Wednesday, March 28, 2007

துபாய் வரைக்கும் கேள்வி கேப்போம்ல்ல..

மனுசனுக்குத் தான் பாஸ்போர்ட் வேணும் மனச்சாட்சிக்கு எதுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம்..

நேத்து வெட்டிக்கு மெயில் அனுப்பி பேட்டி எடுத்த மனச்சாட்சி.. இன்னிக்கு மெயில் குள்ளே நுழைஞ்சு அமீரகம் போயிட்டே வந்த்ருச்சு... அபி அப்பா அபி அப்பாங்கறாளே ஒரு வேளை அமிதாப்பசன் தான் தமிழ்ல்ல பதிவு போட இப்படி ஒரு புது பெயர்ல்ல வந்துருக்காரோன்னு ஒரு டவுட்..

அடேய் மனச்சாட்சி.. அமிதாப்பசன் பையன் பேரு அபிஷேக்பச்சன்.. நம்ம அபி அப்பா பாப்பா பேரு அபிராமி.. போட்டுக் குழப்பாதேன்னு சொல்லியும் மனச்சாடசி கேக்கல்லையே.. கிளம்பிப் போயிருச்சு..

அங்கேப் போய் விசாரிச்சுட்டு அவர் அமிதாப்பச்சன் இல்லப்பா.. ஆனா ஒண்ணு அமிதாப் கூடப் பேசுனாக் கூட இவ்வளவு சிரிக்க முடியுமா தெரியாது.. மனுசன் சும்மா சிரிப்பைச் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே ஷாசேப் பாக்கேட்டாப் போட்டு வச்சுருக்கார்..

கேக்காமலே அள்ளி அள்ளிக் கொடுக்குறார்.. இந்தா இனி ஓவர் டூ ஸ்டார் ரிப்போர்ட்டர் அன்ட் அபி அப்பா..

உங்களுக்கு ஏத்த ஒரு பட்டம் சொல்லுங்களேன்?

வேற என்ன, "phd" தான். அபிஅப்பா டாக் ன்னு சொல்றவங்க டாக்.அபிஅப்பான்னு சொல்லுவாங்களே-:))

**உங்களுக்கு மகளா இருக்க அபி பாவமா? இல்ல அபிக்கு அப்பாவா இருக்க நீங்க பாவமா?

இதில பாவம்ன்னு பாத்தா தங்கமணியும், தமிழ்மணமும் தான்! என் பதிவுல எப்பவுமே அபி ஜாலியாதான் இருக்கும். அது போல நானும். ஆனா தங்கமணி தான் நாங்க அடிக்கிற கூத்துல கஷ்டப்படுவாங்க.அதுவும் sportive வா எடுத்துப்பாங்க.


அபி அப்பாவின் பதிவுகள் வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா இல்ல உள்குத்துக்கள் எதாவது இருக்கா?

வெறும் நகைச்சுவைன்னு சொல்ல மாட்டேன். நிறைய உள்குத்து இருக்கும். இதோ இந்த பதிவிலே முதல் பாரா கூட உள்குத்துதான். என் தம்பி கூட அதை எடுத்துவிடுன்னு சொன்னான். நான் செய்யலை. அது போல் சில தலைப்புகள் கூட உள்குத்து இருக்கும். சில உள்குத்துகள் சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதால் அந்த உள்குத்து புரியாதவர்களுக்கு அது காமடியா தெரியும். அந்த பதிவில் அந்த முதல் பாரவுக்கு இம்சை அரசியிடம் வந்த பின்னூட்டத்தை பாருங்கள்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.


குழந்தைகளின் மீது பெற்றவர்கள் தம் ஆசைகளைத் திணிப்பது சரியா? உங்கள் பதிவில் அது குறித்து நிறைய உதாரணங்கள் காண முடிகிறது.. உங்க பதில் என்ன?

குழந்தைகள் மீது தன் ஆசையை திணிப்பது தவறு. திணிப்பதை நானும் சரி, தங்கமணியும் சரி ஏற்றுக்கவே மாட்டோம். நானும் என் சகோதர சகோதரிகளும் சிறு வயதாய் இருந்த போது எங்கள் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்காக எங்கள் குழந்தை மீது அந்த ஆசையை திணிக்க நினைக்கவில்லை. அப்படியே எங்களை அறியாமல் நாங்கள் அந்த தப்பை செய்யும் போது தெள்ள தெளிவாக குழந்தைகள் நிராகரிக்கின்றன. இந்த பதிவில் கூட "என்னய கேட்டுகிட்டா டான்ஸ் கிளாசில் சேத்தீங்க"ன்னு பாப்பா சொல்வதை பாருங்கள்.

அதே போல் இந்த பதிவில் கூட அபிபாப்பாவின் குணமறிந்து தான் இ.ஆ.ப என்று முடிவு செய்யப்பட்டதாக பதிவில் சொல்லியிருப்பேன்.

பதிவுலகில் குறுகியக் காலத்தில் கவனிக்கப்படும் பதிவராக ஆகணும்ன்னா என்னப் பண்ணனும்ன்னு சொல்லுங்களேன்?

புதிதாக பதியவரும் எல்லோருக்கும் பயனுள்ள கேள்வி. ஆனால் இதை என்னிடம் கேட்டதில் ஏதும் உள்குத்து உண்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த அள்வு சொல்கிறேன்.

1. இந்த வலைப்பூவை நம் சொந்த குடும்பமாக பாவியுங்கள்.

2. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஏனனில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதை உணரவும். உங்கள் கண்ணியத்தை பார்த்துதான் "சரி இவன் ஆபத்தில்லாதவன், இவன் பதிவை பாராட்டியோ, குறைகூறியோ பின்னூட்டமிட்டால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று உணர வையுங்கள்.

3. உங்களுக்கு எது எழுத வருமோ அதை எழுதவும். தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்.(சொந்த அனுபவம்) இங்கே ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை அதிகமாகவே உண்டு என்பதை புரிந்து கொள்ளவும்.

4. தனிமனித தாக்குதல் கண்டிப்பாக கூடாது.

5. குறிப்பாக நீங்கள் உள்ளே நுழையும் போது தமிழ்மணத்தில் எந்த தலைப்பு அப்போது பிரபலமாக இருக்கிறதோ அதில் புகுந்து கொள்ளவும். அதாவது நாய் சேகர்(தலைநகரம் - வடிவேலு)மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு கூவிகிட்டே போலீஸ் வண்டியில் ஏறிவிடவும். உதாரணத்துக்கு இப்போ நுழைந்தால் இந்திய கிரிக்கெட் அணியை துவைத்து தொங்க போடலாம்.

6. தாராளமாக மற்ற பதிவுகளில் போய் பின்னூட்டம் போடவும்.

7. உங்கள் பதிவில் மற்ற பதிவர் பெயர்களை குறிப்பிட்டு முடிந்தால் லிங்க் கொடுத்து பாராட்டவும். இது நல்ல பலனை தரும்.

எனக்கு தெரிந்து இவ்வளவே.


நகைச்சுவை என்பது பதிவுகளில் எந்த வரையறைக்குள் நிற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எனக்கு தெரிந்து இந்த உலகில் எதுக்குமே வரையறை கிடையாது. எனக்கு சரின்னு பட்டது மற்றவர்களுக்கு தவறு என படலாம். ஆனாலும் தனி மனித தாக்குதல் அதனால் கிடைக்கும் நகைச்சுவையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

உதாரணத்துக்கு வேறு யாரையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம "தம்பி" யின் இந்த பதிவிலே சில வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை என தம்பியிடமே கூறினேன்.அந்த எல்லையின் விளிம்பு வரை போயிருப்பார் அதிலே.

இதோ நன்பர் கோவி.கண்ணன் அவர்களின் இந்த நகைச்சுவை பதிவை பாருங்கள். இது பார்த்திபன், வடிவேலு கண்ணில் பட்டால் கொத்திகிட்டு போயிடுவாங்க. நான் கூட இந்த தவரை செய்தேன் ஒரு முறை. சுட்டி காட்டப்பட்ட பின் அப்படி செய்வதில்லை. ஆக மற்றவர் மனம் புண்படாமல் சிரிப்பை வரவழைப்பதே நகைச்சுவையின் எல்லை என்னை பொருத்தமட்டில்.

தமிழ் பதிவுலகில் நகைச்சுவை உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்?

பதிவில் மட்டுமா நகைச்சுவை! பின்னூட்டங்களை பாருங்கள். சும்மா கலக்கலாக இருக்கும். ஒரு பதிவில் உஷா மேடம் பதிவில் கும்மி என்பதை கும்பி என்று டைப்பிங் தவறு நடந்துவிட்டது. பின்ன நம்ம லக்கியும், கொத்ஸும் வந்து விவாதங்கள் பரபரப்பாக நடந்தது. அதற்கு உஷா மேடம் "நான் கும்மின்னு சொன்னவுடனே இப்டி சர்றுன்னு வந்து நிக்கிறீங்களே"ன்னு ஒரு பின்னூட்டம் போட அதற்க்கு கொத்ஸ்"நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க வந்து சர்றுன்னு வந்து நிக்கிறத்துக்கு"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டார். வெடிச்சிரிப்புதான்.

அது போல் செந்தழல்ரவி போடும் மொக்கை பதிவுகளும், லக்கி,பாலபாரதியின் பதிவுகளிள் அனானி கும்மிகளும் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.

டுபுக்கு, வெட்டிதம்பி, தம்பி, பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, கண்மணி,கைப்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.

சிரீயசா யாரும் படிக்க மாட்டாங்கன்னு தானே நகைச்சுவையா எழுதுறீங்க?

அப்படியில்லை. சீரியசாக எழுத நிறைய பேர் இருக்காங்க, தவிர நான் முதலில் சொன்னது போல் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதை போல் நான் இப்படியே இருக்கவே ஆசைப்படுகிறேன்.

அமீரக வாழ் பதிவரான நீங்க.. அமீரக வாழ் தமிழர்கள் நிலைப் பத்தி பதிவுகள்ல்ல சொல்லணும்ன்னு நினைத்துண்டா?

அது பற்றி நிறைய எழுதலாம். தனி பதிவே போடும் அளவு செய்திகள் உண்டு. கண்டிப்பாக எழுதுகிறேன். அதிலே காமடிகூட உண்டு. விரைவில் பதிகிறேன்.


பொழுது போகாமாத் தான் பதிவுப் போட வந்தீங்களா? இல்லை வேறு எதேனும் நோக்கம் உண்டா?

உண்மையை சொல்லப்போனால் எப்போதும் லைம்லைட்டில் இருக்கனும். எல்லாரும் என்னை கவணித்துக் கொண்டே இருக்கனும் என்கிற வியர்டுதனம் தான் காரணம். இதை சொல்வதால் என் இமேஜ் பாதிக்காது. காரணம் 90% பேர் அப்படித்தான்.

