அவரைப் பளிச்சுன்னு காட்டிருச்சாம்...
அடுத்தாப்புல்ல அம்மா எங்கேடா செல்லம்ன்னு கேட்டிருக்கார்.. அந்த வாண்டு விறுவிறுவெனச் சமையல் ருமுக்குப் போய் அங்கிட்டு வேலைப் பாத்துகிட்டு இருந்த அவர் தங்கமணியைக் கைப் பிடிச்சுக் கூட்டிகிட்டு வந்துருச்சாம்...

பெத்தப் புள்ளக்கே ஆத்தாளை அடையாளம் தெரியல்லயா.. என்னக் கொடுமை இது சரவணன் அப்படின்னு சொல்லி சிரிச்சார்.

நண்பர் வீட்டு தங்கமணியும் கூட இருந்தாங்க...

அவங்க எதுக்குமே அலட்டிக்காம சொன்னாங்க...."எங்க வீட்டு ரங்கமணியும் பியூட்டி பார்லருக்கெல்லாம் போயிட்டு தான் வந்தார்....ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவிட்டாலும் இருக்கது தான் இருக்கும்ன்னு அனுப்பி விட்டுட்டாங்க"

அவ்வளவு தான் நண்பர் கடும் வேகத்தில் எழுந்து "பந்திப் போட்டாங்கப்பா சும்மா இப்படி வெட்டியாப் பேசிகிட்டு இருந்தா வீடுப் போக நடு ராத்திரி ஆயிரும் மழை வேற பெய்யுதுப்பா...சென்னை ரோட் லட்சணம் தெரியும்ல்ல"

நாங்களும் அவர் பின்னாலேப் போனோம்...

கல்யாணம் கச்சேரி நகர வாழ்க்கையில் அவசர அவசரமாய் போய் வந்தாலும் அதுவும் ஒரு அனுபவம் தான் போங்க...

14 comments:

ஜே கே | J K said...

//ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவிட்டாலும் இருக்கது தான் இருக்கும்ன்னு அனுப்பி விட்டுட்டாங்க"//

என்னத்த சொல்ல....
அனுபவம் பேசலாம்....

மங்களூர் சிவா said...

நல்லா எழுதியிருந்தீர்கள். எல்லாருக்கும் இது போன்ற அனுபவங்கள் கண்டிப்பாக இருக்கும்.

சென்னையில் ஒரு முறை நண்பரின் கல்யாணத்துக்கு அசோக் பில்லரிலிருந்து அண்ணா நகர் (ஈஸ்ட்) போக ஒரு மணி நேரம் ஆனது மழை இல்லாத போதே. இத்தனைக்கும் டூ வீலரில்.

மங்களூர் சிவா

Unknown said...

ஜே,கே, தம்பி அப்படி என்னத்தை எழுதிபுட்டோம்.. நாட்டுல்ல நகரத்துல்ல நடக்குற கல்யாணம் பத்தி தானே எழுதுனேன்... கல்யாணம்ன்னா என்னன்னு தெரியாதுன்னு சின்ன தம்பி ரேஞ்சுக்கு பில் டப்பு பின்னூட்டம் எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்.

Unknown said...

//நல்லா எழுதியிருந்தீர்கள். எல்லாருக்கும் இது போன்ற அனுபவங்கள் கண்டிப்பாக இருக்கும்.

சென்னையில் ஒரு முறை நண்பரின் கல்யாணத்துக்கு அசோக் பில்லரிலிருந்து அண்ணா நகர் (ஈஸ்ட்) போக ஒரு மணி நேரம் ஆனது மழை இல்லாத போதே. இத்தனைக்கும் டூ வீலரில்.

மங்களூர் சிவா//

வாங்க சிவா.. கல்யாணம் பத்தி எழுதுனா கதை கதையா எழுதலாம் போங்க அவ்வளவு சுவாரஸ்யமான நிகழ்ச்சி அது ( விருந்தினர்களுக்கு மட்டும்ங்கறது வேற விசயம்) சும்மாவா இந்தியிலே ஒரு கல்யாணத்தை வச்சு மட்டுமே படமெடுத்து வருசக்கணக்கா ஓட்டி காசு அள்ளுனாங்க.. நம்ம ஊர் கல்யாண நிகழ்வுகளிலும் அப்படி பதிவு செய்யத் தக்க சுவாரஸ்யங்கள் நிறையவே இருக்குங்க சிவா

குசும்பன் said...

நண்பர்களின் கல்யாணம் என்றால் ஒரெ குஜால் தான்..

"ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவிட்டாலும் இருக்கது தான் இருக்கும்ன்னு அனுப்பி விட்டுட்டாங்க"

படிச்சிட்டு டமார்ன்னு சிரிச்சிட்டேன்.
அருமை!!!

நாகை சிவா said...