உண்மையைச் சொல்லுங்க... தமிழ் மணத்துல்ல நகைச்சுவைப் பதிவுகளைப் படித்து அதிகம் சிரித்தீர்களா இல்லை சிரீயஸ் என்று முத்திரைக் குத்தப்பட்ட பதிவுகளைப் படித்து அதிகம் சிரிக்கிறீர்களா?

நான் அதிகம் படிப்பது சீரியஸ் பதிவுகள் தான். அதிலும் நான் தவராமல் படிப்பது லக்கிலுக், வரவனையயன், ஹரிஹரன், டோண்டு, மிதக்கும் வெளி, விடாதுகருப்பு, கால்கரி சிவா, மயிலாடுதுறை சிவா. இந்த சீரியஸ் பதிவுகள் சீரியஸாக இருக்கும். பின்னூட்டங்கள் காமடியாக இருக்கும்.

அடுத்து என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரின் பதிவுகளும் படிப்பேன். இதில் நான் அதிகம் சிரிப்பது நன்பர் பால பாரதியின் அனானி பின்னூட்டங்கள், மற்றும் நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))


கடைசியா இன்னும் எத்தனை நாளைக்கு அபியை நம்பி உங்க பொழப்பை ஓட்டப் போறீங்க..?

நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். அலுக்கும் வரை சுத்தும் உத்தேசம். யாருக்கு அலுக்கும் என்பது உள்குத்து.

ஒரு கிரிக்கெட் ஜோக் உங்க சொந்தத் தயாரிப்பு சொல்லுங்க நம்ம கச்சேரிக்காக?

கிரிக்கெட் ஜோக்காயிடுச்சு என்பதே ஒரு சோகம். இதுல கிரிக்கெட் ஜோக்கா. சரி, இப்போ நடந்த ஜோக்குன்னா இந்தியா-பர்மூடா மேட்ச்தான். போயும் போயும் இந்தியா கிட்ட போய் தோத்தாங்களே பர்மூடா, ஆக உலகத்திலேயே மோசமான அணி பர்மூடாதான்.

சரி, சொந்த தயாரிப்பா இருக்கனும்ன்னு சொன்னதால இது.

*****************

நேத்திக்கு நானும் என் தம்பியும் நெட், வெப்கேம் சகிதமா பேசிகிட்டு இருந்தோம். அப்போ அபிபாப்பாவும் அங்கதான் இருந்தா.

அபிஅப்பா: என்னடா கிரிகெட் ஜுரம் விட்டாச்சா?

அபிசித்தப்பா: ம். பாவம் பசங்களுக்கு கிரிக்கெட் பத்தி எல்லாம் சொல்லி குடுத்தேன். எல்லார் போட்டோவும் காட்டி சொல்லிகுத்தேன்.

அபிஅப்பா: ம்.. பாஸ்ட் பவுலர் பதிவ பாத்தியா?

அ.சி: பார்த்தேன். அவர் என்ன அடுத்த உ.கோ போட்டிக்கு உத்தேச அணியில சச்சின், திராவிட், கங்குலி எல்லாம் சேத்துட்டார். ஏன் கவாஸ்கர், கபில் கூட சேத்திருக்கலாமே,

அ.அ: லல்லூ கூட ரொம்ப ஆர்வமா இருக்கார். அவரை சேத்தா சரத்பவார் நானும் ஆட்டைக்கு உண்டுன்னு அடம் பிடிப்பார்

அ.சி: டேய்! சொல்ல மறந்துட்டேனே, இந்த போட்டோல்லாம் காட்டி கிரிக்கெட் பத்தி சொல்லிகுடுத்த்னே அப்போ சரத்பவார் படத்தை காட்டி "இவர்தான் நம்ம இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர்"ன்னு சொன்னேன். அதுக்கு அபிபாப்பா "இவர் கூட கிரிக்கெட் விளையாடுவார் சித்தூ"ன்னா. அதுக்கு நான் "அவரு விளையாடி நீ எங்க பாத்த"ன்னு கேட்டேன். அதுக்கு பாப்பா" டி.வி ல பாத்தேன்"ன்னு சொன்னா."அவரு கூட இப்ப என்ன செய்யுவ இப்ப என்ன செய்யுவன்னு ஒரு சின்ன பையன் கிட்ட டான்ஸ் ஆடுவார்"ன்னா. அது என்ன விஷயும்ன்னா S.B.I விளம்பரம் பாரு புரியும்.

அ.அ: பார்த்தேன் பார்த்தேன். பேசாம அந்த தாத்தாஸ் டீமை கூட அடுத்த உ.கோ வுக்கு அனுப்பலாம்டா!!


********

மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் செதுக்கினா ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.

பேட்டிக்கு நன்றி அபி அப்பா...

அடுத்து மீண்டும் மீட் பண்ணுவோம்

508 comments:

1 – 200 of 508   Newer›   Newest»
MyFriend said...

பாருங்க பாருங்க..
இப்போதும் நான்தான் ஃபர்ஸ்ட்டு!!!
;-)

நாகை சிவா said...

அபி அப்பா, இதோ கொல வெறியுடன் வந்துக்கிட்டு இருக்கேன்

Naufal MQ said...

இப்போ அபிஅப்பா மத்தவங்க பதிவிலும் வந்து 'கும்பி' அடிக்கிறாரா?

Anonymous said...

அண்ணா இப்பொழுதுதான் தெரிந்தது நீங்கள் தான் தமிழ் மண நட்சத்திரன் என்று.வாழ்த்துக்கள் அண்ணா.

நாகை சிவா said...

கொல வெறியுடன் உள்ள வந்தவனை இப்படி வாழை குழைப் போல் சாய்ச்சுப்புட்டிங்களே தொல்ஸ்


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாகை சிவா said...

பாஸ்ட், இந்த லொள்ளு தானே வேணாம் சொல்லுறது, நீர் "கும்பி" சொல்லி அந்த பிரச்சனையை இங்கயும் கொண்டு வர முயற்சிப்பது நல்லா இல்ல சொல்லிட்டேன்....

அது கும்மி, கும்மி, கும்மி.....

ஏலம் விடும் படி செய்றுறாங்களே சாமி....

MyFriend said...

//ஆனா தங்கமணி தான் நாங்க அடிக்கிற கூத்துல கஷ்டப்படுவாங்க.அதுவும் sportive வா எடுத்துப்பாங்க.//

பன்றதெல்லாம் பண்ணிட்டு சர்டிபிகேட் வேற தர்றீங்களா அபி அப்பா? பாவம் அவங்க!

//வெறும் நகைச்சுவைன்னு சொல்ல மாட்டேன். நிறைய உள்குத்து இருக்கும். //

:-P

MyFriend said...

//"என்னய கேட்டுகிட்டா டான்ஸ் கிளாசில் சேத்தீங்க"ன்னு பாப்பா சொல்வதை பாருங்கள்.//

ஆனாலும் கு.வா கத்துக்கிட்டு டைகருக்கும் சொல்லிகொடுத்து டாக் ஷோல பரிசு எடுத்துக் கொடுத்திருக்காளே உங்க மக. ;-)

//அதாவது நாய் சேகர்(தலைநகரம் - வடிவேலு)மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு கூவிகிட்டே போலீஸ் வண்டியில் ஏறிவிடவும். //

ROTFL.. :-)))))

MyFriend said...

//தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் //

அடேயப்பா! பேஷ் பேஷ்..

//யாருக்கு அலுக்கும் என்பது உள்குத்து.//

உள்குத்து என்பது நீங்க சொல்லிதான் தெரியுது. ஆனா, என்னா மேட்டருன்னு புரியலை..

நாகை சிவா said...

யப்பா எல்லாரும் என்னய சேர்ந்து கும்முவதற்கு முன்பு நானே ஒரு மேட்டர சொல்லிடுறேன்....

//நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))//

//பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, //

இதில் என்னுடைய பங்கு ஏதுவும் கிடையாது கிடையவே கிடையாது, அவரே ஏதோ என் மேல் உள்ள ஒரு நல்ல அபிமானத்தில் போட்டு இருக்கலாம்.

அல்லது நம்ம பய புள்ள தானே வாழ்ந்துட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் என் பெயரை இடையில் நம்ம தேவ் சேர்த்து இருக்கலாம்.

ஏது எப்படியோ நன்றிகள் பல கோடி. உங்களை போன்ற பெரியார்களிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை பெற என்ன தவம் செய்தேனோ......

MyFriend said...

தேவண்ணே,

மனசாட்சி அடுத்து எந்த ஊருக்கு பயணம்? அப்டேட் பண்ணுங்கோ! ;-)

இம்சை அரசி said...

ரெண்டு பாசமலரும் ஒண்ணு சேந்துட்டீங்களா???

இம்சை அரசி said...

ரெண்டு அண்ணாவும் இருக்கிற எடத்துல தங்கச்சி இல்லாமலா???

வந்துட்டேன்... வந்துட்டேன்... :)))))))

எல்லாரையும் வரவேற்க....

இம்சை அரசி said...

அப்புறம் விஷேசம் நம்ம வீட்டுல இல்ல...

தொல்ஸ் அண்ணா உங்க பாசத்துக்கு அளவே இல்ல... அவ்வ்வ்வ்...

ஆனந்த கண்ணீரா வருது...

இம்சை அரசி said...

என் மருமகப் பேர வச்சு பெரிய எடத்துல பெரிய பேட்டி கொடுக்கற அளவுக்கு வந்துட்டிங்க பாருங்க...

இதுக்காகவே மருமகளோட அத்தைக்கு நிறைய சாக்லேட்ஸ் வாங்கித் தரணும்...

வாழ்த்துக்கள் அண்ணா :)))

நாகை சிவா said...

//நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். //

பாப்பா வெயிட் எவ்வளவு, ரொம்ப பதிவுக்கு தூக்கி சுத்துறீங்களே, கை வலிக்கல.....

வலித்தால் தான் என்ன? சுகமான வலி தானே!

Naufal MQ said...

//நாகை சிவா said...
பாஸ்ட், இந்த லொள்ளு தானே வேணாம் சொல்லுறது, நீர் "கும்பி" சொல்லி அந்த பிரச்சனையை இங்கயும் கொண்டு வர முயற்சிப்பது நல்லா இல்ல சொல்லிட்டேன்....
//

நாகை சிவா,
ஆகா இதுல இப்படி ஒரு பிரச்சனை இருக்கா? சரி என்னன்னு தெளிவா சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும். :P

MyFriend said...

////நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))//

//பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, ////

புலி புலி.. புரியுது! அபி அப்பா லம்சாமா உங்க கிட்ட இருந்து வசூல் பண்ணியிருக்கார்ன்னு..

எனக்கு தெரியும். அவர் வேணா வேணான்னுதான் சொல்லியிருப்பார். நீங்கதான் வச்சிக்கோ வச்சிக்கோன்னு துணிச்சிருப்பீங்க..

உண்மைதானே அபி அப்பா?

நாகை சிவா said...

//நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். //

பாப்பா வெயிட் எவ்வளவு, ரொம்ப பதிவுக்கு தூக்கி சுத்துறீங்களே, கை வலிக்கல.....

வலித்தால் தான் என்ன? சுகமான வலி தானே!

MyFriend said...

//வந்துட்டேன்... வந்துட்டேன்... :)))))))

எல்லாரையும் வரவேற்க....//

இம்சை அரசி, உங்களை வரவேற்கதான் நாங்க இருக்குமே! You dont worry..

வருக.. அண்ணனுடைய வ்லைக்கு. :-)

MyFriend said...

//பாப்பா வெயிட் எவ்வளவு, ரொம்ப பதிவுக்கு தூக்கி சுத்துறீங்களே, கை வலிக்கல..... //

கை வலிக்கிறனாலெத்தான் 7 பதிவுக்கு மேலே தூக்க மாட்டேன்னு இறக்கி வச்சிட்டாரு போல.. ;-)

நாகை சிவா said...

//ஆனந்த கண்ணீரா வருது... //

அப்படி ஏதாச்சும் ஒரு பாட்டிலில் பிடிச்சு வைங்க, வெயில் காலம் ஸ்டார்ட் ஆக போகுது, தேவைப்பட்டாலும் படலாம்....

டெல்டா மாவட்டங்களுக்கு :-(

சென்ஷி said...

நானும் ஆஜர் ஆயிட்டேன்.ஆயிட்டேன்.ஆயிட்டேன்.

அப்புறம் வரலன்னு நாக்குமேல பல்லு போட்டு பேசிடக்கூடாது சொல்லிப்புட்டேன்..

அப்பால ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்

சென்ஷி

பொன்ஸ்~~Poorna said...

//தமிழ் மணத்துல்ல நகைச்சுவைப் பதிவுகளைப் படித்து அதிகம் சிரித்தீர்களா இல்லை சிரீயஸ் என்று முத்திரைக் குத்தப்பட்ட பதிவுகளைப் படித்து அதிகம் சிரிக்கிறீர்களா?//
யப்பா! கேள்வியிலயே எத்தனை ஸ்ட்ராங் உள்குத்து!!!
வி.வி.சி :)))))

இம்சை அரசி said...

புதுசா வரவங்களுக்கு நிறைய நல்ல விஷயம் சொல்லி கொடுத்துருக்கிங்க... :)))

ஆனா இத்தனை நாளா உள்குத்து வச்சு எழுதறீங்கன்றது தெரியாத பச்சப் புள்ளயா இருந்திருக்கிறேனே...

நாகை சிவா said...

//நாகை சிவா,
ஆகா இதுல இப்படி ஒரு பிரச்சனை இருக்கா? சரி என்னன்னு தெளிவா சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும். :P //

மறுபடியுமா? நான் வரல இந்த விளையாட்டுக்கு, தொல்ஸ் கேளுங்க, "விபரமா" சொல்லுவார்.

Naufal MQ said...

அபிஅப்பா சற்றுமுன் தொலைபேசியில் என்னிடம் Said...

என்னங்க பின்னூட்டமெல்லாம் அமர்க்களமா போயிகிட்டு இருக்கு. எனக்குத்தாங்க ப்ளாக்கர் சொதப்புது. லாக்-இன் பண்ண முடியல. சீக்கிரம் வர்ரேன்னு ஒரு பின்னூட்டம் போட்டு சொல்லிடுங்க.

Naufal MQ said...

சொல்லியாச்சு அபிஅப்பா.

இம்சை அரசி said...

// இம்சை அரசி, உங்களை வரவேற்கதான் நாங்க இருக்குமே! You dont worry..
//

என் வீட்டுக்கு என்னையே வரவேற்கறீங்களா??? :))))

ஹ்ம்ம்ம்....

Naufal MQ said...

//மறுபடியுமா? நான் வரல இந்த விளையாட்டுக்கு, தொல்ஸ் கேளுங்க, "விபரமா" சொல்லுவார்.
//
சரி சரி. நம்ம தேவ் பொழச்சி போட்டும்.

இம்சை அரசி said...

அதெப்படி தேவ் அண்ணா ஆளுக்கு தகுந்த மாதிரி கேள்விய ரொம்ப ஆப்டா செலக்ட் பண்றீங்க?

சும்மா பின்றீங்க போங்க :)))

MyFriend said...

புலி இன்னைக்கு பம்மி பம்மி ஒதுங்குது! என்னா விஷயம்?

இம்சை அரசி said...

// உண்மையை சொல்லப்போனால் எப்போதும் லைம்லைட்டில் இருக்கனும். எல்லாரும் என்னை கவணித்துக் கொண்டே இருக்கனும் என்கிற வியர்டுதனம் தான் காரணம்
//

தொல்ஸ் அண்ணோய்! இதை weird things பதிவுல சொல்லவே இல்லயே...

இதை வன்மையாக கண்டிக்கிறேன்... :@

அபி அப்பா said...

அப்பாடா! சர்வர் டவுனாகி போச்சு! வந்துட்டேன்:-))

நாகை சிவா said...

//அப்புறம் வரலன்னு நாக்குமேல பல்லு போட்டு பேசிடக்கூடாது சொல்லிப்புட்டேன்..//

நாக்கு மேல் பல் போட்டு நானும் டிரை பண்ணி பார்த்தேன், பேசவே முடியல..... மத்தங்களும் டிரை பண்னி பாருங்க. சரி வரல, அப்பால சென்ஷி காலி தான்.

அபி அப்பா said...

ஆஹா நம்ம வீட்டு கல்யாணம் கலை கட்டுதே! தங்கச்சிங்க வந்துட்டாங்க இன்னும் அம்மாவெல்லாம் கானுமே:-)))

MyFriend said...

//அபி அப்பா said...
அப்பாடா! சர்வர் டவுனாகி போச்சு! வந்துட்டேன்:-)) //

ஹீரோ ஆப் தி ஷோ வந்துட்டார். கேள்விகளை நீங்கள் கேட்கிறீரா? இல்லை நாங்கள் தொடரட்டுமா?? ;-)

MyFriend said...

NO MORE COMMENT MODERATION..
Hooray!!

கொண்டாடலாம். :-)

நாகை சிவா said...

//மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் "செதுக்கினா" ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.//

காரிய சிகாமணிய்யா நீர்.

Naufal MQ said...

//அபி அப்பா said...
அப்பாடா! சர்வர் டவுனாகி போச்சு! வந்துட்டேன்:-))
//
சர்வர் கூட டவுனாகுது. எங்க ஊரு மட்டும் இன்னும் கிராமமாவே இருக்கு. டவுனாக எதாவது வழி சொல்லுங்க அபிஅப்பா.

Unknown said...

யப்பா முடியல்ல COMMENT MODERATION தூக்கிட்டேன் அடிச்சு ஆடுங்க என்ஜாய்..

MyFriend said...

//நாக்கு மேல் பல் போட்டு நானும் டிரை பண்ணி பார்த்தேன், பேசவே முடியல..... மத்தங்களும் டிரை பண்னி பாருங்க. சரி வரல, அப்பால சென்ஷி காலி தான். //

நாக்கு மேலேயும் போட்டு பார்த்தாச்சு! நோக்கு கீழேயும் போட்டு பார்த்தாச்சு.. வரலை..

நீங்க ஜமாய்ங்க புலி

இம்சை அரசி said...

// மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் செதுக்கினா ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.
//

அடுத்த பதிவ இங்கயே ரெடி பண்ணியாச்சா??? இதெல்லாம் சரியில்ல

அபி அப்பா said...

மைஃபிரன்ட்! நீங்கதான் முதல். வெரிகுட்

@ புலி ஏம்பா இந்த கொ.வெ

@பாஸ்ட், கும்பின்னு சொல்லி 200 அடிக்க வழி செஞ்சுட்டய்யா நன்றி!

@ வாங்க துர்கா,

@ புலி அயுவ கூடாது....

@ தன்னடக்கம் ஆவாது புலி, நெசமாவே பின்னூட்ட காமடி புலிதான் நீர்.

தேவ்! யாவாரம் எப்டி இருக்கு?

நாகை சிவா said...

//புலி புலி.. புரியுது! அபி அப்பா லம்சாமா உங்க கிட்ட இருந்து வசூல் பண்ணியிருக்கார்ன்னு..
எனக்கு தெரியும். அவர் வேணா வேணான்னுதான் சொல்லியிருப்பார். நீங்கதான் வச்சிக்கோ வச்சிக்கோன்னு துணிச்சிருப்பீங்க..//

ஏதோ பக்கத்தில் இருந்து பாத்த மாதிரி சொல்லுறீங்க.... உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நான் எல்லாம் வாங்கிட்டு கூவுற கோஷ்டி, நாங்க போய் கொடுத்து கூவ சொல்லுவோமா?

MyFriend said...

//அபி அப்பா said...
மைஃபிரன்ட்! நீங்கதான் முதல். வெரிகுட்
//

நன்றி.. என்ன பரிசு கொடுக்க போறீங்க?

அபி அப்பா said...

//ரெண்டு பாசமலரும் ஒண்ணு சேந்துட்டீங்களா???//

ஆமா இம்சையம்மா! நம்ம வீட்டு கல்யாணத்துக்கு பட்டு புடவையா, ஜமாய்ங்க!

MyFriend said...

தேவண்ணே, உங்களுக்கு பதிலா அபி அப்பா எல்லார்க்கும் ரிப்லாய் பண்றார்.. உங்களுக்கு வேலை மிச்சம்.. நல்லா ஓய்வெடுத்து தெம்பா நாளை போஸ்ட்டுக்கு தயாராகுங்கள் ;-)

இம்சை அரசி said...

// இந்த வலைப்பூவை நம் சொந்த குடும்பமாக பாவியுங்கள்
//

தங்கச்சி நானு.

மத்த family members எல்லாம் எங்க??? சொல்லவே இல்ல...

MyFriend said...

//ஏதோ பக்கத்தில் இருந்து பாத்த மாதிரி சொல்லுறீங்க.... உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

ஸ்டார் ரிப்போர்ட்டர் கொடுத்த தகவல்தான் இது! ;-)

அபி அப்பா said...

//சர்வர் கூட டவுனாகுது. எங்க ஊரு மட்டும் இன்னும் கிராமமாவே இருக்கு. டவுனாக எதாவது வழி சொல்லுங்க அபிஅப்பா.//

புலி! வாய்யா, நல்ல காமடி பதில சொல்லிட்டு போ! பாஸ்ட் பயங்கர உள்குத்தா இருக்கே:-))

நாகை சிவா said...

//சர்வர் கூட டவுனாகுது. எங்க ஊரு மட்டும் இன்னும் கிராமமாவே இருக்கு. டவுனாக எதாவது வழி சொல்லுங்க அபிஅப்பா. //

இது தான்ய்யா சூப்பர் பவுன்ஸ்ர், வீசுய்யா வீசு இது போல பவுன்ஸ்ர்களை பல வீசு...

இம்சை அரசி said...