//கல்யாணம் கச்சேரி நகர வாழ்க்கையில் அவசர அவசரமாய் போய் வந்தாலும் அதுவும் ஒரு அனுபவம் தான் போங்க...//

மெய்யாலுமே அண்ணாத்த....

சில மணி நேரங்களில் பல சாதனை, சோதனை, சரித்திரங்களை அலசி ஆராய்ந்து விடும் இடம் அது...

இலவசக்கொத்தனார் said...

:))

நல்லாயிருங்கடே!!

Unknown said...

//நண்பர்களின் கல்யாணம் என்றால் ஒரெ குஜால் தான்..//

வாங்க குசும்பன்.. கூட்டாளிக கல்யாணம்ன்னா கேக்குணுமாக் கூத்தை..அதுவும் நம்மளை மாதிரியே இவனும் சிக்கிட்டான்னு நினைக்கும் போது ஒரு சந்தோசம் பொங்கும் பாருங்க அதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கணும்ய்யா

//"ஆனாப் பாருங்க எருமை மாட்டை என்னத் தான் தேய்ச்சுவிட்டாலும் இருக்கது தான் இருக்கும்ன்னு அனுப்பி விட்டுட்டாங்க"

படிச்சிட்டு டமார்ன்னு சிரிச்சிட்டேன்.
அருமை!!!//

அன்னிக்கு நாங்களும் சிரிச்சு சிரிச்சு கிட்டத்தட்ட பல்லைச் சுளுக்கிக்கிட்டோம்ங்க..:)))

Unknown said...

////கல்யாணம் கச்சேரி நகர வாழ்க்கையில் அவசர அவசரமாய் போய் வந்தாலும் அதுவும் ஒரு அனுபவம் தான் போங்க...//

மெய்யாலுமே அண்ணாத்த....

சில மணி நேரங்களில் பல சாதனை, சோதனை, சரித்திரங்களை அலசி ஆராய்ந்து விடும் இடம் அது...//

சிவா உன் சரித்திர சாதனைகளை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம் நெருங்கிடுச்சுன்னு நாகப்பட்டினம் ஏரியாவில்ல இருந்து தகவல்கள் வந்தப் படியே உள்ளன..சீக்கிரம் ரெடியாகுப்பா:))

Unknown said...

//:))

நல்லாயிருங்கடே!!//

புரியுது தலைவரே அங்கிட்டு புதரகத்துல்ல இதுக்கெல்லாம் நோ சான் ஸ்ன்னு... கவலைப் படாதீய..அடுத்து வரும் மாசங்களில் நம்ம சங்கத்து சிங்கமெல்லாம் லைனாக் கூண்டுக்குள்ளேப் போக போவுது .. நீங்க் வந்து பார்த்து வாழ்த்தி மகிழலாம்..:))

ராம் தம்பி பதிவைப் பார்த்தீங்களா? சொல்ல வந்ததைக் கதையா என்னாமா சொல்லியிருக்கு:)))

நாகை சிவா said...

இந்த விளையாட்டுக்கு நான் வரல என்னைய ஆள விடுங்க...

அசர கேப்புல என்ன ஒரு வில்லத்தனம்?

Unknown said...

//இந்த விளையாட்டுக்கு நான் வரல என்னைய ஆள விடுங்க...

அசர கேப்புல என்ன ஒரு வில்லத்தனம்?//

அடப் பாவி உன் வரலாற்றை அலசி ஆராயலாம்ன்னு கிளம்புனா அதைப் போய் வில்லத்தனம்ங்கறீயே.. இன்னும் என்ன என்ன இருக்கு அதுக்கெல்லாம் அப்போ என்ன என்ன சொல்லுவீயோ...:)))

இராம்/Raam said...

/ராம் தம்பி பதிவைப் பார்த்தீங்களா? சொல்ல வந்ததைக் கதையா என்னாமா சொல்லியிருக்கு:)))//

அண்ணே.... ஏண்ணே, இந்த கொலைவெறி??? :(

Unknown said...

///ராம் தம்பி பதிவைப் பார்த்தீங்களா? சொல்ல வந்ததைக் கதையா என்னாமா சொல்லியிருக்கு:)))//

அண்ணே.... ஏண்ணே, இந்த கொலைவெறி??? :(//

வாய்யா ராம்... கூண்டுக்குள்ளே போக காத்திருக்கும் சிங்கம் எல்லாம் ஒண்ணு ஒண்ணா வருது பார்... லைன்ல்ல முதல்ல நிக்குற சிங்கத்தைத் தான் இன்னும் காணும்..

கல்யாணம் கச்சேரி உங்களுக்காக ஆச ஆசையா ட்ரெயிலர் மாதிரி பதிவு போட்டா என்ன பேச்சு இது ராஸ்கல்..

இங்கிட்டாவது உண்மையை ஒத்துக்கோ அது மதுரை ஹாஜி மூசா தானே

tamil10