// உங்களுக்கு எது எழுத வருமோ அதை எழுதவும். தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்.(சொந்த அனுபவம்)
//

ஆமா... எங்கண்ணன் கிச்சன் அனுபவத்துல பசை கிண்டின மாதிரி, பெரிய சாக்கை எடுத்துட்டு போயி அண்ணிக்கிட்ட திட்டு வாங்கி கட்டிக்கிட்டது மாதிரி அல்லாரும் சொந்த அனுபவத்த எழுதோணும்

அபி அப்பா said...

நான் தான் 50 ஹய்யா!

கோபிதம்பி! எங்கய்யா போயிட்ட, கதிரு தம்பி உடியா உடியா கமென்ட் மாடரேஷன் தூக்கியாச்சு:-))

அபி அப்பா said...

//ஆமா... எங்கண்ணன் கிச்சன் அனுபவத்துல பசை கிண்டின மாதிரி, பெரிய சாக்கை எடுத்துட்டு போயி அண்ணிக்கிட்ட திட்டு வாங்கி கட்டிக்கிட்டது மாதிரி அல்லாரும் சொந்த அனுபவத்த எழுதோணும்//

ஆஹா ஆஹா சந்தடிசாக்குல குடும்ப ரகசியம் கசியுதே:-))

Naufal MQ said...

டைம் ஆச்சு... நாளைக்கு மீதி.

இம்சை அரசி said...

// சீரியசாக எழுத நிறைய பேர் இருக்காங்க, தவிர நான் முதலில் சொன்னது போல் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதை போல் நான் இப்படியே இருக்கவே ஆசைப்படுகிறேன்.
//

அப்புறம் எதுக்கு அபி சித்தப்பாவோட பேசினதுனு சீரியஸ் பதிவ போட்டீங்க? அதும் என்னை கூடி கும்மி அடிச்சுட்டீங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... எவ்ளோ அழுதேன்...

அபி அப்பா said...

//உள்குத்து என்பது நீங்க சொல்லிதான் தெரியுது. ஆனா, என்னா மேட்டருன்னு புரியலை..//

மைந்பிரந்த், அதாவது வாசகர்களுக்கு அலுப்பதா இல்லை எனக்கு அலுப்பதா என்பது தான் உள்குத்து:-))

அபி அப்பா said...

//அப்புறம் எதுக்கு அபி சித்தப்பாவோட பேசினதுனு சீரியஸ் பதிவ போட்டீங்க? அதும் என்னை கூடி கும்மி அடிச்சுட்டீங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... எவ்ளோ அழுதேன்...//

அதாவது கும்பி சே கும்மி அடிக்கும் போது சின்ன பசங்களை நடுவே உக்காத்தி வச்சுதான் கும்மி அடிக்கனும்ன்னு அவ்வை பாட்டி சொன்னாங்க அதான்:-))

MyFriend said...

//மைந்பிரந்த்,//

பிர்ர்ர்ராராந்ந்த்த்தாதா?

எனக்கில்லை எனக்கில்லை என்று தெளிவாக இங்கண சொல்லிக்க ஆசைப்படுறேன்.. ;-)

MyFriend said...

//கும்மி அடிக்கனும்ன்னு அவ்வை பாட்டி சொன்னாங்க அதான்:-)) //

என்னன்னு?

கும்பி அடிக்க விரும்பு
கும்பியது சினம்
கும்பியது கரவேல்
கும்பியது விலக்கேல்-ன்னா?

இம்சை அரசி said...

தொல்ஸ் அண்ணா... உங்க ப்ளாக்ல ஒரு பின்னூட்டம் போட்டேன். பாக்கவே இல்லயா??? ஒரே நிமிஷம் ஓடிட்டு ஒடியாங்க பாக்கலாம்.

அதான் நேத்து ஒழுங்கா உப்புமா கிண்டாத்தால அண்ணிகிட்ட மத்துக் கட்டையால வாங்கி கட்டிக்கிட்டிங்க இல்ல. அதை யார்கிட்டயும் சொல்லாதீங்க. குடும்ப மானம் போகுதுனு போட்டிருக்கேன். ரகசியம்... வெளில சொல்லப்படாது

இம்சை அரசி said...

// அது பற்றி நிறைய எழுதலாம். தனி பதிவே போடும் அளவு செய்திகள் உண்டு. கண்டிப்பாக எழுதுகிறேன். அதிலே காமடிகூட உண்டு. விரைவில் பதிகிறேன்.
//

என்னவோ இப்போ மட்டும் சீரியஸா சமுதாயப் பிரச்சினை பத்தி எழுதற மாதிரி காமடிகூட உண்டுன்னு போட்டிருக்கீங்க???

நாகை சிவா said...

//புலி! வாய்யா, நல்ல காமடி பதில சொல்லிட்டு போ! பாஸ்ட் பயங்கர உள்குத்தா இருக்கே:-)) //

அடடா, நான் வேற சூப்பர் கமெண்ட் சொல்லிட்டு போயிட்டேன், மறுக்கா கலாய்ச்சா நல்லா இருக்காது... அடுத்து கமெண்ட்ல பிடிச்சுக்கலாம். வேணாமா இதுலே புடிக்கனுமா

சரி இருங்க யோசிப்போம்!

பாஸ்ட், நீங்க ஊர விட்டு வந்துமா உங்க கிராமம் கிராமம்காவே இருக்கு...

நம்ம தொல்ஸ் வந்து மாயவரத்தை விட்டு வந்த பிறகு நல்ல வளர்ச்சி அங்க...

MyFriend said...

//நம்ம தொல்ஸ் வந்து மாயவரத்தை விட்டு வந்த பிறகு நல்ல வளர்ச்சி அங்க... //

அபி அப்பா, நீங்க காமெடி கேட்டீங்க. புலி வந்து நல்லா உங்களை உள்குத்து குத்திட்டு போச்சு!! பார்த்தீங்களா?

கதிர் said...

எச்சூஸ் மீ

மே ஐ கம் இன்சைட் த கும்பி!

MyFriend said...

// தம்பி said...
எச்சூஸ் மீ

மே ஐ கம் இன்சைட் த கும்பி!
//

யெஸ்.. அஃப் கோர்ஸ்.. நீங்க இல்லாமலா??

நாகை சிவா said...

//"துபாய் வரைக்கும் கேள்வி கேப்போம்ல்ல.." //

புதரகம் கேட்டாச்சு

துபாய்யும் ஆச்சு

அடுத்து இந்தியா வ புடிச்சு

அப்படியே போய் ஆஸ்ஸிக்கு பக்கத்தில் ஏதாச்சும் புடிச்சா உலகத்தையே கவர் பண்ணிப்புல ஆயிடும்ல.....

என்ன நான் சொல்லுறது!!!

உங்கள் நண்பன்(சரா) said...

//ஆனா ஒண்ணு அமிதாப் கூடப் பேசுனாக் கூட இவ்வளவு சிரிக்க முடியுமா தெரியாது.. மனுசன் சும்மா சிரிப்பைச் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே ஷாசேப் பாக்கேட்டாப் போட்டு வச்சுருக்கார்..
//

தேவு நல்ல ஒரு பதிவரின் பேட்டி, புதியவர் , நகைசுவையாளர், முக்கியமாக அடுத்தவர் மனம் நோகாமல் பதிவுகளும் , பின்னூடங்களுமிடுபவர் -- உன் தேர்வு சரியானதே,

//அது போல் செந்தழல்ரவி போடும் மொக்கை பதிவுகளும், லக்கி,பாலபாரதியின் பதிவுகளிள் அனானி கும்மிகளும் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.//

அமுக வின் 100 பின்னூட்டங்களுக்கும் உத்திரவாதம்.

சரி நானும் கும்மியில் கலந்துக்கிறேன், புலிப் பாண்டி நமக்கும் கொஞ்சம் இடம் கொடு,

அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

பதில் சொல்கிறேன் என்று இவரின் அனைத்து பதிவுகளுக்கும் உரல் கொடுத்து ஓசியில் மாவாட்ட சொன்ன அபி அப்பாவின் திறமையை கன்னா பின்னாவென பாராட்டுகிறேன். :))

அப்பாவி அபிஅப்பான்னு நெனச்சேன் பதில்கள சூப்பரா சொல்லி கெலிச்சிட்டிங்களே!

உங்கள் நண்பன்(சரா) said...

வாங்க தம்பி, மை ஃபிரண்டு, மற்றும் சூடான் புலி, வாங்க இங்க ஒருத்தர் கிடைச்சிருக்கார் ரெம்ப நல்லவரு ,எம்புட்டு அடிச்சாலும் அழ மாட்டாரு கும்ம வாங்க மக்கா....


அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

//எச்சூஸ் மீ

மே ஐ கம் இன்சைட் த கும்பி! //

இது என்னய்யா ஸ்கூல் பையன் மாதிரி உள்ள வரலாமா கேட்டுக்கிட்டு....
சும்மா காலேஜ் பையன் மாதிரி க்ளாஸ் யாரு இருந்தாலும் நீ பாட்டுக்கு உள்ள வந்து அடிச்சு தூள் கிளப்பனும்....

அப்புறம் இன்னொரு விசயம், கும்பி இல்ல கும்மி... இந்த பதிவிலே இரண்டு தடவ ஆச்சு.... சொன்ன பேச்சு கேளு....

நாகை சிவா said...

//சரி நானும் கும்மியில் கலந்துக்கிறேன், புலிப் பாண்டி நமக்கும் கொஞ்சம் இடம் கொடு,//

யோவ், உங்கள் எங்கள் நண்பன் சரா, உனக்கு இல்லாத இடம் வாய்யா இந்த பதிவில் மட்டும் அல்ல உனக்கு எங்கள் இதயத்திலே என்றும் இடம் உண்டு.

ஏன்ய்யா உன்ன வியர்டு எழுத கூப்பிட்டேன், வந்தியா நீ... உன்ன என்ன பண்ணலாம் சொல்லு....

உங்கள் நண்பன்(சரா) said...

சிவா, என்னை மன்னிச்சிக்கே!(நீ!கலாய்க்கிற மூடில் இருப்பதால் இங்கேயே மன்னிப்புக் கேட்டுக்கலாம்),

நீ எழுத அழைத்தும் எழுதாமைக்கு, (அந்த தொடர் ஆரம்பத்திலிருந்தே எனக்கு இஷ்டம் இல்லை அதில்லாம நான் பதிவு எழுதும் மன நிலையிலும் இல்லை அதனால் நீ அழைத்தும் என்னால எழுத முடியவில்லை, மன்னித்துக் கொள் நண்பா...மன்னிப்பு தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தைனு டயலாக் விடாம, என் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்ளவும்.
(அப்பாடி இனி புலியை பார்த்து குற்ற உணர்வுடன் பதுங்கத் தேவை இல்லை)

அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

//உதாரணத்துக்கு வேறு யாரையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம "தம்பி" யின் இந்த பதிவிலே சில வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை என தம்பியிடமே கூறினேன்.//

மக்களே இதுக்கு நீங்கதான் சாட்சி, இவர் குறிப்பிட்டிருக்கும் பதிவுல இவரோட கமெண்ட் பாருங்க.

அய்யா நாந்தான் பர்ஸ்ட் கமெண்ட்
இப்படி போட்டுபுட்டு எனக்கு உடன்பாடு இல்லன்னு சொன்னதா சொல்றாரு. இத கேக்க யாருமே இல்லயா??

ஒரு பதிவுல ஓராயிரம் லிங்க் கொடுத்து ஊரசுத்த விடறாங்கப்பா!

கதிர் said...

//யெஸ்.. அஃப் கோர்ஸ்.. நீங்க இல்லாமலா?? //

தேங்ஸ் தங்கச்சிக்கா!

இராம்/Raam said...

நல்லதொரு கலந்துரையாடல் பதிவிலே கும்பி Sorry கும்மியடிக்கும் அனைவரையும் கன்னாபின்னவென்று கண்ணடிக்கிறேன். :)

கதிர் said...

//கோபிதம்பி! எங்கய்யா போயிட்ட, கதிரு தம்பி உடியா உடியா கமென்ட் மாடரேஷன் தூக்கியாச்சு:-)) //

வலுக்கட்டாயமா தூக்க வெச்சிட்டு இதுல எல்லாத்துக்கும் அழைப்பு வேற??

உங்கள் நண்பன்(சரா) said...

//யோவ், உங்கள் எங்கள் நண்பன் சரா, உனக்கு இல்லாத இடம் வாய்யா இந்த பதிவில் மட்டும் அல்ல உனக்கு எங்கள் இதயத்திலே என்றும் இடம் உண்டு. //

இவரு பெரிய தமிழினத் தலிவரு, இதயத்தில் இடம் இருக்காம், ஹிம்.. அவருக்கே அங்க மாம்பலம் பூராம் வண்டா வருதுனு வருத்தத்தில் இருக்காரு( சரி சரி இதெல்லம் இட்லி வடை செய்தி நமக்கு சம்பந்தமில்லை)

நம்ம வழக்கம் போல் கும்பி - ய ஆரம்பிப்போம், மறுபடியும் உன்னை மனக் கஷ்டப்படுத்த விருபவில்லை புலி, இப்போ சரியா சொல்லிடுறேன் கும்மி கும்மி கும்மி....


அன்புடன்...
சரவணன்.

இராம்/Raam said...

//இப்படி போட்டுபுட்டு எனக்கு உடன்பாடு இல்லன்னு சொன்னதா சொல்றாரு. இத கேக்க யாருமே இல்லயா?? //

ஆமாம் அந்த பதிவிலே நீயீ கரடியை ஓவராலே பேசிப்பிட்டே???

அவரு அவங்க ஊருலே டீ.ஆர் ரசிகர் மன்ற தலைவர்'ப்பா! அதுதான் ஒரு தார்மீக எதிர்ப்பு இப்போ தெரிவிக்கிறாரு :)

MyFriend said...

// அய்யா நாந்தான் பர்ஸ்ட் கமெண்ட்
இப்படி போட்டுபுட்டு எனக்கு உடன்பாடு இல்லன்னு சொன்னதா சொல்றாரு. இத கேக்க யாருமே இல்லயா?? //

ஓ! இதுதான் அபி அப்பா சொன்ன உள்குத்தா????

தம்பி.. வச்சிட்டாருப்பா உனக்கு ஆப்பு!!!

கதிர் said...

//நல்லதொரு கலந்துரையாடல் பதிவிலே கும்பி Sorry கும்மியடிக்கும் அனைவரையும் கன்னாபின்னவென்று கண்ணடிக்கிறேன். :) //

கண்ணடிப்பதை குலத்தொழிலாக ஒவ்வொரு பதிவிலும் தவறாமல் குறிப்பிடுகிறீர்களே தாங்கள் மின்னல்கொடிக்கு சொந்தக்காரரா?

இராம்/Raam said...

//நம்ம வழக்கம் போல் கும்பி - ய ஆரம்பிப்போம், மறுபடியும் உன்னை மனக் கஷ்டப்படுத்த விருபவில்லை //

சரா வாங்க.... ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி இடத்திலே ஒங்களை பார்த்து???

உங்கள் நண்பன்(சரா) said...

ராயலு வா வந்து குந்து , மொத்தமா கும்மியடிப்போம் , "A"மா இன்னைக்கி ராயல்-ய என்ன படம்?


அன்புடன்...
சரவணன்.

MyFriend said...

//சரா வாங்க.... ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி இடத்திலே ஒங்களை பார்த்து??? //

சொல்லிப்புட்டு நீரே கும்மியடிக்கிறீரே ராமு!

கதிர் said...

எச்சூஸ் பின்னூட்ட கயமைகாரர்களே உங்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...





















































1

MyFriend said...

நண்பா எப்படிகீரே?

MyFriend said...

//எச்சூஸ் பின்னூட்ட கயமைகாரர்களே உங்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...//

1 முடிஞ்சு அடுத்து என்ன நம்பர்ன்னு தெரியலையா?

நாளைக்கு தம்பிக்கு ஸ்பெஷலா கணக்கு க்லாஸ் நடத்த சொல்லி தேவண்ணேகிட்ட சொல்லனும்.. அபி அப்பா, அபிக்கு சீட்டு உண்டுன்னு தெரிவிச்சிக்கிறோம்.. :-)

உங்கள் நண்பன்(சரா) said...

//சரா வாங்க.... ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி இடத்திலே ஒங்களை பார்த்து???//

ராயலு வேண்டாம் அழுதுடுவேன் , எனக்கும் ரெம்ப ஆசை தான், நம்ம பயக பூரம் ஒன்னா ஒக்காங்து இப்படி கும்மி ஜாலி பண்ணுரதை ரசிப்போன், பக்கத்தில் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல்(நம்ம பக்கத்தில் இருக்குறவனுக்கும் அது இல்லை) பார்துக்கிட்டே இருப்பானுக அதனால கமெண்டு போட முடியாது , (விரைவில் தனிமடிக்கணிணி வாங்க எண்ணம் அப்படியெனில் இந்தத் தொல்லை இருக்காது)வெறுமனே படிச்சிட்டு போயிடுவேம், நல்ல வேளை இன்னைக்கி யாரும் இல்லை அதான் நானும் வந்து கலந்துக்கிட்டேன்,


அன்புடன்...
சரவணன்.

இம்சை அரசி said...

// அவரு அவங்க ஊருலே டீ.ஆர் ரசிகர் மன்ற தலைவர்'ப்பா! அதுதான் ஒரு தார்மீக எதிர்ப்பு இப்போ தெரிவிக்கிறாரு :)
//

நம்ம ஊரு டீ.ஆர் ரசிகர் மன்ற தலைவர் நீயின்னு எனக்குத் தெரியும். கடைசில அவருமா???

இம்சை அரசி said...

// எச்சூஸ் பின்னூட்ட கயமைகாரர்களே உங்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...
//

அய்யே! ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்கா தெரியாத மக்கு பயலா நீயி...

ஷேம் ஷேம் பப்பி ஷேம்

இராம்/Raam said...

//கண்ணடிப்பதை குலத்தொழிலாக ஒவ்வொரு பதிவிலும் தவறாமல் குறிப்பிடுகிறீர்களே தாங்கள் மின்னல்கொடிக்கு சொந்தக்காரரா? //

ஆமாம் அதுக்கு இப்போ என்னாங்கிறே????

உங்கள் நண்பன்(சரா) said...

தம்பி,அருமையான கும்மிப் பதிவை கடினமான கணித எண்கள் போட்டு ஏதோ படிப்பவர்களின் பின்னூட்டம் போன்று ஒரு தவறான மாயையை ஏற்படுத்தி கும்மியை கழுத்தைப் பிடித்து திசைதிருப்ப முயலும் போக்கைக் கண்டிக்கிறேன்.


மை ஃ பிரண்டு நல்ல இருக்கிறேன்,

எப்படியும் 100 உங்களுடையதா இருக்கனும்னு எதிர்பார்த்து காத்திருக்கிறீங்க, விடுவோமா? பார்த்திடுவோம்
,

அன்புடன்...
சரவணன்,
அன்புடன்...
சரவணன்.

அபி அப்பா said...

//தம்பி said...
எச்சூஸ் மீ

மே ஐ கம் இன்சைட் த கும்பி!//

கும்பிகுள்ள வந்து குடி சாரி குதி தம்பி:-))

இராம்/Raam said...

//எச்சூஸ் பின்னூட்ட கயமைகாரர்களே உங்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...//

அட பாவி மக்கா எப்பிடிய்யா இப்பிடியெல்லாம் யோசிச்சு பின்னூட்டம் போடுறீங்க????? ROFL

இராம்/Raam said...

/சொல்லிப்புட்டு நீரே கும்மியடிக்கிறீரே ராமு! //

தங்கச்சிக்கா,

அதுக்காக தானே உள்ளே வந்திருக்கோம்... :)

அபி அப்பா said...

//அய்யே! ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்கா தெரியாத மக்கு பயலா நீயி...

ஷேம் ஷேம் பப்பி ஷேம் //

மீ டூ:-))

இம்சை அரசி said...

// கண்ணடிப்பதை குலத்தொழிலாக ஒவ்வொரு பதிவிலும் தவறாமல் குறிப்பிடுகிறீர்களே தாங்கள் மின்னல்கொடிக்கு சொந்தக்காரரா?
//

அக்காகிட்ட சொல்லவே இல்ல

அதும் ஒரே ஊர்லயே இருக்கோம்

ஹ்ம்ம்ம்....
அடுத்த ப்ளாக்கர் மீட்டிங்ல உனக்கு இருக்குடி

இராம்/Raam said...

//
நம்ம ஊரு டீ.ஆர் ரசிகர் மன்ற தலைவர் நீயின்னு எனக்குத் தெரியும். கடைசில அவருமா??? //

விசித்திர வீரிய மாலா,

ஏம்மா ஒனக்கு இந்த கொலைவெறி??

உங்கள் நண்பன்(சரா) said...

மக்கா 100 அடிச்சிடிங்களா? வரனுமா?

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

ஐய்யய்ய்ய்யோ இனிமேல் தானா?

MyFriend said...

100

MyFriend said...

ஐ... மிஸ்ஸ்ட்டூ...

இராம்/Raam said...

//அக்காகிட்ட சொல்லவே இல்ல

அதும் ஒரே ஊர்லயே இருக்கோம்

ஹ்ம்ம்ம்....
அடுத்த ப்ளாக்கர் மீட்டிங்ல உனக்கு இருக்குடி //

அதே அன்னிக்கு பார்ப்போம் :))

உங்கள் நண்பன்(சரா) said...

போச்சு எல்லாம் போச்சு சந்து கேப்புல 100 அடிச்சுட்டாங்கையா


மைஃ பிரண்டு நிம்மதியா மக்கா உனக்கு?

அபி அப்பா said...

தம்பி! கோபிய கட்டி போட்டுட்டு இங்க வந்து கும்மாளமா அடிக்கி:-)))

இராம்/Raam said...

சரா,

வந்ததுதான் வந்தே....


வந்துட்டு சரியா 100 அடிச்சிட்டியே மக்கா???

அபி அப்பா said...

இன்னும் சங்கத்து சிங்கத்தல்லாம் கானுமே?

இம்சை அரசி said...

// ஏம்மா ஒனக்கு இந்த கொலைவெறி??
//

என்ன பண்றது??? உன்னைய பாத்ததும் பாசம் பொங்குது

அபி அப்பா said...

என்ன கொடுமை சரா:-)) 100 க்கு காத்துகிடந்தேன்

அபி அப்பா said...

என்ன கொடுமை சரா:-)) 100 க்கு காத்துகிடந்தேன்

உங்கள் நண்பன்(சரா) said...

//தம்பி! கோபிய கட்டி போட்டுட்டு இங்க வந்து கும்மாளமா அடிக்கி:-))) //

நீர் மட்டும் என்னவாம் , அபிய விட்டுட்டு தானே இங்க வந்து கும்மி அடிக்கிறீரு,

யோவ் ராயல் உன் கேள்விக்கு என்னமா ஃபீலிங்ஸ் பண்ணி பின்னூடமிட்டிருக்கேன், மரியாதையா பதில் சொல்லு

உங்கள் நண்பன்(சரா) said...

ஐய்யய்யோ! என்னைப் பற்றி தவறான வதந்தி வேண்டாம் என் பின்னூட்டம் 99 மற்றும் 101, சரியாக 100 அடித்தவ்ர் ஃமைபிரண்டு அவர்களே,


புலித்தம்பி இருக்கியா? பதிலையே காணோம்,

இம்சை அரசி உங்களை நான் சந்திப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன்

இராம்/Raam said...

//ராயலு வேண்டாம் அழுதுடுவேன் , எனக்கும் ரெம்ப ஆசை தான், நம்ம பயக பூரம் ஒன்னா ஒக்காங்து இப்படி கும்மி ஜாலி பண்ணுரதை ரசிப்போன், பக்கத்தில் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல்(நம்ம பக்கத்தில் இருக்குறவனுக்கும் அது இல்லை) பார்துக்கிட்டே இருப்பானுக அதனால கமெண்டு போட முடியாது , (விரைவில் தனிமடிக்கணிணி வாங்க எண்ணம் அப்படியெனில் இந்தத் தொல்லை இருக்காது)வெறுமனே படிச்சிட்டு போயிடுவேம், நல்ல வேளை இன்னைக்கி யாரும் இல்லை அதான் நானும் வந்து கலந்துக்கிட்டேன்,//


அட சரா ஒன்னோட கடமையாற்ற முடியாத அளவுக்கு இடையூறு செய்யும் அந்த கயவர்கள் ஒழிக....:)

ஆணிபிடுங்கிற இடத்திலே கொடுத்த தூக்கிட்டு திரியுற பொட்டியிலே ஆராய்ச்சி பண்ணப்போக அதை திரும்ப பிடிங்கிட்டானுவே! :( இப்போ சொந்தமா காசை போட்டு ஒன்னை வாங்கி நைட்டெல்லாம் தூங்கமே இப்பிடிதான் பதிவெல்லாம் படிச்சிட்டு கும்பி sorry கும்மியடிச்சிட்டு இருக்கேன்..... :)

உங்கள் நண்பன்(சரா) said...

மக்களே என்ன ஆச்சு/ யாரையும் காணோம் , சங்கம் கலைகிறதா?

இராம்/Raam said...

//யோவ் ராயல் உன் கேள்விக்கு என்னமா ஃபீலிங்ஸ் பண்ணி பின்னூடமிட்டிருக்கேன், மரியாதையா பதில் சொல்லு ///

சொல்லியாச்சு சொல்லியாச்சு... எத்தனை???


என்னோமோ ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டமாதிரி தான் அலம்பலை விடுறது?? :)

இலவசக்கொத்தனார் said...

நான் இப்போதான் வறேன். அதுக்குள்ள 100 தாண்டியாச்சா? என்ன இது பெர்முடாவை எதிர்த்து விளையாடும் இந்தியா போல் இந்த கொல வெறி?!

இராம்/Raam said...

//இன்னும் சங்கத்து சிங்கத்தல்லாம் கானுமே? //

அதுதாம் இருக்கோமில்லே???? :)

MyFriend said...

//எப்படியும் 100 உங்களுடையதா இருக்கனும்னு எதிர்பார்த்து காத்திருக்கிறீங்க, விடுவோமா? பார்த்திடுவோம்//

சரா.. எங்க அம்மா கவுத்துட்டாங்க.. எப்போதுமே எனக்கு போனே பண்ணாத எங்க அம்மா அதிசயமா எனக்கு கால் பண்ணி 100வது இடத்தை வாங்க கத்திருந்த என்னை சதி பண்ணீட்டார்.. :-(

இராம்/Raam said...

//என்ன பண்றது??? உன்னைய பாத்ததும் பாசம் பொங்குது //

இதுதானா ஒன்னோட பாசம் தாயி.....???

உங்கள் நண்பன்(சரா) said...

கொத்ஸ் அங்க அவனவனும் மூனு பக்கத்துக்கு முக்கி முக்கி பதிவு போட்டுட்டு பின்னுட்டம் வரலைனு காத்திருக்கானுக இங்க இப்படி ஒரு கும்மி நடக்குதே, அதை நீங்களாவது கண்டிக்காம சேர்ந்து கண்ணடிகின்றீர்களே( உம்மைத் தான் சீரியஸ்பதிவர் என்றும் அறிவுத் தனமான பதிவுகளை இடுபவர் எண்ரும் ஒரு தவறான எண்ணம் உலவுகிறதே):)))))))))))
(கொத்ஸ் சிரிப்பான் போட்டாச்சு)

இலவசக்கொத்தனார் said...

//யப்பா முடியல்ல COMMENT MODERATION தூக்கிட்டேன் அடிச்சு ஆடுங்க என்ஜாய்..//

தேவு ஒரு 50 பின்னூட்டம் வரலை. அதுக்குள்ள யப்பா முடியல்லன்னு கையைத் தூக்கி இப்படி என் மானத்தை வாங்கிட்டியே. :(((

உங்கள் நண்பன்(சரா) said...

மீண்டும் சொல்லுகின்றேன் , 99 மற்றூம் , 101 மட்டுமே என்னுடைய பின்னூட்டங்கள், 100 வது பின்னூட்டம் மை ஃபிரண்ட் உங்களுடையதே,

கதிர் said...

//தம்பி,அருமையான கும்மிப் பதிவை கடினமான கணித எண்கள் போட்டு ஏதோ படிப்பவர்களின் பின்னூட்டம் போன்று ஒரு தவறான மாயையை ஏற்படுத்தி கும்மியை கழுத்தைப் பிடித்து திசைதிருப்ப முயலும் போக்கைக் கண்டிக்கிறேன்.//

அடப்பாவி மக்கா, ஒண்ணே ஒண்ணு சொன்னது குத்தமா? இம்புட்டு நீள நாக்கு பொறள வைக்கிற வசனம் கொஞ்சம் அதிகமா தெரியல??

வெட்டிப்பயல் said...

அடப்பாவிகளா!!!

இப்படி அநியாயமா கும்மி அடிக்கிறீங்களே! இது அநியாயமா தெரியல???

உங்கள மாதிரி ஆளுங்களுக்காகத்தான் தமிழ்மணம்ல 40 வெச்சாங்க... இன்னும் திருந்தவேயில்லையா???

என்னையும், புலியையும் பாருங்க. எவ்வளவு நல்லவங்களா இருக்கும்.

ராயல் இந்த தம்பி கூட சேராதீங்க. ரொம்ப கெட்ட பையன்...

MyFriend said...

//மைஃ பிரண்டு நிம்மதியா மக்கா உனக்கு? //

அட.. நீங்கதானே அடிச்சீங்க.. உங்களுக்கு கணக்கு தெரியலையா?

சரி.. நிறைய பின்னூடங்கள் படிக்காம விட்டுபோச்சு.. இப்போ படிக்கீறேன்.

இலவசக்கொத்தனார் said...

//உம்மைத் தான் சீரியஸ்பதிவர் என்றும் அறிவுத் தனமான பதிவுகளை இடுபவர் எண்ரும் ஒரு தவறான எண்ணம் உலவுகிறதே):)))))))))))//

இந்தத் தவறான எண்ணங்களை நீக்கிவாவது ஒரு பதிவு போட வேண்டும் தம்பிகள் எல்லாம் வந்து கும்பி, அடச்சே கும்மி, நம்ம பேரை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும்.

MyFriend said...

//இம்சை அரசி உங்களை நான் சந்திப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன் //

மீ டூ

கதிர் said...

எச்சூஸ் மீ மக்கா, இலக்கு என்ன என்று சொன்னால் எனது பங்களிப்பை கச்சிதமாக செய்வேன்.

உங்கள் நண்பன்(சரா) said...

//ராயல் இந்த தம்பி கூட சேராதீங்க. ரொம்ப கெட்ட பையன்...
//

ஒரு சு.வி: யோவ் கொல்ட்டி! உன் கொல்டிப் பசங்களால நான் பட்ட அவஸ்தையை ஒரு பதிவாப் போட்டிருக்கேன் அதை வந்து படிச்சு பின்னூட்டம் கூட போடாமப் போயிட்ட?

அபி அப்பா said...

கொத்ஸ், வரிசையா 6 சிக்ஸர் போடுங்க:-))

MyFriend said...

//உங்கள மாதிரி ஆளுங்களுக்காகத்தான் தமிழ்மணம்ல 40 வெச்சாங்க... இன்னும் திருந்தவேயில்லையா???//

இந்த வாரம் உயிரெல்லை எங்க தலைவனுக்கு கிடையாது.. நாளை காலை அவரு வர்ரதுக்குள்ளே இதை 200 ஆக்கிவிடனும். :-)

//என்னையும், புலியையும் பாருங்க. எவ்வளவு நல்லவங்களா இருக்கும்.

ராயல் இந்த தம்பி கூட சேராதீங்க. ரொம்ப கெட்ட பையன்... //

இங்க ராமு தம்பிதான் நல்லவரா இருக்காரு.. அவரை போயி நல்லவரா கெட்டவரான்னு கேட்டு பட்டிமன்றம் வைக்கலாமா?

கதிர் said...

//அட பாவி மக்கா எப்பிடிய்யா இப்பிடியெல்லாம் யோசிச்சு பின்னூட்டம் போடுறீங்க????? ROFL //

யோவ் ராயலு "T" ய விட்டுட்டியே..
பிடிக்காதா?

இம்சை அரசி said...

// இம்சை அரசி உங்களை நான் சந்திப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன்
//

சாட்சாத் முதல் முறையேதான்

இராம்/Raam said...

//உங்கள மாதிரி ஆளுங்களுக்காகத்தான் தமிழ்மணம்ல 40 வெச்சாங்க... இன்னும் திருந்தவேயில்லையா???//

அப்பிடியா.... இந்த மாதிரி கயவர்கள்தானா அப்பிடி ஆச்சு....? :)
எனக்கு தெரியவே தெரியாதுப்பா, ஹி ஹி

//ராயல் இந்த தம்பி கூட சேராதீங்க. ரொம்ப கெட்ட பையன்... //

அது என்னோமோ உண்மைதாப்பா :)

MyFriend said...

//ஒரு சு.வி: யோவ் கொல்ட்டி! உன் கொல்டிப் பசங்களால நான் பட்ட அவஸ்தையை ஒரு பதிவாப் போட்டிருக்கேன் அதை வந்து படிச்சு பின்னூட்டம் கூட போடாமப் போயிட்ட? //

கொல்டி கொல்டி என்று வெட்டியை சொல்வதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்..

[ஆமாம்.. அப்புறம் எப்படி இவரு சித்து பதிவை எழுதுவாரு.. இப்படிதான் ஐஸ் வைக்கனும்] ;-)

உங்கள் நண்பன்(சரா) said...

//இந்தத் தவறான எண்ணங்களை நீக்கிவாவது ஒரு பதிவு போட வேண்டும் தம்பிகள் எல்லாம் வந்து கும்பி, அடச்சே கும்மி, நம்ம பேரை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும்.//


எப்போ, எங்கே, நாங்க ரெடி, ஆமா தல கும்மினா அது கொத்ஸ்னு ஒரு காலத்துல உனக்கு என்னா பேரு இருந்துச்சு அதை மீண்டும் நிலை நிருத்துற மாதிரி ஒரு கும்மிப் பதிவப் போடு வந்து குமிஞ்சிடுவோம்!

கொத்ஸ், உம்முடைய பின்னூடங்க்களை பல முறை ரசித்திருக்கின்றேன் , அதிலும் குறிப்பாக அந்த பெண் பதிவர்களின் கூட்டத்தில் நீர் சிக்கிய பின்னூங்கள் அருமை(சிரிப்பான் இல்லை).

இம்சை அரசி said...

// //இம்சை அரசி உங்களை நான் சந்திப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன் //

மீ டூ

//

அப்போ என் பதிவுல வந்து மைஃப்ரெண்ட்ன்ற பேர்ல பின்னூட்டம் போட்டது நீங்க இல்லயா???

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

எச்சூஸ் பின்னூட்ட கயமைகாரர்களே உங்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...//

எலே,
கண்ணாடிய பாத்து பேச வேண்டியதெல்லாம் எதுக்கு இங்க பேசிட்டு இருக்க???

இம்சை அரசி said...

ஹை கொல்டி பாலாஜி... ச்சே... வெட்டி பாலாஜி...

வாய்யா வா... இவ்ளோ நேரமாச்சா ஒனக்கு???

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//அட பாவி மக்கா எப்பிடிய்யா இப்பிடியெல்லாம் யோசிச்சு பின்னூட்டம் போடுறீங்க????? ROFL //

யோவ் ராயலு "T" ய விட்டுட்டியே..
பிடிக்காதா? //

இல்ல அவருக்கு காபி தான் பிடிக்கும்னு சொன்னா நீ என்ன பண்ண போற???

சொல்லு மேன் சொல்லு...

MyFriend said...

//அப்போ என் பதிவுல வந்து மைஃப்ரெண்ட்ன்ற பேர்ல பின்னூட்டம் போட்டது நீங்க இல்லயா???//

ஆஹா.. இதுக்கு முன்னே அங்கே வந்திருக்கேனா? சுத்தமா மறந்து போச்சே!!! ஐயஹோ!

கதிர் said...

//அய்யே! ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்கா தெரியாத மக்கு பயலா நீயி...

ஷேம் ஷேம் பப்பி ஷேம் //

யாருக்கா அந்த பப்பி?

வெட்டிப்பயல் said...

//கொத்ஸ், உம்முடைய பின்னூடங்க்களை பல முறை ரசித்திருக்கின்றேன் , அதிலும் குறிப்பாக அந்த பெண் பதிவர்களின் கூட்டத்தில் நீர் சிக்கிய பின்னூங்கள் அருமை(சிரிப்பான் இல்லை).//

இது தான் டாப் :-) (சிரிப்பான் இருக்கு)

MyFriend said...

இந்த ஞாவப மறதிக்கு அளவே இல்லாமல் போச்சு! சாரி இம்சை அரசியாரே! இதுக்கு ஏதாச்சும் தண்டனை இருக்கா?

வெட்டிப்பயல் said...

//இம்சை அரசி said...

ஹை கொல்டி பாலாஜி... ச்சே... வெட்டி பாலாஜி...

வாய்யா வா... இவ்ளோ நேரமாச்சா ஒனக்கு??? //

My Friend,
பார்த்தீங்களா கொல வெறி படை அரசிய???

உங்கள் நண்பன்(சரா) said...

Aus 69/1
overs 12.4

கதிர் said...

//சொல்லு மேன் சொல்லு... //

காபி வாங்கி தருவேன்.

இராம்/Raam said...

//யோவ் ராயலு "T" ய விட்டுட்டியே..
பிடிக்காதா? //

Rolling On the Floor'ன்னு தாய்யா சொன்னேன்:0

கதிர் said...

150

இலவசக்கொத்தனார் said...

//அதிலும் குறிப்பாக அந்த பெண் பதிவர்களின் கூட்டத்தில் நீர் சிக்கிய பின்னூங்கள் அருமை(சிரிப்பான் இல்லை)//

நாலு பொண்ணுங்களோட நம்மளைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கு இல்ல. எல்லாம் பொறாமை. வேற என்ன.

கதிர் said...

மிஸ் ஆயிடுச்சே

கதிர் said...

மிஸ் ஆயிடுச்சே

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//சொல்லு மேன் சொல்லு... //

காபி வாங்கி தருவேன். //

சரி,
இப்ப உடனே ராயலுக்கு ஒரு காபி வேணும். சீக்கிரம் வாங்கி தா!!!

MyFriend said...

//My Friend,
பார்த்தீங்களா கொல வெறி படை அரசிய??? //

ஓ! தற்கொலை படை.. ச்சீசீ.. கொல வெறி படை தலவி இவங்கதானா? இவங்களை என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க வெட்டி. ;-)

இலவசக்கொத்தனார் said...

தம்பி, அதெல்லாம் கணக்குப் போட்டு நின்னு ஆடறோமில்ல. அவசரப்பட்டா எப்படி? :))

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//அதிலும் குறிப்பாக அந்த பெண் பதிவர்களின் கூட்டத்தில் நீர் சிக்கிய பின்னூங்கள் அருமை(சிரிப்பான் இல்லை)//

நாலு பொண்ணுங்களோட நம்மளைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கு இல்ல. எல்லாம் பொறாமை. வேற என்ன. //

ஆமாம்...
நீங்க போனவுடனே எல்லாரும் பதிவ விட்டுட்டு ஓடிப்போயிட்டாங்க.. கடைசியா நீங்களும் புலியும் தான் ஆடிக்கிட்டு இருந்தீங்க... இதுல என்ன பொறாமை???

கதிர் said...

எச்சூஸ் மி மே ஐ நோ வேர் ஈஸ் புலி??

கதிர் said...

//தம்பி, அதெல்லாம் கணக்குப் போட்டு நின்னு ஆடறோமில்ல. அவசரப்பட்டா எப்படி? :)) //

:))))
இந்த விஷயத்துல நீங்கதான் தல புலி!

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//அய்யே! ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்கா தெரியாத மக்கு பயலா நீயி...

ஷேம் ஷேம் பப்பி ஷேம் //

யாருக்கா அந்த பப்பி? //

அவுங்க பக்கத்து வீட்டு நாயி!!!

உங்கள் நண்பன்(சரா) said...

தம்பியுடன் காப்பி, டீ யையும் இணைத்துச் சொல்லவும் நான் எனக்கு ஒரு விசயம் நினைவிர்க்கு வருகின்றது,,

தம்பியின் புரொஃபைலில் இருக்கும் படத்தில் தம்பி நிற்பது போலவும் பின்புறத்தில் பல பெரிய கட்டிடங்கள் இரூபது போலவும் இருக்கும் ,உண்மையாகவே தம்பி நட்சத்திரமாக ஆன அன்று தான் அவரின் புரொஃபைலின் படத்தை பெரிதாக்கி இத கண்டு கொண்டேன் அதுவரை அவர் ஏதோ டீக்க்கடையின் பாய்லருக்கு முன் நிற்கின்ற ஓனர் போல் கை கட்டி இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

மக்கா நீங்களே ஒரு தபா படத்தைப் பாருங்க உங்களுக்கே நான் சொன்னது உண்மைதானு புரியும்

வெட்டிப்பயல் said...

//உங்கள் நண்பன் said...

தம்பியுடன் காப்பி, டீ யையும் இணைத்துச் சொல்லவும் நான் எனக்கு ஒரு விசயம் நினைவிர்க்கு வருகின்றது,,

தம்பியின் புரொஃபைலில் இருக்கும் படத்தில் தம்பி நிற்பது போலவும் பின்புறத்தில் பல பெரிய கட்டிடங்கள் இரூபது போலவும் இருக்கும் ,உண்மையாகவே தம்பி நட்சத்திரமாக ஆன அன்று தான் அவரின் புரொஃபைலின் படத்தை பெரிதாக்கி இத கண்டு கொண்டேன் அதுவரை அவர் ஏதோ டீக்க்கடையின் பாய்லருக்கு முன் நிற்கின்ற ஓனர் போல் கை கட்டி இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

மக்கா நீங்களே ஒரு தபா படத்தைப் பாருங்க உங்களுக்கே நான் சொன்னது உண்மைதானு புரியும் //

சரவணா,
அது பில்டிங்கா...
நான் கூட இத்தன நாளா அவன் டீ குடிச்சிட்டு காசு கொடுக்காம இருந்ததுக்கு தான் டீக்கடை முன்னாடி பஞ்சாயத்துல நிக்க வெச்சிட்டாங்கனு நினைச்சேன்...

அவன் வேற அக்யூஸ்ட் மாதிரி கை கட்டிட்டு நிக்கறான் ;)

கதிர் said...

//எலே,
கண்ணாடிய பாத்து பேச வேண்டியதெல்லாம் எதுக்கு இங்க பேசிட்டு இருக்க??? //

ரசம் போன கண்ணாடி வெட்டி.

வெட்டிப்பயல் said...

புலி,
எங்கிருந்தாலும் வரவும்...

MyFriend said...

// எச்சூஸ் மி மே ஐ நோ வேர் ஈஸ் புலி?? //

புலி புல்லு திங்க போயிருக்கு!! தெம்பா வந்திடும்..

உங்கள் நண்பன்(சரா) said...

//அவுங்க பக்கத்து வீட்டு நாயி!!!//
:))))))))))
தம்பி எவ்வளவு பவ்வியமா எதாவது ஃபிகரா இருக்கும் நைசா கரெக்ட் பண்ணிடலாம்னு கேட்டாரு, நீர் இப்படி போட்டுக் கடிச்சிட்டீரே

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//எலே,
கண்ணாடிய பாத்து பேச வேண்டியதெல்லாம் எதுக்கு இங்க பேசிட்டு இருக்க??? //

ரசம் போன கண்ணாடி வெட்டி. //

என்ன ரசம், மோர்னு பேசிட்டு இருக்க??? பசிச்சா சிம்ரன் ஆப்ப கடைக்கு போய் சாப்பிட்டு சீக்கிரம் மாவட்டிட்டு ஓடி வந்துடு...

சீக்கிரம்...

கதிர் said...

//அவன் வேற அக்யூஸ்ட் மாதிரி கை கட்டிட்டு நிக்கறான் ;) //

அநியாய ஆபிசருகளா

ஏ.வி.எம் சரவணன் கூட கை கட்டிகிட்டுதான் நிப்பாரு அப்போ அவரும் அக்யூஸ்டா?

உங்கள் நண்பன்(சரா) said...

மக்கா 165 வந்தாச்சு 200 அடிச்சு, மை ஃபிரண்டு சொன்ன மாதிரி நம்ம நட்சத்திரத்திரம் காலைல வந்து பாத்ததும் அப்படியே ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் னு அழ வாச்சிடலாம் ,
மணி 8:15 பசிக்கிற மாதிரி இருக்கு 200- ரோட எஸ்கேப் ஆகிடாம்னு இருக்கேன்

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

//My Friend,
பார்த்தீங்களா கொல வெறி படை அரசிய??? //

ஓ! தற்கொலை படை.. ச்சீசீ.. கொல வெறி படை தலவி இவங்கதானா? இவங்களை என்ன பண்ணலாம்ன்னு சொல்லுங்க வெட்டி. ;-) //

நீங்களே ஒரு முடிவு பண்ணுங்க :-)

கதிர் said...

//தம்பியின் புரொஃபைலில் இருக்கும் படத்தில் தம்பி நிற்பது போலவும் பின்புறத்தில் பல பெரிய கட்டிடங்கள் இரூபது போலவும் இருக்கும் ,உண்மையாகவே தம்பி நட்சத்திரமாக ஆன அன்று தான் அவரின் புரொஃபைலின் படத்தை பெரிதாக்கி இத கண்டு கொண்டேன் அதுவரை அவர் ஏதோ டீக்க்கடையின் பாய்லருக்கு முன் நிற்கின்ற ஓனர் போல் கை கட்டி இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.//

சரா

உங்கள எவ்வளவு நல்லவர்னு நெனச்சிட்டு இருந்தேன். இப்படி என் மனச சுக்கு நூறா உடச்சிட்டீரே

ஆஆவ்வ்வ்வ்வ்வ்

கதிர் said...

//புலி புல்லு திங்க போயிருக்கு!! தெம்பா வந்திடும்..//

அய்யய்யே
புல்லு திங்கிற புலியா அது?

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//தம்பியின் புரொஃபைலில் இருக்கும் படத்தில் தம்பி நிற்பது போலவும் பின்புறத்தில் பல பெரிய கட்டிடங்கள் இரூபது போலவும் இருக்கும் ,உண்மையாகவே தம்பி நட்சத்திரமாக ஆன அன்று தான் அவரின் புரொஃபைலின் படத்தை பெரிதாக்கி இத கண்டு கொண்டேன் அதுவரை அவர் ஏதோ டீக்க்கடையின் பாய்லருக்கு முன் நிற்கின்ற ஓனர் போல் கை கட்டி இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.//

சரா

உங்கள எவ்வளவு நல்லவர்னு நெனச்சிட்டு இருந்தேன். இப்படி என் மனச சுக்கு நூறா உடச்சிட்டீரே

ஆஆவ்வ்வ்வ்வ்வ் //

அத வெச்சி சுக்கு காபி போட முடியுமா???

வெட்டிப்பயல் said...

//உங்கள் நண்பன் said...

//அவுங்க பக்கத்து வீட்டு நாயி!!!//
:))))))))))
தம்பி எவ்வளவு பவ்வியமா எதாவது ஃபிகரா இருக்கும் நைசா கரெக்ட் பண்ணிடலாம்னு கேட்டாரு, நீர் இப்படி போட்டுக் கடிச்சிட்டீரே //

சரவணா,
நமக்கு தெரியாது இவன் எதுக்கு கேப்பானு???

அபி அப்பா said...

//அத வெச்சி சுக்கு காபி போட முடியுமா??? //

முடியவே முடியாது:-))

கதிர் said...

நம்ம கொத்ஸ்தான் 200வது பின்னூட்டம் போடுவார்னு நான் சொல்றேன்.

அபி அப்பா said...

175

MyFriend said...

175-ஆவது நான் போடலாம்ன்னு நினச்சேன். இன்னொரு டென்ஷனால் முடியாம போச்சு!!!

உங்கள் நண்பன்(சரா) said...

//உங்கள எவ்வளவு நல்லவர்னு நெனச்சிட்டு இருந்தேன். இப்படி என் மனச சுக்கு நூறா உடச்சிட்டீரே

ஆஆவ்வ்வ்வ்வ்வ் //

அத வெச்சி சுக்கு காபி போட முடியுமா???
//

யோவ் வெட்டி தம்பி எம்புட்டு ஃபீல் பண்ணுது நீ வேற, காப்பி, டீ, சுக்குக் காப்பினு காலய்சுக்கிடே இருக்கே

தம்பி உண்மையை சொல்லுரேன் , முதலில் அப்படித்தான் எண்ணி இருந்தேன், அதான் பொதுவுல போட்டு ஒடைக்கிறமாதிற ஆயிடுச்சு,

கதிர் said...

//சரவணா,
நமக்கு தெரியாது இவன் எதுக்கு கேப்பானு??? //

உனக்கென்னப்பா அதர் ஸ்டேட், நாங்க அப்படியா?

MyFriend said...

அபி அப்பா, மீ எண்ட் யூ டூ லேட்..
தம்பி பய முந்திக்கிட்டார்..

அபி அப்பா said...

//நம்ம கொத்ஸ்தான் 200வது பின்னூட்டம் போடுவார்னு நான் சொல்றேன். //

இங்க நா எதுக்கு நாக்க தொங்க போட்டுகிட்டு குத்த வச்சிருக்கேன்:-))

அபி அப்பா said...

//நம்ம கொத்ஸ்தான் 200வது பின்னூட்டம் போடுவார்னு நான் சொல்றேன். //

இங்க நா எதுக்கு நாக்க தொங்க போட்டுகிட்டு குத்த வச்சிருக்கேன்:-))

உங்கள் நண்பன்(சரா) said...

அபி அப்பா! எங்கே திடீர்னு ஆளைக்கானோம்? தங்கமணிக்கு உதவுறேன் போர்வழினு சமையல் முழுதும் பண்ணி வ்சச்சிட்டு இப்போ தான் திரும்பி வந்தீங்களா?

Anonymous said...

எலேய் வெட்டி,

ஆபிசுல வேல பாருடான்னா அங்க யாருக்குடா ஆப்பு வெச்சிகிட்டு இருக்க?

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//சரவணா,
நமக்கு தெரியாது இவன் எதுக்கு கேப்பானு??? //

உனக்கென்னப்பா அதர் ஸ்டேட், நாங்க அப்படியா? //

எலேய்,
நீ அதர் கண்ட்ரினு இப்ப நான் பொதுவுல சொல்லனுமா???

அபி அப்பா said...

//அபி அப்பா, மீ எண்ட் யூ டூ லேட்..
தம்பி பய முந்திக்கிட்டார்..
//

தம்பி கிடக்கார்..200 நாமதான் விடும்மா:-)

MyFriend said...

கவுண்ட் டவுன் ஸ்டார்ட்..

ஸ்டார்ட் மியூஜிக்.. இன்னும் 17தான்

உங்கள் நண்பன்(சரா) said...

ஆஹா ! 200 அடிக்க ஒரு கும்பலே ரெடியா இருக்கு போலா, ஆனா ஒரு கண்டிசன் சும்மா 198 199 அப்படினு போட்டு இடம் பிடிக்கக் கூடாது சரியா

வெட்டிப்பயல் said...

// TL said...

எலேய் வெட்டி,

ஆபிசுல வேல பாருடான்னா அங்க யாருக்குடா ஆப்பு வெச்சிகிட்டு இருக்க? //

இந்த TL யாருனு தெரியும்.... உனக்கு தான்டீ இங்க வெச்சிட்டு இருக்கோம் ;)

வெட்டிப்பயல் said...

//உங்கள் நண்பன் said...

ஆஹா ! 200 அடிக்க ஒரு கும்பலே ரெடியா இருக்கு போலா, ஆனா ஒரு கண்டிசன் சும்மா 198 199 அப்படினு போட்டு இடம் பிடிக்கக் கூடாது சரியா //

இது மேட்டரு...
நீ வீரன்டா!!!

MyFriend said...

//தம்பி கிடக்கார்..200 நாமதான் விடும்மா:-) //

சரரி.. என்ன ஆனாலும் சரி.. இன்னைக்கு தம்பிக்கு சான்ஸே விட கூடாது..

நீங்க நானு, வெட்டி.. நம்மல்ல யாராவதுதான் அடிக்கனும்..

எதுவும் ப்ளான் போட்டு செய்யனும் (கைப்புள்ள ஸ்டைலுல).. ;-)

அபி அப்பா said...

//அபி அப்பா! எங்கே திடீர்னு ஆளைக்கானோம்? தங்கமணிக்கு உதவுறேன் போர்வழினு சமையல் முழுதும் பண்ணி வ்சச்சிட்டு இப்போ தான் திரும்பி வந்தீங்களா? //

மீதி உள்ள பாசக்கார பசங்கள தெரட்டிகிட்டு வர போனம்பா..அதுக்குள்ள என்னன்ன நடந்து போச்சு:-)))

அபி அப்பா said...

நான் த்தான் 200

MyFriend said...

கவுண் டவுன்: இன்னும் எட்டே எட்டுதான்

வெட்டிப்பயல் said...

இரு நூறாவது கமெண்ட் யாரு போடறாங்கனு முக்கியமில்லை.. இரு நூறு கமெண்ட் யாரு போடறாங்கனு தான் முக்கியம் ;)

அபி அப்பா said...

உணர்ச்சிவசபட்டுட்டனா??

இராம்/Raam said...

//அநியாய ஆபிசருகளா

ஏ.வி.எம் சரவணன் கூட கை கட்டிகிட்டுதான் நிப்பாரு அப்போ அவரும் அக்யூஸ்டா? //

ஏலேய்.. ஒனக்கு அம்புட்டு பெரிய இடத்திலே இருக்கிறவங்களை வச்சு கம்பாரிசன் கேக்குதா?????

MyFriend said...

வெட்டி ததுவம் பேச ஆரம்பிச்சுட்டார்..
200 அடிச்சுட்டு ஆட்டத்தை கலைச்சிடுவோமா?

MyFriend said...

200

«Oldest ‹Older   1 – 200 of 508   Newer› Newest»

tamil10